அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Friday 21 January 2011

பெட்ரோல் விலையுயர்வு குறித்த சிறப்பு ஆய்வுக் கட்டுரை!


இலவசப் பொருட்கள் வழங்குவதில் கவனம் செலுத்தும் தமிழக அரசு பெட்ரோல்/டீசல் விலை உயர்வில் கவனம் செலுத்தாமல் இருப்பதே, எல்லா விலைவாசி உயர்வுக்கும் மிக முக்கிய காரணமாகும்! இதற்கு மத்திய அரசுக்கு மட்டுமில்லாமல் மாநில அரசுக்கும் மிகப் பெரிய பொறுப்புள்ளது. இதைப் பற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரைதான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கட்டுரை TNTJ  இணைய தளத்தில் மக்களின் விழிப்புணர்வுக்காக 'அபூ நபீலா' அவர்களால் ஆய்வு செய்து எழுதப்பட்ட அருமையான ஒரு கட்டுரையாகும்! உங்கள் பார்வைக்காக இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன்.


பொதுமக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்! 
மோட்டார் வாகனம் பயன்படுத்துவோர் மட்டுமல்லாது இன்றைக்கு நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை அனைவரும் பணத்தை பறிகொடுத்தவர்கள் போன்று புலம்புவது "டப்பாவிங்களா! கேக்குரதுக்கு ஆள் இல்லன்னு பெட்ரோல் விலைய இஷ்டம் போல அளவே இல்லாம இப்படி கூட்டிக்கிட்டே போரானுங்களே" என்று தான். இதில் நாமும் விதிவிலக்கல்ல..
ஏனெனில் கடந்த ஓராண்டில் மட்டும் 9 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை பெட்ரோல் விலை 2.55 ரூபாய் உயர்த்தப்பட்டு தற்போது 63.45 ரூபாய்க்கு தமிழகத்தில் பெட்ரோல் விற்கப்படுகின்றது.
பிரதமர் உட்பட உயர்மட்ட அளவில் கூட்டம் போடும் அளவிற்கு நாட்டில் விலைவாசி உயர்ந்துள்ள இந்த நிலையில், நமது இந்திய அரசு இதை (எண்ணெய் நிறுவனங்கள் அரசின் ஒப்புதலுடன்தான் விலையை ஏற்றுகின்றது) செய்திருப்பது, "நாட்டு மக்கள் செத்தாலும் பரவாயில்லை, தங்களுக்கு கோடி கோடியாய் பணம் தரும் பெரும் தொழிலதிபர்கள் நல்லா இருக்கணும், உலகின் பணக்கார பட்டியலில் அவர்கள் பெயர் முன்னேற‌ வேண்டும்" என்ற அரசியல்வாதிகளின் நயவஞ்சகத்தனத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
நாம் இதை ஆதாரத்தோடே கூறுகின்றோம்!
விலையை உயர்த்த சொல்லப்படும் காரணங்கள்:
1.ஆயில் நிறுவனங்களுக்கு நஷ்டம்
அடிக்கடி விலையை உயர்த்துவதற்கு அரசு சொல்லும் முதல் காரணம், "ஆயில் நிறுவனங்களுக்கு ஒருநாளைக்கு இத்தனை கோடி நஷ்டம்" என்பது தான்.
இது கடைந்தெடுத்த பொய்யாகும்! இது பச்சைப் பொய்யாகும்!!  இது மகாப் பொய்யாகும்!!
நாம் இதை  இவ்வளவு அழுத்தமாக சொல்லக் காரணம், அரசு எந்த நிறுவனங்களை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று கூறுகின்றதோ அந்த எண்ணெய் நிறுவனங்களின் (IOC -Indian Oil Corparation , HPCL -Hindustan Petroleum Corporation , BPCL-Bharat Petroleum Corporation) 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிதிநிலை அறிக்கையை நாம் படித்ததுதான்.
நிதிநிலை அறிக்கை (நான்கு மாதத்தில் மட்டும் கிடைத்த லாபம்)
IOC யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 5294 கோடி. அரசுக்கு செலுத்தியுள்ள வரி 832.27 கோடி (5294 + 832.27 = 6126.27 கோடி லாபம்)
HPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 2142.22 கோடி. அரசுக்கு செலுத்தியுள்ள வரி 90.90 கோடி (2142.22 + 90.90 = 2233.12 கோடி லாபம்)
BPCL யின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் – (அரசுக்கு வரி கட்டியது போக) 2142.22 கோடி. அரசுக்கு செலுத்தியுள்ள வரி 198.00 கோடி (2142.22 + 198.00 = 2340.22 கோடி லாபம்)
மேற்குறிப்பிட்ட மூன்று எண்ணெய் நிறுவனங்கள் மூலம் மட்டும் நான்கு மாதத்தில் கிட்டதட்ட 10699.61 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்து விட்டு, 'எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்டவே விலையை உயர்த்தி உள்ளோம்’ என்று அப்பட்டமாக பொய் கூறி பொதுமக்களை மத்திய அரசு ஏமாற்றுகின்றது.
'நஷ்டம்' என்று அரசு கூறுவது ‘வர வேண்டிய லாபத்தை' என்று சில பொருளாதார வல்லுநர்கள் விளக்கம் கொடுக்கின்றனர்.
அதாவது உதாரணத்திற்கு: 2000 கோடி லாபம் வர வேண்டும். ஆனால் 1500 கோடிதான் லாபம் வந்துள்ளது. எனவே 500 கோடி இலாபம் குறைந்துள்ளது என்று ஒருவர் கூறுவது போன்று.
லாபத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது என்பதற்கும் "விலையைக் கூட்டும் அளவிற்கு இத்தனைக் கோடி நஷ்டம் ” என்பதற்கும் மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் இருக்கின்றது.
பொதுமக்கள் சோத்துக்கே வழியில்லாமல் இருக்கும்போது கோடிக்கணக்கில் எண்ணெய் நிறுவனம் மூலம் லாபம் சம்பாத்தித்துவிட்டு ‘அதுவும் போதவில்லை இன்னும் விலையை ஏற்று’ என்று மத்திய அரசு கூறுவது, அரசு எந்த அளவிற்கு  பொதுமக்களின் பணத்தை கொள்கை அடிக்க வழிகளை தேடுகின்றது என்பதை தெளிவுபடுத்துகின்றது.
நான்கு மாதத்தில் மூன்று எண்ணெய் நிறுவனங்கள் மூலம் 10 ஆயிரம் கோடிக்கும் மேல் லாபம் ஈட்டிவிட்டு, பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் நஷ்டக் கணக்குக் காட்டி, பெட்ரோல் விலையை கூட்டுவது நியாயமான அரசு செய்யும் வேலையா?
எனவே அரசுக்கு எண்ணெய் நிறுவனங்கள் மூலம் இதுவரையிலும் எந்த நஷ்டமும் இல்லை. மாறாக கோடிக்கணக்கில் லாபம்தான், மத்திய அரசு அப்பட்டமாக பொய் கூறுகின்றது என்பதை பொதுமக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
நஷ்ட கணக்கு நாடகத்தை பொதுமக்கள் தற்போது உணர்ந்திருப்பார்கள்.
2. குரூட் ஆயில் விலை உயர்ந்து விட்டது
அடுத்து சொல்லும் காரணம் குரூட் ஆயில் விலை உயர்ந்து விட்டது. இதுவும் பொய்யாகும்.
தற்போது குரூட் ஆயில் பீப்பாய் ஒன்று 92 டாலருக்கு விற்கப்படுகின்றது. தற்போது பெட்ரொலின் விலை லிட்டர் 63.54 ரூபாய். ஆனால் இதே பீப்பாய் 2008 ஆம் ஆண்டில் கிட்டதட்ட 135 டாலருக்கும் மேல் விற்கப்பட்டது. அப்போது விலை என்ன தெரியுமா ? பெட்ரொல் லிட்டர் ரூபாய் 54 மட்டும் தான்.
2008 ஐ ஒப்பிடும்போது தற்போது பீப்பாய் விலை 34 சதவிகிதம் குறைந்துள்ளது. எனவே பெட்ரோல் விலையையும் 34 சதவிகிதம் குறைக்க வேண்டும். அதுதான் நியாயம்! அதாவது பெட்ரோல் விலையை லிட்டருக்கு 35 ரூ ஆக ஆக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு குறைப்பதற்கு பதிலாக தற்போது 55 சதவிகிதம் விலையை உயர்த்தி 63 ரூபாய்க்கு விற்கின்றது.
இது மிகப்பெரும் அநியாயமாகும்.
2008 ல் பீப்பாய் ஒன்று 135 டாலருக்கும் மேல் சர்வதேச சந்தையில் விற்கும் போதே  பெட்ரோலை லிட்டர்  54 ரூபாய் தான். ஆனால் தற்போது பீப்பாய் ஒன்று 92 டாலர் தான் விற்கின்றது. எனவே பீப்பாய் விலையை கவனத்தில் கொண்டு தற்போது மத்திய அரசு விலையைக் குறைக்க வேண்டுமே தவிர கூட்டக் கூடாது.
எனவே பெட்ரோல் விலை உயர்வுக்கு குரூட் ஆயிலின் விலை உயர்வுதான் காரணம் என்று கூறுவது பொய் என்பதை பொதுமக்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.
விலை உயர்ந்துள்ளதற்கு உண்மையான காரணம்:
உண்மையில்  தற்போது உள்ள சந்தை நிலவரப்படி கணக்கு பார்த்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் கூட வராது.
ஆம், நாம் பெட்ரோலுக்கு கொடுக்கும் பணத்தில் பாதிக்கு மேல் உள்ள தொகை மத்திய மாநில அரசு விதித்துள்ள வரிகள்தான்!
இதோ தற்போதைய பெட்ரோலுக்கான வரி நிலவரம் 2011
வரி என்ற பெயரில் கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்
22 ரூபாய்க்கு விற்கவேண்டிய பெட்ரோலை 41 ரூபாய் கூடுதலாக வரி மேல் வரி விதித்து 63.45 க்கு அநியாயமாக விற்கும் மத்திய மாநில அரசுகள் இன்னும் என்ன காரணம் சொல்லி விலையை உயர்த்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கின்றது. பொய் கணக்கு கூறி பொதுமக்களிடம் நாடகமாடிக் கொண்டிருக்கின்றது.
ஒரு வருடத்திற்கு நாம் அரசிற்கு செலுத்தும் பெட்ரோல் வரி .. ஒரு சிறிய கணக்கு..
மோட்டார் வாகனத்தில் அலுவலகத்திற்கு செல்லும் ஒருவர் சராசரியாக மாதம் ஒன்றுக்கு 15 லிட்டர் பயன்படுத்துகின்றார் என்று வைத்துக் கொள்வோம்.
மாதம் பெட்ரோலுக்காக இவருக்கு ஆகும் செலவு ரூபாய் 951.75.
இதில் 650.7 ரூபாயை இவர் அரசுக்கு வரியாக மட்டுமே செலுத்துகின்றார். பெட்ரோலுக்கான விலை அல்ல!
இதில் பெட்ரோலுக்கான விலை வெறும் 330 ரூபாய் மட்டும் தான்!
மாதம் 650.7 எனில் வருடத்திற்கு 7808.4 ரூபாயை இவர் பெட்ரொல் வாங்குவதன் மூலம் அரசிற்கு வரியாக மட்டுமே செலுத்துகின்றார்.
நானும் நீங்களும் பெட்ரோலுக்காக அரசிற்கு வருடா வருடம் கிட்டதட்ட 8 ஆயிரம் ரூபாய் வரியாக மட்டுமே கொடுக்கின்றோம் (மாதம் 15 லிட்டர் எனில்). இது தெரியுமா உங்களுக்கு ?
இதில் 4 ஆயிரம் தமிழக அரசிற்கு, 4 ஆயிரம் மத்திய அரசிற்கு! என்ன கொடுமை இது!!!
100 கோடி மக்கள் தொகையில் 10 சதவிகிதம் பேர் மோட்டார் வாகனம் பயன்படுத்துவதாக வைத்துக் கொண்டாலும் அரசுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 780840000000 (எத்தன ஆயிரம் கோடின்னு நீங்களே கணக்கு பண்ணிக்கோங்க) பெட்ரோல் மூலம் வரி மட்டுமே வருகின்றது.
ஒரு பக்கம் எண்ணெய் நிறுவனங்கள் மூலம் வரும் லாபம், மறுபக்கம் அதை
விட இரண்டு மடங்கு  வரி என்ற பெயரில் பொதுமக்களிடமிருந்து வரும் லாபம். இவையெல்லாம் போதாது என்று மேலும் மேலும் பச்சை பொய் கூறி பெட்ரோல் விலை உயர்த்துகின்றது மத்திய அரசு.
எனவே பெட்ரோல் விலையின் உயர்வுக்கு காரணம் மத்திய மாநில அரசுகள் நிர்ணயித்துள்ள வரிகள்தானே தவிர பீப்பாய் விலையோ, எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டமோ கிடையாது (அப்பட்டமான பொய்) என்பதை பொதுமக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
கூடுதலாக வரி விதிக்க காரணம்:
1. தனியார் நிறுவனங்கள்
சமீபகாலமாக அரசு அதிகமாக வரி விதிப்பதற்கும் விலையை உயர்த்துவதற்கும் முக்கிய காரணம் தற்போது முளைத்துள்ள தனியார் எண்ணெய் நிறுவனங்கள்தான்.
கனிமவளங்கள் நிறைந்த நாட்டுடமைகளை அரசியல்வாதிகளுக்கு பணம் கொடுத்து குறைந்த விலைக்கு வாங்கி தனியார் எண்ணெய் நிறுவனங்கள் அதிலிருந்து வரும் எரிபொருளை அரசிற்கே கூடுதல் விலைக்கு விற்கின்றது. மேலும் வெளிநாட்டில் இருந்து பெட்ரோலை வாங்கி உள்நாட்டில் அதிக விலைக்கு விற்கின்றது.
ஆம்! பெட்ரோலுக்காக நாம் கொடுக்கும் பணத்தில் ரிலையன்சுக்கும் பங்கு செல்கின்றது. இது போன்ற தனியார் எண்ணெய் நிறுவனங்களின் வற்புறுத்தலின் பேரில்தான் அரசு, 'பெட்ரோல் விலையை நீங்களே (எண்ணெய் நிறுவனங்களே) நிர்ணயித்துக் கொள்ளுங்கள்' என சட்டம் கொண்டு வந்தது. இதனால்தான் தற்போது பெட்ரொல் விலை அடிக்கடி உயர்கின்றது.
Reliance Industries என்று சொல்லப்படும் ரிலைன்சின் எண்ணெய் நிறுவனத்தின் 2010-2011 ன் இரண்டாம் காலாண்டின்  லாபம் (நான்கு மாதத்தில்) எவ்வளவு தெரியுமா? 4923 கோடியாகும்.
இந்த லாபம் அரசின் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் ஆகியவற்றின் லாபத்தை விட இரண்டு மடங்கு கூடுதலானதாகும்.
தனியார் நிறுவனங்கள் அரசிடமிருந்து கனிமவளங்கள் நிறைந்த இடத்தை குறைந்த விலைக்கு வாங்கி அதில் உள்ள எரிபொருளை சுத்திகரிப்பு செய்து மீண்டும் அரசிற்கே விற்கின்றன. மேலும் வெளிநாட்டில் இருந்து வாங்கியும் அரசிற்கு விற்கின்றது. இதை அரசே செய்தால் பெட்ரோல் விலையை உயர்த்த வேண்டிய அவசியமும் இல்லை, அரசிற்கு கூடுதல் லாபம் வரும் என்பதால் 65 சதவிகிதம் அளவிற்கு வரி விதிக்கவும் தேவையில்லை.
முகேஷ் அம்பானி போன்ற தனியார் நிறுவன தொழிலதிபர்கள் உலக பணக்கார வரிசையில் நான்காவது இடம் பிடிக்க நமது அரசியல்வாதிகள் பாடுபடுவதோடு பொதுமக்களையும் அதற்கு பணயமாக்குகின்றனர்.
2. வட்டி
65 சதவிகிதம் அளவிற்கு வரி விதிப்பதற்கு மற்றுமொரு முக்கிய காரணம் உலக வங்கியில் இந்திய அரசு வாங்கியுள்ள கடன்தான்.
இத்தனை சதவிகிதம் வரி விதித்தால்தான் அரசின் கடன் மற்றும் வட்டியை கட்ட முடியும் என்ற கணக்கு உள்ளது. அதன் அடிப்படையில்தான் வாங்கிய கடன் மற்றும் அதற்குரிய வட்டியை அடைப்பதற்கு ஏற்றாற்போன்று மத்திய மாநில அரசு வரிகளை விதிக்கின்றது.
பெட்ரோல் அன்றாடம் அனைவரும் பயன்படுத்தப்படும் பொருளாக இருப்பதால் அதற்கு கூடுதல் வரிகளை விதித்துள்ளது. பெட்ரோல் விலை உயர்வை தவிர்க்க அரசு, வட்டி மற்றும் தனியார் கலாச்சாரத்தை கைவிட வேண்டுமே தவிர பொதுமக்களை சுரண்டும் வண்ணம் வரிக்கு மேல் வரி விதிக்கக் கூடாது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாட்டில் வெறும் 18 சதவிகித வரிதான் பெட்ரோலுக்கு விதிக்கப்படுகின்றது.
18% எங்கே 65% எங்கே ?
பெட்ரோல் விலை உயர்வுக்கு தமிழக அரசும் காரணம்:
மற்ற மாநிலங்களை விட அதிகமாக தமிழக அரசு 30 சதகவிதம் பெட்ரோலுக்கு வரி விதிக்கின்றது. ஒரு ரூபாய்க்கு அரிசி போடுகின்றேன் என்று கூறி அன்றாடம் வேலைக்கு செல்லும் பொது மக்களிடம் கோடி கோடியாய் பணத்தை பெட்ரோல் மூலம் சுருட்டுகின்றது இந்த தமிழக அரசு.
இந்த வரியை குறைக்குமாறு கலைஞரிடம் கேட்டதற்கு 'இதை குறைக்க முடியாது' என்று சமீபத்தில் கூறியுள்ளார். இப்படி கோடிகோடியாய் பொதுமக்களிடமிருந்து வரி என்ற பெயரில் கொள்ளையடித்த பணத்தைதான்  ஓட்டு வாங்குவதற்காக கூத்தாடிகளுக்கு ‘சொந்த இடம்சொந்த வீடுபடத்திற்கு வரி விலக்கு’ போன்ற சலுகைகள் வழங்க பயன்படுத்துகின்றார் இந்த கருணாநீதி.
இதுவல்லாமல் பொதுமக்களுக்கு ‘அந்த திட்டம், இந்த திட்டம்’ என்று அவ்வப்போது அறிவிப்புகளை வெளியிடுகின்றார். மேலோட்டமாக சலுகைகளை அறிவித்துவிட்டு பொதுமக்களுக்கு தெரியாமல் பெட்ரோல் மூலம் பணத்தை வரி என்ற பெயரில் கொள்ளை அடிக்கின்றது இந்த தமிழக அரசு.
பெட்ரோல் விலை உயர்வுக்கும் கலைஞருக்கும் சம்பந்தமே இல்லாதது போன்ற மாயத் தோன்றம் ஏற்படுத்தப்படுகின்றது. மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது தமிழகத்தில் கூடுதலாகவே பெட்ரோலுக்கு வரி விதிக்கப்படுகின்றது.
மாநிலம் வாரியான பெட்ரோல் வரி பட்டியல்
StateoilPetrolDieselKerosenegas
Andhra Pradesh43322.244
Maharastra425234-
Gujarat-2321--
Madhya Pradesh-28.72344
Chattisgarh-22224-
Goa-222144
Uttar Pradesh426.517.24-
Uttarakhand-252112.5-
Delhi-2012.544
Himachal Pradesh-2514-4
Jammu, Kashmir-201244
Punjab-27.58.844
Rajasthan-28184-
Haryana4208.84-
Chandigarh-2012.542
Tamilnadu-3021.444
Pondicherry-12.512.5-1
Kerala-2924.6--
Karnataka1251841
Orissa-181844
Assam-25.715.524
Bihar2161688
Jharakhand-2014.544
West Bengal-251744
Manipur-2012.544
Meghalaya-2012.544
Tripura-1510-1.5
Mizoram-1810-2
Arunachal Pradesh-2012.544
nagaland-201254
State
oil
Petrol
Diesel
Kerosene
gas
Andhra Pradesh
4
33
22.2
4
4
Maharastra
4
25
23
4
-
Gujarat
-
23
21
-
-
Madhya Pradesh
-
28.7
23
4
4
Chattisgarh
-
22
22
4
-
Goa
-
22
21
4
4
Uttar Pradesh
4
26.5
17.2
4
-
Uttarakhand
-
25
21
12.5
-
Delhi
-
20
12.5
4
4
Himachal Pradesh
-
25
14
-
4
Jammu, Kashmir
-
20
12
4
4
Punjab
-
27.5
8.8
4
4
Rajasthan
-
28
18
4
-
Haryana
4
20
8.8
4
-
Chandigarh
-
20
12.5
4
2
Tamilnadu
-
30
21.4
4
4
Pondicherry
-
12.5
12.5
-
1
Kerala
-
29
24.6
-
-
Karnataka
1
25
18
4
1
Orissa
-
18
18
4
4
Assam
-
25.7
15.5
2
4
Bihar
2
16
16
8
8
Jharakhand
-
20
14.5
4
4
West Bengal
-
25
17
4
4
Manipur
-
20
12.5
4
4
Meghalaya
-
20
12.5
4
4
Tripura
-
15
10
-
1.5
Mizoram
-
18
10
-
2
Arunachal Pradesh
-
20
12.5
4
4
nagaland
-
20
12
5
4

போலி சலுகைகளை அறிவிப்பதை விட்டுவிட்டு, வரி என்ற பெயரில் பொதுமக்கள் வயிற்றில் அடிக்காமல் தமிழக அரசு செயல்பட்டாலே போதும் என்பது பொதுமக்களின் கருத்து.
விலையை குறைக்க என்ன செய்ய வேண்டும்?
தற்போது குரூட் ஆயில் பீப்பாய் ஒன்று 92 டாலருக்கு விற்கப்படுகின்ற நிலையிலும் வரி இல்லாமல் பெட்ரோலின் விலை வெறும் 22 ரூபாய்தான் ஆகின்றது. இந்த 22 ரூபாயில் லாபமும் அடங்கும். வரி என்பது கூடுதலாக விதிக்கப்படுவது.
மத்திய மாநிலம் அரசுகள் போட்டிப் போட்டுக் கொண்டு வரி விதித்திருப்பதாலேயே பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. மத்திய மாநில அரசுகள் வரியை குறைத்தாலே போதும் பெட்ரோல் விலை குறைந்துவிடும். சர்வதேச சந்தையில் குரூட் ஆயிலின் விலை கூடுவதினால் பெட்ரோல் விலை பெருமளவு கூடாது.
மத்திய அரசு வரியை குறைத்தால்தான் பெட்ரோல் விலை குறையும் என்பதில்லை.  தமிழக அரசு 30 சதவிகிதமாக இருக்கும் தற்போதை வரியை குறைந்த பட்சம் மற்ற மாநிலங்களை போன்று குறைத்தாலே போதும், பெட்ரோல் விலை கணிசமாக குறையும்.
பொதுமக்களாகிய நாம்தான் இதற்கு ஆவண செய்யவேண்டும்!
அநியாயம்! அநியாயம்! எங்கும் இல்லாத அநியாயம்
20 ரூபாய் பொருளுக்கு 5 அல்லது 10 ரூபாய் வரி போட்டால் சகித்துக் கொள்ளலாம். ஆனால் கிட்டத்தட்ட 200 சதவிகித அளவிற்கு வரி போடும் அபாயகரமான நிலையை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆம் 22 ரூபாய் பெட்ரோலுக்கு 41 ரூபாய் வரி!
ஆங்கிலேயர்கள் காலத்தில் கூட எந்த பொருளுக்கும் இந்த அளவிற்கு வரி விதித்திருக்க மாட்டார்கள். சமீப காலமாக ஏற்படும் விலைவாசி உயர்வுக்கு பெட்ரோல் விலை உயர்வும் முக்கிய காரணம்! இதைக் கண்டு கொள்ளாமல் அரசு மெத்தனமாகவே செயல்படுகின்றது. இதில் வேடிக்கையான விசயம் என்னவெனில் தற்போது உள்ள பிரதமர் பொருளாதார வல்லுந‌ராம்! அது தொடர்பாக நிறைய படித்துள்ளாராம். என்னத்த படிச்சாரோ தெரியல..
அரசியல்வாதிகள் ஆட்சியில் இருக்கும்போது பெட்ரோலுக்கு தங்களது சொந்த பணத்தை செலவிட்டால்தானே அதன் கஷ்டம் புரியும். இவர்கள் பெட்ரோல் அலவன்ஸ் என்ற பெயரில் அரசின் பணத்தைதானே தங்களது வாகனத்திற்கு செலவிடுகின்றனர். எனவே பொதுமக்களின் கஷ்டம் இவர்களுக்கு எங்கு தெரியப் போகின்றது.
எனவே இந்த அநியாயத்தை பொதுமக்கள், தட்டி கேட்க தவறினால் 200 சதவிகிதம் என்ன, பெட்ரோலுக்கு 500 சதவிகிதம் கூட இவர்கள் வரி விதிப்பார்கள்!!



பெட்ரோல் விலை பற்றிய சிறப்பு ஆய்வு
(விலை உயர்வால் பாதிக்கப்பட்ட)
அபூ நபீலா


(Ref: Money Control , Indian gov Tax website, Press News, indian budget)


நன்றி: Tntj.net


புள்ளி விபரத்தில் சற்று கூடுதல் குறைவு இருப்பதாக யாருக்கும் தெரியவந்தால் TNTJ.net க்கு தெரியப்படுத்தவும்.




2 comments:

  1. அஸ்மா. இப்போதான் உங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறேன். ஒரே அரசியல் முழக்கமாக இருக்கு. எப்படித்தான் இத்தனை விபரங்களையும் தொகுத்தி வழங்கியிருக்கிறீங்களோ என ஆச்சரியமாக இருக்கு. எனக்குத்தெரிந்து அரசியல் முழக்கமிடுபவர் எங்கள் வட்டாரத்துள் கவிசிவாதான்.

    அருமையான தளமாக இருக்கு அஸ்மா. மீண்டும் வருவேன்.

    ReplyDelete
  2. @ athira...

    //அஸ்மா. இப்போதான் உங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறேன்//

    அப்பாடா... இப்போவாவது வந்தீங்களே அதிரா.. :-) ரொம்ப சந்தாஷம்!

    //ஒரே அரசியல் முழக்கமாக இருக்கு. எப்படித்தான் இத்தனை விபரங்களையும் தொகுத்தி வழங்கியிருக்கிறீங்களோ என ஆச்சரியமாக இருக்கு//

    இது என்னுடைய தொகுப்பு அல்ல அதிரா. நான் படித்த இந்த அருமையான கட்டுரை, இங்கு வரும் எல்லோர் பார்வைக்கும் செல்லவே இங்கே பதிந்தேன். மேலே தலைப்பிலேயேயும், கடைசியிலும் போட்டிருக்கேன் பாருங்க. அரசியல்னா முன்பெல்லாம் எனக்கு எட்டிக்காய் மாதிரிதான்! இப்பவும் கூட அதைப்பற்றி எழுத அவசியம் வந்தா மட்டும்தான் எழுதுவது, இல்லாட்டா அவ்வளவு இன்ட்ரஸ்ட் இல்லபா :)

    //அருமையான தளமாக இருக்கு அஸ்மா. மீண்டும் வருவேன்//

    கண்டிப்பா வாங்க அதிரா. ரொம்ப நன்றிபா!

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை