அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Sunday 25 June 2017

பெருநாள் தொழுகைக்கு முன் பாலும் பேரீத்தம் பழமும் சாப்பிடுவது நபிவழியா?

கேள்வி: பெருநாள் தொழுகைக்கு செல்லும் முன் பாலும் பேரீத்தம் பழமும் சாப்பிட்டுவிட்டு செல்வது நபிவழி என்கிறார்களே, இது சரியா?

பதில்: பாலும் பேரீத்தம் பழமும் சாப்பிட்டுவிட்டு பெருநாள் தொழுகைக்கு செல்லவேண்டும் என்பது நபிவழியா என்ற உங்கள் கேள்வியில், இரண்டு விஷயங்களை கவனிக்க வேண்டும்.

முதல் விஷயம், பெருநாள் தொழுகைக்கு முன் என்று பொதுவாக குறிப்பிட்டு கேட்டுள்ளீர்கள். நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு செல்லும் முன் சாப்பிட்டுவிட்டு செல்வார்கள் என்பது நோன்புப் பெருநாளில்தான். இதை பல ஹதீஸ்களிலும் நாம் காண முடிகிறது. ஆனால் ஹஜ் பெருநாள் அன்று நபி(ஸல்) அவர்கள் தொழுதுவிட்டுதான் சாப்பிடுவார்கள். ஆனாலும், ஹஜ் பெருநாள் தொழுகை தொழ செல்லும் முன் சாப்பிடுவதை அங்கீகரித்தும் இருக்கிறார்கள். (அதை பின்னர் காண்போம்.)

நோன்புப் பெருநாள் தினத்தில் நபி(ஸல்) அவர்கள் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாளில் (குர்பானி பிராணியை) அறுக்கும் வரை சாப்பிட மாட்டார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்: இப்னு ஹுஸைமா (1426)

நோன்புப் பெருநாள் அன்று நபி(ஸல்) அவர்கள் காலை உணவாக பேரீத்தம் பழங்களை ஒற்றைப்படையாக உண்பார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் அன்று தொழுதுவிட்டு வந்த பின்னரே குர்பானி இறைச்சியிலிருந்து உண்பார்கள்.

அறிவிப்பவர்: அனஸ்(ரலி)
நூல்: புஹாரி (953)




பயணிக்கும் பாதை