அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Saturday 5 May 2012

பொய் சொல்லி வாழ்ந்தவர் இல்லை! (எதிர்ப் பதிவு)

 இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் நடத்தப்பட்ட கணக்கெடுப்பான‌ சமூக, பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு, (சுமார் 80 வருஷங்களுக்குப் பிறகு) இப்போது இந்திய நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருவது நாமறிந்ததே! அதுபற்றி வெளியிடப்ப‌ட்ட‌ ஒரு விழிப்புணர்வு கட்டுரையைப் படித்துச் சென்ற‌வர்களில் ஒருவரான சகோதரர் கோவி. கண்ணன், அதன் உண்மை நிலைத் தெரிந்தும் வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்யும் வண்ணமாக சமீபத்தில் எழுதிய தன்னுடைய பதிவொன்றில் தவறான ஒரு கருத்தைக் குறிப்பிட்டுள்ளார். அதுபோல் இன்னொரு சகோதரரும் நம் பதிவின் பின்னூட்டத்தில் அறியாப் பிள்ளைபோல் கருத்து தெரிவித்திருந்தார். அவர்கள் இருவருக்கும், இன்னும் இதுபோன்று ஒன்றுமில்லாத வெறும் வாய்க்கு அவல் மெல்லுபவர்களுக்கும், அதற்கு 'ஆமா சாமி' போடுபவர்களுக்கும் இந்தப் பதிவு சமர்ப்பணம்! (என்னுடைய பதிவுலக வாழ்க்கையில் இதுதான் முதல் 'எதிர்ப் பதிவு'/'மறுப்பு பதிவு' என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.)

 முதலில் ச‌கோதரர் கோவி. க. அவர்களின் பதிவில் கூறியுள்ள செய்தியைப் பார்போம்.
//1) ஷேக்
    2) சையது
    3) தக்னி முஸ்லிம்
    4) அன்சார்
    5) தூதுகோலா
    6) லெப்பை, ராவுத்தர், மரைக்காயர்
    7) மாப்பிள்ளா

என 7 சாதியினராக முஸ்லிம்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

(நன்றி அஸ்மா)

இந்திய சாதிகள் தலித்துகளை மிகவும் தாழ்வாக நடத்துகிறார்கள் என்பது ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை தான். அவர்கள் இஸ்லாமுக்கு மாறி ஒன்றும் மேம்படவில்லை, என்பதை ரசூல் போன்றவர்கள் எழுதியுள்ளனர்.//
சகோதரரே! யாரென்றே சரியான அறிமுகம் இல்லாதவர்கள் எந்தவொரு அடிப்படை அறிவும், எத்தகைய‌ ஆதாரமும் இல்லாமல் எழுதி வைத்திருப்பதை மட்டுமே உங்களுக்கு ஆதாரமாக எடுத்துக் கொள்ளமுடிகிறது. பாவம்...! இஸ்லாத்தின் சாதிப் பிரிவுகளுக்கும், ஏற்றத் தாழ்வுகளுக்கும் நீங்கள் எங்கேதான் போய் தேடுவீர்கள் ஆதாரத்தை? நாங்கள் பின்பற்றும் குர்ஆனிலோ, ஹதீஸ்களிலோ உங்களால் ஆதாரத்தைக் காட்ட இயலாதபோது, உங்களின் வெறும் வாய்க்கு அவலாக... ஐந்தடி (நடைபாதை)க் கடைகளில் கிடைக்கும் அதுபோன்ற புத்தகங்கள்தான் உங்களுக்கு கைக் கொடுக்கும். ஆனாலும் அதை வைத்து நடுநிலையாக/நேர்மையுடன் சிந்திக்கும் மக்களிடம் 'இஸ்லாத்திலும் சாதிகள் உண்டு' என என்னதான் மத்தாப்பு காட்டினாலும் அது புஸ்வானமாகிப் போகும் என்பதை மறந்துவிடாதீர்கள்! தவிர அத்துடன் எங்க‌ளையும் ஆதாரத்துக்கு சேர்த்துக் கொண்டு, இப்படி ஒரு தனி பதிவே போட வைத்து விட்டீர்கள்.

உலக மக்கள் அனைவரும் நலம் வாழ இஸ்லாம் மார்க்கம் எவ்வளவு அருமையான கொள்கைகளை, கொட்டும் அருவியாக‌ மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தாலும் அத்தனையையும் உள்வாங்கிக் கொண்டு வேண்டுமென்றே இஸ்லாத்தின் மீது சேற்றை வாரி இறைப்பதற்காக இப்படி 'மொட்டைத் தாத்தா குட்டையில் விழுந்தான்' என்ற கதையாக அந்தப் பதிவின் ஒரு சின்ன பகுதியை மட்டும் கட் பண்ணிப் போட்டு, "நன்றி அஸ்மா"ன்னு குறிப்பிட்டால், இஸ்லாத்தில் சாதிகள் உள்ளதென்று நிரூபித்து, மக்களை நம்பவைத்து விட்டீர்கள் என்று பகல் கனவு காணாதீர்கள் சகோதரரே! இது உங்களுக்கு தேவையில்லாத வேலை. உங்களுக்கும் அந்தப் பதிவுக்கும் சம்பந்தம் இல்லாதபோது படித்துவிட்டு நீங்கள் போய்க்கொண்டே இருக்கலாம்! அல்லது அதுபற்றி எங்களிடம் கேட்டு தெளிபடுத்தியிருக்கலாம்.

சரி.. 'நன்றி'ன்னுதான் குறிப்பிட்டீர்கள். அந்த நன்றியை TNTJ.NET தளத்திற்கு அல்லவா நீங்கள் சொல்லியிருக்கவேண்டும்? அது அவர்களின் ஆக்கம் என்று அந்தப் பதிவில் சொல்லியிருந்ததை உண்மையாகவே நீங்கள் பார்க்கவில்லையா? உங்கள் நன்றிக்கு தகுதியானவர்கள் அவர்கள் இல்லையா? அந்தக் கட்டுரைக்கு கீழே,

"tntj.net தளத்தில் வெளிவந்த‌ இந்தக் கட்டுரை அவசியமானதொரு விழிப்புணர்வு கருதி இங்கே பகிரப்பட்டுள்ளது. தக்க சமயத்தில் தேவையான விழிப்புணர்வு தந்த TNTJ வுக்கு நன்றிகள்!" என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தும் நீங்கள் ஏன் அவர்களுக்கு நன்றி சொல்லவில்லை? ஓ... அவர்களை 'வஹ்ஹாபி', 'வஹ்ஹாபி' என்று ஓயா புலம்புவீர்களே... அந்த எஃபக்டோ..?!! :)
//இஸ்லாமில் சாதிகள் உண்டு என்ற உண்மையை சொன்னதிற்காக அஸ்மா என்பவரின் பதிவுக்கு மைனஸ் வாக்கும் குத்தியுள்ளார்கள். பிளஸ் 5மட்டுமே. ஏக இறைவன் உங்களுக்கு அது தருவான் இது தருவான் என்ற புகழ்பாடும் பின்னோட்டங்களுமில்லை.//
இது உங்களின் பதிவுக்கு உங்களைப் போன்ற ஒருவர் இட்ட பின்னூட்டம். இந்த பின்னூட்டத்தைப் பார்த்து வெற்றுச் சிரிப்பும், இதுபோன்றவர்களின் அறியாமையை எண்ணி பரிதாபமும் மட்டுமே வந்தது. முதலில் ஒன்றைப் புரிந்துக் கொள்ளுங்கள்! மற்றவர்கள் புகழ்பாடும் பின்னோட்டங்களுக்காக நாங்கள் எந்த பதிவையும் எழுதுவதில்லை. அப்படி நீங்கள் சொல்வதுபோல் 'ஏக இறைவன் எங்களுக்கு அது தருவான் இது தருவான்' என்று யாரும் சொன்னாலும் அது எங்களுக்குக் கிடைத்த ஒரு பிரார்த்தனை என்ற அடிப்படையில் சந்தோஷப்பட்டுக் கொள்வோம், அவ்வளவே! ஏன்... எத்தனையோ மாற்றுமத சகோதரர்களைக்கூட அதற்கு தகுதியான இடத்தில் அதுபோல் நாங்கள் வாழ்த்தி, பிரார்த்திப்பதில்லையா? ஆக பிரார்த்தனைக்கும், புகழ்பாடுதலுக்கும் கூட‌ உங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை!

அடுத்து, இதற்கு முன் அவரின் பின்னூட்டத்தில் சொன்னதுதான் செம ப்ளஸ் பாய்ண்ட்! "இஸ்லாமில் சாதிகள் உண்டு என்ற உண்மையை சொன்னதிற்காக அஸ்மா என்பவரின் பதிவுக்கு மைனஸ் வாக்கும் குத்தியுள்ளார்கள்" என்ற வரிகளைக் கவனியுங்கள் நடுநிலையாளர்களே! இதிலுள்ள சூட்சுமம் மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்கு புரியாது என்பதால், அதனை ஸ்டெப்-பை-ஸ்டெப்பாக பார்ப்போம் :)
//இஸ்லாத்தில் சாதிகள் கிடையாது என்பது நூற்றுக்கு நூறு உண்மை. இந்த உண்மை முஸ்லிமல்லாதவர்களுக்கு நன்கு தெரியும். அதனால்தான் இஸ்லாத்தை நோக்கி மக்கள் அணி அணியாக வருகிறார்கள்.//

//இஸ்லாத்தில் சாதிகள் இல்லை. அதனால் முஸ்லிம்களுக்கு சாதி ரீதியான இடஒதுக்கீடு கொடுப்பது சரிப்படாது. எனவே அவர்களுக்கு மத ரீதியில் மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் விதி செய்யப்பட்டிருந்தால் இஸ்லாத்தில் இல்லாத சாதிகளை குறிப்பிடும் அவசியம் இன்று முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்காது.//
இவை அந்தக் கட்டுரையில் டார்க் எழுத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தவை. (இப்போது ஹைலைட் பண்ணியும் கொடுத்தாச்சு.) 

அந்தக் கட்டுரையின் நோக்கம், தற்போது நடந்துக் கொண்டிருக்கும் கணக்கெடுப்பின்போது இஸ்லாமிய மக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வினை ஏற்படுத்தவே! 'இஸ்லாத்தில் சாதிகள் உள்ளனவா? இல்லையா?' என்பதை சொல்லும் கட்டுரைய‌ல்ல அது! அப்படியிருந்தும் மேலே குறிப்பிட்டுள்ள அந்த இரண்டு பேராக்களும் (இதுபோன்ற ஆட்களுக்கு சொல்லவேண்டிய அவசியத்தினால் கூட இருக்கலாம்) அங்கு இடம் பெற்றிருந்தன. அதைப் படித்தும் படிக்காததைப் போன்று, "இஸ்லாமில் சாதிகள் உண்டு என்ற உண்மையை சொன்னதிற்காக..." என்று எந்தளவு அப்பட்டமாக வாய்கூசாமல் பொய் சொல்ல முடிகிறது?!
"பொய் சொல்லி வாழ்ந்தவருமில்லை; மெய் சொல்லித் தாழ்ந்த‌வருமில்லை!"  மறந்துவிடாதீர்கள்!
சரி.., உங்களின் கூற்றுப்படியே இஸ்லாமில் சாதிகள் உண்டு என்ற உண்மையை (?) சொன்னதற்காக அந்த‌ பதிவுக்கு மைனஸ் வாக்கு குத்தியுள்ளார்கள் என்றால், அந்த 3 மைனஸ் ஓட்டுகளையும் குத்தியவர்கள் யார்? saarvaakan, alexm, punter அல்லவா? இஸ்லாமிய மக்களின் விழிப்புணர்வுக்காக‌ எழுதப்பட்ட ஒரு கட்டுரை அனைத்து இஸ்லாமிய மக்களிடமும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே எல்லா திரட்டிகளிலும் இணைக்கப்பட்டது. அங்கு விழும் வோட்டு முக்கியமல்ல! ஆனால் மைனஸ் வோட்டின் மூலம் இத்தகைய விழிப்புணர்வு இஸ்லாமிய பொதுமக்களை அடையக் கூடாது என்பதால் மைனஸ் குத்தி, அந்தப் பழியும் இஸ்லாமிய சகோதரர்கள் மீது போடப்பட்டுள்ள‌து! இந்த ஒரு தளத்தில் மட்டும் அந்த விழிப்புணர்வு பதிவு வந்திருந்தால் அவர்கள் செயலில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கலாம். விழிப்புணர்வு கருதி பல தளங்களிலும் இதையே பிரசுரித்திருந்தார்களே? அதைத் தடுக்க முடிந்ததா அவர்களால்? காட்டாற்று வெள்ளத்திற்கு அணை போட முடியாது சகோதரர்களே! :)

அதற்கு +/- போட்டவர்கள் யார் என்பதை பார்க்காமல் அலட்சியமாக இருந்த எங்களை, "உண்மையை சொன்னதற்காக அந்த‌ பதிவுக்கு மைனஸ் வாக்கு குத்தியுள்ளார்கள்" என்ற பின்னூட்டமே அந்த 'மைனஸ் மகான்க‌ள்' யார் எனத் திரும்பிப் பார்க்க வைத்தது. சமீப காலமாக‌ தொடர்ந்து அபாண்டமாக குற்றம் சாட்டப்படும் பதிவுலக இஸ்லாமியச் சகோதர/சகோதரிகள் தேவையில்லாத இதுபோன்றவற்றில் ஈடுபடமாட்டார்கள் என்பதற்கு இதில் கண்ட உண்மை இன்னுமொரு சாட்சியாக அமைந்துள்ளது :-) எல்லாப் புகழும் இறைவனுக்கே! (அந்தப் பின்னூட்டத்தில் கிடைத்த 'ப்ளஸ் பாய்ண்ட்' என்று இதைதான் குறிப்பிட்டேன்.)

சகோ கோவி.க. வேறு அந்த பின்னூட்டத்திற்கு சொன்ன பதிலில், "இவங்க நம் கண் முன் ஆடும் தாண்டவங்களைப் பார்க்கிறோம்..." என நம்மீது என்னவொரு அக்கறையை (?) அள்ளிக் கொட்டுகிறார்!! தமிழ்மணத்தில் விழும் வோட்டுக்களையும், மகுடத்திற்கு வரும் பதிவுகளையும் தவறாமல் கவனித்து ஸ்க்ரீன் ஷாட் எடுத்து விள‌க்கும் அவருக்கு, மைனஸ் ஓட்டுக்களைப் போட்டது யாரென்று புரியாதா என்ன? அங்கேயும் ஒரு ஸ்க்ரீன் ஷாட் போட்டு, பின்னூட்டமிட்டவரின் கருத்தை மறுத்திருக்கலாமே? ஆக, உங்களின் நோக்கம் எப்படியாவது இஸ்லாமிய சகோதர/சகோதரிகள் மீது வீண்பழியைப் போட்டாவது இஸ்லாத்தைக் கொச்சைப் படுத்தவேண்டும் என்பதுதான்!

இஸ்லாத்தை வேண்டுமென்றே விமர்சிக்கும் சகோதரர்களே! உங்களின் விமர்சனங்கள், "இஸ்லாம்" குறித்து நீங்கள் நிறைய‌ தெரிந்துக்கொள்ள வேண்டியுள்ளது என்ப‌தைதான் காட்டுகிறது. நீங்கள் இஸ்லாத்தை விமர்சிப்பதற்கு அட்லீஸ்ட்... அந்த‌ தகுதியையாவது நீங்கள் பெற்றிருக்க வேண்டாமா? அதற்காகவாவது இஸ்லாத்தின் மீதுள்ள‌ உங்களின் காழ்ப்புணர்ச்சியை கொஞ்சம் ஓரமாக‌ வைத்துவிட்டு, நாங்கள் பின்பற்றும் குர்ஆனையும், ஹதீஸையும் நேர்மையான கண்கொண்டு படித்துப் பாருங்கள். அதற்கு பிறகு விவாதித்து, உங்களின் கருத்துக்களைப் பதிவிடுங்கள். இல்லையேல் "இரும்பு எடுத்த கையும், சிரங்கு பிடித்த கையும் சும்மா இருக்காது" என்பதுபோல் எதையாவது எழுதிக் கொண்டிருங்கள். அத‌னால் எங்களுக்கு எந்த நஷ்டமுமில்லை. உங்களுக்கும் நேரம் போகணும்ல..!

26 comments:

  1. @அஸ்மா
    அரவேக்காடு கேசுங்க! இஸ்லாத்தை தாக்கி வரும் பின்னூட்டத்தை மட்டும் வெளீயிடும் thequickfox போன்ற அல்லக்கைகளை என்ன போட்டாலும் ஒடனே வெளியிடும் பதிவுலகில் ஒரே நேர்மையாளர் தான் நம்ம கோவிகண்ணு.... சாரி சாரி கோவிகன்னன்!

    இஸ்லாத்தில் சாதிகள் இல்லைங்குறத இவர் அரவேக்காடு பதிவுபோட்டு இருக்குன்னு சொல்ல பாக்குறாராம்! கொடுமை! இவங்களாம் கீழ்பாக்கத்துல இருக்க வேண்டியவங்க..

    @கோவி
    இஸ்லாத்தை விமர்சிப்பது தவறில்லை
    அதன் கொள்கைகளை பற்றி விவாதிப்பதும் தவறில்லை

    ஆனா நேர்மைன்னா, உண்மைன்னா என்னான்னு உங்க ப்லாக்ல சைட்ல எழுதி வச்சுக்கோங்க... ஒருநாளைக்கு 100 தடவ வாசிங்க! அப்பவாவது மண்டைல எதாவது ஏறுதான்னு பாக்கலாம்..

    ReplyDelete
    Replies
    1. @ ஆமினா

      //அரவேக்காடு கேசுங்க! இஸ்லாத்தை தாக்கி வரும் பின்னூட்டத்தை மட்டும் வெளீயிடும் thequickfox போன்ற அல்லக்கைகளை என்ன போட்டாலும் ஒடனே வெளியிடும் பதிவுலகில் ஒரே நேர்மையாளர் தான் நம்ம கோவிகண்ணு.... சாரி சாரி கோவிகன்னன்!//

      இந்த thequickfox மட்டும் வேற யாரா இருக்கும்னு நினைக்கிறீங்க ஆமினா? அவங்க நரித்தனம் அந்த பெயரிலேயே இருக்கே :) அதனால்தான் மேலே, "உங்களைப் போன்ற ஒருவர்" என்று அன்டர்லைன் பண்ணி குறிப்பிட்டிருந்தேன் :-)

      //@கோவி

      ...நேர்மைன்னா, உண்மைன்னா என்னான்னு உங்க ப்லாக்ல சைட்ல எழுதி வச்சுக்கோங்க... ஒருநாளைக்கு 100 தடவ வாசிங்க! அப்பவாவது மண்டைல எதாவது ஏறுதான்னு பாக்கலாம்..//

      ஹஹ்ஹா... செம சூடு! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி ஆமினா :)

      Delete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்,

    ஒ இவ்வளவு நடந்திருக்கா...ஹி ஹி ஹி. மிஸ்டர் கோவி.கண்ணனின் அதி புத்திசாலிதனதுக்கு ஒரு சின்ன கதை சொல்றேன் கேளுங்கள். ஒருமுறை, நாயகம் (ஸல்) அவர்களின் படம் என்று ஒருவர் பதிவு போட்டதுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தோம். அங்கே வந்த நம்ம கோவி பிரதர், the message என்று ஒரு படம் வந்திருக்கு அதில் நபி மாதிரி ஒருவர் நடித்திருக்கார். உங்க அறிஞர்களே இதனை அனுமத்தித்து இருக்காங்கன்னு சொல்லி அந்த படத்தின் போஸ்டர் கொடுத்தாரே பார்க்கலாம். ஆஹா ஆஹா பிரதர்க்கு என்னே ஒரு உற்று நோக்கும் திறன் என்று வியந்திட்டேன். காரணம், the message படத்தில் நபியை காட்டவே மாட்டார்கள், இன்னும் சொல்ல போனால் அந்த படம் ஆரம்பிக்கும் முன்னமே இதனை தெளிவாக அறிவித்தும் விடுவார்கள். இந்த கோவி பிரதர் அந்த போஸ்டரில் காட்டியது ஹம்சா (ரலி) அவர்கள் வேடத்தில் நடித்த அந்தோணி கியின் அவர்களை. ஹி ஹி ஹி...

    இது தான் நம்ம கோவியாரின் நேர்மை/உற்றுநோக்கும் திறன் etc etc. இதனை அங்கேயே சொல்லி, தேவையான ஆதாரங்களை கொடுத்து "நேர்மையான ஆளா இருந்தா உங்க பாயிண்ட்ட நிரூபியுங்க" அப்படின்னு சொன்னேன். ஆள் எஸ்கேப். இவர் பத்தி அப்பவே தெரிந்தாலே இவர் பக்கம் நான் தலை வைத்து கூட படுப்பதில்லை. ஹி ஹி ஹி.

    இப்ப கூட இப்படி ஒரு காமெடி பன்னிருக்காருன்னு நீங்க சொல்லி தான் தெரியுது. செமையான பதிலடி. ஜசாக்கல்லாஹ்.

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
    Replies
    1. @ ஆஷிக் அஹ்மத்

      வ‌ அலைக்குமுஸ்ஸலாம்.

      //மிஸ்டர் கோவி.கண்ணனின் அதி புத்திசாலிதனதுக்கு ஒரு சின்ன கதை சொல்றேன் கேளுங்கள்....//

      பார்த்தேன் சகோ. எவ்வ்வ்...ளோ நுண்ணிய பார்வை?!! :))

      //இப்ப கூட இப்படி ஒரு காமெடி பன்னிருக்காருன்னு நீங்க சொல்லி தான் தெரியுது. செமையான பதிலடி. ஜசாக்கல்லாஹ்.//

      நான் பாட்டுக்கு எழுதிட்டிருந்த என்னை, என்னுடைய மார்க்கத்திற்கு எதிராக என்னையே ஆதாரமாக்கினால்... பார்த்துட்டு சும்மா இருக்க முடியாதல்லவா? அதான் சகோ இந்த பதிலடி :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

      Delete
  3. பாவம் , ஏதாவது சொல்லி புலம்ப கூட விடமாட்டேங்கிறீங்களே ஹா..ஹா... :-))

    ReplyDelete
    Replies
    1. @ ஜெய்லானி

      //பாவம் , ஏதாவது சொல்லி புலம்ப கூட விடமாட்டேங்கிறீங்களே ஹா..ஹா... :‍))//

      சொல்லி புலம்ப அவர்களுக்கு இஸ்லாம்தான் கிடைத்ததோ? பெண்களாக இருந்தாலும் இனி பதிலடி கொடுப்போம், இன்ஷா அல்லாஹ்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ :)

      Delete
  4. 'நன்றி'ன்னுதான் குறிப்பிட்டீர்கள். அந்த நன்றியை TNTNJ.NET தளத்திற்கு அல்லவா நீங்கள் சொல்லியிருக்கவேண்டும்? அது அவர்களின் ஆக்கம் என்று அந்தப் பதிவில் சொல்லியிருந்ததை உண்மையாகவே நீங்கள் பார்க்கவில்லையா? // ஆமாங்க நீங்க எங்கயாவது இருந்து காப்பி பண்ணி போடுவிங்க நாங்க அவங்களுக்கு நன்றி சொல்லனுமாம்.....

    உங்களுக்கே காமெடியா தெரியலியா?


    வருண் பிரகாஷ்

    ReplyDelete
    Replies
    1. @ வருண் பிரகாஷ்

      //ஆமாங்க நீங்க எங்கயாவது இருந்து காப்பி பண்ணி போடுவிங்க நாங்க அவங்களுக்கு நன்றி சொல்லனுமாம்.....

      உங்களுக்கே காமெடியா தெரியலியா?//

      நாங்க காப்பி பண்ணியும் போடுவோம், துண்டு பிரசுரம் அடித்தும் வெளியிடுவோம். அதைக் கேட்க உங்களுக்கு எந்த ரைட்டும் இல்லை. எங்களுக்கு வேண்டியது மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு!

      நீங்கள் முதல் எதிரியாக நினைக்கும் TNTJ வை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்த உங்களின் திருகுதாளத்துக்கு சப்போர்ட் பண்ணும் உங்களுக்கு வேண்டுமானால் இதெல்லாம் காமெடியா தெரியலாம். ஏன்னா நாங்க குறிப்பிட்டு கேட்ட அந்த‌ கேள்வியில் 'வஹ்ஹாபி கூட்டம்' என நீங்கள் பயந்து பயந்து புலம்பிக் கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டதை மறைக்க 'காமெடி'ன்னு சொல்லி சமாளிக்க முயல்கிறீர்கள். இதுதான் காமெடியா இருக்கு :)))

      கோவி க. விடம் கேள்வி கேட்டால் அவர் வந்து பதில் சொல்லலாமே? உங்களுக்கென்ன? ஓ... வருண் பிரகாஷ் = கோவி க. வோ? அந்த இறைவனுக்கே வெளிச்சம்!

      Delete
  5. ஸலாம் சகோ.அஸ்மா,
    பதிவுலகில் நேர்மை- உண்மை- நீதி- இவற்றுக்கு எல்லாம் சுத்தமாக அர்த்தமே அறியாத ஆள் அவர். இஸ்லாமிய பதிவு என்றாலே போதும்... பக்கம் பக்கமாய் பொய் சொல்வார். பின்னூட்டத்தில் தமக்கு ஆதரவான கருத்தை மட்டும் பிரசுரித்துக்கொள்வார். தேவைப்பட்டால் பார்ப்பனிய முகமூடி, தேவைப்பட்டால் நாத்திக முகமூடி என்று இருக்கும் அவரின் ஒரிஜினல் முகம் இஸ்லாமிய எதிர்ப்பு வெறி மட்டுமே. அவரின் பெரும்பாலான பதிவுகள் அப்படித்தான்..! அவரை பொருத்தவரை உங்களின் இப்பதிவின் தலைப்பு மிகவும் சரியான ஒன்று சகோ.அஸ்மா..!

    ReplyDelete
    Replies
    1. @ ~முஹம்மத் ஆஷிக்

      ஸலாம் சகோ.

      //பதிவுலகில் நேர்மை- உண்மை- நீதி- இவற்றுக்கு எல்லாம் சுத்தமாக அர்த்தமே அறியாத ஆள் அவர். இஸ்லாமிய பதிவு என்றாலே போதும்... பக்கம் பக்கமாய் பொய் சொல்வார். பின்னூட்டத்தில் தமக்கு ஆதரவான கருத்தை மட்டும் பிரசுரித்துக்கொள்வார். தேவைப்பட்டால் பார்ப்பனிய முகமூடி, தேவைப்பட்டால் நாத்திக முகமூடி என்று இருக்கும் அவரின் ஒரிஜினல் முகம் இஸ்லாமிய எதிர்ப்பு வெறி மட்டுமே//

      அவரின் பயோடேட்டாவை ரொம்ப துல்லியமா கொடுத்திருக்கீங்க :)) நன்றி சகோ.

      //அவரை பொருத்தவரை உங்களின் இப்பதிவின் தலைப்பு மிகவும் சரியான ஒன்று சகோ.அஸ்மா..!//

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ :)

      Delete
  6. சகோ அஸ்மா,

    கோவி கண்ணன்கிட்ட நேர்மைய எதிர் பார்க்கிறீங்களா??? இது நல்ல காமெடி சகோ...
    அவரோட போன மகுடன் தொடர்பான பதிவில் எனது 3 பின்னூட்டங்களை வெளியிட வில்லை...
    எந்த தவறான வார்த்தைகளும் அதில் இல்லை... ஆனால் அதை அவர் வெளியிட்டு இருந்தால் அந்த போஸ்ட் டே அடி
    வாங்கி இருக்கும்...அதான் தலைவர் வெளியிடாம விட்டு விட்டார்.....அவர் ஒரு பிராடு சகோ...
    அவுகளும் ஏதோ தொழில் நுட்பம் தொடர்பான வேலை தான் பாக்குறாங்க...
    ஏன் அவர் கண்டுபிடிச்சு நிரூபிக்க வேண்டியது தானே???
    ஆதாரம் இல்லாம குற்றம் சாற்றவங்களைலாம் மனுசன்னு மதிச்சு வெளக்கம் கொடுக்குறீங்களே சகோ????

    ReplyDelete
    Replies
    1. @ சிராஜ்

      //கோவி கண்ணன்கிட்ட நேர்மைய எதிர் பார்க்கிறீங்களா??? இது நல்ல காமெடி சகோ...//

      நேர்மைய எதிர்ப்பார்க்கல சகோ. அவருடைய நேர்மையின்மையை இந்தப் பதிவு மூலமும் நிரூபிக்கவேண்டிய நிலை:) இனியாவது இஸ்லாத்தை விமர்சிக்கிறேன் என்று தேவையில்லாமல் எதையாவது எழுதாமல், அவங்க உண்டு அவங்க வேலை உண்டுன்னு இருக்கட்டும்!

      //ஆதாரம் இல்லாம குற்றம் சாற்றவங்களைலாம் மனுசன்னு மதிச்சு வெளக்கம் கொடுக்குறீங்களே சகோ????//

      :-))) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ :)

      Delete
  7. "இரும்பு எடுத்த கையும், சிரங்கு பிடித்த கையும் சும்மா இருக்காது"
    அவரை பொருத்தவரை உங்களின் வெளக்கம் மிகவும் சரியான ஒன்று சகோ.அஸ்மா

    அவுகளும் பக்கம் பக்கமாய் பொய் சொல்வார் முகமூடி தேவைப்பட்டால் கோவி கண்ணன்கிட்ட அவரை மனுசன்னு மதிச்சு ஹா..ஹா...ஹா..ஹா...மனுசன்னு மதிச்சு...இது தான் நம்ம கோவியாரின் வெறி.

    ReplyDelete
    Replies
    1. @ அந்நியன்

      //"இரும்பு எடுத்த கையும், சிரங்கு பிடித்த கையும் சும்மா இருக்காது"
      அவரை பொருத்தவரை உங்களின் வெளக்கம் மிகவும் சரியான ஒன்று சகோ.அஸ்மா//

      விளக்கம் சரிதானே..? அப்போ எல்லோருமே அவரை தெரிந்துதான் வச்சிருக்கீங்களா..? :))) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ :)

      Delete
  8. அஸ்மா with your permission

    @காளிப்ளவர் கண்ணு
    என் சாதனையை உலகறிய செய்த உங்களுக்கு கோடான கோடி நன்றிங்கண்ணா. 55தான் ரெக்கார்ட்டாம்ல? ஏம்பா மக்கா இதெல்லாம் சொல்ல மாட்டீங்களா??? நம்ப கோபி 65 சொல்லி தான் தெரியவேண்டிய சூழ்நிலை... கொடுமையே!!!

    அத ஸ்க்ரீன் சாட் எடுத்து போட்டிருந்தா நானும் பெருமையா சொல்லிட்டிருப்பேன்ல? போங்கன்ணா... உங்க கூட டுக்கா!

    @thequickfox
    ஹா..ஹா..ஹா..
    இந்த அட்டு பீசு, அரவேக்காடு, அல்லக்கை, மட்டரக ஒளவுதுறை, ஒட்டு(கேட்டு)ண்ணி இந்த பிரச்சாரத்தை இன்னும் நிறுத்தலையா? thequickfox நீங்க என்ன சொன்னாலும் ஒலகம் நம்ப மாட்டேங்குது என்ன செய்ய? உங்களுக்கு என் கண்ணீர் அஞ்சலி :-) சாரி கண்ணீரில் ஆறுதல்கள் :-) (அட மக்கு thequickfox ! மொதல்ல சொந்த பேருல எழுத ஆரம்பிச்சுட்டு பொறவு அடுத்தவுகள பத்தி சொல்லுமய்யா! போட்டுக்கவே ஒழுங்கான செருப்பில்லையாம்.. அடுத்தவன் செருப்பு அந்துடுச்சுன்னு சிரிக்கிறாராம்!)

    அட்டு கோவிகன்னன் (shift 2 இந்த நேரம் பார்த்து ஒர்க் ஆகலங்க). எப்பவும் சாக்கடை நிறைந்த பக்கம்லாம் போறதில்லங்க. வாட் டூ டூ? அதான் உங்க சாக்கடைக்கு சாரி சாரி உங்க ப்ளாக்குக்கு வரல! மன்னிச்சூ மன்னிச்சூ! என் சாதனையை பத்தி பேசினதுனால உங்க திறந்த மனதை பாராட்டலாம்னு வந்தேன்!
    விரைவில் மனநோயிலிருந்து விடுபட்டு கீழ்பாக்கத்திலிருந்து இடம் மாறி வர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்!

    அப்பறம் இந்த சார்வகான் தாத்தாவ நல்லவர் நேர்மையானவர்ன்னு சில சகோஸ் சொல்லியிருந்தாங்க! அத்தோட இந்த பெயரையும் சேர்த்துக்க சொல்லுங்க "மைனஸ் ஓட்டு சார்வகன்" :-)

    (அஸ்மா இந்த பின்னூட்டம் உங்களுக்கு சங்கடத்தை தந்தால் வெளியிட வேண்டாம். நான் கோச்சுக்கமாட்டேன் :-)

    ReplyDelete
    Replies
    1. @ ஆமினா

      //அஸ்மா with your permission//

      permission granted :-))))

      //thequickfox நீங்க என்ன சொன்னாலும் ஒலகம் நம்ப மாட்டேங்குது என்ன செய்ய? உங்களுக்கு என் கண்ணீர் அஞ்சலி :-) சாரி கண்ணீரில் ஆறுதல்கள் :-) (அட மக்கு thequickfox ! மொதல்ல சொந்த பேருல எழுத ஆரம்பிச்சுட்டு பொறவு அடுத்தவுகள பத்தி சொல்லுமய்யா! போட்டுக்கவே ஒழுங்கான செருப்பில்லையாம்.. அடுத்தவன் செருப்பு அந்துடுச்சுன்னு சிரிக்கிறாராம்!)//

      //அட்டு கோவிகன்னன் (shift 2 இந்த நேரம் பார்த்து ஒர்க் ஆகலங்க). எப்பவும் சாக்கடை நிறைந்த பக்கம்லாம் போறதில்லங்க. வாட் டூ டூ? அதான் உங்க சாக்கடைக்கு சாரி சாரி உங்க ப்ளாக்குக்கு வரல! மன்னிச்சூ மன்னிச்சூ!//

      //அப்பறம் இந்த சார்வகான் தாத்தாவ நல்லவர் நேர்மையானவர்ன்னு சில சகோஸ் சொல்லியிருந்தாங்க! அத்தோட இந்த பெயரையும் சேர்த்துக்க சொல்லுங்க "மைனஸ் ஓட்டு சார்வகன்" :-)//

      யப்பா... சரவெடி வெடித்து முடித்த மாதிரி ஃபீலிங் தோழி :))) thanx :)

      Delete
  9. முதல் எதிர்பதிவே சூப்பர்
    //@ஜெய்லானி
    பாவம் , ஏதாவது சொல்லி புலம்ப கூட விடமாட்டேங்கிறீங்களே//
    அதானே !!!!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. @ ribnas

      //முதல் எதிர்பதிவே சூப்பர்//

      அப்படியா...? டே..ங்ஸ் சகோ :))

      //@ஜெய்லானி
      பாவம் , ஏதாவது சொல்லி புலம்ப கூட விடமாட்டேங்கிறீங்களே//
      அதானே !!!!!!!!!!!!//

      :))) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ :)

      Delete
  10. சலாம் சகோ!

    அருமையான ஆக்கம். புரிய வேண்டியவர்களுக்கு புரிந்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. @ சுவனப்பிரியன்

      சலாம் சகோ.

      //அருமையான ஆக்கம். புரிய வேண்டியவர்களுக்கு புரிந்திருக்கும்//

      இஸ்லாமிய எதிர்ப்புக்கு எப்போதும் சகோதரர்கள் மட்டும் பதில் சொல்லவேண்டிய நிலை மாறி, நாங்களும் எதிர்ப்பதிவு போட களத்தில் இறங்கியாச்சு :) புரிய வேண்டியவர்கள் புரிந்திருந்தால் சந்தோஷமே!

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ :)

      Delete
  11. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... சகோதரி

    ////பொய் சொல்லி வாழ்ந்தவர் இல்லை!/// தலைப்பே பல விடயங்களை சுட்டி நிற்கிறது

    பொய் சொல்லி வாழ்ந்தவர் இல்லை!, ஆம் வீழ்ந்தவர்தான் உண்டு

    ReplyDelete
    Replies
    1. @ ஹைதர் அலி

      வ‌ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

      //தலைப்பே பல விடயங்களை சுட்டி நிற்கிறது//

      //பொய் சொல்லி வாழ்ந்தவர் இல்லை!, ஆம் வீழ்ந்தவர்தான் உண்டு//

      ஆமா சகோ. பொய், பித்தலாட்டங்கள் ரொம்ப நாளைக்கு நீடிக்காது. சம்பந்தப்பட்டவர்கள் இதை உணர்ந்து நடந்துக் கொள்ளவேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ :)

      Delete
  12. பதிவுலகில் நேர்மை உண்மை கோவி கண்ணன் அவரிடம் மட்டுமா இல்லை. தருமி அவர்களை விட்டுவிடீர்கள்....இஸ்லாத்திற்கெதிராக பக்கம் பக்கமாக(தொடர்கள்) கட்டுரைகள் போடுவார்கள்.அதற்கு பதில் சொன்னால் அதை கண்டுக்கவே மாட்டாங்க.இவர்களிடம் உண்மையையும் நேர்மையையும் ஏதிர்பார்ப்பது தமிழ் நாட்டுல 24 மணி நேரமும் மின் தடை இல்லமால் இருப்பதை ஏதிர்பார்பதர்க்கு சமம்...

    தருமிக்கு என் மறுப்பு கட்டுரை: இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம்,பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு

    ReplyDelete
  13. பதிவுலகில் நேர்மை உண்மை கோவி கண்ணன் அவரிடம் மட்டுமா இல்லை. தருமி அவர்களை விட்டுவிடீர்கள்....இஸ்லாத்திற்கெதிராக பக்கம் பக்கமாக(தொடர்கள்) கட்டுரைகள் போடுவார்கள்.அதற்கு பதில் சொன்னால் அதை கண்டுக்கவே மாட்டாங்க.இவர்களிடம் உண்மையையும் நேர்மையையும் ஏதிர்பார்ப்பது தமிழ் நாட்டுல 24 மணி நேரமும் மின் தடை இல்லமால் இருப்பதை ஏதிர்பார்பதர்க்கு சமம்...

    தருமிக்கு என் மறுப்பு கட்டுரை: இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம்,பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு

    ReplyDelete
  14. என்ன சகோ. பதிவெழுதி நாள் ஆகிவிட்டது,புதிய பதிவுகளை காணும்...படிக்க ஆர்வமா இருக்கோம்

    எனது தள கட்டுரைகளில் சில:அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,திருமண வீட்டில் வீடியோ!-அதிர்ச்சி சம்பவம்,14,000 மக்களின் இஸ்லாமிய வருகை-திகைக்கும் இங்கிலாந்த்,பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் பெண்கள் பற்றிய தவறான கருத்திற்கு தக்க பதிலடி-www.tvpmuslim.blogspot.com

    ReplyDelete
  15. நீங்கள் புல்லாங்குழலில் பதிந்த கருத்துக்கு என் தாழ்மையான பதில் சற்றே நீண்டுவிட்டதால் தனி இடுகையயாய் பதிவு செய்துள்ளேன். பார்வையிடவும்.
    உங்களுக்கு தெரிவிக்க வேறு வழி தெரியாததால் இங்கே பதிந்துள்ளேன். மன்னிக்கவும்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை