அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Monday 28 February 2011

கொழுப்பைக் கரைக்கும் பசலைக் கீரை!



பசலைக் கீரையில் பச்சைப் பசலை, சிகப்புத் தண்டு பசலை, கத்திப் பசலை என பல வகைகள் உள்ளன. அவை அனைத்தும் சத்துக்களில் குறையில்லாதவை. பசலைக் கீரைக்கு சமமான‌ அளவுக்கு உடலுக்கு நன்மை தரும் காய்கறி வேறெதுவும் இல்லை என சொல்லலாம். அந்தளவுக்கு இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எல்லாமே இதில் அதிகம். இதிலுள்ள‌ ஃபோலாசின் நோய்த் தடுப்புக்கு முக்கியம் என்பதால் இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது. ஆனால் இதயநோய் வந்தவர்கள் இந்தக் கீரையை அளவுக்கு மீறி சாப்பிடக் கூடாது.

Tuesday 22 February 2011

கேரட் அல்வா



மிகவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த கேரட் அல்வா சுவையும் சத்தும் நிறைந்தது. குழந்தைகளுக்கு அடிக்கடி செய்துக் கொடுக்கலாம். விருந்துகளில் பிரியாணி, நெய் சோறு வைக்கும்போது (பச்சடி போன்று) பக்க உணவாகவும் இதை வைப்பார்கள்.

Sunday 20 February 2011

ஃபாஸ்ட் ஃபுட் உணவினால் குழந்தைகளை நோய் தாக்கும் அபாயம்!

அவரசகால இவ்வுலகில் எதிலும் உடனடியாக தீர்வு வேண்டும் என்பதால் மக்களும் அவசர பழக்க வழக்கங்களை பெரும்பாலும் பின்பற்றி வருகின்றனர். அவற்றில் ஒன்றான இந்த ஃபாஸ்ட் ஃபுட் உணவுமுறை குழந்தைகளையும் கூட ஆபத்தான நோய்களின் தாக்கத்திற்கு ஆளாக்குகிறது. இந்த‌ உணவு வகைகளை இன்றைய இளம் தலைமுறையினர் பெரிதும் விரும்பி உண்ணுகின்றனர். நவீன வரவான இந்த ஃபாஸ்ட் ஃபுட் உணவு பழக்க வழக்கத்தால் உடல்நலன் மிக விரைவில் பாதிக்கப்பட்டுவிடுகிறது.

இந்த உணவுகளை சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இளம் தலைமுறையினர் தொடர்ந்து ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகளை சாப்பிட்டு வருவதால் சுமார் 50 வயது வரும்போது கேன்சர் உள்ளிட்ட ஆபத்தான‌ நோய்களால் அவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கின்றனர். மேலும் குழந்தைகளுக்கும் இரண்டாம்தர ரீதியிலான நீரிழிவு நோய் ஏற்படலாம் என்றும் பெண்களுக்கு எலும்புருக்கி நோய், இரத்த சோகை ஏற்படலாம் என்றும் மருத்துவக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு பிரிட்டனில் நடந்த சர்வேயில் ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரத்தால் அங்கு பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை 75% வரை அதிகரித்துள்ளதாக‌ குறிப்பிடப்பட்டுள்ள‌து. 

Thursday 17 February 2011

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பும் அவச‌ர‌ கோரிக்கையும்!

அரசாங்கத்திற்கு அவசரத் தந்தியனுப்பி சமூக நலனுக்காக‌ உதவுங்க‌ள்!

இந்தியாவில் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி சென்ற மாதம் முதல் தொடங்கப்பட்டது. 120 கோடிக்கு மேற்பட்ட மக்களை தனித்தனியாக கணக்கெடுத்து, அவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்குவது உலகிலேயே இதுதான் முதல் முறை. எந்தவொரு கிராமமும் விட்டுப்போகாத அளவுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கணக்கெடுப்புடன், முதல் முறையாக தேசிய மக்கள் தொகை பதிவேடும் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய திட்டமாக இது வகுக்கப்பட்டு மிக நுட்பமாக நிறைவேற்றப்படுகிறது.



குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலிடம் பதிவு செய்வதன் மூலம் இப்பணி தொடங்கப்பட்டது.

'மீலாதுந்நபி' எனும் மீலாது விழா: வழிபாடா? வழிகேடா?

இஸ்லாமிய மாதங்களில் மூன்றாவது மாதம் 'ரபீஉல் அவ்வல்' மாதம். இந்த மாதத்தில் இஸ்லாமியர்களில் சிலர் அத‌ற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து 'மீலாது விழா' என்ற பெயரில் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாளை ஒரு விழாவாக‌க் கொண்டாடி வருகின்றனர். நேற்று (16/02/11) உட்பட பல இடங்களில் இது கொண்டாடப்பட்டுள்ள‌து.

Tuesday 8 February 2011

ஹேர்பின் பூ செய்வது எப்படி?

ஹேர்பின் பூக்கள் பல டிசைன்களில் செய்யலாம். இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் டிசைன், சைனீஸ் மாடல் ஹேர்பின் பூக்களில் ஒன்றாகும். 

சென்னை போராட்டக் காட்சிகள் (முழு வீடியோ)



அலகாபாத் உயர் (அ)நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஜனவரி 27 ந்தேதி நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் வீடியோக் காட்சிகள்:

Monday 7 February 2011

மீனவர்களின் உயிர்காக்க இணைவோம் இணையத்தில்!

தமிழக மீனவர்களின் உயிர்காக்க இணையத்தில் நடக்கும் போராட்டத்தில் சிறு பங்களிக்கவே இந்த இடுகை! ஏற்கனவே நிறைய சகோதர சகோதரிகள் இதில் பங்கெடுத்துக் கொண்டாலும் இதுவரை வாய்ப்பில்லாத‌ ஒவ்வொருவரும் இதில் கண்டிப்பாக‌ கலந்துக் கொள்ளவேண்டும்.

நம் இந்திய திருநாட்டில் சில காலங்களாகவே திட்டமிட்டு செயல்படுத்தப்படும் இனக் கலவரங்கள், குண்டு வெடிப்புகள், வன்முறை வெறியாட்டங்கள் போன்றவற்றால் அப்பாவி பொது மக்களின் விலைமதிக்க முடியாத உயிர்கள் பறிக்கப்படுகின்றன. அந்த பட்டியலில் இப்போது ஒன்றுமறியா மீனவர்களின் உயிர்களும் துச்சமாக மதிக்கப்பட்டு இலங்கை இராணுவத்தின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக்கப்படுகின்றன. இவற்றிற்கு பதில் சொல்லவேண்டிய முழு பொறுப்பும் இந்திய அரசாங்கத்திற்கு உள்ளது.

Wednesday 2 February 2011

அவித்த முட்டை செய்வது எப்படி?! (எச்சரிக்கை!)

தேவையான பொருட்கள்:

முட்டை - 1
அலைபேசிகள் - 2

செய்முறை:

முதலில் இரண்டு அலைபேசிகளுக்கிடையே 65 நிமிடம் தொடர்பு ஏற்படுத்தவேண்டும். பிறகு...  


தொடர்ந்து வரும் செய்தியைப் பார்க்கவும்.

கீழே உள்ள படத்தில் காட்டியது போல இரண்டு அலைபேசிகளுக்கு டையே ஒரு இணைப்பு உருவாக்கப்பட்டது.


பயணிக்கும் பாதை