அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Thursday 1 September 2011

ஷவ்வால் மாத (ஆறு) நோன்புகள்

ரமலான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரக்கூடிய மாதமான‌ ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகிறோம். இந்த ஷவ்வால் மாதத்தில் உபரியாக ஆறு நோன்புகள் நோற்பது நபி(ஸல்)அவர்கள் காட்டிய வழிமுறைகளில் ஒன்றாகும். இந்த ஆறு நோன்புகளையும் நோற்பதினால் வருடமெல்லாம் நோன்பு நோற்ற நன்மை நமக்கு கிடைக்கும். ஆனால், நம்மில் அநேகமானோர் இந்த ஷவ்வால் மாத ஆறு நோன்பைப் பற்றி முழுமையாக அறியாத நிலையில் இருக்கிறோம். இன்னும் சிலர் இந்த‌ நோன்பின் சிறப்பை அறிந்தும் அதைக் கடைப்பிடிப்பதில் அலட்சியம் செய்கின்றனர். இன்னும் சிலரோ அறியாமையால், பெண்கள் விடுபட்ட நோன்பை நிறைவேற்றுவதற்காக‌ இது அவர்களுக்கு மட்டும் உரியது என்று கருதுகின்றனர்.


யார் ரமலான் மாதத்தின் நோன்பையும் நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) வருடமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமம் என்பதாக நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்.                         
                                                            நூல்: முஸ்லிம்

மேற்கண்ட ஹதீஸ் பெண்களுக்கு மட்டுமல்ல, பொதுவாக முஸ்லிம்கள் அனைவருக்கும் கூறப்பட்டுள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஷவ்வால் நோன்பின் சிறப்பும் தத்துவமும்:

நாம் நோற்கும் ஒவ்வொரு நோன்புக்கும் 10 நன்மைகள் என்ற‌ அடிப்படையில் நமது முப்பது நோன்புகளுக்கு 300 நோன்புகளின் நன்மைகள் என்பதுடன், தொடர்ந்து வரக்கூடிய ஷவ்வாலின் இந்த ஆறு நோன்புகளுக்கு (6x10 =) 60 நோன்புகள், ஆக (300+60 =) 360 நோன்புகள் என்று ஆண்டு முழுவதும் நோன்பு நோற்ற நன்மை நமக்கு கிடைக்கிறது என்பதை ஹதீஸ்களில் இருந்து அறிய முடிகிறது. ஆறு நோன்பின் தத்துவம் இது தான்!
இப்படிப்பட்ட சிறப்புமிக்க நோன்பை பலர் நோற்பதில்லை. ரமலான் மாதத்தின் 30 நோன்பை நோற்ற நமக்கு இந்த ஆறு நோன்புகளை நோற்பது ஒன்றும் சிரமமான காரியமல்ல. நன்மை எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதை ஆர்வத்துடன் தேடி முறையாக செயல்படுத்துவதே மறுமையை நம்பக்கூடிய முஃமீன்களின் அழகிய பண்புகளாக இருந்தது என்பதற்கு உத்தம நபித்தோழர்களின் சரித்திரங்கள் நமக்கு சான்று பகர்கின்றன. எனினும் இந்த ஷவ்வால் நோன்பைக் கடமையான நோன்பு என்று கருதிவிட‌க் கூடாது. அதன் சிறப்புகளையும் அளப்பரிய நன்மைகளையும் உணர்ந்து அவற்றை அடைய விரும்பியவர்கள் நோற்றுக்கொள்ளலாம்.

ஆறு நோன்புக்கு ஆதாரமில்லையா?

இந்த ஆறு நோன்பு பற்றிய ஹதீஸ் பலவீனமானது என்று சில‌ர் கூறுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறானதாகும். ஆறு நோன்பு நோற்பதற்கு ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன.

ஒரு மாத நோன்பு பத்து மாத நோன்புக்குச் சமமானது; அதன் பின்னர் ஆறு நோன்பு இரண்டு மாதங்களுக்குச் சமமானது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                            அறிவிப்பவர்: ஸஃப்வான்(ரலி);  நூல்: தாரிமி (இதே ஹதீஸ் இப்னுமாஜா, அஹ்மத் ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது)

எப்போது நோற்கவேண்டும்?

ஆறு நோன்புகளை பெருநாள் முடிந்து மறுநாளே ஆரம்பித்து இடைவெளி இல்லாமல் தொடர்ந்து நோற்க வேண்டுமா? அல்லது இம்மாதத்தில் ஏதேனும் ஆறு நாட்களில் விட்டு விட்டு நோற்கலாமா? என்பதற்கான விளக்கத்தைப் பார்ப்போம்.

யார் ரமலானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வாலில் ஆறு நோன்புகள் நோற்கின்றாரோ அவர் (ஆண்டு) காலம் முழுவதும் நோன்பு நோற்றவரைப் போலாவார்.
                          அறிவிப்பவர் : அபூ அய்யூப் அல் அன்சாரி(ரலி);   நூல்:முஸ்லிம்

இந்த ஹதீஸில் ரமலானில் நோன்பு நோற்று, பிறகு அதைத் தொடர்ந்து ஷவ்வாலில் நோன்பு நோற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. "தொடர்ந்து" என்ற வார்த்தையிலிருந்து பெருநாளைக்குப் பிறகுள்ள ஆறு நாட்கள் தொடர்ந்து பிடிக்கவேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.  இது தவறான கருத்தாகும். ஏனெனில் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று, வரக்கூடிய‌ ஷவ்வாலிலும் ஆறு நாட்கள் நோன்பைத் தொடரவேண்டும் என்ற கருத்தில்தான் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளதே தவிர, பெருநாள் முடிந்து மறுநாளே ஆரம்பிக்கவேண்டும் என்றோ, அதை ஆறு நாட்களும் தொடர்ச்சியாகப் பிடிக்கவேண்டும் என்றோ கூறப்படவில்லை.

ரமலானைத் தொடர்ந்துதான் ஆறு நாட்கள் நோன்பு பிடிக்கவேண்டும் என்று அப்படியே வைத்துக் கொண்டாலும், பெருநாளில் நோன்பு பிடிப்பதற்குத் தடை உள்ளது.  ஆறு நாட்கள் தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டும் என்ற கருத்தில் உள்ளவர்கள் கூட ஷவ்வால் பிறை 2 லிருந்து 7 வரை தொடர்ந்து பிடிக்க வேண்டும் என்றுதான் கூறுகின்றனர்.  இதில் "ரமலானைத் தொடர்ந்து" என்ற கருத்து அடிபட்டுப் போகின்றது.  ஒரு நாள் விடுபட்டு விட்டால்கூட‌ அது ரமலானின் தொடர்ச்சியாக ஆகாது.  மேலும் ஷவ்வால் பிறை 2 லிருந்து 7 வரைதான் ஆறு நோன்பு பிடிக்கவேண்டும் என்று கூறுவதற்கு எந்த ஆதாரமும் ஹதீஸ்களில் இல்லை. எனவே ஆறு நோன்புகள் தொடர்ச்சியாகப் பிடிக்கவேண்டும் என்பது ஆதாரமற்றதாகும். நபி(ஸல்)அவர்கள் ஷவ்வால் மாதத்தில் நோற்க வேண்டும் எனக்கூறினார்களே தவிர, ஷவ்வால் மாதத்தில் இந்த நாட்களில்தான் வைக்கவேண்டுமெனக் கூறாததால் ஷவ்வால் மாதத்தின் எந்த நாட்களிலும் தொடர்ந்தோ,விட்டுவிட்டோ வைக்கலாம். ஆக, (ஈதுல் பித்ர்) பெருநாள் முடிந்து மறுநாளிலிருந்தே தொடர்ச்சியாக ஆறு நாட்கள் இடைவிடாது நோன்பு நோற்கவேண்டுமென்பதே அவசியமில்லை. ஆனால் "ஷவ்வாலில்" என்று ஹதீஸ்களில் இடம் பெறுவதால் ஷவ்வால் மாதம் முடிவதற்குள் அந்த ஆறு நோன்புகளையும் வைத்து விட வேண்டும்.

அதாவது ஆறு நோன்புகளை நோற்கக்கூடிய ஒவ்வொருவரும் தத்தமது வசதிக்கு ஏற்ப ஷவ்வால் மாத கால எல்லைக்குள் அந்த நோன்புகளை நோற்றுவிடவேண்டும். இதையே மேற்கண்ட‌ ஹதீஸ்களும் கூறுகின்றன‌. எனவே, இந்த‌ நோன்புகளை தொடர்ச்சியாக பிடிக்கவேண்டுமென்றோ அல்லது மாதத்தின் ஆரம்பப் பகுதியில்தான் பிடிக்கவேண்டுமென்றோ இல்லை என்பதை இங்கு நாம் புரிந்துக்கொள்ளவேண்டும். மேலும் பெருநாளைக்கு மறுநாள் முதல் தொடர்ந்து ஆறு நாட்கள் பிடிக்கவேண்டும் எனும்போது இந்த நாட்களில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களோ அந்த நாட்களில் நோற்க இயலாமல் போகும் மற்றவர்களோ அந்த நன்மையை இழக்கவேண்டிய நிலைமை ஏற்படுகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆறு நோன்பு பற்றிய இதர சந்தேகங்களும் தெளிவுகளும்:

  • தனித்தனியாக ஆறு நோன்புகளையும் நோற்கலாம் எனும்போது வெள்ளிக்கிழமை வந்தால் அந்த நாளில் தனித்து நோற்கலாமா?

அப்படி இந்த ஆறு நோன்புகளையும் விட்டு விட்டு நோற்கும்போது வெள்ளிக் கிழமைகளில் தனியாக நோற்க முடியாது என்பதால் (பார்க்க), இடையில் வெள்ளிக்கிழமை வருமேயானால், வியாழக்கிழமையுடனோ சனிக்கிழமையுடனோ இணைத்தே நோற்கவேண்டும்.

  • ரமலான் கழித்து ஆறு நோன்பு பிடிக்கும் நேரத்தில் ரமலானில் விடுபட்ட நோன்பை நிறைவேற்றிவிட்டுதான் இந்த நோன்புகளை நோற்கவேண்டுமா?

கடமையான வணக்கம் மற்றும் உபரியான வணக்கம் என்ற இரண்டிலும் கடமையான வணக்கத்திற்கே முன்னுரிமை வழங்கப்படவேண்டும். எனவே முதலில் களாவான நோன்புகளை நோற்ற பின்னர் இந்த சுன்னத்தான நோன்புகளை நோற்பதே சிறந்தது. ஏனெனில்,மனிதனின் வாழ்க்கைக் காலத்துக்கு எத்தகைய உத்தரவாதமும் கிடையாது. சில வேளை அவர் நோயாளியாகலாம். அல்லது ஏற்கனவே இருந்ததற்கு மேல் பலவீனப்பட்டு போக‌லாம். அல்லது மரணித்து கூட‌ விடலாம். எனவே ஒவ்வொருவரும் தன் மீதுள்ள கடமையான பொறுப்பை நிறைவேற்றிய பின்னர் சுன்னத்தான செயற்பாடுகளில் ஈடுபடுவதே பொருத்தமானதாகும். ரமலான் மாத நோன்பை இஸ்லாம் கடமை என விதித்துள்ளதால் அதை நிறைவேற்றிவிட்டால், இறைவனின் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். அதன் பின்னர் உபரியான நோன்பையும் நிறைவேற்றலாம். அதேசமயம், விடுபட்ட நோன்பு அதிக அளவில் இருந்து, அதையெல்லாம் நிறைவேற்றுவதற்குள் ஷவ்வால் முடிந்துவிடும் என்று அஞ்சினால், முதலில் ஷவ்வாலின் நோன்புகளை வைத்துக்கொள்ளலாம்.

இதல்லாமல், சில‌ சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் ரமலான் மாதம் விடுபட்ட நோன்பை அடுத்த ரமலானுக்கு முன் வரும் ஷஃஅபான் மாதம் வரை
நோற்கலாம் என்பதற்கு அன்னை ஆயிஷா(ரலி)அவர்களின் அறிவிப்பிலிருந்து விளக்கம் பெறமுடிகிறது.

"எனக்கு ரமலானில் சில நோன்புகள் விடுபட்டுவிடும். அவற்றை ஷஃஅபான் மாதத்தில் தவிர என்னால் நிறைவேற்ற முடியாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களின் பணிவிடையில் ஈடுபட்டதே இதற்கு காரணம்."
                 அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி);  நூல்கள்: புகாரி,முஸ்லிம் 

அந்த‌ இடைப்பட்ட பத்து மாத கால எல்லைக்குள் ஆயிஷா(ரலி)அவர்கள் சுன்னத்தான நோன்புகள் எதனையும் நோற்றிருக்கமாட்டார்கள் என கூற‌முடியாது. ஏனெனில், அவர்களின் நோன்பு தொடர்பாக வந்துள்ள பெரும்பாலான‌ அறிவிப்புகளில் அவர்கள் சுன்னத்தான நோன்புகளை அதிகம் நோற்பவராக இருந்தார்கள் என்றே வந்துள்ளன. ஆக, விடுபட்ட ஃபர்ளான நோன்புகளை வேண்டுமென்றே தள்ளிப்போடாமல், தவிர்க்கமுடியாத அவசிய தேவைகளுக்காக பிற்படுத்தி நிறைவேற்றலாம் என்று விளங்கலாம்.

  •  விடுபட்ட‌ ரமலான் நோன்பையும் ஷவ்வாலின் ஆறு நோன்பையும் சேர்த்து நிய்யத் வைத்தால் இரண்டுக்குமுரிய நன்மைகளும் சேர்ந்து கிடைக்குமா? 

ஒரு கல்லில் இரண்டு மாங்காய் போன்று ஃபர்ளான‌ வணக்கங்களையும் சுன்னத்தான வணக்கங்களையும் இணைத்து செய்ய‌முடியாது. எவ்வாறு ஃபர்ளான தொழுகையையும் சுன்னத்தான தொழுகையையும் சேர்த்து ஒரே தொழுகையாக தொழ முடியாதோ அதைப் போல்தான் ஃபர்ளுடன் சேர்த்து எந்த உபரியான வணக்கங்களையும் செய்ய முடியாது. ஃபர்ளு என்பது வேறு, உபரியான வணக்கம் வேறு. இரண்டையும் தனித்தனியாக நிறைவேற்றும்போதுதான் அதனதன் நன்மைகள் கிடைக்கும்.

  • ஷவ்வால் முடிந்ததும் அதற்காக ஒரு பெருநாள் கொண்டாடுவதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா? 


'நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு நாட்களைதான்(பெருநாட்களாக) கொண்டாடுவதற்கு நபி(ஸல்)அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.' 
                   அறிவிப்பவர்:அனஸ்(ரலி);  நூல்: அபூதாவூது, நஸயீ 

ஆகவே, இந்த இரு நாட்களைத் தவிர வேறு எந்த நாட்களிலும் பெருநாள் கொண்டாட அனுமதியில்லை.

'நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாகச் செய்பவரது வணக்கம் நிராகரிக்கப்படும்' என்ற நபிகளாரின் எச்சரிக்கை கவனத்திற்கொள்ள
வேண்டியதாகும். 
                              அறிவிப்பவர்:ஆயிஷா(ரலி);   நூல்:புகாரி

(அல்லாஹ் மிக அறிந்தவன்!)


(16/09/10 அன்று வெளியிட்ட கட்டுரையின் மீள்பதிவு)

26 comments:

  1. ரொம்ப்ப நல்ல இருக்கு அஸ்மா நல்ல விளக்கம்...!!! நான் என் ப்ளாக்ளையும் http://beautifull-islam.blogspot.com/ போட்டுவிட்டேன் நன்றி.. என் நண்பர்க்கும் சொல்லிவிட்டேன்... அல்லாஹ் உங்களுக்கு கல்வி அறிவை மேன்மேலும் அதிகமாக்குவானாக... ஆமின்...!!!

    ReplyDelete
  2. @ Barakath...

    //நான் என் ப்ளாக்ளையும் http://beautifull-islam.blogspot.com/ போட்டுவிட்டேன் நன்றி.. என் நண்பர்க்கும் சொல்லிவிட்டேன்... //

    பரவாயில்லை பரக்கத். மார்க்க விஷயத்தில்(பிரச்சார பணிக்காக)அப்படி எடுத்து போடுவது தவறல்ல! எப்படியிருந்தாலும் அதன் நன்மைகள் உரியவர்களுக்கும் கிடைக்குமல்லவா? உங்க‌ள் நண்பர்களுக்கு சொன்னதுக்கும் உங்கள் துஆவுக்கும் மிக்க‌ நன்றி!

    ReplyDelete
  3. ஆறு நோன்பின் சிறப்புக்களை அருமையாக எடுத்துரைத்தமை பாராட்டதக்கது.அஸ்மா இந்த ஆறு நோன்பு பிடித்து மறுநாள் பெருநாள் கொண்டாடிய அதே கிழமை மறுவாரம் எங்கள் ஊரில் ஆறு நோன்பு பெருநாள் விமரிசையாக கொண்டாடும் வழக்கம் உண்டு எனபதை தெரிவித்துகொள்கிறேன்.பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. @ asiya omar...

    //இந்த ஆறு நோன்பு பிடித்து மறுநாள் பெருநாள் கொண்டாடிய அதே கிழமை மறுவாரம் எங்கள் ஊரில் ஆறு நோன்பு பெருநாள் விமரிசையாக கொண்டாடும் வழக்கம் உண்டு எனபதை தெரிவித்துகொள்கிறேன்//

    பல ஊர்களிலும் இதுபோல் நான் கேள்விப்பட்டிருக்கேன் ஆசியாக்கா! எப்படிதான் விமரிசையாக கொண்டாடினாலும் அது பார்ப்பதற்கும் கேட்பதற்கும் அழகா இருக்கலாம். ஆனால், அதுவும் கண்டிப்பாக பித்அத் என்ற பாவங்களின் லிஸ்ட்டில்தான் சேர்க்கப்படும். அல்லாஹ்தஆலா எல்லா மக்களுக்கும் நேர்வழியைக் கொடுக்கட்டும், இன்ஷா அல்லாஹ்!

    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    மீண்டும் ஒரு நல்ல பதிவு உங்களிடமிருந்து.அல்ஹம்துலில்லாஹ்! ஷவ்வால் மாத ஆறு நோன்பு பற்றிய அனைத்து சந்தேகங்களுடனும் இவ்வாக்கத்தை படிக்க முனைந்தேன்.அனைத்திற்கும் விடை அழுத்தமாய் பதிந்திருக்கிறீர்கள்.ஹதீஸ்களின் ஆதாரத்துடன், அதிலும் வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மைக்கு கால்குலேஷன் மிக அழகு, என்னைப்போல் எத்தனையோ பாமரர்களுக்கும் இந்த பதிவு பயன்படும் என்பதில சந்தேகமில்லை. இறை நாடினால் இனியும் சந்திப்போம்.

    ReplyDelete
  6. @ G u l a m...

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...!

    //ஷவ்வால் மாத ஆறு நோன்பு பற்றிய அனைத்து சந்தேகங்களுடனும் இவ்வாக்கத்தை படிக்க முனைந்தேன்.அனைத்திற்கும் விடை.....// அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ் உதவியால் ஏதோ எனக்கு தெரிந்தவரை....குர்ஆன் ஹதீசுக்கு முரண்படாமல்!

    //.....இந்த பதிவு பயன்படும் என்பதில சந்தேகமில்லை. இறை நாடினால் இனியும் சந்திப்போம்.// எல்லோருக்கும் பயன்படட்டும் இன்ஷா அல்லாஹ்! வருகைக்கு நன்றி, மீண்டும் வாங்க நானா!

    ReplyDelete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    நானா! வார்த்தையில் எங்கள் ஊரு வாசனை.... சகோதரி உங்களின் எண்ணமும் எழுத்தும் என்னை விட(28) முதிர்ச்சி பெற்றதையே காட்டுகிறது எனினும் தாங்கள் என்னை விட வயது குறைந்தவர்கள் என்றால் சந்தோசமாக "தங்கச்சி" என்றழைக்கிறேன் உங்களை.

    ReplyDelete
  8. @ G u l a m...

    //வார்த்தையில் எங்கள் ஊரு வாசனை.... //
    அப்படியா...?! நீங்க எந்த ஊர் தெரிஞ்சிக்கலாமா..?

    //உங்களின் எண்ணமும் எழுத்தும்......சந்தோசமாக "தங்கச்சி" என்றழைக்கிறேன்..//

    அப்படிலாம் வேணாம், லாத்தா(அக்கா)ன்னே சொல்லுங்க தம்பி! உங்கள் எண்ணமும் எழுத்தும் காட்டிய முதிர்ச்சிதான் நீங்கள் நானாவாக இருக்கும் என்ற எண்ணத் தோன்றியது :) வருகைக்கு நன்றி, மீண்டும் வாங்க தம்பி:)!

    ReplyDelete
  9. நிறைய தெளிவுகள் கிடைத்தன இங்கு!!

    //விடுபட்ட‌ ரமலான் நோன்பையும் ஷவ்வாலின் ஆறு நோன்பையும் சேர்த்து நிய்யத் வைத்தால் இரண்டுக்குமுரிய நன்மைகளும் சேர்ந்து கிடைக்குமா?//

    இது சரியென்று ஒருவர் சொல்லியிருந்தார். எனக்குச் சந்தேகமாகவே இருந்தது. தெளிவான விளக்கத்திற்கு நன்றி அக்கா!!

    ReplyDelete
  10. @ ஹுஸைனம்மா...

    //*விடுபட்ட‌ ரமலான் நோன்பையும் ஷவ்வாலின் ஆறு நோன்பையும் சேர்த்து நிய்யத் வைத்தால் இரண்டுக்குமுரிய நன்மைகளும் சேர்ந்து கிடைக்குமா?*

    இது சரியென்று ஒருவர் சொல்லியிருந்தார். எனக்குச் சந்தேகமாகவே இருந்தது. தெளிவான விளக்கத்திற்கு நன்றி அக்கா!!//

    அல்ஹம்துலில்லாஹ்! மற்ற சந்தேகங்கள் இருந்தாலும் கேளுங்க மிஸஸ்.ஹுசைன்!

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    //அப்படிலாம் வேணாம், லாத்தா(அக்கா)ன்னே சொல்லுங்க தம்பி// சட்டென்று தம்பி மேல் கோபம் கொண்டது போல் தெரிகிறது..
    சகோதரி ம்ம் .லாத்தா எனக்கு நாகூர்., ஷவ்வால் நோன்பு போல ஏனைய சுன்னதான நோன்பு குறித்தும் அதாவது மாதத்திற்கு மூன்று (பிறை 13 14 15) நோன்பு குறித்தும்,அதுபோல் திங்கள் மற்றும் வியாழன் நோன்பு குறித்தும் இன்ஷா அல்லாஹ் ஆக்கம் வெளிடவும்

    ReplyDelete
  12. @ G u l a m...

    வ அலைக்குமுஸ்ஸலாம்! //சட்டென்று தம்பி மேல் கோபம் கொண்டது போல் தெரிகிறது..// கோப‌மெல்லாம் இல்லை! லாத்தா ஸ்டேஜுக்கு ப்ரொமோஷன் கிடைச்சதால உடனே அதை ஏற்றுக்கொண்டேன், அவ்வளவுதான் :)

    //லாத்தா எனக்கு நாகூர்// பக்கத்து ஊர்தானா?

    //மாதத்திற்கு மூன்று (பிறை 13 14 15) நோன்பு குறித்தும்,அதுபோல் திங்கள் மற்றும் வியாழன் நோன்பு குறித்தும் இன்ஷா அல்லாஹ் ஆக்கம் வெளிடவும்// ஏற்கனவே வெளிட்டுள்ளேன் தம்பி!

    http://payanikkumpaathai.blogspot.com/2010/08/testt1-test2.html

    இந்த லிங்க் சென்று பாருங்கள்!

    ReplyDelete
  13. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    லாத்தா....பக்கத்து ஊருனா.... தாங்கள் கொடுத்த லிங்கை பார்வையிட்டு வருகிறேன் இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  14. @ G u l a m...

    //தாங்கள் கொடுத்த லிங்கை பார்வையிட்டு வருகிறேன்//

    பார்த்துவிட்டு சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.

    ReplyDelete
  15. // * விடுபட்ட‌ ரமலான் நோன்பையும் ஷவ்வாலின் ஆறு நோன்பையும் சேர்த்து நிய்யத் வைத்தால் இரண்டுக்குமுரிய நன்மைகளும் சேர்ந்து கிடைக்குமா?


    ஒரு கல்லில் இரண்டு மாங்காய் போன்று ஃபர்ளான‌ வணக்கங்களையும் சுன்னத்தான வணக்கங்களையும் இணைத்து செய்ய‌முடியாது. எவ்வாறு ஃபர்ளான தொழுகையையும் சுன்னத்தான தொழுகையையும் சேர்த்து ஒரே தொழுகையாக தொழ முடியாதோ அதைப் போல்தான் ஃபர்ளுடன் சேர்த்து எந்த உபரியான வணக்கங்களையும் செய்ய முடியாது. ஃபர்ளு என்பது வேறு, உபரியான வணக்கம் வேறு. இரண்டையும் தனித்தனியாக நிறைவேற்றும்போதுதான் அதனதன் நன்மைகள் கிடைக்கும் //
    Assalamu Alaikum.
    can you provide us any proof from Quran or Hadeeth?

    ReplyDelete
  16. @ Anonymous...

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்....! (தயவுசெய்து உங்கள் பெயரைக் குறிப்பிடுங்கள். கேள்விகளை இனி தமிழில் கேளுங்கள்.)

    // ஃபர்ளு என்பது வேறு, உபரியான வணக்கம் வேறு. இரண்டையும் தனித்தனியாக நிறைவேற்றும்போதுதான் அதனதன் நன்மைகள் கிடைக்கும்.

    can you provide us any proof from Quran or Hadeeth?//

    எந்த ஒரு அமலுமே அல்லாஹ்வோ, அவனது தூதர்(ஸல்)அவர்களோ "இதைச் செய்யுங்கள்" என்று நமக்கு ஏவும்போதோ, "செய்யாதீர்கள்" என்று தடுக்கும்போதோதான் அது மார்க்கமாகும். இவையல்லாமல் 'இன்ன அமல் செய்தால் இப்படி நன்மை கிடைக்கும்' என்று யாரும் சுயமாக மார்க்கத்தில் சொல்ல முடியாது. அப்படி சொல்லப்படாத ஒன்று மார்க்கத்தில் இல்லாத ஒன்றாகிவிடுகிறது. (மேலே சொன்ன) 'சுன்னத்தான நோன்பையும் விடுபட்ட‌ ஃபர்ளான நோன்பையும் ஒரே நாளில் நிறைவேற்றலாம்' என்ற தவறான கருத்தும் அந்த வகையில் உள்ளதுதான்!

    மார்க்கத்தில் இல்லாத ஒன்றை சொல்லிவிட்டு 'இது மார்க்கத்தில் இல்லை என்பதற்கு என்ன ஆதாரம்?' என்று கேட்கும்போது, "இது குர்ஆன்‍‍ - ஹதீஸில் இல்லை என்பதுதான் அது மார்க்கமாகாது என்பதற்கு ஆதாரமாகும்" என்பதுதான் பதிலாக இருக்கமுடியும். அதுமட்டுமில்லாமல், இல்லாத ஒன்றை இருப்பதாக சொல்பவர்கள்தான் அதற்கான ஆதாரத்தைக் காட்ட‌வேண்டும். விளக்கம் போதுமென நினைக்கிறேன்.

    வருகைக்கு நன்றி! மீண்டும் நினைவுக்காக: தயவுசெய்து உங்கள் பெயரைக் குறிப்பிட்டு, கேள்விகள் மற்றும் கருத்துக்களை இனி தமிழில் பதியுங்கள்.

    ReplyDelete
  17. அஸ்ஸலாமு அலைக்கும்

    ஆறு நோன்பைப் பற்றி இருந்த அனைத்து சந்தேகங்களும் தீர்ந்து விட்டன.அல்ஹம்துலில்லாஹ்.

    இன்ஷா அல்லாஹ் நாளை முதல் ரமலானில் விடுபட்ட நோன்பையும், அதன் பிறகு ஆறு நோன்பையும் நோற்க வேண்டும்.

    ReplyDelete
  18. @ முஸ்லிம்...

    வ‌அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

    //ஆறு நோன்பைப் பற்றி இருந்த அனைத்து சந்தேகங்களும் தீர்ந்து விட்டன. அல்ஹம்துலில்லாஹ்.//

    அல்ஹம்துலில்லாஹ், சந்தோஷம் சகோ. இதற்கு மேலும் புதிய சந்தேகங்கள் தோன்றினாலும் கேளுங்கள். நன்றி சகோ.

    ReplyDelete
  19. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் )

    என்னுடைய ஒரு கேள்வி இருந்தது..ஆனால் கடைசியில் அதுக்கும் விளக்கம் நீங்களே குடுத்துட்டீங்க .ஜஸாக்கலஹ் க்கைர் :-)

    ReplyDelete
  20. அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா. ஆறு நோன்பு பற்றி விளக்கம் சந்தேகம் எல்லாம் இதன் மூலம் புரிந்து கொண்டேன்.
    நன்றி

    ReplyDelete
  21. @ ஜெய்லானி...

    வ‌அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

    //என்னுடைய ஒரு கேள்வி இருந்தது..ஆனால் கடைசியில் அதுக்கும் விளக்கம் நீங்களே குடுத்துட்டீங்க .ஜஸாக்கலஹ் க்கைர் :-)//

    அப்படியா... சந்தோஷம் சகோ :) வேறு ஏதும் சந்தேகம் வந்தாலும் கேளுங்க சகோ.

    ReplyDelete
  22. @ Jaleela Kamal...

    வ‌அலைக்குமுஸ்ஸலாம் ஜலீலாக்கா.

    //ஆறு நோன்பு பற்றி விளக்கம் சந்தேகம் எல்லாம் இதன் மூலம் புரிந்து கொண்டேன்.
    நன்றி//

    அல்ஹம்துலில்லாஹ்.. நல்லது ஜலீலாக்கா :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  23. சிறப்பான கட்டுரை... அறிந்து கொண்டேன்...

    பதிவாகிப் பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. உடனே பதில் தர இயலாமைக்கு மன்னிக்கணும் சகோ! தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் :)

      Delete
  24. அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மாகா..

    மாஷா அல்லாஹ் ஆறு நோன்பு பற்றிய அனைத்து சந்தேகங்களும் தீர்ந்தது...

    ஜசக்கல்லாஹ் ஹைரன்..

    வல்ல இறைவன் மென்மேலும் உங்கள் கல்வி ஞானத்தை அதிகரிப்பானாக!!! ஆமின்..

    ReplyDelete
  25. ஜஸாக்கல்லாஹு ஹைர்

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை