அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Saturday, 18 October 2025

பற்களுக்கு க்ளிப் போடுவது, உடல் எடையைக் கூட்டுவது அல்லது குறைப்பது போன்றவை அனுமதிக்கப்பட்டதா?

கேள்வி:

"அல்லாஹ்வுடைய படைப்பை (மனிதர்கள்) மாற்றி அமைப்பார்கள்" என்று ஷைத்தான் கூறுவதை வைத்து, பல்லுக்கு கம்பி கட்டக்கூடாது என்று கூறுகிறார்கள். அப்படியானால் உடல் எடையைக் குறைப்பது, கூட்டுவது போன்றவையும் கூடாதுதானே?

பதில்:

உங்கள் கேள்வியில் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளீர்கள். முதலில், "பற்களுக்கு க்ளிப் போடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா?" என்பதைப் பற்றி பார்ப்போம்.

பற்கள் நேர்மாறாகவோ, குறுகலாகவோ, வளைந்தோ அல்லது அதிக இடைவெளியில் இருந்தாலோ அதை சரிசெய்யும் சிகிச்சையே (Braces Treatment) ப்ரேஸ் சிகிச்சையாகும். அதாவது, பற்களுக்கு க்ளிப் போடுவதாகும்.

பற்களை சீரமைக்க செய்யப்படும் இந்த க்ளிப் சிகிச்சை மூலம் பற்களின் மேல் கம்பிகள் வழியாக அந்த பற்களுக்கு சிறிது சிறிதாக அழுத்தம் கொடுத்து, சரியான அமைப்புக்கு கொண்டுவரும் முறை ஆகும். 

மருத்துவர் குறிப்பிடும் காலகட்டம்வரை அதை அணிந்திருந்துவிட்டு, பிறகு அவ்வப்போது கழற்றி, மாட்டக்கூடிய க்ளிப்பை ஒரு வருடத்துக்கு அணிந்திருக்க வேண்டியிருக்கும். இது இயற்கையான அமைப்புக்கு மாற்றமாக உள்ள குறைபாடுகளைச் சரிசெய்வதற்காக செய்யப்படும் சிகிச்சைதான் தவிர, இதில் எந்தவித உருவ மாற்றமும் ஏற்படாது.

மலையளவு கடன் இருந்தாலும்...?

கேள்வி:

இதை ஓதினால் மலையளவு கடன் இருந்தாலும் அந்தக் கடனை அல்லாஹ் நீக்குவான் என்பதாக ஒரு துஆவை சொல்கிறார்கள். அந்த துஆ இடம்பெறும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா?




Friday, 10 October 2025

போட்டியில் பங்கு பெறுபவர்களிடம் கட்டணம் பெற்று, அந்தத் தொகையிலிருந்தே வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் கொடுக்கப்படுவது இஸ்லாத்தில் கூடுமா?

கேள்வி:

போட்டியில் பங்கு பெறுபவர்களிடம் நுழைவுக் கட்டணம்போல் ஒரு தொகையை வாங்கிக்கொண்டு, அந்தத் தொகையிலிருந்தே வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் கொடுக்கப்படுகிறது. இது இஸ்லாத்தில் கூடுமா?

'இஸ்லாமியக் கேள்வி பதில் போட்டி' என்ற பெயரில் இப்படி நடத்தப்பட்டாலும், இது ஒரு சூதாட்டம் போன்ற தோற்றம் தருகிறது. இதற்கு விளக்கம் தாருங்கள்.

பதில்:

அல்லாஹ் தனது திருமறையிலே கூறுகிறான்:

"நம்பிக்கைக் கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!" (திருக்குர்ஆன் 5:90)

மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். "அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனைவிட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது" எனக் கூறுவீராக! (திருக்குர்ஆன் 2:219)

திருக்குர்ஆனில் அல்லாஹ் சூதாட்டத்தைத் தடை செய்துள்ளான் என்பதால் சூதாட்டம் ஒரு தீயச் செயல் என்பதை அதிகமான இஸ்லாமிய மக்கள் அறிந்து வைத்துள்ளனர். முஸ்லிமல்லாத மக்களும்கூட சூதாட்டம் ஒரு பாவச்செயல் என்று புரிந்துள்ளனர். ஆனால் "சூதாட்டம்" என்றால் என்ன என்பது குறித்த சரியான விளக்கம் பெரும்பாலான மக்களிடம் இல்லை.


Sunday, 14 September 2025

அழகுக்கலை நிபுணருக்கான கல்வியைக் கற்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

கேள்வி: மணப்பெண் அலங்காரம் (Bridal Mack up), மருதாணி இடுவது (Mehandhi) போன்ற (Beautician Course) துறைச் சார்ந்த கல்வியைக் கற்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

பதில்:

இஸ்லாமிய வாழ்க்கை முறை என்பது மறுமை வெற்றிக்கானது. நம் வாழ்வில் எதையெல்லாம் செய்யக்கூடாது என்று மார்க்கம் தடுத்திருக்கிறதோ, எவையெல்லாம் மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று எச்சரித்து இருக்கிறதோ, அவை சார்ந்த எந்தக் கல்வியையும் நாம் கற்கக் கூடாது. அதேசமயம் இவ்வுலக வாழ்வில் மனிதனுக்கு தேவையான அனைத்து துறைகளிலும், அவரவர் தேர்ந்தெடுக்கும் கல்வியைக் கற்றுத் தேர்வதற்கு முழு சுதந்திரமும் அளித்திருக்கிறது!


Saturday, 6 September 2025

கணவனுடைய ஹராமான வருமானம், மனைவிக்கு ஹலாலா?

கேள்வி: கணவனுடைய வருமானம் ஹராம் என்றால், மனைவிக்கு அவர் தரும் நகை, வீடு ஹலாலா?

பதில்:

நபி (ஸல்) அவர்கள் எந்த காலத்தை எச்சரித்தார்களோ அந்த காலத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ لَا يُبَالِي الْمَرْءُ مَا أَخَذَ مِنْهُ أَمِنَ الْحَلَالِ أَمْ مِنْ الْحَرَامِ

"தாம் சம்பாதித்தது ஹலாலா, ஹராமா என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் (இனி) வரும்!"

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புஹாரி (2059)

இன்று வசதியற்றவர்கள், வசதிபடைத்தவர்கள் யாராக இருந்தாலும் தனக்கு வரக்கூடிய வருமானத்தின் வழியைப் பற்றிய அக்கறையோ, கவலையோ இல்லாமல், எப்படியோ பணம் வந்தால் சரி என்ற நோக்கத்தில் பலவிதமாக சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பலதரப்பு மக்களின் நிலையும் இவ்வாறுதான் இருக்கிறது. (அல்லாஹ் பாதுகாத்தவர்களைத் தவிர!)

பயணிக்கும் பாதை