அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Thursday 27 September 2012

உலக அறிஞர்களின் நேரிய பார்வையில்....



வாழ்வில் அனுபவப்பட்ட அறிஞர்கள் நடுநிலையோடு சிந்தித்து ஒரு உத்தம‌ரைப் பற்றி சொல்லும் உண்மைக் கருத்துக்கள் உலக மன்றத்தில் மறைக்கப்படாமல் இருக்க அவற்றை வெளிக்கொண்டு வருவது அவசியமாகிவிடுகிறது. அத்தகைய ஒரு மாமனிதரைப் பற்றிய உலக அறிஞர்களின் கருத்துக்கள் அவரைப் பற்றி மென்மேலும் அறிய ஆவல் ஏற்படுத்தக்கூடியவை. இவை ஒரு பகுதி மட்டுமே! நீங்களும் படித்து கலங்கமில்லா ஒருவரின் எதேர்ச்சையான நிலையைப் புரிந்துக் கொள்ள உங்கள் முன் இந்தப் பதிவு:

நபிகள் நாயகம் தோற்றுவித்த தெய்வத்தன்மை பொருந்திய புனிதமான அரசாங்கம் முற்றுமுழுதும் ஜனநாயகக் கொள்கையை மேற்கொண்டதாகும்! மனித குலம் முழுவதும் பின்பற்றத்தக்க உயரிய கோட்பாடுகளை உடையது நபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாம். அனைத்தையும் உள்ளடக்கியது இஸ்லாம். அகிலமே ஏற்றுக்கொள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்கை அவருடைய மனிதத் தன்மையை தெளிவாக்கியுள்ளது.
       – டாக்டர் ஜான்சன்


Thomas Carlyle
“நம்மவர்கள் ரொம்ப உற்சாகமாக முஹம்மதைப் பற்றிச் சொன்ன பொய்களும் அவதூறுகளும் நம்மையே கேவலப்படுத்துவதாக உள்ளது”.
       – தாமஸ் கார்லைல் – (Heroes and Hero Worship and the Heroic in History, 1840)

“சண்டையும் சச்சரவும் நிறைந்த குலம் கோத்திரங்களையும், நாடோடிகளையும் தமது முயற்சியால் இணைத்து ஒரு இருபது ஆண்டுக்குள்ளேயே நாகரிகம் மிகுந்த - ஒரு பலம் பொருந்திய சமூகமாக எவ்வாறுதான் அவரால் உருவாக்க முடிந்ததோ!!”
       தாமஸ் கார்லைல் (Thomas_Carlyle), Heroes_and_Hero_Worship

நபிகள் நாயகம் இவ்வுலகில் மக்களுக்குப் புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மை பொதிந்தவை. கருத்தாழம் மிக்கவை. விசுவாசம் கொள்ளத்தக்க வேதம் ஒன்றிருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனேயாகும்.
       – தாமஸ் கார்லைல் – (Heroes and Hero Worship and the Heroic in History)


Annie Besant
அரேபியாவின் இந்தத் தூதருடைய வாழ்க்கையையும், ஒழுக்கப் பண்புகளையும், தூய நடத்தையையும் படிப்பவர்கள் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதை அறிந்தவர்களுக்கு அவர்மீது மரியாதைத் தவிர வேறு எதுவும் ஏற்படாது. அந்த வல்லமை மிக்க மாபெரும் இறைத் தூதர்களில் ஒருவரான இறுதித் தூதரைக் குறித்து உயர்வான எண்ணமே ஏற்படும். எனது இந்த நூலில் நான் பலருக்கும் தெரிந்த பல விஷயங்களையே சொல்லி இருக்கிறேன் என்றாலும் நானே அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைத் திரும்பத் திரும்பப் படிக்கும் ஒவ்வொரு முறையும் ஆற்றல் மிக்க அந்த அரபு போதகரின் மீது புதிய ஒரு மதிப்பும், புதிய ஒரு மரியாதை உணர்வும் ஏற்படுவதை நான் உணர்கிறேன்.
       – அன்னி பெசன்ட் (Annie Besant) - The life and Teachings of Mohamed 1932, page 4

இந்த உலகம் சார்ந்த இருபது சாம்ராஜ்ஜியங்களையும் மறுமை சார்ந்த ஆன்மீக சாம்ராஜ்ஜியத்தையும் நிறுவிய ஒருவர் முஹம்மத் அவர்கள்! மனிதனுடைய பெருமையையும் புகழையும் அளக்கக்கூடிய எந்த அளவுகோலை வைத்துப் பார்த்தாலும், முஹம்மதைவிட சிறந்த ஒருவரை நாம் காட்டமுடியாது!
       – லா மார்ட்டின், ஹிஸ்டரி தெலா துர்கி (ஃப்ரெஞ்ச்), பாரிஸ்,1854, பாகம் 11, பக்கங்கள் 276-277.

தத்துவ போதகர், சொற்பொழிவாளர், இறைத்தூதர், சட்ட நிபுணர், மாபெரும் போர் வீரர், கருத்துக்களை வென்ற வரலாற்று வீரர், பகுத்தறிவுப் பூர்வமான கொள்கைகள் நம்பிக்கைகளை நிலை நாட்டியவர், மாயைகள்/கவர்ச்சிகள் இல்லாத பகுத்தறிவு ரீதியில் ஒரு கொள்கை வழி நாகரீகத்தை உருவாக்கி அளித்த மாமேதை, ஒரே ஆன்மீகத் தலைமையில் இருபது பூவுலகப் பேரரசுகளின் நிறுவனர்தாம் முஹம்மத் அவர்கள்.
       – லா மார்ட்டின்(Lamartine)

Alphonse Lamartine
“உயர்ந்த இலட்சியம், குறைவான வசதிகள், வியப்பூட்டும் வெற்றி ஆகிய இம்மூன்றும்தான் மனித நுண்ணறிவை, மனித ஆற்றலை அளந்திடும் அளவுகோல்கள் என்றால் இந்த நவீன வரலாற்றின் எந்த மாமனிதரையும் "முஹம்மத்" உடன் ஒப்பிட எவருக்குத்தான் துணிச்சல் வரும்? புகழ் மிக்க மனிதர்களெல்லாம் ஆயுதங்களை உருவாக்கினார்கள்; சட்டங்களை இயற்றினார்கள்; பேரரசுகளை நிறுவினார்கள். அவர்கள் செய்ததெல்லாம் இவைதாம்! பெரும்பாலும் தமது கண்களின் முன்பே சிதைந்து விழுந்துவிட்ட உலகாதாயக் கோட்டைகளைத்தான் அவர்களால் நிறுவமுடிந்தது. ஆனால் முஹம்மத் போர்ப்படைகள், சட்டமியற்றும் சபைகள், பேரரசுகள், மக்கள் சமுதாயங்கள் ஆகியவற்றை மட்டும் பாதித்து அவற்றை மட்டும் வெற்றி கொள்ளவில்லை; அவற்றுடன் அன்றைய உலகின் மூன்றிலொரு நிலப்பரப்பில் வசித்து வந்த கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களையும் ஈர்த்தார். வழிபாட்டுத் தலங்களையும், சமய நெறிகளையும், பல்வேறு கருத்துகளையும், கொள்கைகளையும், நம்பிக்கைகளையும் ஆன்மாக்களையும் ஈர்த்து அவற்றில் தமது தாக்கங்களை பதித்தார். வெற்றியின்போது அவர் காட்டிய பொறுமை, பணிவு, சகிப்புத்தன்மை தாம் ஏற்றுக்கொண்ட ஒரு கருத்துக்காக தம்மையே முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட அவரது உயர் விருப்பம், அரசாட்சியை அடைந்திட வேண்டும் என்ற குறுகிய எண்ணம் இல்லாமல் உலகப் பற்றற்று வாழ்ந்து வந்த நிலை, அவரது முடிவில்லாத தொழுகைகள், பிரார்த்தனைகள், இறைவனுடனான மெய்ஞ்ஞான உரையாடல்கள், அவரது மரணம், மரணத்திற்கு பின்னரும் அவர் அடைந்த வெற்றி இவையனைத்துமே அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்றோ மோசடி குணம் உடையவர் என்றோ பறை சாற்றிடவில்லை. மாறாக, சமயக்கொள்கை ஒன்றை நிலைநாட்டிட அவருக்கிருந்த மனோ உறுதியைத்தான் பறைசாற்றுகின்றன.”
அல்போன்சு லாமார்ட்டின் - (Alphonse Lamartine - Historie de la Turquie, Paris, 1854, Vol II,pp 276-277)

Diwan Chand Sharma
முஹம்மது இரக்கமே உருவானவர். அவரது இரக்கம் அவரைச் சுற்றியுள்ளவர்களைக் கவர்ந்திழுத்தது.
  – திவான் சந்த் ஷர்மா (D.C.Sharma – The Prophets of the East Calcutta 1935 pp 12)

அன்பின் ஆன்மாவாக முஹம்மத் இருந்தார். அவருடைய தாக்கம் உடன் இருந்தவர்களால் மறக்க முடியாததாக இருந்தது.
– திவான் சந்த் ஷர்மா, The Prophets of the East, கொல்கத்தா, 1935, பக்கம் 122.

ஆட்சி புரியும் அமைச்சர்கள் (முஹம்மது) நபிபெருமான் வகுத்த சீர்திருத்தங்களை பின்பற்றி நடக்கவேண்டும்.
       –  காந்திஜி
 
Gandhiji

“மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் மீது சர்ச்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் ஒருவரின் மிகச்சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல்கொண்டேன். (அதை படித்தறியும்போது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தை பெற்றுத் தந்தது வாள் பலமல்ல என்று முன்னெப்போதையும் விட அதிகமாக நான் உணர்ந்தேன். முஹம்மது நபி நாயகத்தின் மாறாத எளிமை, தம்மை பெரிதாக கருதாமல் சாதாரணமானவராக நடந்துக் கொள்ளும் உயர்பண்பு, எந்நிலையிலும் வாக்குறுதியை பேணிக் காத்த தன்மை, தம் தோழர்கள் மீது அவர் கொண்டிருந்த ஆழிய அன்பு, அவரது அஞ்சாமை, இறைவன் மீதும் தமது பிரச்சார பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவைதாம் அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலக சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டுவந்து குவித்தன. எல்லாத்தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவைதாம் காரணமே தவிர வாள் பலம் அல்ல. நபிகள் நாயகம் பற்றிய இரண்டாம் பாகத்தை நான் படித்து முடித்து மூடியபோது, அந்த மகாவாழ்க்கை பற்றிப் படிக்க மேலும் இல்லையே என்று எனக்கு வருத்தமாக இருந்தது!”
         மகாத்மா காந்தி – 'யங் இந்தியா’ (Young India) பத்திரிக்கையில் 1924ல் எழுதியது.

Michael H. Hart
“உலகில் செல்வாக்கு மிகுந்தவர்களின் பட்டியலில் முதன்மையானவராக, முகம்மதை நான் தெரிவு செய்தது சில வாசகர்களுக்கு வியப்பையும், வினாவையும் எழுப்பலாம். சமயஞ்சார்ந்த மற்றும் சமயச்சார்பற்ற வட்டத்தில் மாபெரும் வெற்றி பெற்றவர் மனித சரித்திரத்தில் அவர் ஒருவரே”
  – M.H.Hart, 'The 100! A ranking of the most influential persons in history' New York, 1978)

சமய ரீதியாகவும், சமயம் சாராத லௌகீகம் சார்ந்த வகையிலும் வெற்றியடைந்த ஒரு மனிதரைக் காட்ட முடியுமென்றால் அது முஹம்மதுதான். அதனால்தான் இந்த உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய 100 மாமனிதர்களில் முதலாமவராக நான் முஹம்மதைத் தேர்ந்தெடுத்தேன்.
       – மைக்கேல் ஹார்ட், த ஹண்ட்ரட், நியூயார்க், ஹார்ட் பப்ளிஷிங் கம்பனி, 1978, பக்கம் 33.

Bosworth Smith
போப்புக்கான பாசாங்குகளும், சீசருக்கான படையணியினரும், பாதுகாவலர்களும், அரண்மனையும், நிரந்தர வருமானவும் இல்லாமல், ஒரே சமயத்தில் சீசராகவும் போப்பாகவும் இருந்தவர் முஹம்மது. தெய்வீக கட்டளைக் கொண்டு ஆண்ட ஒரு மனிதன் உண்டென்றால் அது முஹம்மதுதான்.
       – பாஸ்வொர்த் ஸ்மித், Mohammad and Mohammadanism, லண்டன்,1874, பக்கம் 92.


Bernard Shaw
முஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டுவிடும் என்று எதிர்பார்க்கிறேன்.
    ஜார்ஜ் பெர்னாட்ஷா –

முஹம்மதை நான் அலசி ஆராய்ந்து பார்த்து விட்டேன். அவர் மனிதகுலத்தைக் காக்க வந்தவர் (Saviour of Humanity). இந்த நவீன உலகின் சர்வாதிகாரியாக அவரைப் போன்ற ஒருவர் வருவாரேயானால், இன்றைக்கு மிகவும் அவசியமான தேவைகளாக இருக்கின்ற அமைதியையும் சந்தோஷத்தையும் கொண்டு வந்து பிரச்சனைகளைத் தீர்க்க அவரால் மட்டுமே முடியும். இன்று இருப்பதுபோல, வருங்காலத்திலும் முஹம்மதின் மார்க்கம் ஐரோப்பாவால் ஏற்றுக்கொள்ளக்கூடிய மார்க்கமாகவே இருக்கும் என்று நான் தீர்க்கதரிசனம் சொல்வேன். அடுத்த நூறு ஆண்டுகளில் இங்கிலாந்தை, ஏன் இங்கிலாந்தை, ஐரோப்பாவையே ஆளக்கூடிய வாய்ப்பு ஒரு மதத்துக்கு இருக்குமானால் அது இஸ்லாமாகத்தான் இருக்கமுடியும்.
       –  ஜார்ஜ் பெர்னார்ட் ஷா, த ஜெனியுன் இஸ்லாம்.The Genuine Islam, Singapore, Vol. 1, No. 8.1936).

Thamizhanban
ஒட்டக தேசத்தில் பிறந்தார்; ஒட்டாத அகங்களை எல்லாம் ஒட்டி வைத்தார். அவரைப் பற்றி எழுதும் இரவுகளில் விளக்குகள் ஏற்ற வேண்டியதில்லை; எழுத்துக்களிலேயே பளிச்சென்று வெளிச்சம்!
       –  தமிழன்பன்

இறைத்தூதர்களிலேயே அதிகமாக வெற்றியடைந்தவர் முஹம்மதுதான்.
       – என்சைக்ளோபீடியா ப்ரிட்டானிகா

Napoleon
திருக்குர்ஆனுக்கும் தூதர் முஹம்மது அவர்களுக்கும் என் விசுவாசத்தை வழங்குகிறேன். குர்ஆனின் கொள்கைக்கு இணங்க ஒரே விதமான ஆட்சியை உலகெங்கும் நிறுவக்கூடிய காலம் வெகுதூரத்தில் இல்லை.
       – நெப்போலியன்

துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கிவிட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல்நாட்டு ஆசிரியர்கள், ‘முஹம்மது ஒரு சரித்திர நாயகர்’ என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக் கொள்கிறார்களே, அப்படியின்றி, அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள்.
       – எஸ். எச். லீடர்   

முஹம்மது நபி, ஒரு மார்க்கத்தை உண்டாக்கியது மட்டுமல்ல, தவறான குருட்டு நம்பிக்கையிலே சிக்கிக் கிடந்தவர்களை விடுவித்துக் காப்பாற்றி, நல்லதொரு சமுதாயத்தையும் உருவாக்கினார். நபிகள் நாயகம் அவர்களுடைய காலத்தில் அவற்றிற்கு நெஞ்சுரம் அதிகம் தேவையாக இருந்தது! “பூமி உருண்டையானது; சூரியனை பூமி சுற்றி வருகிறது” என்கின்ற உண்மைகளையெல்லாம் அறியாத – விஞ்ஞானத் தெளிவு இல்லாத காலம் அது! மக்கள் பய உணர்ச்சியும் காட்டுமிராண்டித்தனமும் கொண்டிருந்த காலம்! இருட்டுக் காலத்தில் நல்ல ஒளியைத் தந்தார் முஹம்மது நபி.
C. N. Annadurai
(Arignar Anna)

நபிகள் நாயகம் அவர்களுடைய வரலாறு வீரத்துக்கு ஒரு ஊற்று! சமுதாயத்துக்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டு! நபிகள் நாயகம் சொன்னார். சொல்லியபடி நடக்கிறேன் என்று நடந்து காட்டினார்! அப்படி மற்றவர்களும் நடந்து காட்டினால்தான் உலகத்தில் சாந்தி, சமாதானம், சமரசம் எல்லாம் நிலவும்.

நபிகள் நாயகத்தின் போதனைகளில் ஒன்று, “ஆண்டவனுக்கு இணை வைத்தல் ஆகாது” என்பதாகும். இந்தப் போதனையை நான் நெஞ்சம் நெக்குருக எண்ணிப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். பெருமான் நபிகள் இஸ்லாத்தின் இனிய சங்க நாதத்தை உலகின் நாலா பக்கமும் ஒலிக்கச் செய்வதற்குப் பட்ட துயர்கள், தொட்ட தொல்லைகள், தியாகம் பலகண்ட தியாகத் தழும்புகள் கொஞ்சம் நஞ்சமல்ல. அண்ணல் நபிகள் நாயகத்தின் அறப்பணி, அகிலத்தை தரமுடையதாக்கவும், திறமுடையதாக்கவும் கிடைத்த திருப்பணி! இப்பணியை எண்ணி பூரிக்க நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டவர்களாவோம்.
       அறிஞர் அண்ணா


இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, 'ஒருவனே தேவன்' என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறை நம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமைக் கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவர் மறுக்க முடியும்?
       – வாஷிங்டன் இர்விங் –



Washington Irving
ராணுவ வெற்றிகளின்போது, மற்றவர்களிடம் ஏற்படுவதைப்போல, பெருமையோ வீண் பேச்சோ முஹம்மதுவிடம் ஏற்படவில்லை. துன்பத்திலும் துயரத்திலும் உழன்றுக் கொண்டிருந்தபோது எப்படி எளிமையாகத் தோன்றினாரோ, நடந்து கொண்டாரோ, அப்படியே வெற்றியின் உச்சியில் இருந்தபோதும் இருந்தார். அநாவசியமாக தனக்கு மரியாதை தரப்படுவதை அவர் வெறுத்தார்.
       – வாஷிங்டன் இர்விங், Life of Muhammad, நியூயார்க், 1920.

Edward Gibbon
அறம் செய்வது எப்படி என்பதைப் பற்றி தெளிவாக திட்டவட்டமாக வரையறுத்துக் கூறிய ஒரே ஒரு சட்டமேதையாக விளங்குபவர் முஹம்மது நபி ஒருவரே.
       – எட்வர்டு கிப்பன்

Sarojini Nayudu
எந்த சகோதரத்துவ அடிப்படையில் புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரிக உலகம் விரும்பி நிற்கிறதோ, அதே சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம் ஓட்டிக்கொண்டிருந்த மனிதரால் பிரச்சாரம் செய்யப்பட்டது. மேல்நாடுகள் எதையெல்லாம் புதிய கருத்துக்கள் என்றும் மகத்தான சாதனைகள் என்றும் கூறுகின்றனவோ, அவையெல்லாம் அந்த அரேபியாவின் பாலைவனச் சோலையிலே விதைக்கப்பெற்ற வித்துக்களின் விருட்சங்களேயன்றி அவற்றில் புதியது ஒன்றுமில்லை.
       – கவிக்குயில் சரோஜினி நாயுடு


Dr. Ambedkar


பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி மனிதன் மனிதனாக வாழ வழி செய்த முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தைகள்  கிடையாது.
டாக்டர் அம்பேத்கார்







Leo Tolstoy
நாகரிகம் முதிர்ந்த இந்நாளில் கூட மக்களைச் சீர்திருத்த முனைகிறவர்கள் படுகிற பாட்டைப் பார்க்கும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் அநாகரிகத்தில் மக்கள் வாழ்ந்துக் கொண்டிருந்த காலத்தில் முஹம்மது நபி அவர்கள் புரிந்த சாதனைகளும், சீர்திருத்தங்களும் முரடர்களுக்கும் சகிப்புத் தன்மையும் நேர்மையையும் வழங்கி, அவர்களை மெய்யான வாழ்க்கையின் பக்கம் இழுத்துவந்து வெற்றியை நிலைபெறச் செய்த பெருமை வெறும் நாவினால் புகழ்ந்து விடக்கூடியதல்ல.
       – டால்ஸ்டாய்

William Moore
சர்வ சக்தியும் படைத்த இறைவன் தனக்குத் துணையாக நிற்கிறான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நபிகள் நாயகம் அவர்களுக்கு இல்லாதிருந்தால் இவ்வளவு பிரமாண்டமான சாதனைகளை அவர் சாதித்திருக்க முடியாது.
       – வில்லியம்மூர்

இஸ்லாத்தின் நிறுவனர் (முஹம்மத் நபி) உடையதைக் காட்டிலும் அதிக ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலே வேறெங்கும் இல்லை. அவரைப்போல் உலகத்தின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும் அரிது.
       ஜி.ஜி. கெல்லட் –   

படங்கள்: இணையம்

Thanks to:
vapuchi.wordpress.com & vanjoor-vanjoor.blogspot.com

11 comments:

  1. சிறப்பான தொகுப்பு... சுருக்கமான விளக்கங்கள் நன்று... சேமித்துக் கொண்டேன்...

    மிக்க நன்றி...

    ReplyDelete
    Replies
    1. //சிறப்பான தொகுப்பு... சுருக்கமான விளக்கங்கள் நன்று... சேமித்துக் கொண்டேன்...//

      ஒரு மாமனிதரைப் பற்றிய அறிஞர்களின் கருத்துக்கள் அவரைப் பற்றி மென்மேலும் அறிய ஆவல் ஏற்படுத்தக்கூடியவை. இவை ஒரு பகுதி மட்டுமே! சேமித்துக் கொண்டமைக்கும், வருகைக்கும் மிக்க நன்றி சகோதரரே :)

      Delete
  2. சூப்பர் கலெக்‌ஷன்...

    நானும் சேமித்து வைத்துக்கொண்டேன் அஸ்மாக்கா

    ReplyDelete
    Replies
    1. //சூப்பர் கலெக்‌ஷன்...//

      இன்னும் நிறைய இருக்கும் ஆமி! நேரம் கிடைக்கும்போது அதையும் எடுத்துக் கொடுக்கணும், இன்ஷா அல்லாஹ். வாழ்வில் அனுபவப்பட்ட அறிஞர்கள் நடுநிலையோடு சிந்தித்து ஒரு உத்தம‌ரைப் பற்றி சொல்லும் உண்மைக் கருத்துக்கள் உலக மன்றத்தில் மறைக்கப்படாமல் இருக்க அவற்றை வெளிக்கொண்டு வருவது அவசியமாகிவிடுகிறது. அதனால்தான் இந்தப் பதிவு :)
      (உங்களுக்கும், தனபால் சாருக்கும் கொடுத்திருக்கும் என் பதில்களை இன்ட்ரோவாக சேர்த்துவிட்டேன் :-) )

      //நானும் சேமித்து வைத்துக்கொண்டேன் அஸ்மாக்கா//

      அவசியம் சேமிக்க வேண்டியவை! முடிந்தால் அறிஞர்களின் படங்களோடு சேமித்துக் கொண்டால், சில நேரங்களில் அது கைக்கொடுக்கும். வருகைக்கு நன்றி, ஜஸாகல்லாஹ்மா :)

      Delete
  3. ஸலாம்

    இந்த கட்டுரையில் நான் படித்ததில் எனக்கு மிகவும் பிடித்தது ...
    //
    சர்வ சக்தியும் படைத்த இறைவன் தனக்குத் துணையாக நிற்கிறான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை நபிகள் நாயகம் அவர்களுக்கு இல்லாதிருந்தால் இவ்வளவு பிரமாண்டமான சாதனைகளை அவர் சாதித்திருக்க முடியாது.
    – வில்லியம்மூர் –
    //

    நல்ல முயற்சி செய்து தகவலை திரட்டி இருகிருகீர்கள் ...

    ஜசகல்ல்லாஹ் க்ஹைர்

    ReplyDelete
  4. இன்னும் எதிர்பார்க்கிறோம் நல்லது

    ReplyDelete
    Replies
    1. //இன்னும் எதிர்பார்க்கிறோம் நல்லது//

      ஜஸாகல்லாஹ் சகோ.

      Delete
  5. இன்னும் எதிர்பார்க்கிறோம் நல்லது

    ReplyDelete
  6. i need two more answers from you. if you could please help me
    my email id

    zain_msec@yahoo.com

    பெருமானார் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டு இஸ்லாத்தைத் தழுவி திருக்குர்ஆனுக்கு விரிவுரை எழுதியவர் யார்?
    (a) மாரீஸ்புகைல்,(b) மர்மடியூக்பிக்தால்,(c) வில்லியம்மூர்

    கண்மணி நாயகம் (ஸல்) அவர்களைப்பற்றி கிருத்துவ எழுத்தாளர்கள் பலரும் அவதூறாக கருத்துக்களை பரப்பிக் கொண்டிருந்தக் காலத்தில் அவர்களுக்கெல்லாம் ஆதாரப்பூர்வமாக மறுப்புரைத்து நாயகம் (ஸல்) அவர்களின் புகழை எடுத்துரைத்தவர் யார்?
    (a) பெர்னாட்ஷா , (b) தாமஸ் கார்லைல் ,(c) ஐன்ஸ்டீம்

    மனித குலம் மேன்மைப்பெற எதுவெல்லாம் நன்மைத்தரக் கூடியது என்று கூற முற்படும்போது அதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மனித சமுதாயத்திற்கு அறிவித்துவிட்டார். என்று கூறிய அறிஞர் யார்?
    (a) பெர்னாட்ஷா ,(b) மார்ட்டின் ,(c) மைக்கேல் ஹெச். ஹார்ட்

    Please help me out

    ReplyDelete
  7. Please help me to get the answer for the following questions

    மனித குலம் மேன்மைப்பெற எதுவெல்லாம் நன்மைத்தரக் கூடியது என்று கூற முற்படும்போது அதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மனித சமுதாயத்திற்கு அறிவித்துவிட்டார். என்று கூறிய அறிஞர் யார்?
    (a) பெர்னாட்ஷா ,(b) மார்ட்டின் ,(c) மைக்கேல் ஹெச். ஹார்ட்

    கண்மணி நாயகம் (ஸல்) அவர்களைப்பற்றி கிருத்துவ எழுத்தாளர்கள் பலரும் அவதூறாக கருத்துக்களை பரப்பிக் கொண்டிருந்தக் காலத்தில் அவர்களுக்கெல்லாம் ஆதாரப்பூர்வமாக மறுப்புரைத்து நாயகம் (ஸல்) அவர்களின் புகழை எடுத்துரைத்தவர் யார்?
    (a) பெர்னாட்ஷா , (b) தாமஸ் கார்லைல் ,(c) ஐன்ஸ்டீம்

    பெருமானார் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டு இஸ்லாத்தைத் தழுவி திருக்குர்ஆனுக்கு விரிவுரை எழுதியவர் யார்?
    (a) மாரீஸ்புகைல்,(b) மர்மடியூக்பிக்தால்,(c) வில்லியம்மூர்


    Please send ur answer to

    zain_msec@yahoo.com

    kinldy help me

    ReplyDelete
  8. அருமையான பதிவு சகோதரி

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை