அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Thursday 9 February 2012

பவர்ஃபுல் ஆன்டி கேன்சர் - "காட்டு ஆத்தா"! (மீள்பதிவு)

நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் விழிப்புணர்வு கட்டுரை

(நேசம் இணைய தளம் மற்றும் யுடான்ஸ் தளம் இணைந்து வழங்கும் கட்டுரைப் போட்டிக்காக இந்தக் கட்டுரை மறுபதிவு செய்யப்படுகிறது. இந்த மறுபதிப்பானது போட்டியின் நிபந்தனைக்குட்பட்டு இருப்பதால் முந்திய பதிவைவிட சுருக்கப்பட்டுள்ளது. கூடுதல் விளக்கத்துடன் பார்க்க விரும்புவோர் பழைய பதிவைப் பார்க்கவும்.)


இன்றைய உலகில் எவ்வளவோ நவீன மருத்துவ முறைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் மிஞ்சுமளவுக்கு புதுப்புது வகை நோய்களும் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட நோய்களில் 'உயிர்க்கொல்லி நோய்' என அஞ்சப்படும் சில வகைகளில் எல்லா தரப்பு மக்களிடையேயும், வயது வித்தியாசமின்றி பரவி வருவது புற்றுநோயே! ஆரம்ப கட்ட‌த்திலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சையை உடனுக்குடன் அளித்தால் ஓரளவுக்கு காப்பாற்றிவிடலாம் என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், அவ்வாறு தப்பிப் பிழைத்த ஒருசிலரின் நிகழ்வுகளைத் தவிர பல பேருக்கு உயிரைப் பறித்துவிடும் அளவுக்குதான் இதன் தாக்கம் அதிகமாக உள்ள‌து. இதனால் மக்கள் மத்தியில் புற்றுநோய் பற்றிய பயம் என்றுமே மனதில் குடிகொண்டுள்ளது. மேலும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்த நோய் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பயனற்று போய்விடுவதால் மருத்துவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் கை விரித்து விடுகிறார்கள்.

பல‌ வகைகளில் உருவாகி மக்களை ஒருகை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நோயானது பெரும்பாலான உறுப்புகளை தாக்குவதாக உள்ள‌து. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட‌ நிலையில் தாக்குவதும் உண்டு. அதனால் எந்த மருந்து புற்றுநோய்க்கென அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதை மனித நேயமுள்ள அனைவரும் உடனுக்குடன் பகிர்ந்துக் கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இன்றைய காலக்கட்டத்தில் மிக அவசியமான ஒன்றாகும்.

புற்றுநோய் வந்தபிறகு கொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமே இன்று அறிமுகத்தில் உள்ளன. ஆனால் இதற்கான தடுப்பு மருந்துகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. அதேசமயம் இயற்கையான உணவுப் பொருட்களிலேயே புற்றுநோயின் எதிர்ப்புச் சக்தியை இறைவன் கொடுத்துள்ளான். அவற்றில் மிகவும் சக்தி வாய்ந்த புற்றுநோய் கொல்லியாக "காட்டு ஆத்தாப்பழம்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது! இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை (Chemo) மருந்துகளைவிட 10,000 மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக‌ உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. அவ்வளவு சக்தி வாய்ந்த கேன்சர் கில்லராக இருக்கும் இந்தப் பழம் அமெரிக்காவின் அமேசான் மழைக் காடுகளிலும், கரீபியன் மற்றும் மத்திய அமெரிக்காவிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பரவலாகவும் விளைகிறது.

சகோதர நாடான இலங்கையிலும் மற்றும் வியட்நாம், கம்போடியா, பிரேசில், போர்த்துகல் போன்ற நாடுகளில் பழங்களோடு பழமாக சாதாரண உபயோகத்தில் மட்டுமே உள்ளது. மலேஷியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் தெரு வியாபாரிகள்கூட பழ ஜூஸ், ஷர்பத், மில்க் ஷேக் போன்றவை தயாரிக்க சர்வ சாதாரணமாக இந்தப் பழத்தை பயன்படுத்துகிறார்கள். மெக்ஸிகோவில் ஐஸ்கிரீம் வகைகளிலும், ஃப்ரூட் ஜூஸ் பார்லர்களிலும் அதன் சுவைக்காக மிகவும் பிரபலமான‌ பழமாக பயன்படுத்தப்படுகிறது. ஏன், நம் நாட்டில் கேரளாவிலும் "ஆத்தச்சக்கா" (aatha chakka) என்ற பெயரில் மக்களின் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் பெரும்பாலான மக்கள் அதன் பலன் தெரிந்து பயன்படுத்துவதாக தெரியவில்லை.

இதன் மரம் Graviola Tree என்று அழைக்கப்படுகிறது. பழத்தின் மேற்புறத்தில் பலாப்பழத்தைப் போன்று, ஆனால் சற்று அதிகமான இடைவெளியில் முட்கள் இருக்கும். இவை சாதாரண ஆத்தாப் பழத்தின் அளவுகளிலும், அதிக பட்சம் 20-30 செ.மீ. வரை நீளத்திலும், 2.5 கிலோ எடை வரையிலும் விளைகிறது. அதிகமான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட இந்தப் பழத்தில் கார்போஹைட்ரேட், பிரக்டோஸ் மற்றும் கணிசமான அளவில் வைட்டமின் C, வைட்டமின் B1, வைட்டமின் B2 போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன.

இது துரியான் பழமோ, சாதாரண ஆத்தாப் பழமோ, சீத்தாப் பழமோ அல்ல!‌ (படங்களை நன்கு கவனிக்கவும்). இந்தப் பழத்தை சாதாரண ஆத்தாப்பழம் போன்று அப்படியே சாப்பிடலாம். அல்லது நம் ரசனைக்கேற்றபடி மில்க்க்ஷேக், ஷர்பத், டெஸெர்ட், ஐஸ்க்ரீம் என எப்படி வேண்டுமானாலும் தயார்பண்ணியும் சாப்பிடலாம்.




 நம் வீடுகளில் போதுமான அளவு தோட்டமிருந்தால் போதும், நாமும் விதைக்கலாம். சிறிய கன்றுகளாக வாங்கியும் நடலாம். அதன் விதைகள்:




இதன் பலனை அனைவரும் அடைந்துக் கொள்ளவேண்டும் என்ப‌தற்காக, இந்தப் பழம் எந்த நாடுகளில்/மொழிகளில், என்னென்ன பெயர்களில் அழைக்கப்படுகிறது என்ற விபரங்களும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை: "காட்டு ஆத்தா" (சில வட்டாரங்களில் "அன்னமுன்னா பழம்" அல்லது "அண்ணவண்ணா பழம்" என்ற பெயரில் அறிமுகத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்)
ஆங்கிலம்: "Soursop", "Prickly Custard Apple", "Soursapi" 
மலையாளம்: "Aatha Chakka"
பிரெஞ்ச்: "Corossol", "Cachiman Epineux"
அரபி: "سورسوب"
ஸ்பானிஷ்: "Guanábana ", "Anona"
ஜெர்மன்: "Sauersack", "Stachelannone", "Flashendaum" 
இந்தோனேஷியா: "Sirsak" & "nangka landak"
பிரேசில்: "Graviola"
மலேஷியா: "Durian Belanda"
கிழக்கு மலேஷியா: "Lampun"
தென் வியட்நாம்: "Mãng cầu Xiêm"
வட வியட்நாம்: "Quả Na"
கம்போடியா: "Tearb Barung" ("Western Custard-apple fruit")
போர்த்துகல்: "Curassol", "Graviola"

15 comments:

  1. அருமையான பதிவு.

    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. @ Rathnavel Natarajan...

      //அருமையான பதிவு.

      எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
      வாழ்த்துகள்//

      தங்களின் வருகைக்கும் முகநூல் பகிர்வுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க‌ நன்றி ஐயா! உங்கள் தளத்தில் ஃபாலோவர் விட்ஜெட் வேலை செய்யவில்லையே? கொஞ்சம் சரி பண்ணிவிடுங்கள்.

      Delete
  2. விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. @ Lakshmi...

      //விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்//

      நன்றி லஷ்மிமா :)

      Delete
  3. நல்ல பகிர்வு. காட்டு ஆத்தா கேன்சரை குணப்படுத்தக்கூடியது பற்றி அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி அஸ்மா.

    இது சீத்தா பழம் வகையை சார்ந்ததா?..

    ReplyDelete
    Replies
    1. @ Starjan ( ஸ்டார்ஜன் )...

      //நல்ல பகிர்வு. காட்டு ஆத்தா கேன்சரை குணப்படுத்தக்கூடியது பற்றி அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி அஸ்மா//

      நன்றி சகோ.

      //இது சீத்தா பழம் வகையை சார்ந்ததா?..//

      ஆமா சகோ. ஆத்தாப் பழம், சீதாப் பழ வகைகளைச் சார்ந்ததுதான்.

      Delete
  4. நல்ல விழிப்புணர்வு பகிர்வு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. @ Asiya Omar...

      //நல்ல விழிப்புணர்வு பகிர்வு.வாழ்த்துக்கள்//

      நன்றி ஆசியாக்கா :)

      Delete
  5. இக்காலத்துக்கும் எக்காலத்துக்கு அவசியமான பதிவு.
    அன்னமுன்னா மரம் எங்கள் ஊர் வீட்டில் இருக்கு ஆரும் தேடுவதில்லை, பெரும்பாலும் அணில்தான் சாப்பிடும், நானும் நிறைய சாப்பிட்டிருக்கிறேன்... சூப்பர் சுவை. இப்போ வெளிநாடுகளிலும் கிடைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. @ athira

      //இக்காலத்துக்கும் எக்காலத்துக்கு அவசியமான பதிவு//

      நன்றி அதிரா :)

      //அன்னமுன்னா மரம் எங்கள் ஊர் வீட்டில் இருக்கு ஆரும் தேடுவதில்லை, பெரும்பாலும் அணில்தான் சாப்பிடும், நானும் நிறைய சாப்பிட்டிருக்கிறேன்... சூப்பர் சுவை//

      அப்படீன்னா 'காட்டு ஆத்தா'வை 'அன்னமுன்னா'/'அண்ணவண்ணா' என்று சொல்வது வழக்கத்தில் உள்ள‌துதானா அதிரா? அந்தப் பழம் இங்கே கொடுக்கப்பட்டுள்ள படங்களில் உள்ளது போன்றுதான் இருக்குமா? ஏன் கேட்கிறேன் என்றால் "சில வட்டாரங்களில் "அன்னமுன்னா பழம்" அல்லது "அண்ணவண்ணா பழம்" என்ற பெயரில் அறிமுகத்தில் இருப்பதாக சொல்கிறார்கள்" என அதன் மற்ற தமிழ்ப்பெயர்களை உறுதியின்றி குறிப்பிட்டிருந்தேன். அதனால்தான்!

      Delete
    2. ennakku vethagal allathu kaNRUGAL KEDAIKUMAA
      9486072414

      Delete
    3. ennaku vethaigal allathu kanrugaal vendum kedaikumaaa

      9486072414

      Delete
    4. இதன் விதைகளோ, கன்றுகளோ கிடைக்குமிடம் தெரியவில்லை. விசாரித்துப் பார்த்து தகவல் கிடைத்தால் இந்த பதிவுடன் சேர்க்கப்படும்.

      Delete
  6. Replies
    1. @ NKS.ஹாஜா மைதீன்

      //பயனுள்ள பதிவு....//

      நன்றி சகோ.

      Delete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை