அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Saturday 21 May 2011

விளையும் பயிர்களே! உங்களுக்காக... (பாடம் 2)

குழந்தைகளுக்கான இஸ்லாமிய பொது அறிவு

அன்புத் தாய்மார்களே! உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக! சென்ற‌ பாடத்தில் நாம் பார்த்த கேள்வி-பதில்களை இதுவரை உங்கள் குழந்தைகளின் கவனத்திற்கு கொண்டுச்சென்று, அவர்களுக்கு சொல்லித் தந்திருப்பீர்கள். அல்ஹம்துலில்லாஹ்! இப்போது இரண்டாவது பாடத்திற்கு செல்வோம்.

Monday 16 May 2011

தேங்காய்ப்பூ சோமாஸ்

இந்த தேங்காய்ப்பூ சோமாஸ் தஞ்சை மாவட்ட இஸ்லாமிய இல்லங்களில் மிகவும் பிரபலமானது. ஒருமுறை சாப்பிட்டால் மீண்டும், மீண்டும் சாப்பிடத் தூண்டும் சுவைக் கொண்டது. (முறையாக பாதுகாத்தால்) 1 வாரம் வரைகூட வைத்து சாப்பிடலாம்.

[குறிப்பு: இதனுள் வைக்கப்படும் உள்ளடத்தை (பூரணத்தை) சுவையாக செய்தால்தான் சோமாஸ் சுவையாக அமையும். அத்தகைய சுவையான உள்ளடம் செய்முறை, என் (மூத்த) சிறிய தாயார் சொல்லித்தந்த முறை என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்]

Saturday 14 May 2011

மாணவர்களே! சலுகைகளைப் பெறத் தவறாதீர்கள்!


கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு வகையான உதவி தொகைகள், இலவசக் கல்வி மற்றும் இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிகள் போன்றவற்றை வழங்கியுள்ளது. மேலும் பட்டதாரிகள் யாரும் இல்லாத குடும்பத்திலிருந்து வரக்கூடிய‌, தொழிற்கல்வி படிப்புகளில் சேர சீட்டு கிடைக்கும் மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கும் திட்டமும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவ சமுதாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில் சில வருடங்களாகக் கொண்டு வரப்பட்டுள்ள இந்த திட்டங்கள், சரியான அளவில் எல்லா மக்களின் கவனத்திற்கும் இன்னும் சென்றடையவில்லை என்பது வருத்தமான ஒரு உண்மை! எனவே இந்தக் கல்வியாண்டிலாவது நம‌க்கு இயன்றவரை நம் உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களிடமும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அரசின் சலுகைகளுக்கும் திட்டங்களுக்கும் தகுதியுடைய மாணவர்களை பயனடையச் செய்வோம்.

Monday 9 May 2011

அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

சென்ற வருடம் செப்டம்பர் 30ம் தேதி அயோத்தியில் உள்ள பாபர் மசூதி/ராமஜென்ம பூமி நிலப் பிரச்சனையில், நிலத்தை மூன்றாகப் பிரித்து ஒரு பகுதியை இஸ்லாமியர்களுக்கும் மற்ற இரண்டு பகுதிகளை இந்துக்களுக்கும் வழங்கவேண்டும் என்றும், இதில் ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளை வழங்கிய அநியாயத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று (திங்கள் கிழமை) காலை விசாரணைக்கு வந்தது.


வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அஃப்தாப் ஆலம் மற்றும் ஆர்.எம். லோதா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முதல் கட்டமாக இந்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

Sunday 8 May 2011

ஸ்டார் (ஒயர்)கூடை பின்னுவது எப்படி? (பாகம் - 3)

முதல் பாகத்தைக் காண இங்கே க்ளிக் பண்ணவும்.
இரண்டாம் பாகத்தை இங்கே காணவும்.




1. இப்போது நடு பாகத்தில் இரட்டை கலரில் வரும் 20 வரிகள் கொண்ட பின்னல்களின் சரி பாதி நடுவிலுள்ள 2 வரிகளின் ஓர சோவிகளை எடுத்து இணைத்து ஒரு சோவி போடவும். அதாவது அந்த 2 வரிகளுக்கு ஒவ்வொரு பக்கமும் தலா 9, 9 வரிகள் இருக்கும்படி விட்டுவிட்டு நடுவிலுள்ள சோவிகள் இரண்டையும் இணைக்கவேண்டும்.(புரியாவிட்டால் மீண்டும் படிக்கவும் அல்லது பின்னூட்டத்தில் கேட்கலாம்)

பயணிக்கும் பாதை