கேள்வி:
மனிதர்கள் மற்றும் அனைத்து படைப்பினங்கள் ஸஜ்தா செய்வது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது.
அல்லாஹ்வுக்கு அடுத்து ஸஜ்தா செய்ய, ஒருவேளை அனுமதி கிடைத்து இருந்தால், அது கணவனுக்காகதான் என்று நபி (ஸல்) கூறியதாக சொல்வது உண்மையா?
தயவுசெய்து விளக்கம் தரவும்.
பதில்:
நீங்கள் குறிப்பிட்டுள்ள செய்தி நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, சில ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளது.
அவற்றில் இப்னு ஹிப்பான் (4171), பைஹகீ - குப்ரா (14711), இப்னுமாஜா (1853), முஸ்னது அஹ்மத் (21986) போன்ற பல அறிவிப்புகள் பலவீனமானவை என்றாலும், இதே கருத்தில் ஏற்கத் தகுந்த சில ஹதீஸ்களும் உள்ளன.
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ لَأَمَرْتُ المَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا»
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒருவர் இன்னொருவருக்கு ஸஜ்தா செய்வதை நான் அனுமதிப்பதாக இருந்தால், ஒரு பெண் தனது கணவனுக்கு ஸஜ்தா செய்வதை அனுமதித்திருப்பேன். (ஆனால் அதையும்கூட நான் அனுமதிக்கவில்லை)"
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ (1159)
முஹம்மத் பின் அம்ர் —> அபூ ஸலமா —> அபூ ஹுரைரா (ரலி) என்ற இந்த அறிவிப்பாளர் தொடரில், அபூ ஹுரைரா (ரலி) வழியாக வந்துள்ள மேற்கண்ட இந்த ஹதீஸ், "ஹஸன் ஃகரீப்" என்ற நடுத்தரமான தரத்திலுள்ள செய்தியாகும். (இதுபோன்ற தரத்தில் இன்னும் சில அறிவிப்புகளும் உள்ளன.)
அடுத்து இந்த ஹதீஸின் விளக்கத்தைக் கேட்டுள்ளீர்கள்.