வாழ்வில் அனுபவப்பட்ட அறிஞர்கள் நடுநிலையோடு சிந்தித்து ஒரு உத்தமரைப் பற்றி சொல்லும் உண்மைக் கருத்துக்கள் உலக மன்றத்தில் மறைக்கப்படாமல் இருக்க அவற்றை வெளிக்கொண்டு வருவது அவசியமாகிவிடுகிறது. அத்தகைய ஒரு மாமனிதரைப் பற்றிய உலக அறிஞர்களின் கருத்துக்கள் அவரைப் பற்றி மென்மேலும் அறிய ஆவல் ஏற்படுத்தக்கூடியவை. இவை ஒரு பகுதி மட்டுமே! நீங்களும் படித்து கலங்கமில்லா ஒருவரின் எதேர்ச்சையான நிலையைப் புரிந்துக் கொள்ள உங்கள் முன் இந்தப் பதிவு:
நபிகள் நாயகம் தோற்றுவித்த தெய்வத்தன்மை பொருந்திய புனிதமான அரசாங்கம் முற்றுமுழுதும் ஜனநாயகக் கொள்கையை மேற்கொண்டதாகும்! மனித குலம் முழுவதும் பின்பற்றத்தக்க உயரிய கோட்பாடுகளை உடையது நபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாம். அனைத்தையும் உள்ளடக்கியது இஸ்லாம். அகிலமே ஏற்றுக்கொள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்கை அவருடைய மனிதத் தன்மையை தெளிவாக்கியுள்ளது.
– டாக்டர் ஜான்சன் –