அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Monday 31 December 2012

சிறுவர்களுக்கான‌ ஓவியப்போட்டி


 "என் இனிய இல்லம்" ஃபாயிஜா, குழந்தைகளுக்கான வரைபட போட்டி அறிவித்து ஒரு மாதமாகியும் இதோ.. அதோ.. என அலட்சியமாக இருந்து, கூடவே பல தடங்கல்கள் வந்து, போட்டி முடியும் கடைசி நேரத்தில் எப்படியாவது நானும் வரைய வேண்டும் என்று செல்ல மகன் ஆசையோடு அடம்பிடிக்கவே.. நஃபீஸ் உடைய 'இயற்கைக் காட்சி' ஓவியத்தினையும் ஒருவாறாக போட்டிக்கு அனுப்பியாச்சு :) போட்டிக்கு அனுப்பவேண்டிய‌ நேரம் முடிந்துவிட்டதால், (இனி யாரும் இதைப் பார்த்து காப்பியடிக்க முடியாது என்ற தைரியத்தில்) :) மகன் வரைந்த படத்தினை இங்கே பிற்ச்சேர்க்கையாக சேர்த்துள்ளேன்.

அவர் வரைந்த படம் இதோ:

Saturday 22 December 2012

நீங்கா நினைவுகள்! (ஹ‌ஜ் ‍- 3)


முதல் பாகத்தை இங்கே காணலாம்
இரண்டாவது பாகம் இங்கே  

இதோ... சற்று தூரத்தில் அழகிய மின் அலங்காரத்தோடு கூடிய‌ ஆர்ச் ஒன்று மக்காவின் எல்லை வந்துவிட்டதை அடையாளம் காட்டுகிறது.


Friday 14 December 2012

நீங்கா நினைவுகள்! (ஹ‌ஜ் ‍- 2)



...... எப்போது மீகாத் (எல்லை) வரும் என்று மணிக்கொரு முறை கணக்கிட்டுக் கொண்டே வந்து... அந்த நேரமும் நெருங்கிவிட்டது.

ஜித்தா நகருக்கு மேலிருந்து வான்வழி காட்சி

Monday 10 December 2012

நீங்கா நினைவுகள்! (ஹ‌ஜ் ‍- 1)

    வ்வுலகில் நாம் எத்தனையோ விஷயங்களை கற்பனையில் சுமந்துக் கொண்டு 'இதுவும் நடக்குமா?' என மனக்கோட்டைக் கட்டி வைத்திருப்போம். அவற்றில் சிலவற்றுக்கு நம் மனதில் அதி முக்கியத்துவம் கொடுத்து, தொடர்ந்து அதற்காக பிரார்த்தித்துக் கொண்டே இருப்போம். ஆனால் அவை எல்லாமே எல்லோருக்கும் நடந்துவிடுவதில்லை. அப்படி ஏதேனும் சில விருப்பங்கள் நடந்துவிட்டால்..? அதை இறைவன் நாடிவிட்டால்..? அந்த அனுபவமும், அதனால் ஏற்பட்ட உணர்வுகளும் எவ்வளவு இனிமையாக இருக்கும்..!!

'யான் பெற்ற‌ இன்பம் பெறுக இவ்வையகம்' என்று ஒற்றை வார்த்தையில் வாழ்த்து சொல்லி செல்வதைவிட அந்த அனுபவத்தையே சொல்லும்போது, நம்மைப்போல் அதை விரும்பிய பலருக்கும் மேலும் உற்சாகம் ஊட்டக்கூடியதாக இது அமையலாம்! அதன்மூலம் அவர்களும் அந்த இன்ப அனுபவத்தை அடைய முயற்சிக்கலாம். எனவே எதிர்பார்த்து.. எதிர்பார்த்து, ஏங்கிக் கிடைத்த அந்த பாக்கியத்தை, அனுதினமும் நினைத்து நினைத்து சந்தோஷத்துடனும் திருப்தியுடனும் இறைவனுக்கு நன்றி செலுத்திக்கொண்டே இருக்கும் அந்த‌ இனிய அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

  
பயணிக்கும் பாதை