அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Thursday 20 September 2012

இஸ்லாத்தின் பெருமையுணர்ந்த தற்கால எதிரிகள்!


சென்ற வார சர்ச்சையாளன் அமெரிக்க கிறிஸ்தவ பாதிரி டெர்ரி ஜோன்ஸ் (Terry Jones), இந்த வாரம் ஃபிரெஞ்சு பத்திரிக்கையாளன் Charb என்று அழைக்கப்படும் Stéphane Charbonnier! இவன் நபிகள் நாயகத்தின் கார்ட்டூன் எனச்சொல்லி நிர்வாணப் படமாக‌ தனது பத்திரிக்கையில் நேற்று (19.09.12) வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து ஃப்ரெஞ்ச் அரசாங்கம் தற்காப்பு நடவடிக்கையாக உலகெங்கிலும் உள்ள ஃப்ரெஞ்ச் தூதரகங்களில் இதுவரை 20 க்கும் மேற்பட்ட தூதரகங்களுக்கும், ஃப்ரெஞ்ச் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொருமுறை இஸ்லாம் விமர்சிக்கப்படும்போதும் அது அபரிமிதமான‌ வளர்ச்சியே கண்டுள்ளது! அந்த வளர்ச்சிவேகம் மேலும் கூடவேண்டும் என இறைவன் நாடியுள்ளானோ, என்னவோ... மதவெறி பாதிரியைத் தொடர்ந்து, அந்த சூடு அடங்குவதற்குள் அடுத்த வாரமே மீண்டும் எதிரிகளின் கயமைத்தனங்கள்! இஸ்லாத்தை ஆயுதமாக வைத்து தங்களுக்கு உலக அளவில் விளம்பரம் தேடிக்கொள்ள விரும்பும் கேடுகெட்ட ஜென்மங்களே..! அந்நியப் பெண்ணை ஆசையாய் பார்ப்பதுகூட கண் செய்யும் விபச்சாரம் என எச்சரித்தார்களே அந்த அண்ணல் நபி முஹம்மத்(ஸல்)...!! அந்த பத்தரை மாற்றுத் தங்கத்தை உரசிப் பார்க்கிறீர்களா..? இறைவன் நாடினால் நீங்களும் உணர்வீர்கள் ஒருநாள் அந்த 'முஹம்மத்' யாரென்று!

உலகெங்கிலும் இஸ்லாம் மார்க்கம் மளமளவென வளர்ந்துக் கொண்டிருக்கிறது என்பதை யாருக்கும் நாம் சொல்லிதான் தெரிய வேண்டியதில்லை. இஸ்லாத்தின் இத்தகைய வளர்ச்சி இவ்வுலகுக்கு ஒன்றும் புதிதல்ல! இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பிறகு எந்தவொரு தனிமனிதனும் உரிமைக் கொண்டாட முடியாத அளவுக்கு நாம் நினையாத புறத்திலிருந்து அதன் வளர்ச்சி தொடர்ந்துக் கொண்டேயுள்ளது. அது ஏன்...? இப்படியொரு வளர்ச்சி எப்படி...? அதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஒருசில‌ முக்கிய/அடிப்படைக் காரணங்களை இஸ்லாமியர்கள் அனைவரும் புரிந்திருக்கிறார்களோ இல்லையோ, இஸ்லாத்தின் எதிரிகள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்! அவையென்ன அந்த முக்கிய‌ காரணங்கள்...? 

1) ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு மேலாகியும் அணுவளவுகூட மாறிவிடாத, மனிதக் கரங்களால் மாசுபடுத்த முடியாத, முக்காலமும் பேசக்கூடிய, வாழும் அற்புதமாக விளங்கும் ஒரே வேதமான அல்குர்ஆன்!!

2) அகிலமே அண்ணார்ந்து பார்க்கும் உன்னத நபியான, மனிதருள் மாணிக்கம் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் தூய்மையான, உயரிய வாழ்க்கை நெறி!!

உலக மக்கள் தொகை எந்தளவுக்கு அதிகமாகிக் கொண்டே வந்துள்ள‌தோ, அதைவிட அதிவேகமாக இஸ்லாம் வளர்ந்துக் கொண்டிருப்பதற்கு மேலே சொன்ன அந்த இரண்டு காரணங்கள்தான் அடிப்படையானவை என்பதை 'இஸ்லாமோஃபோபியா'வில் ஊறித் திளைத்த எதிரிகளும் உணர்ந்திருக்கிறார்கள் என்பதே இப்போது உலகம் பார்த்துக் கொண்டிருக்கும் உண்மை!

அதாவது இறைவனின் அற்புத வேதமான அல்குர்ஆனும், அதற்கு விளக்கவுரையாக அமைந்த அண்ணலெம் பெருமானார்(ஸல்) அவர்கள் வாழ்ந்துக் காட்டிய‌ வாழ்க்கை முறையும் இவ்வுலக மாந்தர்களை இஸ்லாமிய வழியில் நாள்தோறும் ஈர்த்துக் கொண்டிருக்கின்றன! அதன் அருமை, பெருமைகளை சிந்தித்துணர்ந்த மக்கள் மனமுவந்து குடும்பத்துடனும், குடும்பத்தைவிட்டு தனியொரு ஆளாகவும் இஸ்லாத்தின் பக்கம் வந்துக் கொண்டிருக்கிறார்கள்! கிறிஸ்துவக் கொள்கைப் பரப்பாளர்களைப்போல் பணத்தையும், பதவியையும் காட்டி யாரும் இஸ்லாத்திற்கு அழைக்கவில்லை. மார்க்கத்தை ஏற்றுக்கொள்ள எந்தவித கட்டாயங்களுக்கோ, மிரட்டல்களுக்கோ இஸ்லாத்தில் இடமில்லை. இவ்வுலக-மறு உலகுக்கான உண்மை வழியை உணர்ந்த மக்கள்தான் தத்தமது வாழ்வின் நற்பலன்களை அடைய‌ விரும்பி அணி அணியாய் இஸ்லாத்தில் இணைந்துக் கொண்டிருக்கிறார்கள்!!

அதேசமயம் மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சங்களிலும், ஒவ்வொரு படிநிலைகளிலும் ஏற்படும் பிரச்சனைகளுக்கு முறையான தீர்வு சொல்வதாக இருக்கும் அல்குர்ஆனுக்கு ஈடான எந்த‌வொரு வேதத்தையும் இஸ்லாத்தின் எதிரிகளால் காட்ட இயலவில்லை! அதனால்தான் சில‌ வல்லரசுகள் அதைத் தடை செய்யவும், அழிக்கவும் துடிக்கின்றன. கையில் கிடைக்கும் குர்ஆனையெல்லாம் தீயிட்டு கொளுத்தி தன் துவேஷத்தை வெளிப்படுத்துகின்றனர். தீக்கிரையாக்கினாலும், கடல் நீரோடு கரைத்துவிட்டாலும், மண்ணில் புதைத்து மக்க வைத்தாலும் அல்குர்ஆன் இவ்வுலகை விட்டு அழிந்துவிடுமா? என்னவொரு அறியாமை!!

அயோக்கியப் பாதிரி
அதன் மீது சிறுநீர் கழித்து அவர்களின் மதவெறியைத் தணித்துக் கொண்டால், அல்குர்ஆன் சிறுமைப்பட்டு விடுமா? அல்லது அதன் அற்புதத் தன்மைகள்தான் குன்றிவிடுமா? அவர்களின் இச்செயல்கள் மடத்தனத்தின் உச்சக் கட்டமல்லவா? அதேபோல் மாமனிதர் நபிகள் நாயகத்தைக் கொச்சைப்படுத்தி படமெடுத்தால், நிர்வாணக் கார்ட்டூன் வரைந்தால் இஸ்லாமிய சமூகத்தை வேண்டுமானால் மனதால் காயப்படுத்தலாம். ஆனால் அத்தகைய‌ ஈனச்செயல்கள் மூலம் அந்த மனிதப் புனிதரை, அந்த உத்தம நபியை அவருடைய‌ அந்தஸ்திலிருந்து அணுவளவும் இறக்கிவிட முடியாது என்பதுகூட தெரியாத இவர்கள்.. கடைந்தெடுத்த‌ மடையர்களல்லவா?

பொய்யான காரணங்கள் சொல்லியும், வேண்டுமென்றே காரணங்களை உண்டாக்கியும் இஸ்லாமிய நாடுகளுக்குள் ஊடுருவி அப்பாவி முஸ்லிம்களை கொத்துக் கொத்தாய் கொன்று குவிப்பதும், பெண்களை மானபங்கப்படுத்துவதும், தங்களின் கோர தாண்டவ‌த்தில் சிறுவர்களைக்கூட விட்டுவைக்காமல் கொலைவெறித் தாக்குதல் நடத்துவதும், 'இஸ்லாம்' என்ற மார்க்கமோ, அதைப் பின்பற்றுப‌வர்களோ இவ்வுலகில் இருக்கக்கூடாது என்ற ரத்தவெறிப் பிடித்த காட்டேரிகளின் எண்ணங்களின்படி நடந்துக் கொண்டிருக்கின்றன. அவர்களின் வியூகம் எப்படிப்பட்டது என்பது யாருக்கும் விளங்காமல் இல்லை. இஸ்லாம் மார்க்கம் எல்லாவிதமான‌ சவால்களையும் வென்றெடுத்து உலகம் முழுதும் மிக வேகமாகப் பரவி வருவதை இவர்கள் காண்கிறார்கள். ஆய்வுகளின் மூலம் அதனை உறுதியும் செய்திருக்கிறார்கள். (விபரத்திற்கு: பெருகிவரும் உலக முஸ்லிம் மக்கள் தொகை) இதே விகிதத்தில் இஸ்லாம் உலகில் பரவும் என்றால் 2020 ஆம் வருடத்தில் இஸ்லாம் உலகின் மிகப் பெரிய சமயமாகும் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன!!

2001, செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு இஸ்லாத்தைத் தழுவிய அமெரிக்கர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் மேல் என ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. உலகின் எந்த வன்முறை நிகழ்வாக இருந்தாலும், யார் செய்த குற்றம் என உறுதிபடுத்த முன்னரே, ஏன்.... அடுத்த சில நிமிடங்களிலே அந்த குற்றத்திற்குரியவர்கள் இஸ்லாமியர்கள் என குற்றம் சாட்டப்படுகிறார்கள்! இதனால், 
"அதிக அளவில் இஸ்லாம் விமர்சிக்கப்படுவது ஏன்" என்று நடுநிலையாளர்களிடம் எழும் ஐயத்தின் மூல‌ம், அவர்கள் "இஸ்லாத்தினைத் தெரிந்துக் கொள்ள முயன்று இஸ்லாமிய புத்தகங்களை தேடிப்பிடித்து படித்தபொழுதுதான் இஸ்லாத்தைப் பற்றிய முழு அறிவு தமக்கு கிடைத்தது" என்பதே 2001 க்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அமெரிக்கர்களில் பெரும்பாலோனோர் கூறிய கருத்துக்களாக பதிவு செய்யப்பட்டது.  
இதே காலகட்டத்தில் அமெரிக்க புத்தகக் கடைகளிலும் லைப்ரரியிலும் அதிகம் விற்றுத்தீர்ந்து தட்டுப்பாடு ஏற்பட்ட ஒரே நூல், இறைவேதமான திருக்குர்ஆன்தான் என்ற செய்தி வெளிவந்தமை கவனிக்கப்பட வேண்டிய‌தாகும்.
கத்தோலிக்க மதத்தலைவராக உள்ள போப் ஆண்டவர், “உலகத்தில் அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம்” என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார். உலகில் அதிகம் பரவும் மார்க்கம் இஸ்லாம் என போப் விடுத்த அறிக்கையை மேற்கோள் காட்டி வாடிகன் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதிகம் பரவிவரும் மார்க்கங்களில் இஸ்லாம் முன்னிலை வகிப்பதாகவும், கிறித்தவ மத நம்பிக்கையாளர்களைவிட மூன்று மில்லியன் அதிக எண்ணிக்கையுடையோராக முஸ்லிம்கள் உள்ளனர் என்றும், உலக மக்கள் தொகையில் நூற்றில் 17.5 சதவிகிதத்தினர் கிறிஸ்தவர்களென்றால் அதில் 19 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். வருடந்தோறும் 40 ஆயிரம் பேர் இஸ்லாத்தில் இணைவதாகவும், கிறித்தவ, யூத மற்றும் பிற மதத்தினர் இவ்வாண்டின் இறுதிப் பகுதியாகும்போது அதிகமாக இஸ்லாத்தில் இணையும் வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். (நன்றி: tntj.net)
இஸ்லாத்தின் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதாகவும், அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி மக்கள் சென்றுக் கொண்டிருப்பதாகவும், இதை உடனே தடுத்து நிறுத்தவேண்டும் என வலியுறுத்தியும் டென்மார்க் நாட்டில் கடந்த மார்ச் மாதம் இஸ்லாமிய எதிரிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். (பார்க்க‌). வல்ல இறைவனின் இம்மார்க்கம் எந்த அளவிற்கு வளர்ச்சியடைந்துக் கொண்டு செல்கின்றது என்பதற்கு இதுவும் மிகப்பெரிய‌ சான்றாக அமைந்துள்ளது! இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்துவிட எண்ணி இவர்கள் நடத்தும் இத்தகைய போராட்டங்களினால்கூட சத்திய மார்க்கத்தை நோக்கி மக்களை திருப்பக்கூடிய எதிர்வினைகளே நடந்துக் கொண்டிருக்கின்றன. ஏனெனில் 'இஸ்லாம்' என்பது அனைவரையும், அனைத்தையும் படைத்த இறைவனின் மார்க்கம்!

ஆக விரும்பியோ, விரும்பாலோ இஸ்லாத்தின் பெருமையை உணர்ந்திருக்கும் இஸ்லாத்தின் எதிரிகள், அதன் அடிப்படைக் கோட்பாடுகளைப் பற்றி குறைக்கூறி வெற்றிபெற முடியாது என்பதைப் புரிந்துதான் இஸ்லாமியர்களின் உணர்வுகளை சீண்டிப் பார்க்கும் விஷமத்தனங்கள், பொய்ப் பிரச்சாரங்கள், புண்படுத்தும் வரம்பு மீறல்கள், வன்முறையாட்டங்கள், கொலைவெறித் தாக்குதல்க‌ளின் மூலமாக‌ காய் நகர்த்துவதெல்லாம் இஸ்லாம் இன்னும் வளர்ந்துவிடுமோ, இஸ்லாமியர்கள் மேலும் பெருகிவிடுவார்களோ என்ற வெறித்தனமானதொரு அச்சத்தின் விளைவுகளே! யார் எதன்மீது பொய்ப் பிரச்சாரங்கள் செய்தாலும் அவை எப்போதுமே அதற்கு எதிர்மாறான விளைவுகளையே கொடுக்கும். இஸ்லாத்தின் மீதான இன்றைய திட்டமிட்டப் பொய்ப் பிரச்சாரங்களும், அவற்றை அநாயசமாக எதிர்க்கொண்டு தன்மீது பொய்யாக போடப்படும் தடைகளையெல்லாம் உடைத்தெறிந்துவிட்டு மக்களிடையே வேகமாக வளரும் இஸ்லாம் மார்க்கமும் இதற்கு கண்கூடான சாட்சிகள்!!!

கார்ட்டூன் கயவன்
எனவேதான் நாகரீகம் தெரியாத கற்றறிந்த மூடர்களாலும், மனிதத்தைப் புரிந்துக் கொள்ள இயலாத மனித நேயமற்ற கயவ‌ர்களாலும், அடுத்த‌வர்களை அடக்கியாளத் துடிக்கும் அநியாயக்காரர்களாலும் இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. எதைச் சொன்னால் இஸ்லாமியர்கள் பொங்கி எழுவார்கள் எனத் தெரிந்துக் கொண்டு, தங்கள் உயிரைவிட மேலாக மதிக்கும், மாசற்ற‌ வாழ்வை வாழ்ந்துக் காட்டி உலக மாந்தர்களுக்கெல்லாம் முன்மாதிரியாகத் திகழ்ந்த‌ அண்ணல் நபியவர்களின் மீது களங்கம் கற்பிக்கத் துணிந்திருக்கிறார்கள். எட்டாத உயரத்தில் உள்ள வெந்நிலவை நோக்கி சேற்றை அள்ளியெறிந்தால் எறிந்தவன் முகத்தையே அது நாசப்படுத்தும் என்பது இன்னும் அவர்களுக்கு ஏனோ புரியவில்லை!

வளர்ந்துவரும் இஸ்லாத்தின் மீதுள்ள வெறியினால் வரம்பு மீறும் கையாலாகாத கோழைகளே! உங்களிடம் சில கேள்விகள்:

* வயது வந்த ஆணும் பெண்ணும் திருமணம் என்ற பந்தம் இல்லாமலே சேர்ந்து வாழ, உங்கள் பெண் குழந்தைகளுக்கு கர்ப்பத்தடை சாதனங்களை கையில் மறவாமல் கொடுத்து வெளியில் சுற்றித்திரிய அனுமதிக்கும் மான‌ங்கெட்ட வாழ்க்கைக் கலாச்சாரத்தைக் கொண்ட அமெரிக்க/ஐரோப்பிய சமுதாயமே! ஒழுக்கம் சார்ந்த உயரிய திருமண வாழ்வினை வாழ்ந்துக் காட்டிய‌ முஹம்மத் நபியை பெண்ணாசை கொண்டவராக சித்தரிக்கும் தகுதி உங்களுக்கு எங்கிருந்து வந்தது?

* ஒழுக்கமின்மை தலைவிரித்தாடும் கட்டுக்கோப்பில்லாத உங்கள் சமூகத்தின் ஆண்களுக்கு வீட்டில் ஒரு மனைவியும், வெளி உல்லாசத்திற்கு பல பெண்களையும் அனுபவிக்கும் ஒழுக்கக்கேடு உங்களுக்கு அருவருப்பாக‌ தோன்றவில்லையா?

* பெண்ணுரிமை இயக்கங்களைச் சார்ந்த பெண்கள் எனக் கூறிக்கொண்டு, இஸ்லாமியப் பெண்களின் ஹிஜாபுக்கு எதிராக குரல் கொடுக்கிறோம் என்ற பெயரில் உடம்பில் ஒட்டுத்துணி இல்லாமல் வீதியில் போராட்டம் பண்ணும் விபச்சாரிகளை காரித் துப்பாமல், கண் கொட்டாமல் பார்த்து அதை செய்திகளாகவும் வெளியிட உங்களுக்கு வெட்க உணர்வே கொஞ்சமும் இல்லையா?

* ஓரினச் சேர்க்கைக்காக திருமணம் செய்வ‌தை வீடியோக்களாக
உலகமே பார்க்கும் வண்ணம் பெருமிதத்தோடு வெளியிடும் உங்கள் காட்டுமிராண்டி கலாச்சாரத்தினை முற்போக்குத்தனம் என்பீர்களா?

* ஜெபம் பண்ண வந்த பெண்களையும், சிறுமிகளையும் உங்கள் பாதிரியார்கள் நாசம் பண்ணியதை மத போதகம் என மார்தட்டிக் கொள்வீர்களா?

* நைட் க்ளப்களில்தான் உங்கள் காமவெறியினைத் தணித்துக் கொள்கிறீர்கள் என்றால், சில பொது நிகழ்ச்சிகளிலும் அந்நிய ஆண்களும் பெண்களுமாக கைக் கோர்த்து, ஒட்டி உரசி, உதடோடு உதடுகள் முத்தமிட்டு... (ச்சீ... த்தூ...) உங்களின் நாறிப்போன அந்த கலாச்சாரத்தை நாகரிகம் என்பீர்களா?

* ச‌ன்பாத் எடுக்கிறோம் என்று உங்கள் பெண்கள் டூ பீஸிலும், முழு நிர்வாணமாகவும் கடற்கரை மணல்களில் புரண்டு சூரிய குளியல் எடுப்பதையும், த‌ங்கள் கண்முன்னால் அதை அடுத்தவன் படம் எடுப்பதையும் அனுமதிக்கும் கலாச்சாரத்தினை சூடு, சொரணை இல்லாத சுதந்திரம் என்பீர்களா?

அந்த அயோக்கியர்கள் அதே கலாச்சாரத்தில் வளர்ந்ததால்தான் இவ்வளவு சுலபமாக அண்ணல் நபி கண்மணி நாயகத்தின் பெயரில் நிர்வாணக் கார்ட்டூனை கைக்கூசாமல் வரையவும், உண்மைக்கு புறம்பான‌ ஆபாசப் ப‌டமெடுக்கவும் முடிகிறது!

மதுவில் சுகம் காணலாம் என அதை வெறுக்க மனமின்றி வாழும் மக்கள் மத்தியில் மதுவை விஷமாகப் பார்க்கும் ஒரு சமுதாயம்.. வட்டிக்கும், மோசடியான வியாபாரங்களுக்கும் எதிராக போராடும் ஒரு சமுதாயம்..  அந்நிய ஆண் ‍- பெண் சகவாசத்தை அடியோடு வெறுக்கும் ஒரு சமுதாயம்.. காலையில் கண் விழித்ததிலிருந்து இரவு உறங்கும் வரை அந்த 'முஹம்மத்' என்ற இறைத்தூதர் வழியிலும், அவர் மூலம் கிடைக்கப்பெற்ற திருக்குர்ஆனின் வழியிலும் வாழத்துடிக்கும் ஒரு சமுதாயம்.. இத்தகைய நேர்வழிக்கு வழிவகுத்துச் சென்ற‌ கண்ணியமிகு ஒரு உத்தமரை இழிவுபடுத்துவதை எவ்வாறு தாங்கிக் கொள்ளும்? ஆனாலும் அதற்காக சில நாடுகளில் குற்றத்தில் சம்ப‌ந்தமில்லாத அப்பாவிகளுக்கு எதிராக பொதுமக்கள் நடத்தக்கூடிய‌ வன்முறையையும் கலவரங்களையும் இஸ்லாமியர்கள் யாரும் ஆதரிக்க முடியாது. உண்மை இஸ்லாத்தினை சரியாகவோ, முழுமையாகவோ புரிந்துக் கொள்ளாத ஒருசில முஸ்லிம்கள்தான் இத்தகைய செயல்களில் ஈடுபடுவார்கள். தவறுக்கேற்ற தண்டனையை தகுந்தவர்களுக்கு கொடுக்க சொல்லும் அதே இஸ்லாம், அப்பாவிகளின்மீது நடத்தும் வன்முறையை அனுமதிக்கவே இல்லை. 
ஏனெனில் இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம்! ஒரு போராட்ட வாழ்வில் தவிர்க்க முடியாத நிர்பந்தமாக நடந்த போர்களையும், போர் தர்மத்தையும் அழகிய கட்டுப்பாடுகளோடு வரையறுத்து, அதை வலுயுறுத்திய‌ முதல் வரலாற்றுத் தலைவர் முஹம்மது (ஸல்) ஒருவர் மட்டுமே என்பதில் சந்தேகமில்லை! இதுபோலவே மனித வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு மனிதன் சகமனிதனுக்குக் கொடுக்கவேண்டிய உரிமைகள், ஆற்ற‌வேண்டிய கடமைகளைக் கட்டளையாகப் பிறப்பித்து, மனித உரிமை மீறல்களிலும் தலையிட்டு சமநீதியை நிலைநாட்டியது இஸ்லாம்!
அப்படிப்பட்ட இஸ்லாத்தினைக் கொண்டுவந்து மனித சமுதாயத்தை நேர்வழிப்படுத்த தன்னையே அர்ப்பணித்த‌ மாமனிதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களை இழிவுபடுத்தத் துடிக்கும் அயோக்கியர்களே! நீங்கள் உண்மையிலேயே அறிவுடைய மக்களாக இருந்தால்...,

'முஹம்மத்' என்ற அந்த‌ இறைத் தூதரை இஸ்லாமிய மக்க‌ள் எதற்காக‌ தன் உயிரைவிட மேலாக மதித்து நேசம் கொள்கிறார்கள் என்பதை முதலில் சிந்தித்துப் பாருங்கள்! முஹம்மது நபி(ஸல்) அவர்கள் 'புகழுக்குரியவர்' என்ற தன் பெயருக்கேற்ப வாழ்ந்துக் காட்டிய உண்மை சரித்திரங்களை புரட்டிப் பாருங்கள்! திறந்த புத்தகமாக எங்கும் கிடைக்கும் முஹம்மத்(ஸல்) அவர்களின் வாழ்வினைம் வாக்கினையும் நடுநிலையோடு உற்று கவனியுங்கள்!

கால சூழ்நிலைக்கேற்றவாறு எத்தனையோ தலைவர்களை இவ்வுலகம் கொண்டாடும், புகழ்பாடும்! ஆனால் எந்த தலைவர்களையாவது தான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அசைவிலும், மூச்சிலும் பின்பற்ற வேண்டும் என்று ஒரு சமுதாயமே தன் முழு வாழ்வின் ரோல் மாடலாக எடுத்துக் கொண்டதுண்டா? எங்கோ ஒரு மூலையில், யாரையாவது கைக் காட்டலாம்.. இதோ இவர், இன்ன‌வருடைய வழியைப் பின்பற்றுகிறவர் என! ஆனால் முஹம்மது நபி(ஸல்) அவர்களை அப்படியே அடிக்கு அடி பின்பற்றுபவர்களும்,  அவர்களின் உத்தம வாழ்க்கையை நடுநிலையோடு ஆராய்ந்து, வியந்து, பாராட்டி, தானும் அதுபோன்றதொரு அழகிய கொள்கையை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட (முன்னாள்) மாற்றுமத சகோதர, சகோதரிகளும் இன்றைய வரலாற்றில் ஏராளம்! இதற்கு எந்த‌ நாட்டவர்களும், எந்த மொழியினரும் விதிவிலக்கில்லையே? ஏனென்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!

மேலும் உங்கள் நலம் விரும்பி சில‌ எச்சரிக்கைகள்!

உங்களின் வெறிச் செயல்களால் நீங்கள்தான் மக்கள் மன்றத்தில் இழிவாகிக் கொண்டிருக்கிறீர்கள்! இஸ்லாத்தை நீங்கள் எதிர்க்க, எதிர்க்கதான் நடுநிலை மக்கள் சிந்திக்கிறார்கள். உங்களை அறியாமலே இஸ்லாம் மார்க்கத்தை நீங்கள் வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்! இயந்திரத் தனமான வாழ்க்கை முறைகளைக் கொண்ட, சிந்திக்க நேரமில்லாத மக்களைக்கூட உங்களின் இஸ்லாமோஃபோபியாவினால் இஸ்லாம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்! சிகரம் ஏறுவதாக நினைத்து அதள பாதாளத்தில் வீழ்ந்துக் கொண்டிருக்கிறீர்கள் ..!

இவையனைத்தும் உங்களுக்கு எச்சரிக்கையாக நாங்கள் சொல்லிக் கொண்டாலும், எதிரணியில் நின்றுக் கொண்டு சேம் சைட் கோல் போடுகிறீர்கள் என்பதையும் நினைவூட்டுகிறோம்! உலகின் ஒட்டுமொத்த‌ முஸ்லிம்களின் மனங்களையும் நீங்கள் ஒருசேரக் காயப்படுத்தினாலும், உங்கள் எதிர்ப்பில்தான் இஸ்லாம்  மார்க்கம் மிக மிக‌ வேகமாக வளரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! நீங்கள் எவ்வளவுதான் முயற்சித்தாலும் இறைவன் தன்னுடைய மார்க்கத்தை வளர்த்து, முழுமைப்படுத்தியே தீருவான் என்ற இறைவசனம் இத்தகைய நிகழ்வுகளின் மூலம் உண்மையாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது!
‘அவர்களும் சூழ்ச்சி செய்தார்கள். அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான்; சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் சிறந்த சூழ்ச்சி செய்பவன் அல்லாஹ்வேயாவான்’ (அல்குர்ஆன் 3:54) 
இஸ்லாத்திற்கு அழைக்கப்படும் நிலையில் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனைவிட மிகப்பெரிய அநீதி இழைப்பவன் யார்? அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான்.

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.

இணை கற்பிப்போர் வெறுத்தபோதிலும் அனைத்து மார்க்கங்களைவிட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர்வழியுடனும், உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான்.

(அல்குர்ஆன் 61 : 7,8,9)
(குறிப்பு: உண்மைக்கு புறம்பாக ஆபாச‌ படம் எடுத்தவனையும், அதனை பரப்பிக் கொண்டிருப்பவனையும், தன் மதவெறியைத் தணித்துக் கொள்ள‌ நிர்வாணக் கார்ட்டூன் வரைந்தவனையும், அதையெல்லாம் ஆதரிக்கும் சிலரையும் கண்டிக்கவே இந்த கட்டுரையே தவிர, நடுநிலையான எண்ணம் கொண்ட மற்றவர்களை புண்படுத்தும் நோக்கம் எதுவுமில்லை.)

இஸ்லாமோஃபோபியாவினால் பாதிக்கப்பட்ட மனநோயாளிகளுக்கு இறைவா நேர்வழிக் காட்டுவாயாக!

மேலும் பார்க்க:

தோழி ஷர்மிளா எழுதிய உலக முஸ்லிம்களே..! உஷார்..!!!

சகோ முஹம்மத் ஆஷிக் எழுதிய‌ காட்டுமிராண்டிகளுக்கு கடுங்கண்டனம்..!

60 comments:

  1. அப்பிடிப் போடு அருவாள!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்.. போட்டாச்சு.. போட்டாச்சு! வருகைக்கு நன்றி.

      Delete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் அருமையான பதிவு

    ReplyDelete
    Replies
    1. வ‌அலைக்குமுஸ்ஸலாம் சகோ.

      //அருமையான பதிவு//

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ. ஜஸாகல்லாஹ் ஹைரா :)

      Delete
  3. ஸலாம் சகோ அஸ்மா..
    அருமையான விளக்கங்களை கொண்ட சிறந்த பதிவு...
    மாஷா அல்லாஹ்...

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
    Replies
    1. ஸலாம் சகோ!

      //அருமையான விளக்கங்களை கொண்ட சிறந்த பதிவு...
      மாஷா அல்லாஹ்...//

      அல்லாஹ் போதுமானவன்! எப்படியோ அவர்களைத் திருத்த இறைவன் நாடினால் திருத்தட்டும். இல்லையேல் தண்டிக்கட்டும்.

      நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் வரவு :) வருகைக்கும் கருத்துக்கும் ஜஸாகல்லாஹ் சகோ!

      Delete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    சகோ அஸ்மா

    அல்லாஹ்வின் தூதரை கேவலப்படுத்த நினைக்கும் கயவர்கள் இனி உணர்ந்துக்கொள்வார்கள் அவர்கள் மீது பிரியமுள்ள மக்களின் உணர்வுகளை. அல்லாஹ் தம் மறையில் அவர்களின் புகழை உயர்த்தியதாக சொல்லி விட்டான். எவராலும் அவர்கள் கண்ணியத்தை அணுவளவேனும் குறைக்க முடியாது.

    அவர்கள் எந்த மீடியாக்களை பயன்படுத்தி நபிகளாரை பொய் படுத்த முயல்கிறார்களோ அதை மீடியாவை பயன்படுத்தி எழுத்து, பேச்சு, காட்சி இப்படி நமது ஆளுகைக்கு உட்பட்ட எதாவது ஒன்றின் வாயிலாக அல்லாஹ்வின் தூதர் உண்மை வாழ்வை வெளிக்கொணர வேண்டும். அப்போது தான் அவை கியாமத் நாள் வரை வரக்கூடிய மக்களுக்கு உண்மையை உணர்த்தும் பாடமாக இருக்கும்.


    மிகவும் சிறப்பானதொரு பதிவு! பகிர்ந்த பதிவிற்கு ஜஸாகல்லாஹ் கைரன் சகோ
    அல்லாஹ் போதுமானவன்.

    ReplyDelete
    Replies
    1. வ‌அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

      //அல்லாஹ்வின் தூதரை கேவலப்படுத்த நினைக்கும் கயவர்கள் இனி உணர்ந்துக்கொள்வார்கள் அவர்கள் மீது பிரியமுள்ள மக்களின் உணர்வுகளை//

      அப்படியே கலிமாவும் சொல்லி நேர்வழிக்கு வரட்டும், இன்ஷா அல்லாஹ்!

      //அல்லாஹ் தம் மறையில் அவர்களின் புகழை உயர்த்தியதாக சொல்லி விட்டான். எவராலும் அவர்கள் கண்ணியத்தை அணுவளவேனும் குறைக்க முடியாது//

      நிச்சயமா சகோ.

      //...நமது ஆளுகைக்கு உட்பட்ட எதாவது ஒன்றின் வாயிலாக அல்லாஹ்வின் தூதர் உண்மை வாழ்வை வெளிக்கொணர வேண்டும்//

      இறைவன் நாடினால் அதுவும்கூட நடக்கும்! நம்முடைய காலத்திலேயே நடந்தால் இன்ஷா அல்லாஹ் அதையும் பார்க்கலாம் :)

      நீண்ட கருத்துரைக்கு ஜஸாகல்லாஹ் கைரா சகோ.

      Delete
  5. சலாம் சகோ.அஸ்மா,
    //Charb என்று அழைக்கப்படும் Stéphane Charbonnier//---பிரபலம் அடைய அவனவனுக்கு கிடைத்த கேவலமான வழிகளை தேர்ந்தெடுக்கின்றனர். தம் எண்ணங்கள் தோல்வியில் முடியும் என்று இவர்கள் நினைப்பவர்களாக இல்லை. :-((
    கருத்துள்ள பதிவுக்கு நன்றி சகோ.

    ReplyDelete
    Replies
    1. சலாம் சகோ.
      //---பிரபலம் அடைய அவனவனுக்கு கிடைத்த கேவலமான வழிகளை தேர்ந்தெடுக்கின்றனர்//

      அதனால்தான் நம் பங்குக்கும் சேர்த்து பிரபலப்படுத்துவதை முடிந்தவரை குறைத்துக் கொள்ளவேண்டுமென்று, அவனுடைய பத்திரிக்கைப் பெயரையோ, அந்தப் படத்தின் பெயரையோ கொடுக்கவில்லை சகோ.

      //தம் எண்ணங்கள் தோல்வியில் முடியும் என்று இவர்கள் நினைப்பவர்களாக இல்லை. :-((
      கருத்துள்ள பதிவுக்கு நன்றி சகோ//

      அவர்களின் எண்ணங்களும், திட்டங்களும் மண்ணைக் கவ்வும் இன்ஷா அல்லாஹ்! தங்களின் கருத்துரைக்கு ஜஸாகல்லாஹ் ஹைரா :)

      Delete
  6. masallah arumaiyana pathiu tnx

    ReplyDelete
  7. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் ஜஸாகல்லாஹ் ஹைரா. தொடர்ந்து படிங்க சகோ.

      Delete
  8. அஸ்ஸலாமு அலைக்கும் அருமையான பதிவு..,

    ReplyDelete
    Replies
    1. வ‌அலைக்குமுஸ்ஸலாம் சகோ! தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் ஜஸாகல்லாஹ் ஹைரா.

      Delete
  9. சரியான நேரத்தில் சரியான பதிவு

    ReplyDelete
    Replies
    1. //சரியான நேரத்தில் சரியான பதிவு//

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் சகோ.

      Delete
  10. சலாம் அஸ்மா அக்கா..!


    அருமையான பகிர்வுக்கு நன்றி அக்கா..!

    /உங்களின் வெறிச் செயல்களால் நீங்கள்தான் மக்கள் மன்றத்தில் இழிவாகிக் கொண்டிருக்கிறீர்கள்! இஸ்லாத்தை நீங்கள் எதிர்க்க, எதிர்க்கதான் நடுநிலை மக்கள் சிந்திக்கிறார்கள். உங்களை அறியாமலே இஸ்லாம் மார்க்கத்தை நீங்கள் வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்! இயந்திரத் தனமான வாழ்க்கை முறைகளைக் கொண்ட, சிந்திக்க நேரமில்லாத மக்களைக்கூட உங்களின் இஸ்லாமோஃபோபியாவினால் இஸ்லாம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்! சிகரம் ஏறுவதாக நினைத்து அதள பாதாளத்தில் வீழ்ந்துக் கொண்டிருக்கிறீர்கள் ..!/// மறுக்க இயலாத உண்மை சகோ...!

    எனது பதிவு லிங்க் கொடுத்தமைக்கு ஜசாக்கல்லாஹு க்ஹைர் அக்கா :)

    ReplyDelete
    Replies
    1. சலாம் ஷர்மி!

      //அருமையான பகிர்வுக்கு நன்றி அக்கா..!//

      உங்களின் பதிவினால் இதில் வன்முறைப்பற்றி கூடுதலாக சேர்க்க அவசியமில்லாமல் போய் சுலபமா லிங்க் கொடுத்துட்டேன் :) வருகைக்கும் கருத்துக்கும் ஜஸாகல்லாஹ்..மா!

      Delete
  11. அஸ்மா...

    அருமையான விளக்கம் சொல்லியிருக்கீங்க...

    //அல்லாஹ் போதுமானவன்! எப்படியோ அவர்களைத் திருத்த இறைவன் நாடினால் திருத்தட்டும். இல்லையேல் தண்டிக்கட்டும்.//

    ம்ம்

    ReplyDelete
    Replies
    1. //அஸ்மா...

      அருமையான விளக்கம் சொல்லியிருக்கீங்க...//

      நம்மைத் திட்டியவர்களைக்கூட சீக்கிரமா மறந்துவிடுகிறோம். ஆனா ரசூலுல்லாஹ்வை கண்ணியக் குறைவா ஒரு வார்த்தைச் சொன்னா...? இந்தப் பதிவ எழுதுற வரைக்கும் நிம்மதியா தூங்கக்கூட வரல ஆமி :( அல்லாஹ் போதுமானவன்! வருகைக்கும் கருத்துக்கும் ஜஸாகல்லாஹ்..மா!

      Delete
  12. சலாம் சகோ....

    சபாஷ்....சவுக்கடி பதிவு....

    ReplyDelete
    Replies
    1. //சலாம் சகோ....

      சபாஷ்....சவுக்கடி பதிவு....//

      சலாம் சகோ! உரைப்பவர்களுக்கு உரைத்தால் போதும் அல்ஹம்துலில்லாஹ் :) தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ஜஸாகல்லாஹ் ஹைரா!

      Delete
  13. சலாம் சகோ!

    மிக நேர்த்தியான பதிவு. சிறந்த விளக்கங்கள்.

    இவ்வாறு இவர்கள் சீண்டுவதால் தெரியாதவர்கள் கூட 'யார் இந்த முஹம்மது?' என்று கேட்டு அவரது வாழ்வை படிக்க ஆரம்பித்துள்ளார்கள். ஒரு வகையில் இஸ்லாம் வளர இதுவும் காரணமாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. சலாம் சகோ!

      //இவ்வாறு இவர்கள் சீண்டுவதால் தெரியாதவர்கள் கூட 'யார் இந்த முஹம்மது?' என்று கேட்டு அவரது வாழ்வை படிக்க ஆரம்பித்துள்ளார்கள்//

      முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நமக்கு மட்டும்தான் இறைத்தூதர் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் சகோ! அவர்களைப்பற்றி படிக்கும் எண்ணிக்கை இதன்மூலம் இன்னும் அதிகமாகி உண்மையை ஒருநாள் தெரிந்துக் கொள்வார்கள், இன்ஷா அல்லாஹ் :)

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ஜஸாகல்லாஹ் ஹைரா!

      Delete
  14. நாகூர் மீரான்
    has left a new comment on your post "இஸ்லாத்தின் பெருமையுணர்ந்த தற்கால எதிரிகள்!
    ":

    சலாம் சகோ..

    நபியை பற்றி விமர்சனம் செய்த அந்த உத்தம சீலர்கள் யோக்கியதை என்ன தெரியுமா?

    அமெரிக்கர்களின் அப்பன் யார் ? என்பதை கண்டுபிடிக்க ஒரு வண்டி சுற்றுகிறது அமெரிக்காவில்.... WHO IS YOUR DADDY ? என்கிற வாசகத்தோடு DNA டெஸ்ட் பண்ண நிபுணர்களோடு சுத்துகிறது அந்த வண்டி...நிறைய பேரு தன்னோட உண்மையான அப்பன் யாருன்னு கண்டு புடிச்சிடான்கண்ணு புளகாங்கிதம் அடைகிறதாம் அந்த வண்டியின் குழு... மேலதிக விபரத்திற்கு ...

    (http://onlinepj.com/unarvuweekly/amerikkavai-kalakkum-arputha-vandi-17-04/)

    நன்றியுடன்
    நாகூர் மீரான்

    ReplyDelete
    Replies
    1. சலாம் சகோ..! தவறுதலாக உங்களின் பின்னூட்டத்தை டெலிட் பண்ணிட்டேன், ஸாரி சகோ. ஈமெயில் மாடரேஷன் ரிக்வஸ்ட் இருந்ததுனால அப்படியே எடுத்துட்டேன் :)

      //நபியை பற்றி விமர்சனம் செய்த அந்த உத்தம சீலர்கள் யோக்கியதை என்ன தெரியுமா?

      அமெரிக்கர்களின் அப்பன் யார் ? என்பதை கண்டுபிடிக்க ஒரு வண்டி சுற்றுகிறது அமெரிக்காவில்....//

      ஹ்ம்...! ஆர்ப்பாட்டம் அன்றே லைவில் இந்த செய்தியைக் கேட்டேன் சகோ. இந்த லட்ணத்தில் அப்பழுக்கற்ற முஹம்மத் (ஸல்) அவர்களின் ஒழுக்க வாழ்வை விமர்சிக்க வந்துட்டாங்க..! ரசூலுல்லாஹ்வின் ஒழுக்கத்தில் கால் தூசுக்குக் கூட பெறமாட்டார்கள் இவர்கள்!

      முழு விபரத்திற்கு இணைப்பு தந்தமைக்கும், தங்களின் வருகைக்கும் ஜஸாகல்லாஹ் ஹைரா!

      Delete
  15. சரியான பதிவு சரியான நேரத்தில் சொல்லபட்டிருகிறது சகோதரி மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. //சரியான பதிவு சரியான நேரத்தில் சொல்லபட்டிருகிறது சகோதரி மிக்க நன்றி//

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ஜஸாகல்லாஹ் ஹைரா!

      Delete
  16. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரி அருமையான சிறந்த விளக்கங்களை கொண்ட பதிவு. மாஷா அல்லாஹ்.

    //வளர்ந்துவரும் இஸ்லாத்தின் மீதுள்ள வெறியினால் வரம்பு மீறும் கையாலாகாத கோழைகளே! உங்களிடம் சில கேள்விகள்:...//
    உங்களுடைய இந்த ஏழு கேள்விகளுக்கு ஒவ்வொன்றும் முத்துக்கள். அப்பன் யார் என்று தெரியதா ஒர் சமுகத்தை உருவாக்கி வைத்துள்ளார்களே அவர்களுக்கு இதற்கெல்லாம் பதில் தேடமாட்டார்கள். அவர்களுக்கு இன்னும் அதிகபடியான அவாதுறு பரப்புவாதுக்கும் தான் இந்த உலகத்தில் நேரம் அவர்களுக்கு சரியா இருக்கும். நியாத்திர்ப்பு நாள் கருத்தார் முன் நிற்கும் முன் அவர்களுக்கு இதுபோன்ற கிழ்தரமான செயலுகளுக்கு பதில் தெரியும்.

    //இஸ்லாத்திற்கு அழைக்கப்படும் நிலையில் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனைவிட மிகப்பெரிய அநீதி இழைப்பவன் யார்? அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான்// ஜெஸக்கால்லாஹ் ஹைர் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. வ‌அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

      //உங்களுடைய இந்த ஏழு கேள்விகளுக்கு ஒவ்வொன்றும் முத்துக்கள். அப்பன் யார் என்று தெரியதா ஒர் சமுகத்தை உருவாக்கி வைத்துள்ளார்களே அவர்களுக்கு இதற்கெல்லாம் பதில் தேடமாட்டார்கள். அவர்களுக்கு இன்னும் அதிகபடியான அவாதுறு பரப்புவாதுக்கும் தான் இந்த உலகத்தில் நேரம் அவர்களுக்கு சரியா இருக்கும்//

      சரியா சொன்னீங்க சகோ. இந்த உலகமே அவர்களுக்கு சதம்! அதனால்தான் தன் கோணல் முதுகு அவர்களுக்கு தெரியாமல் பொய்களைப் பரப்ப முடிகிறது.

      //நியாத்திர்ப்பு நாள் கருத்தார் முன் நிற்கும் முன் அவர்களுக்கு இதுபோன்ற கிழ்தரமான செயலுகளுக்கு பதில் தெரியும்//

      ம்....! அந்த இறுதி நாளைக்குள் இவர்கள் திருந்திக் கொண்டால் தப்பிக்கலாம். இல்லாவிட்டால் அங்கே இருக்கு அவர்களுக்கு :)

      தங்களின் வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் ஜஸாகல்லாஹ் ஹைரா.

      Delete
  17. அஸ்ஸலாமு அலைக்கும்,
    அருமையான பதிவு மிக்க நன்றி சகோ!

    ReplyDelete
    Replies
    1. வ‌அலைக்குமுஸ்ஸலாம்.

      //அருமையான பதிவு மிக்க நன்றி சகோ!//

      வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் ஜஸாகல்லாஹ் ஹைரா.

      Delete
  18. எது நடந்ததோ அது நன்றாக நடந்தது
    எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
    எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்

    ReplyDelete
    Replies
    1. //எது நடந்ததோ அது நன்றாக நடந்தது//

      ஆமா சகோ! முஹம்மத் நபி புதுப்பித்து வைத்த இஸ்லாம் அவர்களுக்கு பிறகும் அழிந்துவிடாமல் உலகம் முழுதும் தொட‌ர்ந்து பரவ ஆரம்பித்தது.

      //எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது//

      சரியாச் சொன்னீங்க! இஸ்லாம் மார்க்கத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியினால் உண்மைக்கு புறம்பான கட்டுக்கதைகளும், வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்படும்போதெல்லாம் இஸ்லாம் கணிசமான ஒரு வளர்ச்சிக்கு எட்டுவது. நேர்மையுள்ளம் கொண்ட மாற்றுமத அன்பர்களும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் அந்த வளர்ச்சியில் அவர்களும் பங்களிப்பது :)

      //எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்//

      இறுதி தீர்ப்புநாள் வரையிலும் இஸ்லாம் எந்த கொம்பனுக்கும் தலை வணங்காமல், ஏக இறைவனுக்கு மட்டும் அடிபணிந்த மார்க்கமாக இவ்வுலகில் நீடித்திருக்கப் போவது. அத்துடன் மறு உலகில், தான் செய்தவற்றின் பலன்களை அனைவரும் அறுவடை செய்யப் போவது.

      நல்லதொரு பின்னூட்டம் கொடுத்து, அதற்கு விளக்கம் கொடுக்க எனக்கு வாய்ப்பளித்தமைக்கும் :) உங்கள் வருகைக்கும் நன்றி சகோ!

      Delete
  19. அஸ்ஸலாமு அலைக்கும்.

    எதிர்ப்புகள் தொடரத்தொடர
    ஆதரவுகளும் அதிகமாகத்தான் ஆகும்.

    சிறப்பான பதிவு.

    ReplyDelete
    Replies
    1. வ‌அலைக்குமுஸ்ஸலாம் சகோ.

      //எதிர்ப்புகள் தொடரத்தொடர
      ஆதரவுகளும் அதிகமாகத்தான் ஆகும்//

      யெஸ்.. :) நடப்பில் அதைப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம் :) இன்ஷா அல்லாஹ் இனியும் இஸ்லாம் வளரும், அனைவரையும் நேர்வழிபடுத்த‌!

      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

      Delete
  20. அழகான பகிர்வு..

    ReplyDelete
    Replies
    1. //அழகான பகிர்வு..//

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஃபாயிஜா. ஜஸாகல்லாஹ் ஹைரா :)

      Delete
  21. Replies
    1. //Salaam sister
      excellant article//

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ. ஜஸாகல்லாஹ் ஹைரா :)

      Delete
  22. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

    பிரபலம் ஆவதற்கான தற்போதைய மாடர்ன் மற்றும் மோசமான கலாச்சாராம் "இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும் சீண்டுவது". வன்முறை இல்லாத நம் எதிர்ப்பை காட்டுவது அவசியமான ஒன்றாகும்!

    ReplyDelete
    Replies
    1. வ‌அலைக்குமுஸ்ஸலாம் சகோ பாஸித்!

      //பிரபலம் ஆவதற்கான தற்போதைய மாடர்ன் மற்றும் மோசமான கலாச்சாராம் "இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும் சீண்டுவது"//

      அழகா சொன்னீங்க சகோ :)

      //வன்முறை இல்லாத நம் எதிர்ப்பை காட்டுவது அவசியமான ஒன்றாகும்!//

      நிச்சயமா சகோ. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி, ஜஸாகல்லாஹ் ஹைரா.

      Delete
  23. அஸ்ஸலாம் அலைக்கும் ..சகோதரி..
    தங்களின் அனல் பறக்கும் கட்டுரையை படிக்கும் போதே
    என் கண்களிருந்து சாரைசாரையாக ........வழிந்தோடுகிறது கட்டுப்படுத்தமுடியவில்லை .
    நம் சமூகத்திலும் இப்படியும் எழுதும் பெண்கள் இருக்கிறார்களா ....!!!
    என்று எண்ணும் போது மிகப் பெருமையாக இருக்கிறது..
    தங்களின் எழுத்துப்பணி மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனிடம்
    துவா செய்கிறேன் ....ஆமின்,

    ReplyDelete
    Replies
    1. வ‌அலைக்குமுஸ்ஸலாம் சகோ!

      //தங்களின் அனல் பறக்கும் கட்டுரையை படிக்கும் போதே
      என் கண்களிருந்து சாரைசாரையாக ........வழிந்தோடுகிறது கட்டுப்படுத்தமுடியவில்லை//

      அப்படிதான்..., அது நபி(ஸல்) அவர்கள் மீது நாம் கொண்ட பாசத்தினால் சகோ!

      //நம் சமூகத்திலும் இப்படியும் எழுதும் பெண்கள் இருக்கிறார்களா ....!!!
      என்று எண்ணும் போது மிகப் பெருமையாக இருக்கிறது..//

      இதைவிட நன்றாக எழுதக்கூடிய பெண்களும் நம் சமூகத்தில் இருப்பார்கள் சகோ :) அல்லாஹ் நம் அனைவருக்கும் மென்மேலும் மார்க்கக் கல்வியையும், ஈமானையும் அதிகப்படுத்திக் கொடுக்கட்டும்!

      //தங்களின் எழுத்துப்பணி மேலும் சிறக்க எல்லாம் வல்ல இறைவனிடம்
      துவா செய்கிறேன் ....ஆமின்//

      உங்களின் துஆவுக்கும் வருகைக்கும் ஜஸாகல்லாஹ் ஹைரன் கஸீரா! :)

      Delete
  24. Yes. You are correct.

    i also recently installed tamil quran app in my ipad and started read what is it inside and try to understand what it mean/convey to people.

    Regards

    Seshadri /Doha


    ReplyDelete
    Replies

    1. //Yes. You are correct//

      உங்களின் நியாயமான புரிந்துணர்வுக்கு நன்றி சகோ.

      //i also recently installed tamil quran app in my ipad and started read what is it inside and try to understand what it mean/convey to people//

      மிக்க சந்தோஷம் :) முழுவதுமாக‌ குர்ஆனைப் படித்துப் பாருங்கள் சகோதரரே. அதிலிருந்து உங்களுக்கு எழும் சந்தேகங்க‌ளையும் நீங்கள் தாராளமாக வந்து கேட்கலாம்.

      ஏக இறைவனின் சாந்தியும் ச‌மாதானமும் உங்கள் மீது நிலவட்டுமாக! வருகைக்கும் உங்களின் கருத்துக்கும் நன்றி சகோ :)

      Delete

  25. உங்களை அறியாமலே இஸ்லாம் மார்க்கத்தை நீங்கள் வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்! இயந்திரத் தனமான வாழ்க்கை முறைகளைக் கொண்ட, சிந்திக்க நேரமில்லாத மக்களைக்கூட உங்களின் இஸ்லாமோஃபோபியாவினால் இஸ்லாம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்! masha allah sister allah give you long life & strenghth
    Riyas qatar

    ReplyDelete
    Replies
    1. //masha allah sister allah give you long life & strenghth//

      உங்களின் அழகிய‌ துஆவுக்கும் வருகைக்கும் நன்றி சகோ, ஜஸாகல்லாஹ் ஹைரா :)

      Delete
  26. சலாம்,
    நல்ல அருமையான கட்டுரை சகோ.

    கட்டுரை வாயிலான நம் எதிர்ப்புகள் நிச்சயம் நம் இறைவனிடம் நல்ல மதிப்பிற்குரிய செயலாக இருக்கும்...

    தொடர்ந்து எழுதுங்கள் ..எங்கெல்லாம் இஸ்லாம் நசுக்கபடுகின்றதோ அதை பற்றியெல்லாம் எழுதுங்கள்...நசுக்க நசுக்க வளர்ந்த ஒரே மார்க்கம் நம் இஸ்லாம் மட்டுமே....மக்காவை விட்டு துறத்தப்பட்டவர்கள் வெறும் 10 ஆண்டுகளில் வெற்றி வீரராக வந்தார்கள் ...வரலாறு திரும்பும் இன்று இஸ்லாத்தை பற்றி வெட்டி பேச்சு பேசுபவர்கள் நாளை வாய் பிளந்து அசந்து நிப்பார்கள் இன்ஷா அல்லாஹ்....
    -----------------------------------------
    என் தளத்தில் இப்பொழுது:

    நரேந்திர மோடி-அதிகாரபூர்வ பெயர் மாற்றம்

    கட்டுரையை பற்றி :
    பதிவுலகில் இருபவர்களுக்கே இவ்விசயம் தெரியவில்லை என்றால் மற்ற மக்களை பற்றி யோசியுங்கள்,நம் ஊடகங்கள் அப்படி உள்ளது....

    நீங்கள் அறிந்த இவ்வசயத்தை பிறருக்கும் சொல்லுங்கள் முடிந்தால் இந்த கட்டுரையின் லிங்கையும் உங்கள் தளத்தில் கொடுங்கள்,பிறருக்கும் இவ்விசயம் தெரிய உதவுங்கள்.

    http://tvpmuslim.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. சலாம் சகோ!

      //கட்டுரை வாயிலான நம் எதிர்ப்புகள் நிச்சயம் நம் இறைவனிடம் நல்ல மதிப்பிற்குரிய செயலாக இருக்கும்...//

      இன்ஷா அல்லாஹ்!

      தொடர்ந்து எழுதுங்கள் ..எங்கெல்லாம் இஸ்லாம் நசுக்கபடுகின்றதோ அதை பற்றியெல்லாம் எழுதுங்கள்...//

      கண்டிப்பா சகோ. இன்ஷா அல்லாஹ், இயன்றபோதெல்லாம் எழுத முயற்சி செய்கிறேன். அல்லாஹ்தஆலா அதற்கு உதவி செய்வானாக!

      //நசுக்க நசுக்க வளர்ந்த ஒரே மார்க்கம் நம் இஸ்லாம் மட்டுமே....மக்காவை விட்டு துறத்தப்பட்டவர்கள் வெறும் 10 ஆண்டுகளில் வெற்றி வீரராக வந்தார்கள் ...வரலாறு திரும்பும் இன்று இஸ்லாத்தை பற்றி வெட்டி பேச்சு பேசுபவர்கள் நாளை வாய் பிளந்து அசந்து நிப்பார்கள் இன்ஷா அல்லாஹ்....//

      அழகா சொன்னீங்க சகோ! உங்களின் வருகைக்கும் நீன்ட கருத்துரைக்கும் ஜஸாகல்லாஹ் ஹைரா :)
      -----------------------------------------
      //என் தளத்தில் இப்பொழுது:
      நரேந்திர மோடி-அதிகாரபூர்வ பெயர் மாற்றம்

      நீங்கள் அறிந்த இவ்வசயத்தை பிறருக்கும் சொல்லுங்கள் முடிந்தால் இந்த கட்டுரையின் லிங்கையும் உங்கள் தளத்தில் கொடுங்கள்,பிறருக்கும் இவ்விசயம் தெரிய உதவுங்கள்//

      இன்ஷா அல்லாஹ், படித்துவிட்டு லிங்க் கொடுக்கிறேன் சகோ.

      Delete
  27. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

    மாஷா அல்லாஹ்..மிகவும் அருமையான பதிவு சகோ..நல்ல கருத்துக்களும், விளக்கங்களும் அருமை..

    கேள்விகள் ஒவ்வொன்றும் சாட்டையடியாக இருக்கிறது..உண்மையில் என்ன வார்த்தை கொண்டு பாராட்டுவது என்று தெரியவில்லை..உங்கள் பதிவை படித்ததும் மனதில் இருந்த பாரம் சிறிது குறைந்தது போன்ற உணர்வு..

    இறை உங்களின் கல்வி அறிவை மென்மேலும் அதிக படுத்த என் பிராத்தனைகள்..

    நல்லதொரு பதிவை பதிந்ததற்கு நன்றி சகோ..:))


    ReplyDelete
    Replies
    1. வ‌அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்..

      //கேள்விகள் ஒவ்வொன்றும் சாட்டையடியாக இருக்கிறது..//

      இன்னும் கேட்கலாம், அவ்வளவு இருக்குது பட்டியல்! பதிவு ஏற்கனவே நீண்டுவிட்டதால் அவற்றை குறைக்க வேண்டியதாப் போச்சு :(

      //உண்மையில் என்ன வார்த்தை கொண்டு பாராட்டுவது என்று தெரியவில்லை..//

      அதுதான் முதல் வார்த்தையே அழகா சொல்லிட்டீங்களே.. 'மாஷா அல்லாஹ்..'ன்னு :) அல்லாஹ் நாடியதால்தான் என்னால் எழுத முடிந்தது! பாராட்டுதலைவிட உங்களின் உளப்பூர்வமான துஆவே எனக்கு விருப்பமானது தோழி :)

      //உங்கள் பதிவை படித்ததும் மனதில் இருந்த பாரம் சிறிது குறைந்தது போன்ற உணர்வு..//

      எனக்கும் இந்தப் பதிவுக்குப் பிறகே கொஞ்சம் திருப்தி; முழு ஆறுதல் அல்ல :( தவறிழைத்தவர்கள் உணரும்வரை!

      //இறை உங்களின் கல்வி அறிவை மென்மேலும் அதிக படுத்த என் பிராத்தனைகள்..

      நல்லதொரு பதிவை பதிந்ததற்கு நன்றி சகோ..:))//

      தங்களின் துஆவுக்கும், வருகைக்கும் ஜஸாகல்லாஹ் ஹைரா :)

      Delete
  28. சலாம் சகோ அஸ்மா...

    அருமையான பதிவு.. பதிவை விட உங்கள் பின்னூட்ட பதில்கள் மிக அருமை...

    ReplyDelete
  29. சலாம் சகோ!

    //அருமையான பதிவு.. பதிவை விட உங்கள் பின்னூட்ட பதில்கள் மிக அருமை... //

    அப்டியா...? அப்போ பதிவில் இன்னுங்கொஞ்சம் காரம் போடணுமோ?? :0 உறைக்க வேண்டிய‌வர்களுக்கு இந்தக் காரம் உறைத்தாலே போதும்னு நினைக்கிறேன்!

    நீங்க சொன்ன பிறகுதான் சகோ என் பின்னூட்ட பதில்களை ஒருமுறைப் பார்க்கிறேன் :‍) லேட்டா வந்தாலும் பின்னூட்டத்திற்கும் சேர்த்து கருத்து தெரிவித்தமைக்கு ஜஸாகல்லாஹ் ஹைரா :)

    ReplyDelete
  30. அஸ்ஸாலாமு அலைக்கும் சகோ
    நீங்கள் செய்து வரும் பணி ஓர் புனித பணி இது
    தொடர என் துஆ நிச்சயம் உண்டு

    ReplyDelete
  31. அஸ்ஸாலாமு அலைக்கும் சகோ!
    நீங்கள் செய்து வரும் பணி ஓர் புனிதபணி இது
    தொடர என் துஆ நிச்சயம் உண்டு

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்குமுஸ்ஸலாம் சகோ.

      //நீங்கள் செய்து வரும் பணி ஓர் புனிதபணி இது
      தொடர என் துஆ நிச்சயம் உண்டு//

      தங்களின் துஆவுக்கும் வருகைக்கும் நன்றி சகோ, ஜஸாகல்லாஹ் ஹைரா.

      Delete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை