அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Wednesday 13 July 2011

எங்க ஊரு நல்ல ஊரு!

எந்த ஊருக்கு சென்றாலும் நாம் ஒவ்வொருவருக்கும் அவங்க அவங்க சொந்த ஊரைப்போல வராது (ஒரு சிலருக்கே தவிர) . அது ஒரு குக்கிராமமே ஆனாலும் தங்கள் ஊரைப் பற்றிக் கேட்டால் சந்தோஷமாக, சுவாரஸ்யமான பல விஷயங்களைச் சொல்வார்கள் என்பதால், ஸாதிகா அக்கா அவர்கள் இந்த தொடர் பதிவைத் தொடங்கி பல ஊர்களைப் பற்றி அறியும் வாய்ப்பை நமக்குத் தந்துள்ளார்கள். இந்த தொடர் பதிவுக்கு என்னையும் அழைத்த அருமை அக்கா ஸாதிகா அவர்களுக்கு என் நன்றிகள்!

'இந்தியா' என்றாலே (எங்கள்) நினைவில் முன்வந்து நிற்கும் கலகலப்பான, அதேசமயம் அமைதியான, அழகிய ஒரு நகரமான நான் பிறந்து, வளர்ந்து, பணிபுரிந்த காரைக்கால் என்ற எங்கள் ஊரைப் பற்றி எழுதுவதில் ஆனந்தமும், பெருமிதமும் கொள்கிறேன் :) :) ஃபிரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்த, பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள நான்கு மாவட்டங்களான‌ பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனம் ஆகியவற்றில் பாண்டிச்சேரியும் காரைக்காலும் தமிழகத்தின் எல்லையோடும், மாஹே கேரள எல்லையிலும், ஏனம் ஆந்திர எல்லையிலும் அமைந்துள்ளன.

Sunday 10 July 2011

கோடை விடுமுறைக் கொண்டாட்டம்!


சென்ற வாரம் பள்ளிகளில் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை ஆரம்பமானது. வருடம் முழுவதிலும் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை 15 நாட்கள் என இங்கே பள்ளி விடுமுறை விடப்பட்டாலும், இந்த கோடை விடுமுறை என்றால் குழந்தைகளுக்கு அது ஸ்பெஷல் கொண்டாட்டம்தான்!

Saturday 2 July 2011

நண்டு முருங்கைக்காய் குருமா


தேவையான பொருட்கள்:

நண்டு - 1/2 கிலோ
அரைத்த தேங்காய் ‍- ஒரு பிடியளவு
இஞ்சி பூண்டு - 3 ஸ்பூன்
மிளகாய்த் தூள் ‍- 4 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு ஜீரகத்தூள் - 3 ஸ்பூன்
கறி மசாலாத்தூள் - 2 ஸ்பூன்
மல்லித்தூள் ‍ - 6 ஸ்பூன்
உப்பு - தேவையானது

பயணிக்கும் பாதை