அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Saturday, 19 July 2025

"ஒரு பெண் தனது கணவனுக்கு ஸஜ்தா செய்வதை அனுமதித்து இருப்பேன்" என்ற ஹதீஸின் விளக்கம் என்ன?

கேள்வி: 

மனிதர்கள் மற்றும் அனைத்து படைப்பினங்கள் ஸஜ்தா செய்வது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது.

அல்லாஹ்வுக்கு அடுத்து ஸஜ்தா செய்ய, ஒருவேளை அனுமதி கிடைத்து இருந்தால், அது கணவனுக்காகதான் என்று நபி (ஸல்) கூறியதாக சொல்வது உண்மையா?

தயவுசெய்து விளக்கம் தரவும்.

பதில்:

நீங்கள் குறிப்பிட்டுள்ள செய்தி நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, சில ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளது.

அவற்றில் இப்னு ஹிப்பான் (4171), பைஹகீ - குப்ரா (14711), இப்னுமாஜா (1853), முஸ்னது அஹ்மத் (21986) போன்ற பல அறிவிப்புகள் பலவீனமானவை என்றாலும், இதே கருத்தில் ஏற்கத் தகுந்த சில ஹதீஸ்களும் உள்ளன.

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ لَأَمَرْتُ المَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"ஒருவர் இன்னொருவருக்கு ஸஜ்தா செய்வதை நான் அனுமதிப்பதாக இருந்தால், ஒரு பெண் தனது கணவனுக்கு ஸஜ்தா செய்வதை அனுமதித்திருப்பேன். (ஆனால் அதையும்கூட நான் அனுமதிக்கவில்லை)"

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ (1159)

முஹம்மத் பின் அம்ர் —> அபூ ஸலமா —> அபூ ஹுரைரா (ரலி) என்ற இந்த அறிவிப்பாளர் தொடரில், அபூ ஹுரைரா (ரலி) வழியாக வந்துள்ள மேற்கண்ட இந்த ஹதீஸ், "ஹஸன் ஃகரீப்" என்ற நடுத்தரமான தரத்திலுள்ள செய்தியாகும். (இதுபோன்ற தரத்தில் இன்னும் சில அறிவிப்புகளும் உள்ளன.)

அடுத்து இந்த ஹதீஸின் விளக்கத்தைக் கேட்டுள்ளீர்கள்.


Sunday, 13 July 2025

"ஹஸன்" தரத்தில் அமைந்த ஹதீஸ் என்றால் என்ன?

ஒரு ஹதீஸை ஸஹீஹ் - சரியானது என சொல்வதாக இருந்தால் அதில் ஐந்து நிபந்தனைகள் இருக்கவேண்டும்:

1 . அறிவிப்பாளர்தொடர் இடைமுறிவு ஏற்படாமல் இருக்கவேண்டும் – اتصال السند 

2 . அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருக்கவேண்டும் – عدالة الرواة 

3 . அறிவிப்பாளர்கள் நினைவாற்றலில் உறுதியானவர்களாக இருக்கவேண்டும். (நூலில் ஹதீஸை எழுதிவைத்தவர் என்றால் அதை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்) – ضبط الرواة 

4 . குறிப்பிட்ட செய்தி, மற்ற மிக பலமானவர்களின் அறிவிப்புக்கு மாற்றமாக இருக்கக்கூடாது – عدم الشذوذ 

5 . வேறு நுணுக்கமான குறைபாடு இருக்கக்கூடாது –  عدم العلة

ஹஸன் தர ஹதீஸ்கள்

ஆரம்பக்கால ஹதீஸ்கலை அறிஞர்கள் ஹதீஸ்களை இருவகையாக மட்டுமே குறிப்பிடுவர்.

1 . ஸஹீஹ் - சரியானது (மக்பூல் - ஏற்கத்தக்க ஹதீஸ்)

2 . ளயீஃப் - பலவீனமானது (மர்தூத் - ஏற்கத்தகாத ஹதீஸ்)

இதில் பலவீனமான ஹதீஸ் இரு வகை:

1 . சில காரணங்களால் அந்த பலவீனம் நீங்கிவிடும். எனவே இந்த வகை செய்திகளை ஏற்று அமல் செய்யலாம்.

2 . எந்த நிலையிலும் பலவீனம் நீங்காத செய்திகள். இவற்றை ஏற்று அமல் செய்யக்கூடாது.


இஷா தொழுகையின் இறுதி நேரம் எது?

கேள்வி: இஷா தொழுகை எத்தனை மணி வரை தொழலாம்? இஷா தொழுகையின் வக்து எப்போது முடிவடைகிறது?

பதில்: இஷா தொழுகையின் இறுதி நேரம் பற்றி இரண்டு விதமான ஆதாரங்கள் உள்ளன. அவற்றை சற்று விரிவாகப் பார்ப்போம்,

«« மூன்றில் ஒரு பகுதி வரை »»

صحيح مسلم

عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ رَجُلًا سَأَلَهُ عَنْ وَقْتِ الصَّلَاةِ، فَقَالَ لَهُ: «صَلِّ مَعَنَا هَذَيْنِ - يَعْنِي الْيَوْمَيْنِ - ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الْعِشَاءَ حِينَ غَابَ الشَّفَقُ،… وَصَلَّى الْعِشَاءَ بَعْدَمَا ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ.. ثُمَّ قَالَ: «أَيْنَ السَّائِلُ عَنْ وَقْتِ الصَّلَاةِ؟» فَقَالَ الرَّجُلُ: أَنَا، يَا رَسُولَ اللهِ، قَالَ: 

«وَقْتُ صَلَاتِكُمْ بَيْنَ مَا رَأَيْتُمْ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து தொழுகை நேரங்கள் பற்றி வினவினார். (அவரிடம்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "நம்முடன் தொழுகையில் கலந்துக் கொள்வீராக!" என்று கூறினார்கள்.

இதையடுத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம், (மேற்கு வானத்தின்) செம்மை மறைந்ததும் இஷாத் தொழுகைக்காகக் கட்டளையிட்டார்கள். மறுநாள் பிலால் (ரலி) அவர்களிடம், இரவின் மூன்றில் ஒரு பகுதி கடந்தப் பின் இஷாத் தொழுகைக்குக் கட்டளையிட்டார்கள்.

பின்னர், "கேள்வி கேட்டவர் எங்கே? இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட நேரமே தொழுகையின் நேரமாகும்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

நூல்: முஸ்லிம் (1078, 1079)

       «« இரவின் பாதிவரை »»

"وَقْتُ الْعِشَاءِ إِلَى نِصْفِ اللَّيْلِ"

"இஷா தொழுகையின் நேரம் இரவின் பாதிவரை உண்டு" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)

நூல்: முஸ்லிம் (1074, 1075, 1076)


Friday, 4 July 2025

டயாபர் (Diaper) கட்டியிருக்கும் நபர் எப்படி தொழுவது?

கேள்வி: உடம்பு சரியில்லாமல் டயாபர் கட்டி இருக்கும் நபர் தொழுவது எப்படி?  என்பதனைப் பற்றி விளக்கம் தாருங்கள்.

பதில்: இதுபற்றி நேரடியாக எந்த ஆதாரமும் குர்ஆன், ஹதீஸ்களில் இல்லாவிட்டாலும், இதற்கு நாம் எந்த முடிவை எடுப்பது என்பதை மறைமுகமாகச் சொல்லக்கூடிய, வேறு வடிவத்திலுள்ள இதுபோன்ற ஒரு பிரச்சனைக்கு நபி(ஸல்) அவர்கள் தீர்வு சொன்ன ஆதாரம் உள்ளது.

Tuesday, 1 July 2025

குழந்தைப் பிறந்தவுடன் நாம் செய்ய வேண்டியதும், செய்யக் கூடாதவையும்

கேள்வி: குழந்தைப் பிறந்தவுடன் நாம் என்ன செய்ய வேண்டும்?

குழந்தைப் பிறந்தவுடன் அதன் சார்பாக சிலவற்றை செய்யவேண்டும் என இஸ்லாம் கூறுகிறது. அவை அனைத்துமே கட்டாயமாக செய்யவேண்டும் என்றோ, உடனே செய்யவேண்டும் என்றோ கிடையாது. என்றாலும், அவற்றில் நபிவழி என்பதற்காக செய்யப்படுவதும், நாள் குறிப்பிட்டு செய்யவேண்டும் என சொல்லப்பட்டவையும் உண்டு. 

அவற்றை எப்படி செய்யவேண்டும் என்பதை எடுத்துக்காட்ட ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. நமது வாட்ஸ்அப் குழும உறுப்பினர்களின் உடனடி தேவைக்கருதி இப்போதைக்கு சுருக்கமாக கூறியுள்ளோம். ஆதாரங்களோடு பின்னர் பதிவு செய்வோம், இன்ஷா அல்லாஹ்.

அவற்றை இப்போது ஒவ்வொன்றாக பார்ப்போம்:

பயணிக்கும் பாதை