அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Sunday 27 March 2011

பயனுள்ள பல‌ தகவல்கள்


1) தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.


2) குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைந்து கஷ்டப்படுபவர்கள் 
http://www.bharatbloodbank.com/ இந்த இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்த தானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும்.

3) பொறியியல் கல்வி படித்த மாணவர்கள் தங்களின் கல்வி விபரம் குறித்து http://www.campuscouncil.com/ என்ற தளத்தில் பதிந்து வைப்போமானால் குறிப்பிட்ட நாற்பது நிறுவனங்கள் நடத்தும் நேர்முகத் தேர்வில் எளிதாக கலந்து கொள்ள முடியும்.

4) மாற்றுத் திறனாளிகளுக்கான இலவசக் கல்வி, இலவச விடுதி குறித்து தகவலைப் பெற‌ 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்துக் கொள்ளலாம்.

5) தீ விபத்துக்களினாலோ அல்லது பிறக்கும்போதே வாய், காது , மூக்கு போன்ற உறுப்புக்களின் வளர்ச்சி குறைந்த நிலையில் இருந்தாலோ இலவசமாக ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்துக்கொள்ள முடியும். இந்த (மார்ச்)மாதம் 23 ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 4 ம் தேதி வரை ஜெர்மானிய மருத்துவர்கள் PASAM Hospital , Kodaikanal மருத்துவமனைக்கு வரவிருக்கின்றார்கள். மேலும் தகவல்களைப் பெற 045420 240668,245732 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

6) வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சல் பெட்டியில் ஸ்டாம்ப் இல்லாமலே இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்துவிடும். அதற்குரிய அஞ்சற்செலவுத் தொகையை சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக்கொள்ளும்.

7) அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்பநிலை கூடுதலாக 10 டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தைவிட அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். நமது இமய மலையில் உள்ள பனிப்பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய தருணத்தில் இருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே!

அதனால் நம்மால் முடிந்தவரை, 
*மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம். 
*நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல் செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்.
* ப்ளாஸ்டிக் பயன்பாட்டினை முடிந்தவரை குறைக்கவும் அவற்றின் கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்கவும் முயற்சிக்கலாம்.

8) இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராணவாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு அளிக்கும் மரங்களை நட்டு, மனித வளத்திற்கு பாடுபடுவோம்!

9) கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்துக்கொள்ள சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தேவைப்படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம் செய்வது குறித்த தகவல்களுக்கும்: http://ruraleye.org/

10) பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய அறுவைச் சிகிச்சை தேவைப்பட்டால் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட் பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471

11) இரத்தப் புற்றுநோய்:
"Imitinef Merciliet" என்ற மருந்தின் மூலமாக இரத்தப் புற்றுநோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது. 

மேலும் விபரங்களுக்கு:
முகவரி:-

East Canal Bank Road, Gandhi Nagar,
Adyar Chennai - 600020
Land mark: மிக்கேல் பள்ளிக்கு அருகில்
தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241

12) விசேஷ வைபவங்களில் மீதமாகும் உணவை கீழே கொட்டவேண்டாம். தயவுசெய்து தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்). இந்த எண் சிரமத்தில் சிக்கித் தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று அனைவரும் அறிந்ததே. பசியால் வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்.


(இந்த தகவல்களை மெயிலில் அனுப்பி வைத்த‌ சகோவுக்கு நன்றிகள்)

10 comments:

  1. இந்தப்பதிவை நண்பர்கள் FACEBOOK GOOGLE BUZZ போன்ற சமூக வலைதளங்கலில் பகிர்ந்துக்கொண்டால் பலருக்கும் பயணுள்ளதாக இருக்கும்.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா...
    ஆஹா... அனைத்தும் மிகவும் முக்கியமான விஷயங்கள்.அனைவருமே அறிந்து தெரிந்து கொள்ள வேண்டிய பயனுள்ள விஷயங்கள் மற்றும் உபயோகப்படுத்த ஏதுவான தொலைப்பேசி எண்கள்.
    எங்கிருந்துதான் இவ்வளவு தகவலை சேகரிக்கின்றீர்களோ...(அதான் மெயிலில் என்று சொல்லிட்டேனே என்கிறீர்களா...?)யார் இவற்றை உங்களுக்கு தெரியப்படுத்துபவரோ...வியப்பாக உள்ளது.
    எப்படியோ நல்ல நல்ல விஷயங்களை,பல பயனுள்ள தகவலை அனைவரும் பயன் பெறும் படி தந்தமைக்கு மிகவும் நன்றி அஸ்மா...

    அன்புடன்,
    அப்சரா.

    ReplyDelete
  3. ரொம்ப பயனுள்ள பதிவு...அதுவும் phone numbers கொடுத்து இருப்பது நல்லது...

    ReplyDelete
  4. @ ராஜவம்சம்...

    //இந்தப் பதிவை நண்பர்கள் FACEBOOK GOOGLE BUZZ போன்ற சமூக வலைதளங்கலில் பகிர்ந்துக்கொண்டால் பலருக்கும் பயணுள்ளதாக இருக்கும்//

    ஆமா சகோ, அவற்றில் அக்கவுண்ட் உள்ளவர்கள் பகிரலாம். கருத்துக்கும் வருகைக்கும் நன்றி சகோ.

    ReplyDelete
  5. @ apsara-illam...
    வ‌ அலைக்குமுஸ்ஸலாம் அப்சரா.

    //யார் இவற்றை உங்களுக்கு தெரியப்படுத்துபவரோ...//

    உங்களுக்கும் தகவல் வேணும்னா சொல்லுங்க. உங்க ஐடியை அவர்களிடம் கொடுத்து வைக்கிறேன் :))

    //எப்படியோ நல்ல நல்ல விஷயங்களை,பல பயனுள்ள தகவலை அனைவரும் பயன் பெறும் படி தந்தமைக்கு..//

    ப்ளாக் ஆரம்பிக்கும் முன் இதுபோன்ற மெயில் தகவலைக்கூட பகிர்ந்துக்கொள்ள முடியாமல் இருந்தது. இப்போது அதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த இறைவனுக்கே புகழனைத்தும்! நன்றி அப்சரா.

    ReplyDelete
  6. @ GEETHA ACHAL...

    //ரொம்ப பயனுள்ள பதிவு...அதுவும் phone numbers கொடுத்து இருப்பது நல்லது...//

    அனைவருக்கும் பயன்பட்டால் சந்தோஷமே! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதாச்சல்.

    ReplyDelete
  7. பயனுள்ள பகிர்வு.

    ReplyDelete
  8. @ asiya omar...

    வருகைக்கு நன்றி ஆசியாக்கா!

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா..,தாங்களுக்கு என் நினைவாக ஒரு சான்றிதழை வழங்கியுள்ளேன்.முடிந்த போது என் இல்லம் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்.
    நன்றி.

    அன்புடன்,
    அப்சரா

    ReplyDelete
  10. @ apsara-illam...

    வ‌ அலைக்குமுஸ்ஸலாம் அப்சர! தங்களின் சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன் :) மிக்க நன்றி அப்சரா.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை