முக்கிய குறிப்பு:
தமிழ் இஸ்லாமியர்களும் தமிழ் கிறிஸ்தவர்களும் ஏன் பொங்கல் கொண்டாடுவதில்லை என்று கேட்கும் பல சகோதர சகோதரிகளுக்காக, இஸ்லாமியர்களின் சார்பில் விளக்கம் சொல்வதற்காகவே இந்த இடுகை! விளக்கத்தை புரிந்துக் கொண்ட பிறகு அழகிய முறையில் கருத்துக்களை பதியுங்கள்.தயவுசெய்து விவாதிக்கவேண்டாம்! இதன் மூலம் 'பொங்கல்' சம்பந்தமாக இஸ்லாமியர்கள் மீதுள்ள சிறு சிறு சந்தேகங்களும், குற்றச்சாட்டுகளும் களையப்பட்டு, நமக்கிடையே இருக்கும் சகோதரத்துவம் நீடிக்கவேண்டும் என்பதே நம் ஆவல்.
(குறிப்பு: சென்ற வருடம் 19/01/2011 அன்று வெளியிட்ட இந்தப் பதிவின்போது கேட்டுக் கொண்டது "தயவுசெய்து விவாதிக்கவேண்டாம்!" என்பது. நியாயமான சுய விளக்கங்களுக்குப் பிறகும் புரிந்துணர்வில்லாத சிலரும் இருக்கிறார்கள் என்பதால், தற்போது ஆரோக்கியமான விவாதத்தின் மூலமாவது புரியவைப்போம் என்ற நோக்கத்தில் "விவாதிக்கவேண்டாம்!" என்ற வேண்டுகோள் வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. எனினும் எந்தக் கருத்துக்களாக இருந்தாலும் அழகிய முறையில் சொல்லுங்கள்.)
தை மாதம் முதல் நாளிலிருந்து 3 நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழா என்பது, முழுமையான இயற்கை நெறிகளை மட்டும் சார்ந்த, அறுவடையின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் ஒரு வேளாண்மைத் திருவிழாவாகத்தான் ஒரு காலத்தில் கொண்டாடப்பட்டது. பல ஏக்கர் நிலங்களுக்கு சொந்தக்காரர்களாக இருந்தவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தாலும் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் கூட இந்த நாளை சந்தோஷமாக கொண்டாடி வந்தனர். காலம் முழுதும் உழைக்கும் உழவர்களின் சந்தோஷத்திற்காக அந்த மிராசுதாரர்கள் அன்றைய தினம் அவர்களுக்கு புத்தாடைகள், நெல், கரும்பு, பழங்கள், பணம், தேவையான இன்னபிற பொருட்களையெல்லாம் கொடுத்து சந்தோஷமாக அனுப்பி வைப்பார்கள். அதைப் பெற்றுக் கொள்ளும் விவசாயிகள் தங்கள் இல்லங்களில் கூடி புத்தரிசியில் பொங்கலிட்டு, உண்டு மகிழ்ந்து, ஓய்வெடுத்து சந்தோஷத்தைக் கொண்டாடி வந்தனர். ஆனால் காலம் செல்லச் செல்ல... எந்த மதமும் சாராத ஒரு விழா, வணக்க வழிபாட்டுடன் தொடர்பில்லாத ஒரு விழா, தமிழர் திருவிழாவாகக் கொண்டு வரப்பட்ட ஒரு விழா தனிப்பட்ட மத வழிபாடுகள் ஊடுருவியதாக மாறிவிட்டது.
ஆம், தற்காலப் பொங்கலை எடுத்துக் கொண்டால் எல்லா மதத்தவர்களும் சேர்ந்துக் கொண்டாடும் வகையில் அதன் கொண்டாட்டங்கள் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை! 'ஒட்டு மொத்த தமிழர்களும் ஒற்றுமையுடன் எந்த வித ஜாதி, மத பேதமுமின்றி கொண்டாடக்கூடிய ஒரே விழா பொங்கல் திருவிழா' என்று சொல்வது இன்றைய பொங்கல் கொண்டாட்டத்திற்கு நிச்சயமாக பொருந்தாது. ஒவ்வொரு மதத்தினருக்கும் அவரவர்களுக்கென்ற சில அடிப்படைக் கொள்கைகள் உள்ளன. அந்தந்த மக்கள் அவற்றை முறையாக கடைப்பிடிப்பதிலும், தங்கள் இறைக்கொள்கையை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காமல் வாழ்வதிலும் அவரவருக்கும் உரிமையுண்டு. அதேபோல் ஒருவரின் வணக்க விஷயங்களில் அடுத்தவர் தலையிடுவதும், தங்களின் வணக்க வழிபாடுகளை அடுத்தவர்களிடம் வலுக்கட்டாயமாக திணிப்பதும் முறையானதல்ல. எனவேதான் இஸ்லாம் மார்க்கம் மற்ற மதங்களின் விஷயங்களில் தலையிடுவதில்லை.
ஆனால் "தமிழர்களாக இருந்தாலே 'தமிழர் திருநாள்' எனப்படும் பொங்கலைக் கொண்டாடதான் வேண்டும்" என்பது பலரின் எண்ணமாக உள்ளது. இது ஒரு தவறான கண்ணோட்டமாகும். பொங்கல் கொண்டாடவில்லையென்றால் தமிழுக்கோ மற்ற தமிழர்களுக்கோ எதிரானவர்களாகவோ, தமிழ்ப் பற்று இல்லாதவர்களாகவோ யாரும் ஆகிவிடமாட்டார்கள். பொங்கல் பொதுவான ஒரு திருநாளாக இருந்தால் அதில் எந்தவொரு மதத்தினுடைய வழிபாட்டு அம்சங்களும் இல்லாமல் அனைவருக்கும் பொதுவான ஒரு விழாவாக இருக்கவேண்டும். அதைவிடுத்து சூரிய வழிபாடு, படையல், பசு வழிபாடு, ஆராதனை என பிற மார்க்கத்தில் தடுக்கப்பட்ட அனைத்தும் புகுத்தப்பட்ட ஒன்றை 'தமிழர் அனைவருக்கும் பொதுவான திருநாள்' (?) என்று கூறி கொண்டாட வலியுறுத்துவது, நிச்சயமாக பிற மத/மார்க்கக் கொள்கைகளை அலட்சியப்படுத்தும் விதமாவே உள்ளது. சாதி, மத வேறுபாடின்றி அனைவரும் கூடி சந்தோஷமாக கொண்டாடுவதற்கு ஒரு திருநாளாக பொங்கல் இருக்கட்டுமே என்பது அவர்களின் ஆதங்கமாக இருக்கலாம். அதை 'மதச் சார்பற்ற தமிழர் திருவிழா'வாக மட்டும் கொண்டாடினாலே தவிர, மதச் சடங்குகளோடு பின்னிப் பிணைந்துள்ள இன்றைய பொங்கலை 'தமிழுணர்வு உள்ளவர்கள் அனைவரும் கொண்டாட வேண்டும்' என்று சொல்வதில் எந்த விதத்திலும் நியாயமில்லை.
மதச் சார்பற்று அனைவரும் கொண்டாட 'சமத்துவப் பொங்கல்' என்று தமிழக அரசாங்கம் கொண்டு வந்த முறையில் கூட, எல்லா மதத்தவர்களும் விருந்தாளிகளாக அழைக்கப்படுவார்களே தவிர, கொண்டாடும் விதத்தை அரசாங்கம் அனைவருக்கும் பொதுவாக்கவில்லை. அதே சம்பிரதாயங்கள் மற்றும் வழிபாடுகளோடுதான் மதச் சார்பற்ற (?) ஒரு அரசாங்கமும் சமத்துவப் பொங்கல் நடத்தி வருகிறது. இந்நிலையில், பெரும்பாலான இஸ்லாமியர்கள் பொங்கல் கொண்டாட மறுப்பது பற்றி மற்ற மக்களிடையே பரவலாக எழும் கேள்விகளையும் அதற்கான பதில்களையும் குறிப்பிடவேண்டியுள்ளது.
தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ள பொங்கல் திருவிழாவை ஏன் தமிழ் இஸ்லாமியர்களும், தமிழ் கிறிஸ்தவர்களும் கொண்டாட மறுக்கிறீர்கள்?
பிற மத வணக்கங்களையும் வழிபாடுகளையும் உள்ளடக்கியதாக மாற்றப்பட்ட ஒரு விழாவை, 'தமிழ்க் கலாச்சாரம்' என்ற பெயரில் அடுத்தவர்களும் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்துவதற்கு யாருக்கும் எந்த விதத்திலும் உரிமையில்லை என்பதை முதலில் புரிந்துக் கொள்ளவேண்டும். நவீனங்களின் முன்னேற்றங்களைப் பயன்படுத்திவரும் நாம், போக்குவரத்திற்கு மாட்டு வண்டியைப் பயன்படுத்துவதுதான் நமது கலாச்சாரம் என பிடிவாதம் பிடிக்க முடியுமா? வேஷ்டி அணிவதுதான் தமிழனின் பண்பாடு என்று கூறினால் அதைக் கடைபிடித்துதான் ஆகவேண்டுமா? அனைவராலும் அது சாத்தியப்படுமா? இப்படி அன்றாட வாழ்க்கை விஷயங்களிலேயே நம்மை தமிழ்க் கலாச்சாரப்படி மாற்றிக் கொள்ள முடியாதபோது, தங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் அவரவர்களின் இறைக் கொள்கையில் எவ்வாறு தங்களை மாற்றிக் கொள்ள முடியும்?
இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்தவரை வணக்கமின்றி ஒரு விழாவைக் கொண்டாடுவதற்கு எந்த தடையுமில்லை. (உதாரணமாக சுதந்திர தினவிழா, குடியரசு தினவிழாக்கள் போன்று.) ஏனெனில் ஏக இறைவனை மட்டுமே வணங்கவேண்டும், அவனல்லாத எந்த படைப்பினங்களையும் வணங்கக்கூடாது என்பது இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கைகளில் முதன்மையானது! ஒரே இறைவன் அல்லாத பல தெய்வ வணக்கங்களாகவும், படைப்பினங்களை வணங்கும் விழாவாகவும் இருக்கும் பட்சத்தில் அதிலிருந்து ஒதுங்கி விடுமாறு இஸ்லாம் கட்டளையிடுகிறது. அதன் கட்டளைக்கு அடிபணிந்தே இஸ்லாமியர்கள் பொங்கல் கொண்டாட்டங்களைத் தவிர்த்துக் கொள்கிறார்களே தவிர வேறு எந்தக் காரணமும் கிடையாது.
நீங்களும் தமிழர்களாக இருக்கும் பட்சத்தில் தமிழரின் திருநாளான பொங்கலை மதம் சார்ந்த காரணங்களைக் கூறி புறம் தள்ளிவிட்டு, எப்படி 'தமிழர்கள்' என்று கூறிக் கொள்கிறீர்கள்?
'பொது விழா' என்று வாயளவில் சொல்லப்படும் ஒன்றை தனிப்பட்ட ஒரு மதம் சார்ந்த விஷயங்களைச் சேர்த்து கொண்டாடும்போது, அந்த விழாவை நடைமுறைப்படுத்த எது சிக்கலாக உள்ளதோ அதே மதம் சார்ந்த காரணங்களைதானே கூறமுடியும்? இல்லாத வேறு ஒரு காரணத்தைக் கூறமுடியாது. மேலும் உங்கள் கேள்வியில் தமிழனாக இருப்பதற்கு முஸ்லிமாக இருக்கக் கூடாதோ என்ற சந்தேகம் வருகிறது. கடவுள் கொள்கையால் முஸ்லிம்களாகவும், தேசத்தால் இந்தியர்களாகவும் வாழும் தமிழ்நாட்டு இஸ்லாமியர்களுக்கு 'மொழியால் தமிழர்கள்தான்' என்று உரிமையோடு கூறிக் கொள்வதில் எந்த தயக்கமுமில்லை! எனவே பொங்கல் கொண்டாடாவிட்டாலும் (அவர்கள் இஸ்லாமியர்களோ, கிறிஸ்தவர்களோ) தமிழர்கள் தமிழர்கள்தான்.
அப்படியானால் மதத்தின் பெயரால் தமிழ்ப் பண்பாட்டை மறுப்பதோ, வெறுப்பதோ சரியானதுதானா?
'தமிழ்ப் பண்பாடு', 'தமிழ்க் கலாச்சாரம்', 'தமிழர் திருநாள்' என்று 'தமிழ்'படுத்தி மட்டுமே பார்க்கிறீர்களே தவிர, அதை மற்றவர்களும் நடைமுறைப்படுத்த முடியாத சிக்கல்கள் நிறைந்துள்ளதை நீங்கள் உணரவேயில்லை என்றுதான் சொல்லவேண்டும். உதாரணமாக பானையில் திருநீரு பூசி குங்குமம் வைப்பதும், மாடுகளுக்கு திலகமிட்டு ஆராதனை செய்வதும், தங்கள் விருப்ப தெய்வங்களின் படங்களை வைத்து படையல் செய்வதும், சூரியனை வழிபட்டு பூஜிப்பதும் அவரவர்களின் உரிமை, விருப்பம். முன்பே சொன்னதுபோல் இஸ்லாம் பிற மதங்களின் கொள்கை விஷயங்களில் தலையிடுவதில்லை. அதேபோல் எந்த நிலையிலும் தன்னுடைய அடிப்படை கொள்கைகள் தகர்க்கப்படுவதற்கும் இஸ்லாம் அனுமதிக்கவுமில்லை. ஆக, மதக் கொள்கைகள் கலக்காத ஒரு விழாவாக பொங்கல் இருக்குமானால் உங்கள் கேள்வியில் நியாயம் உள்ளது. தவிர இன்றைய வழக்கத்திலுள்ள பொங்கலை இஸ்லாமியர்கள் கொண்டாடாமல் இருப்பதால் தமிழ்ப் பண்பாட்டை அவர்கள் வெறுப்பதாக ஆகாது. அவரவர் இறைக்கொள்கையின் உறுதிப்பாடு என்று எடுத்துக் கொள்வதுதான் மிகவும் நியாயமானது!
இல்லையென்றால் பொங்கல் விழாவின்போது அனைவரும் ஒரே மத சடங்குகளின் பின்னால் செல்லாமல் அவரவர்களும் தங்களின் இறைவனை வணங்கி, பொங்கலிட்டு கொண்டாடலாமே?
இஸ்லாத்தைப் பொறுத்தவரை வணக்கம், வழிபாடு என்று வந்தாலே அவரவர்களும் தாங்கள் நினைத்தபடியெல்லாம் வணக்கங்களை அமைத்துக் கொள்வதற்கு அனுமதியில்லை. ஒவ்வொரு வணக்கங்களுக்கும் ஒரு வரையறையை இஸ்லாம் கற்றுத் தந்துள்ளது. அதனால்தான், இஸ்லாமிய மக்களே அறியாமையினால் செய்யும் தர்கா வழிபாடு, சந்தனக்கூடு மற்றும் மூட நம்பிக்கைகள் கொண்ட வணக்கங்கள்/சடங்குகளை விட்டும் விலகி வாழும்படி பல இஸ்லாமிய அறிஞர்களும் உபதேசித்து வருகிறார்கள். அப்படியிருக்க பொங்கலுக்காக ஒரு தனி வழிபாடு செய்வது என்பது சாத்தியமில்லாதது. ஏனெனில் இஸ்லாம் அனுமதிக்காத ஒன்றை தெரிந்தே செய்ய எந்த இஸ்லாமியர்களும் முன்வருவதில்லை. மற்றபடி பொங்கல் என்றாலே அறுவடை காலத்தின் மகிழ்ச்சிக்காக புத்தரிசியைச் சமைத்து, கூடி சாப்பிடுவது மட்டும்தான் என்றால், அந்த கொண்டாட்டத்தில் முஸ்லிம்களுக்கு எந்த ஆட்சேபனையுமில்லை.
தமிழர்கள் அனைவரும் இந்த பொங்கல் திருவிழாவை ஒரே மாதிரியாகக் கொண்டாடினால்..?
எப்படி ஒரு காலத்தில் தானியங்கள் வீட்டுக்கு வந்து சேருகின்ற மகிழ்ச்சியை மட்டும் பிரதிபலிக்கின்ற விழாவாக இந்தப் பொங்கல் விழா இருந்ததோ, அந்த நிலைக்கு அதைக் கொண்டு வந்தால் நீங்கள் சொல்வதுபோல் எல்லோரும் ஒரே மாதிரியாக நிச்சயம் கொண்டாடுவோம். திருநீரு பூசுவதில் ஆரம்பித்து எந்தவித சடங்கு/சம்பிரதாயங்கள், பூஜை/புனஸ்காரங்கள், படையல்/வணக்கமின்றி ஒரு பொங்கல் கொண்டாட அனைவரும் சேர்ந்து முன் வந்தால் அதற்கு இஸ்லாமியர்கள் தள்ளி நிற்கமாட்டார்கள். மேலே சொன்னவை எதுவுமின்றி பொங்கல் சாத்தியமென்றால் ஆண்டுக்கொருமுறை அறுவடை காலத்தில் நாம் அனைவரும் கூடி பொங்கலிட்டு, பகிர்ந்துண்டு மகிழ்வோம்! சரியான புரிந்துணர்வோடு சந்தோஷமாக வாழ்வோம்!
தமிழ் இஸ்லாமியர்களும் தமிழ் கிறிஸ்தவர்களும் ஏன் பொங்கல் கொண்டாடுவதில்லை என்று கேட்கும் பல சகோதர சகோதரிகளுக்காக, இஸ்லாமியர்களின் சார்பில் விளக்கம் சொல்வதற்காகவே இந்த இடுகை! விளக்கத்தை புரிந்துக் கொண்ட பிறகு அழகிய முறையில் கருத்துக்களை பதியுங்கள்.
(குறிப்பு: சென்ற வருடம் 19/01/2011 அன்று வெளியிட்ட இந்தப் பதிவின்போது கேட்டுக் கொண்டது "தயவுசெய்து விவாதிக்கவேண்டாம்!" என்பது. நியாயமான சுய விளக்கங்களுக்குப் பிறகும் புரிந்துணர்வில்லாத சிலரும் இருக்கிறார்கள் என்பதால், தற்போது ஆரோக்கியமான விவாதத்தின் மூலமாவது புரியவைப்போம் என்ற நோக்கத்தில் "விவாதிக்கவேண்டாம்!" என்ற வேண்டுகோள் வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. எனினும் எந்தக் கருத்துக்களாக இருந்தாலும் அழகிய முறையில் சொல்லுங்கள்.)
நன்றி கூகிள் |
ஆம், தற்காலப் பொங்கலை எடுத்துக் கொண்டால் எல்லா மதத்தவர்களும் சேர்ந்துக் கொண்டாடும் வகையில் அதன் கொண்டாட்டங்கள் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை! 'ஒட்டு மொத்த தமிழர்களும் ஒற்றுமையுடன் எந்த வித ஜாதி, மத பேதமுமின்றி கொண்டாடக்கூடிய ஒரே விழா பொங்கல் திருவிழா' என்று சொல்வது இன்றைய பொங்கல் கொண்டாட்டத்திற்கு நிச்சயமாக பொருந்தாது. ஒவ்வொரு மதத்தினருக்கும் அவரவர்களுக்கென்ற சில அடிப்படைக் கொள்கைகள் உள்ளன. அந்தந்த மக்கள் அவற்றை முறையாக கடைப்பிடிப்பதிலும், தங்கள் இறைக்கொள்கையை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காமல் வாழ்வதிலும் அவரவருக்கும் உரிமையுண்டு. அதேபோல் ஒருவரின் வணக்க விஷயங்களில் அடுத்தவர் தலையிடுவதும், தங்களின் வணக்க வழிபாடுகளை அடுத்தவர்களிடம் வலுக்கட்டாயமாக திணிப்பதும் முறையானதல்ல. எனவேதான் இஸ்லாம் மார்க்கம் மற்ற மதங்களின் விஷயங்களில் தலையிடுவதில்லை.
ஆனால் "தமிழர்களாக இருந்தாலே 'தமிழர் திருநாள்' எனப்படும் பொங்கலைக் கொண்டாடதான் வேண்டும்" என்பது பலரின் எண்ணமாக உள்ளது. இது ஒரு தவறான கண்ணோட்டமாகும். பொங்கல் கொண்டாடவில்லையென்றால் தமிழுக்கோ மற்ற தமிழர்களுக்கோ எதிரானவர்களாகவோ, தமிழ்ப் பற்று இல்லாதவர்களாகவோ யாரும் ஆகிவிடமாட்டார்கள். பொங்கல் பொதுவான ஒரு திருநாளாக இருந்தால் அதில் எந்தவொரு மதத்தினுடைய வழிபாட்டு அம்சங்களும் இல்லாமல் அனைவருக்கும் பொதுவான ஒரு விழாவாக இருக்கவேண்டும். அதைவிடுத்து சூரிய வழிபாடு, படையல், பசு வழிபாடு, ஆராதனை என பிற மார்க்கத்தில் தடுக்கப்பட்ட அனைத்தும் புகுத்தப்பட்ட ஒன்றை 'தமிழர் அனைவருக்கும் பொதுவான திருநாள்' (?) என்று கூறி கொண்டாட வலியுறுத்துவது, நிச்சயமாக பிற மத/மார்க்கக் கொள்கைகளை அலட்சியப்படுத்தும் விதமாவே உள்ளது. சாதி, மத வேறுபாடின்றி அனைவரும் கூடி சந்தோஷமாக கொண்டாடுவதற்கு ஒரு திருநாளாக பொங்கல் இருக்கட்டுமே என்பது அவர்களின் ஆதங்கமாக இருக்கலாம். அதை 'மதச் சார்பற்ற தமிழர் திருவிழா'வாக மட்டும் கொண்டாடினாலே தவிர, மதச் சடங்குகளோடு பின்னிப் பிணைந்துள்ள இன்றைய பொங்கலை 'தமிழுணர்வு உள்ளவர்கள் அனைவரும் கொண்டாட வேண்டும்' என்று சொல்வதில் எந்த விதத்திலும் நியாயமில்லை.
மதச் சார்பற்று அனைவரும் கொண்டாட 'சமத்துவப் பொங்கல்' என்று தமிழக அரசாங்கம் கொண்டு வந்த முறையில் கூட, எல்லா மதத்தவர்களும் விருந்தாளிகளாக அழைக்கப்படுவார்களே தவிர, கொண்டாடும் விதத்தை அரசாங்கம் அனைவருக்கும் பொதுவாக்கவில்லை. அதே சம்பிரதாயங்கள் மற்றும் வழிபாடுகளோடுதான் மதச் சார்பற்ற (?) ஒரு அரசாங்கமும் சமத்துவப் பொங்கல் நடத்தி வருகிறது. இந்நிலையில், பெரும்பாலான இஸ்லாமியர்கள் பொங்கல் கொண்டாட மறுப்பது பற்றி மற்ற மக்களிடையே பரவலாக எழும் கேள்விகளையும் அதற்கான பதில்களையும் குறிப்பிடவேண்டியுள்ளது.
தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ள பொங்கல் திருவிழாவை ஏன் தமிழ் இஸ்லாமியர்களும், தமிழ் கிறிஸ்தவர்களும் கொண்டாட மறுக்கிறீர்கள்?
பிற மத வணக்கங்களையும் வழிபாடுகளையும் உள்ளடக்கியதாக மாற்றப்பட்ட ஒரு விழாவை, 'தமிழ்க் கலாச்சாரம்' என்ற பெயரில் அடுத்தவர்களும் கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்துவதற்கு யாருக்கும் எந்த விதத்திலும் உரிமையில்லை என்பதை முதலில் புரிந்துக் கொள்ளவேண்டும். நவீனங்களின் முன்னேற்றங்களைப் பயன்படுத்திவரும் நாம், போக்குவரத்திற்கு மாட்டு வண்டியைப் பயன்படுத்துவதுதான் நமது கலாச்சாரம் என பிடிவாதம் பிடிக்க முடியுமா? வேஷ்டி அணிவதுதான் தமிழனின் பண்பாடு என்று கூறினால் அதைக் கடைபிடித்துதான் ஆகவேண்டுமா? அனைவராலும் அது சாத்தியப்படுமா? இப்படி அன்றாட வாழ்க்கை விஷயங்களிலேயே நம்மை தமிழ்க் கலாச்சாரப்படி மாற்றிக் கொள்ள முடியாதபோது, தங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் அவரவர்களின் இறைக் கொள்கையில் எவ்வாறு தங்களை மாற்றிக் கொள்ள முடியும்?
இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்தவரை வணக்கமின்றி ஒரு விழாவைக் கொண்டாடுவதற்கு எந்த தடையுமில்லை. (உதாரணமாக சுதந்திர தினவிழா, குடியரசு தினவிழாக்கள் போன்று.) ஏனெனில் ஏக இறைவனை மட்டுமே வணங்கவேண்டும், அவனல்லாத எந்த படைப்பினங்களையும் வணங்கக்கூடாது என்பது இஸ்லாம் மார்க்கத்தின் அடிப்படைக் கொள்கைகளில் முதன்மையானது! ஒரே இறைவன் அல்லாத பல தெய்வ வணக்கங்களாகவும், படைப்பினங்களை வணங்கும் விழாவாகவும் இருக்கும் பட்சத்தில் அதிலிருந்து ஒதுங்கி விடுமாறு இஸ்லாம் கட்டளையிடுகிறது. அதன் கட்டளைக்கு அடிபணிந்தே இஸ்லாமியர்கள் பொங்கல் கொண்டாட்டங்களைத் தவிர்த்துக் கொள்கிறார்களே தவிர வேறு எந்தக் காரணமும் கிடையாது.
நீங்களும் தமிழர்களாக இருக்கும் பட்சத்தில் தமிழரின் திருநாளான பொங்கலை மதம் சார்ந்த காரணங்களைக் கூறி புறம் தள்ளிவிட்டு, எப்படி 'தமிழர்கள்' என்று கூறிக் கொள்கிறீர்கள்?
'பொது விழா' என்று வாயளவில் சொல்லப்படும் ஒன்றை தனிப்பட்ட ஒரு மதம் சார்ந்த விஷயங்களைச் சேர்த்து கொண்டாடும்போது, அந்த விழாவை நடைமுறைப்படுத்த எது சிக்கலாக உள்ளதோ அதே மதம் சார்ந்த காரணங்களைதானே கூறமுடியும்? இல்லாத வேறு ஒரு காரணத்தைக் கூறமுடியாது. மேலும் உங்கள் கேள்வியில் தமிழனாக இருப்பதற்கு முஸ்லிமாக இருக்கக் கூடாதோ என்ற சந்தேகம் வருகிறது. கடவுள் கொள்கையால் முஸ்லிம்களாகவும், தேசத்தால் இந்தியர்களாகவும் வாழும் தமிழ்நாட்டு இஸ்லாமியர்களுக்கு 'மொழியால் தமிழர்கள்தான்' என்று உரிமையோடு கூறிக் கொள்வதில் எந்த தயக்கமுமில்லை! எனவே பொங்கல் கொண்டாடாவிட்டாலும் (அவர்கள் இஸ்லாமியர்களோ, கிறிஸ்தவர்களோ) தமிழர்கள் தமிழர்கள்தான்.
அப்படியானால் மதத்தின் பெயரால் தமிழ்ப் பண்பாட்டை மறுப்பதோ, வெறுப்பதோ சரியானதுதானா?
'தமிழ்ப் பண்பாடு', 'தமிழ்க் கலாச்சாரம்', 'தமிழர் திருநாள்' என்று 'தமிழ்'படுத்தி மட்டுமே பார்க்கிறீர்களே தவிர, அதை மற்றவர்களும் நடைமுறைப்படுத்த முடியாத சிக்கல்கள் நிறைந்துள்ளதை நீங்கள் உணரவேயில்லை என்றுதான் சொல்லவேண்டும். உதாரணமாக பானையில் திருநீரு பூசி குங்குமம் வைப்பதும், மாடுகளுக்கு திலகமிட்டு ஆராதனை செய்வதும், தங்கள் விருப்ப தெய்வங்களின் படங்களை வைத்து படையல் செய்வதும், சூரியனை வழிபட்டு பூஜிப்பதும் அவரவர்களின் உரிமை, விருப்பம். முன்பே சொன்னதுபோல் இஸ்லாம் பிற மதங்களின் கொள்கை விஷயங்களில் தலையிடுவதில்லை. அதேபோல் எந்த நிலையிலும் தன்னுடைய அடிப்படை கொள்கைகள் தகர்க்கப்படுவதற்கும் இஸ்லாம் அனுமதிக்கவுமில்லை. ஆக, மதக் கொள்கைகள் கலக்காத ஒரு விழாவாக பொங்கல் இருக்குமானால் உங்கள் கேள்வியில் நியாயம் உள்ளது. தவிர இன்றைய வழக்கத்திலுள்ள பொங்கலை இஸ்லாமியர்கள் கொண்டாடாமல் இருப்பதால் தமிழ்ப் பண்பாட்டை அவர்கள் வெறுப்பதாக ஆகாது. அவரவர் இறைக்கொள்கையின் உறுதிப்பாடு என்று எடுத்துக் கொள்வதுதான் மிகவும் நியாயமானது!
இல்லையென்றால் பொங்கல் விழாவின்போது அனைவரும் ஒரே மத சடங்குகளின் பின்னால் செல்லாமல் அவரவர்களும் தங்களின் இறைவனை வணங்கி, பொங்கலிட்டு கொண்டாடலாமே?
இஸ்லாத்தைப் பொறுத்தவரை வணக்கம், வழிபாடு என்று வந்தாலே அவரவர்களும் தாங்கள் நினைத்தபடியெல்லாம் வணக்கங்களை அமைத்துக் கொள்வதற்கு அனுமதியில்லை. ஒவ்வொரு வணக்கங்களுக்கும் ஒரு வரையறையை இஸ்லாம் கற்றுத் தந்துள்ளது. அதனால்தான், இஸ்லாமிய மக்களே அறியாமையினால் செய்யும் தர்கா வழிபாடு, சந்தனக்கூடு மற்றும் மூட நம்பிக்கைகள் கொண்ட வணக்கங்கள்/சடங்குகளை விட்டும் விலகி வாழும்படி பல இஸ்லாமிய அறிஞர்களும் உபதேசித்து வருகிறார்கள். அப்படியிருக்க பொங்கலுக்காக ஒரு தனி வழிபாடு செய்வது என்பது சாத்தியமில்லாதது. ஏனெனில் இஸ்லாம் அனுமதிக்காத ஒன்றை தெரிந்தே செய்ய எந்த இஸ்லாமியர்களும் முன்வருவதில்லை. மற்றபடி பொங்கல் என்றாலே அறுவடை காலத்தின் மகிழ்ச்சிக்காக புத்தரிசியைச் சமைத்து, கூடி சாப்பிடுவது மட்டும்தான் என்றால், அந்த கொண்டாட்டத்தில் முஸ்லிம்களுக்கு எந்த ஆட்சேபனையுமில்லை.
தமிழர்கள் அனைவரும் இந்த பொங்கல் திருவிழாவை ஒரே மாதிரியாகக் கொண்டாடினால்..?
எப்படி ஒரு காலத்தில் தானியங்கள் வீட்டுக்கு வந்து சேருகின்ற மகிழ்ச்சியை மட்டும் பிரதிபலிக்கின்ற விழாவாக இந்தப் பொங்கல் விழா இருந்ததோ, அந்த நிலைக்கு அதைக் கொண்டு வந்தால் நீங்கள் சொல்வதுபோல் எல்லோரும் ஒரே மாதிரியாக நிச்சயம் கொண்டாடுவோம். திருநீரு பூசுவதில் ஆரம்பித்து எந்தவித சடங்கு/சம்பிரதாயங்கள், பூஜை/புனஸ்காரங்கள், படையல்/வணக்கமின்றி ஒரு பொங்கல் கொண்டாட அனைவரும் சேர்ந்து முன் வந்தால் அதற்கு இஸ்லாமியர்கள் தள்ளி நிற்கமாட்டார்கள். மேலே சொன்னவை எதுவுமின்றி பொங்கல் சாத்தியமென்றால் ஆண்டுக்கொருமுறை அறுவடை காலத்தில் நாம் அனைவரும் கூடி பொங்கலிட்டு, பகிர்ந்துண்டு மகிழ்வோம்! சரியான புரிந்துணர்வோடு சந்தோஷமாக வாழ்வோம்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteஅஸ்மா ரொம்ப தெளிவா சொல்லி இருக்கீங்க ஒவ்வொன்றையும்.
வாழ்த்துக்கள்
நீங்கள் எல்லாம் பொங்கல் கொண்டாட வில்லை என்று யார் அழுதார்கள். எனக்கு தெரிந்து பொங்கல் விழாவில் கலந்துகொண்டு குடும்பத்துடன் உண்டு களிக்கும் எம் இலாமிய நண்பர்கள் நிறைய பேர்கள் உள்ளனர். அவர்கள் எல்லாம் உம்மைப்போல வீண் தர்க்கமும் விதண்டாவாதமும் செய்வதில்லை. அவர்கள் எங்களுடன் இருப்பதால் இஸ்லாமும் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை. உம்மை போண்டவர்கள் எல்லாம் இந்தியா போன்ற நாடுகளில் வாழ்வதே தவறு அய்யா. ஊரை கெடுத்து வைத்தது போதும். இனி இது போன்ற அரை வேக்காட்டுதனமாக எழுதாதீர்.
ReplyDeleteஐயா கக்கு,
Deleteஉங்கள இந்தியாவ விட்டு அடிச்சு வெரட்டிட்டு நாங்க இங்கயே தான் இருப்போம் என்பதை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்.
சலாம் சகோ அஸ்மா,
Deleteஅற்ப்புதமான ஆக்கம். மனமார்ந்த பாராட்டுக்கள். அது சரி நீங்க யாருக்கு இந்த விளக்கம்லாம் குடுத்து இருக்கீங்க???? தமிழ்நாட்டில இருக்க தன் மார்க்கம் தனக்கு மற்றவர்கள் மார்க்கம் அவர்களுக்கு என்று சொல்ற யாரும் இந்த கேள்விய கேட்கல சகோதாரி. இது ஒரு இந்து மதவெறி உள்ள ஒரு கூட்டம் தான் கேட்குது. நீங்க என்ன விளக்கம் குடுத்தாலும் இவங்களுக்கு புரியாது. நம்மளோட அன்பா, சகோதரர்களா பழகுற அனேக மாற்று மத சகோதரர்களுக்கு தெரியும் நாம் ஏன் பொங்கல் கொண்டாடுவது இல்லை என்று. அதனால் தான் அவர்கள் அந்த கேள்வியை கேட்கவில்லை. இதை தாங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
நான் பொங்கல் கொண்டாட முடியாது, தீபாவளியும் கொண்டாட முடியாது. என்ன பண்ணுவீங்க???? உங்கனால என்ன பண்ண முடியும்???
Deleteடிஸ்கி 1 : இது என்னோட தனிப்பட்ட கருத்து. தயவு செய்து பிரசுரிக்கவும்.
ஐயா கக்கு,
Deleteநீங்க தமிழ்மேல வச்சிருக்க பற்று புல்லரிக்க வைக்குது. நாங்க இனத்துரோகிங்க எப்படியோ போறோம். நீங்க தமிழ் ஆர்வலர் ஆச்சே, கோவில்கள்ல நடக்கிற பூஜைய தமிழுக்கு மாத்தச் சொல்லுங்களேன் . முடியுமா உங்களால?????
டிஸ்கி 1 : இது கக்கு மாணிக்கம் மற்றும் அவர் தம் தோழர்களுக்கு மட்டுமே.
அட போடு அரிவாளே அப்படி!
Deleteஅசலம்
@ சிராஜ்
Deleteசலாம் சகோ.
//அற்ப்புதமான ஆக்கம். மனமார்ந்த பாராட்டுக்கள்//
நன்றி சகோ :)
//அது சரி நீங்க யாருக்கு இந்த விளக்கம்லாம் குடுத்து இருக்கீங்க???? தமிழ்நாட்டில இருக்க தன் மார்க்கம் தனக்கு மற்றவர்கள் மார்க்கம் அவர்களுக்கு என்று சொல்ற யாரும் இந்த கேள்விய கேட்கல சகோதாரி. இது ஒரு இந்து மதவெறி உள்ள ஒரு கூட்டம் தான் கேட்குது. நீங்க என்ன விளக்கம் குடுத்தாலும் இவங்களுக்கு புரியாது. நம்மளோட அன்பா, சகோதரர்களா பழகுற அனேக மாற்று மத சகோதரர்களுக்கு தெரியும் நாம் ஏன் பொங்கல் கொண்டாடுவது இல்லை என்று. அதனால் தான் அவர்கள் அந்த கேள்வியை கேட்கவில்லை. இதை தாங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.//
அந்த மாதிரியான மதவெறிக் கூட்டம்தான் இதுபோன்ற தேவையில்லாத பிரச்சனைகளை எல்லாம் அவ்வப்போது கிளப்பிவிட்டுக் கொண்டிருப்பார்கள் என்பது எல்லோரும் புரிந்து வைத்துள்ள உண்மைதான் சகோ. அதைப் பார்த்து சிலநேரங்களில் நம்முடன் சகோதரத்துவத்துடன் பழகி வரும் மாற்றுமத நண்பர்கள்கூட "பொங்கல் நீங்களும் கொண்டாடலாமே?"ன்னு புரியாமல் கேட்கிறார்கள் என்பதால்தான் இஸ்லாமியர்கள் சார்பாக சுயவிளக்கம் சொல்லி இதுபோன்று பதிவிட அவசியமாகியது சகோ. இதன் மூலம் அதுபோன்ற புரியாத மக்களுக்கு தெளிவு கிடைத்தால் சந்தோஷமே!
@ சிராஜ்
Delete//நான் பொங்கல் கொண்டாட முடியாது, தீபாவளியும் கொண்டாட முடியாது. என்ன பண்ணுவீங்க???? உங்கனால என்ன பண்ண முடியும்???//
:)) சுதந்திர இந்தியாவுல இருந்துக்கிட்டே என்ன மாதிரிலாம் நாட்டாமைப் பண்ணுறாங்க பாருங்க சகோ. அடுத்தவங்க மார்க்க விஷயத்தில் யாராலும் எதுவும் பண்ண முடியாதுதான். இதைப் புரிஞ்சவங்க மட்டும் அமைதியா இருக்காங்க.
நல்ல அலசல் அஸ்மா!
ReplyDelete//உழைக்கும் உழவர்களின் சந்தோஷத்திற்காக அந்த மிராசுதாரர்கள் அன்றைய தினம் அவர்களுக்கு புத்தாடைகள், நெல், கரும்பு, பழங்கள், பணம், தேவையான இன்னபிற பொருட்களையெல்லாம் கொடுத்து சந்தோஷமாக அனுப்பி//
ReplyDeleteஇன்றும் இந்தப் பழக்கம் எங்கள் ஊரில் இருந்து வருகிறது அக்கா. நமது பெருநாளுக்கும் பரிசு தந்து, அவர்களது திருநாளுக்கும் மனமகிழ்வோடு எல்லாம் கொடுத்து, அவர்கள் தரும் பதார்த்தங்களையும் பெற்றுக் கொள்வோம்.
நல்ல விளக்கங்கள். வேளாண் விழாவாக இருந்தது, எப்போதிருந்து தற்போதைய பொங்கல் விழாவாக மாறியது என்ற தகவல் ஏதும் தெரியுமா அக்கா?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteநல்லா சொல்லி இருக்கீங்க.
பொங்கலுக்கு முன்னால் இந்த பதிவு
போட்டு இருக்கலாம்.
@ ஆமினா...
ReplyDelete//அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
அஸ்மா ரொம்ப தெளிவா சொல்லி இருக்கீங்க ஒவ்வொன்றையும்.
வாழ்த்துக்கள்//
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
தேவையானவற்றை தெளிவாக்கினால்தான், சிறு சிறு ஆதங்கங்களும் பெரிய கசப்புகளாக மாறாமல் இருக்கும். ஆனா நாம எது சொன்னாலும் அதன் நல்ல நோக்கத்தைப் புரிந்துக் கொள்ளாமல் 'விதண்டாவாதம்', 'பழமை வாதம்' என்று வாய்க்கு வந்தபடி பேசவே சிலர் யோசிப்பதில்லை. அவர்களைப் பற்றி நாம் கவலைக் கொள்ளாமல் விட்டுவிடுவதே நல்லது. கருத்திற்கும் வருகைக்கும் நன்றி தோழி ஆமினா!
@ கக்கு - மாணிக்கம்...
ReplyDelete//நீங்கள் எல்லாம் பொங்கல் கொண்டாட வில்லை என்று யார் அழுதார்கள்//
யாரும் அழத் தேவையில்லை சகோ. வலிந்து வந்து வற்புறுத்தும் சகோதரர்கள், கொண்டாட மறுப்பதின் உண்மை நிலையை விளங்கிக் கொள்வதற்காகவே இந்த இடுகை என்று ஆரம்பத்திலேயே குறிப்படப்பட்டுள்ளதைப் பார்க்கவில்லையோ?
//எனக்கு தெரிந்து பொங்கல் விழாவில் கலந்துகொண்டு குடும்பத்துடன் உண்டு களிக்கும் எம் இலாமிய நண்பர்கள் நிறைய பேர்கள் உள்ளனர்//
இருந்துவிட்டுப் போகட்டுமே! அவர்களுக்கு தெரிந்ததை அவர்கள் செய்கிறார்கள். அதனால் எல்லோரும் அறியாமையில்தான் இருக்கவேண்டுமா என்ன?
//அவர்கள் எல்லாம் உம்மைப்போல வீண் தர்க்கமும் விதண்டாவாதமும் செய்வதில்லை//
அமைதியான முறையில் விளக்கம் சொல்வதே வீண் தர்க்கம், விதண்டாவாதம் என்றால், உங்களுடைய வார்த்தைகளை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது சகோ?
//அவர்கள் எங்களுடன் இருப்பதால் இஸ்லாமும் ஒன்றும் குறைந்து போய்விடவில்லை//
இஸ்லாமியர்கள் செய்யும் தவறினால் இஸ்லாம் குறைந்து போய்விடும் என்று யாரும் சொல்லவில்லை.
//உம்மை போண்டவர்கள் எல்லாம் இந்தியா போன்ற நாடுகளில் வாழ்வதே தவறு அய்யா//
ஆ..ஊ.. ன்னு இரண்டு எழுத்து சொன்னாலே நீங்கள் இந்தியாவில் இருக்கக் கூடாது, நாட்டைவிட்டு ஓடுங்கள் என்றுதான் சொல்வீர்கள்(எல்லோரும் அல்ல, உங்களை மாதிரியான ஆட்கள்). அதைச் சொல்வதற்கு உங்களுக்கு எந்த உரிமையுமில்லை சகோ. இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தன் இன்னுயிரையும், வாழ்வின் அனைத்து சுகங்களையும் இழந்து நின்றவர்களின் வாரிசுகள், என்றுமே இந்திய மண்ணின் மைந்தர்கள்தான்!
//ஊரை கெடுத்து வைத்தது போதும். இனி இது போன்ற அரை வேக்காட்டுதனமாக எழுதாதீர்//
"விளக்கத்தை புரிந்துக் கொண்ட பிறகு அழகிய முறையில் கருத்துக்களை பதியுங்கள். தயவுசெய்து விவாதிக்கவேண்டாம்!" என்று ஆரம்பத்திலேயே கேட்டுக்கொண்ட பிறகும் இப்படியெல்லாம் பேசும் நீங்கள்தான் சகோ ஊரையும் உலகத்தையும் கெடுக்காமல் இருக்கணும். இங்கு சொல்லப்பட்டதெல்லாம் நெருங்கிய நண்பர்கள் எங்களிடம் கேட்ட கேள்விகளுக்கு விடையாகவும், இன்னும் பல சகோதரர்களின் ஆதங்கங்களுக்கு விளக்கமாகவும் முழு வேக்காட்டுடன்தான் எழுதப்பட்டுள்ளது. இவ்வளவு படிப்படியாக விளக்கங்கள் சொல்லியும் சரியான புரிந்துணர்வு இல்லாத உங்களின் பின்னூட்டம்தான் 'அரை'க்கூட இல்லை, கால் வேக்காட்டுத் தனமாக உள்ளது.
அழகிய முறையில் உங்கள் கருத்துக்கள் இருந்திருக்குமானால் வீணாக உங்களுக்கு இவ்வளவு பெரிய பதில் சொல்லும் இந்த நேரம் மிச்சமாகியிருக்கும் :(
@ ஸாதிகா...
ReplyDelete//நல்ல அலசல் அஸ்மா!//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸாதிகா அக்கா!
@ ஹுஸைனம்மா...
ReplyDelete//இன்றும் இந்தப் பழக்கம் எங்கள் ஊரில் இருந்து வருகிறது அக்கா. நமது பெருநாளுக்கும் பரிசு தந்து, அவர்களது திருநாளுக்கும் மனமகிழ்வோடு எல்லாம் கொடுத்து, அவர்கள் தரும் பதார்த்தங்களையும் பெற்றுக் கொள்வோம்//
ரொம்ப சந்தோஷம் ஹுஸைனம்மா, அதுபோன்ற சகோதரத்துவம் தொடர வாழ்த்துக்கள்! எங்க ஊர் பக்கமும் அதுபோன்று நட்பு பாராட்டிக் கொள்வது இன்று வரை உண்டு.
//நல்ல விளக்கங்கள். வேளாண் விழாவாக இருந்தது, எப்போதிருந்து தற்போதைய பொங்கல் விழாவாக மாறியது என்ற தகவல் ஏதும் தெரியுமா அக்கா?//
அறுவடை நாளைக் கொண்டாடி மகிழ வந்த ஒரு விழா சிறுக சிறுகதான் மாற்றம் கண்டதே தவிர, குறிப்பிட்ட நாளிலிருந்து திடீரென மாற்றம் பெறவில்லை ஹுஸைனம்மா.
@ ஆயிஷா அபுல்...
ReplyDelete//அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நல்லா சொல்லி இருக்கீங்க.
பொங்கலுக்கு முன்னால் இந்த பதிவு
போட்டு இருக்கலாம்//
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... முன்பே போடதான் உடல்நிலை சரியில்லையே ஆயிஷா :) கருத்திற்கு நன்றிமா!
சிறப்பான ஆய்வு வாழ்த்துக்கள்.
ReplyDelete@ ராஜவம்சம்...
ReplyDelete//சிறப்பான ஆய்வு வாழ்த்துக்கள்//
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteநல்ல அலசல் சகோ.
@ இளம் தூயவன்...
ReplyDelete//அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நல்ல அலசல் சகோ.//
வ அலைக்கும்முஸ்ஸலாம் வரஹ்...
கருத்திற்கும் வருகைக்கும் நன்றி சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteசகோதரி அஸ்மா அவர்களுக்கு
மாஷாஅல்லாஹ் சிறப்பான பதிவு
நண்பர் கக்கு-மணிக்கம் அப்வர்களுக்கு பதில் கொடுக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் நீங்கள் உரிய முறையில் பதில் கொடுத்து விட்டீர்கள் மேலும் விவாதம் செய்ய வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளீர்கள் அதனால் விவாதம் செய்யும் என்னத்தை கைவிட்டு
இந்த பதிவிற்கான விளக்கத்திற்கு வருகிறேன்
ஆதி திராவிட பழங்குடி மக்களிடம் உருவ வழிபாடு இருக்கவில்லை ஆதி+ பரா+சக்தி=ஆதிபராசக்தியை தான் வழங்கினார்கள். ஆதி என்றால் இந்த உலகமும் உலகிலுள்ள உயிரினங்களும் தொன்றுவதற்கு முன்பே இருந்த. பரா என்றால் பெரிய, சக்தி என்றால் இறைவன்(அரபியில் அல்லாஹீ அக்பர்)அனைத்தையும் மிஞ்சிய சக்தி வாய்ந்த மிகப்பெரிய இறைவனை வானை நோக்கி கைகூப்பி வணங்கினார்கள்
ஆதி திராவிட மக்கள் மிருகங்களை வணங்கவில்லை
இன்னும் சொல்லப் போனால் மிருகங்களை வேட்டையாடி உண்டார்கள்
உணவை சமைத்து படையல் வைக்கிற பழக்கம் அவர்களிடம் இருக்கவில்லை
தாலி கட்டுகிற பழக்கம் அவர்களிடம் இல்லை
ஊர்த்தலைவர் முன்னிலையில் பிடித்து இருக்கிறதா ஏத்துக்கொண்டாயா என்பார் மணமகளும் மணமகளும்
ஒப்புக் கொண்டவுடன் திருமணம் முடிந்துவிடும்
வரதட்சனை பெண்ணிடம் வங்கும் பழக்கம் இருக்கவில்லை மணமகன் தான் வேட்டையாடிய பொருள்களை மணமகளுக்கு கொடுத்தான்.
மொழியியல் அடிப்படையிலேயே ‘திராவிடம்’ பேசியவர்களுக்கு வலுவான வரலாற்றுச் சான்றுகளாகச் சிந்துசமவெளி அகழ்வுகள் அமைந்தன.
திராவிட மொழிகள் என்பதில் தமிழ்,தெலுங்கு,கன்னடம், துளு,மலையாளம் தவிர ’ப்ராஹூய்’ என்பதும் ஒன்று.பலூசிஸ்தானத்தில் வழக்கத்திலிருந்த மொழி.இதனடிப்படையில் சிந்துவெளி நாகரிகத்தை’புரோட்டா எலாமோ’அரபிய நாகரிகக் கூறுகளுடையது என மெக் ஆல்பின் போன்ற
வரலாற்றிஞர்கள் நிறுபித்தனர் எனவே தொல் இந்திய நாகரிகம் என்பது மேற்காசிய(மெசடோபிய)எலாமைட் அரபிய நாகரிகத்துடன் தொடர்புடையது
திராவிடக் கருத்தியலை அரசியற் தளத்தில் மிகப்பெரிய வீச்சுடையதாக்கிய பெரியார் ஈ.வெ.ரா.அவர்கள் மேற்குறித்த உண்மைகளின் அடிப்படையில்’இஸ்லாமியர்கள் திராவிடர்களே’என்றார்
’இஸ்லாம்என்பது திராவிடம்என்பதன் அரபிச் சொல்’
எனக் கவிதை பாடினார்
ஆக ஆதி தமிழர்கள் சரியான முறைப்படி வாழ்ந்துக் கொண்டிருக்கும் போது. நம்ம கக்கு- மணிக்கம் சொன்ன மாதிரி ஊரை கெடுத்து பார்பனியர்கள் தங்களின் உலையில் போட்டார்கள்.
பார்பனியம் சடங்கு சம்பிரதாயம் வயிலாக ஆதி தமிழர் வாழ்வில் ஊடுருவி அவர்களின் வணக்க வழிபாடுகளை மாத்திப் போட்டார்கள்.
நம்ம வடிவேலு ஒரு படத்துல சொல்ற மாதிரி
வெள்ளையாக இருப்பவன் எப்படி பொய் சொல்வன் என்று கேட்பது போல
பார்ப்பன வெள்ளைத்தொல் சொன்னதிற்கேல்லாம் தலையாட்டினார்கள்
இவர்கள் நோகமால் நொங்கு திண்டார்கள்
பார்பன மனுதர்ம சட்டப்படி பிரமனன் விவசாயம் செய்யக்கூடாது விவசாய இரும்பிலான கருவிகளை பார்ப்பன் தொடுவது தீட்டு
அதாவது சூத்திர்ர்கள் சகதியில் உழன்று (சூத்திர்ர்கள் பிரம்மாவின் காலில் பிறந்தவர்கள் அதானால் சகதி அழுக்கில் இருப்பார்கள் என்றார்கள்) அருவடை செய்து களத்து மேட்டில் அளக்கும் போதே சாமிக்கு பாடி அளந்து விட்டுதான் அவர்களுக்கு அளக்க வேண்டும்
வீட்டுக்கு தானியங்களை கொண்டு வந்து சேர்த்தவுடன் கோவில்களுக்கும் (பார்ப்பன் பிரம்மாவின் தலையில் பிறந்த்தால் தேவர்கள் தெய்வம்) சாமிகளான பார்ப்பனர்களுக்கும் படைக்க வேண்டும் இது தை மாசத்துல அறுவடை காலங்களில் நடக்கும் சம்புரதாயம்.
இப்படி ஒரு சமுதாயம் ஒசியில் வயிறு வளர்க்க எற்ப்படுத்தப்பட்ட சடங்கு சம்புரதாயம் இல்லாமல் எந்த சடங்குக்கும் உட்பாடமல்
பொங்கல் வைத்தால் அனைவரும் சந்தோஷமாக சப்பிடுவதற்கு என்ன தடை இருக்கப் போகிறது
சகோதரன்
ஹைதர் அலி
அல்ஹம்துலில்லாஹ் யார் மனதையும் புண்படுத்தாமல் நமது(இஸ்லாமியர்கள்) நிலையை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் அக்கா...:)
ReplyDelete@ Hasan1...
ReplyDelete//அல்ஹம்துலில்லாஹ் யார் மனதையும் புண்படுத்தாமல் நமது(இஸ்லாமியர்கள்) நிலையை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் அக்கா...:)//
'யார் மனதையும் புண்படுத்தாமல்' என்பது நேர்மையான பார்வைக் கொண்ட யாருக்குமே புரியும் சகோ. ஆனால் இதற்கும் வந்து விதண்டாவாதம் பண்ணுகிறார்களே... என்ன சொல்வது? தங்களின் கருத்திற்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ReplyDeleteநேற்று விளக்கமளித்து நீண்ட பின்னூட்டம் போட்டேன்
அது மனதை புன்படுத்துவது போல் இருந்தது என்று நினைக்கிறேன் அதுதான் தங்கள் வெளியிட வில்லையே
@ ஹைதர் அலி...
ReplyDelete//அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
நேற்று விளக்கமளித்து நீண்ட பின்னூட்டம் போட்டேன்
அது மனதை புன்படுத்துவது போல் இருந்தது என்று நினைக்கிறேன் அதுதான் தங்கள் வெளியிட வில்லையே//
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
எந்த பின்னூட்டமும் உங்களிடமிருந்து வரவில்லையே சகோ? இந்த தலைப்பில் இதுதான் உங்களின் முதல் பின்னூட்டம். நீங்க send பண்ணும்போது ஏதாவது error வந்திருக்குமோ? மீண்டும் அதை முடிந்தால் அனுப்புங்களேன்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteசகோதரி அஸ்மா அவர்களுக்கு
மாஷாஅல்லாஹ் சிறப்பான பதிவு
நண்பர் கக்கு-மணிக்கம் அப்வர்களுக்கு பதில் கொடுக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் நீங்கள் உரிய முறையில் பதில் கொடுத்து விட்டீர்கள் மேலும் விவாதம் செய்ய வேண்டாம் என கோரிக்கை வைத்துள்ளீர்கள் அதனால் விவாதம் செய்யும் என்னத்தை கைவிட்டு
இந்த பதிவிற்கான விளக்கத்திற்கு வருகிறேன்
ஆதி திராவிட பழங்குடி மக்களிடம் உருவ வழிபாடு இருக்கவில்லை ஆதி+ பரா+சக்தி=ஆதிபராசக்தியை தான் வழங்கினார்கள். ஆதி என்றால் இந்த உலகமும் உலகிலுள்ள உயிரினங்களும் தொன்றுவதற்கு முன்பே இருந்த. பரா என்றால் பெரிய, சக்தி என்றால் இறைவன்(அரபியில் அல்லாஹீ அக்பர்)அனைத்தையும் மிஞ்சிய சக்தி வாய்ந்த மிகப்பெரிய இறைவனை வானை நோக்கி கைகூப்பி வணங்கினார்கள்
ஆதி திராவிட மக்கள் மிருகங்களை வணங்கவில்லை
இன்னும் சொல்லப் போனால் மிருகங்களை வேட்டையாடி உண்டார்கள்
உணவை சமைத்து படையல் வைக்கிற பழக்கம் அவர்களிடம் இருக்கவில்லை
தாலி கட்டுகிற பழக்கம் அவர்களிடம் இல்லை
ஊர்த்தலைவர் முன்னிலையில் பிடித்து இருக்கிறதா ஏத்துக்கொண்டாயா என்பார் மணமகளும் மணமகளும்
ஒப்புக் கொண்டவுடன் திருமணம் முடிந்துவிடும்
வரதட்சனை பெண்ணிடம் வங்கும் பழக்கம் இருக்கவில்லை மணமகன் தான் வேட்டையாடிய பொருள்களை மணமகளுக்கு கொடுத்தான்.
மொழியியல் அடிப்படையிலேயே ‘திராவிடம்’ பேசியவர்களுக்கு வலுவான வரலாற்றுச் சான்றுகளாகச் சிந்துசமவெளி அகழ்வுகள் அமைந்தன.
திராவிட மொழிகள் என்பதில் தமிழ்,தெலுங்கு,கன்னடம், துளு,மலையாளம் தவிர ’ப்ராஹூய்’ என்பதும் ஒன்று.பலூசிஸ்தானத்தில் வழக்கத்திலிருந்த மொழி.இதனடிப்படையில் சிந்துவெளி நாகரிகத்தை’புரோட்டா எலாமோ’அரபிய நாகரிகக் கூறுகளுடையது என மெக் ஆல்பின் போன்ற
வரலாற்றிஞர்கள் நிறுபித்தனர் எனவே தொல் இந்திய நாகரிகம் என்பது மேற்காசிய(மெசடோபிய)எலாமைட் அரபிய நாகரிகத்துடன் தொடர்புடையது
திராவிடக் கருத்தியலை அரசியற் தளத்தில் மிகப்பெரிய வீச்சுடையதாக்கிய பெரியார் ஈ.வெ.ரா.அவர்கள் மேற்குறித்த உண்மைகளின் அடிப்படையில்’இஸ்லாமியர்கள் திராவிடர்களே’என்றார்
’இஸ்லாம்என்பது திராவிடம்என்பதன் அரபிச் சொல்’
எனக் கவிதை பாடினார்
ஆக ஆதி தமிழர்கள் சரியான முறைப்படி வாழ்ந்துக் கொண்டிருக்கும் போது. நம்ம கக்கு- மணிக்கம் சொன்ன மாதிரி ஊரை கெடுத்து பார்பனியர்கள் தங்களின் உலையில் போட்டார்கள்.
அவர்களின் வணக்க வழிபாடுகளை மாத்திப் போட்டார்கள்.
ReplyDeleteநம்ம வடிவேலு ஒரு படத்துல சொல்ற மாதிரி
வெள்ளையாக இருப்பவன் எப்படி பொய் சொல்வன் என்று கேட்பது போல பார்பனியம் சடங்கு சம்பிரதாயம் வயிலாக ஆதி தமிழர் வாழ்வில் ஊடுருவி
பார்ப்பன வெள்ளைத்தொல் சொன்னதிற்கேல்லாம் தலையாட்டினார்கள்
இவர்கள் நோகமால் நொங்கு திண்டார்கள்
பார்பன மனுதர்ம சட்டப்படி பிரமனன் விவசாயம் செய்யக்கூடாது விவசாய இரும்பிலான கருவிகளை பார்ப்பன் தொடுவது தீட்டு
அதாவது சூத்திர்ர்கள் சகதியில் உழன்று (சூத்திர்ர்கள் பிரம்மாவின் காலில் பிறந்தவர்கள் அதானால் சகதி அழுக்கில் இருப்பார்கள் என்றார்கள்) அருவடை செய்து களத்து மேட்டில் அளக்கும் போதே சாமிக்கு பாடி அளந்து விட்டுதான் அவர்களுக்கு அளக்க வேண்டும்
வீட்டுக்கு தானியங்களை கொண்டு வந்து சேர்த்தவுடன் கோவில்களுக்கும் (பார்ப்பன் பிரம்மாவின் தலையில் பிறந்த்தால் தேவர்கள் தெய்வம்) சாமிகளான பார்ப்பனர்களுக்கும் படைக்க வேண்டும் இது தை மாசத்துல அறுவடை காலங்களில் நடக்கும் சம்புரதாயம்.
இப்படி ஒரு சமுதாயம் ஒசியில் வயிறு வளர்க்க எற்ப்படுத்தப்பட்ட சடங்கு சம்புரதாயம் இல்லாமல் எந்த சடங்குக்கும் உட்பாடமல்
பொங்கல் வைத்தால் அனைவரும் சந்தோஷமாக சப்பிடுவதற்கு என்ன தடை இருக்கப் போகிறது
சகோதரன்
ஹைதர் அலி
@ ஹைதர் அலி...
ReplyDelete//அவர்களின் வணக்க வழிபாடுகளை மாத்திப் போட்டார்கள்....... சடங்கு சம்புரதாயம் இல்லாமல் எந்த சடங்குக்கும் உட்பாடமல் பொங்கல் வைத்தால் அனைவரும் சந்தோஷமாக சப்பிடுவதற்கு என்ன தடை இருக்கப் போகிறது//
உங்கள் தகவலில் சில, நான் கேள்விப்படாத புதியவையாக உள்ளன. நன்றி சகோ. அவர்கள் எப்படியிருந்தாலும் சரி. 'தமிழர் திருவிழா'(?)வான பொங்கல் கொண்டாடாதவர்கள், மொழிப்பற்று, நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என்ற பிரச்சாரம் செய்வது தவறானது என்பதை அவர்கள் புரிந்துக் கொண்டால் போதும். அதையும் மீறி 'இந்தியாவில் வாழ்வது கூட தவறு' என்று அதிமேதாவித்தனமாக அடாவடி பேச்சு பேசுகிறார்களே...? மதச் சார்பற்ற ஒரு நாட்டில், தன் மார்க்கக் கொள்கைகளில் உறுதியாக இருப்பவர்களை நாடு கடத்தும் இந்த உரிமையை இவர்களுக்கு கொடுத்தது யார்? இவர்கள் என்று திருந்துவார்களோ..? இவ்வளவு விளக்கியும் புரியாவிட்டால் நாம் என்னதான் செய்ய முடியும்? ஒரே இறைவனுக்கு மட்டுமே தலைவணங்கிப் பழகிய ஒரு சமுதாயம், தன் இறைக் கொள்கையை எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காது என்பதை அவர்கள் புரிந்துக் கொள்ளட்டும். உண்மையான சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ முன்வரட்டும். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.
@ ஹைதர் அலி...
ReplyDeleteவ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
மூன்று பகுதிகளாக நீங்க பிரித்து அனுப்பிய பின்னுட்டங்களை publish பண்ணினால், நேற்று நீங்க அனுப்பிய பின்னூட்டமும் சேர்ந்து இப்போது publish ஆகியுள்ளது! :) பார்த்தால் அது spam ல் கிடந்துள்ளது. எப்படியோ தலை, வால் எல்லாம் புரியிற மாதிரி போட்டாச்சு :)) நீங்க கஷ்டமெல்லாம் கொடுக்கவில்லை சகோ. இவ்வளவு தூரம் மெனக்கெட்டதே பெரிய விஷயம்! முதல் இரண்டு பாகங்களிலும் தெரியாத புதிய நிறைய விஷயங்கள் கொடுத்துள்ளீர்கள். ரொம்ப நன்றி சகோ.
சகோதர/சகோதரிகள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..
ReplyDeleteசகோதரி அஸ்மா அவர்களுக்கு,
தெளிவா சொல்லி இருக்கீங்க. அல்ஹம்துலில்லாஹ். நம்மை பார்த்து கேள்வி கேட்கும் சகோதரர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்திற்கு எதிரான எந்தவொரு விசயத்தையும் எங்களால் செய்ய முடியாது. நீங்கள் எங்களை புரிந்து கொள்ள முயற்சிக்காதவரை இது போன்ற தவறாக பார்வைகள் இருந்து கொண்டு தான் இருக்கும்.
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
சகோதரர் சுக்கு மாணிக்கம்,
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்)
சரி, வேறு எங்கு போக சொல்கின்றீர்கள்?...எங்கள் நிலையிலிருந்து சிந்தித்து பாருங்கள் என்பதை தவிர வேறு பதிலில்லை...
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
/* சகோதரர் சுக்கு மாணிக்கம்,
Deleteஅஸ்ஸலாமு அலைக்கும் (உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்)
சரி, வேறு எங்கு போக சொல்கின்றீர்கள்?...எங்கள் நிலையிலிருந்து சிந்தித்து பாருங்கள் என்பதை தவிர வேறு பதிலில்லை...
நன்றி, */
என்ன சகோ ஆசிக்,
கக்கு கெல்லாம் இப்படி பதில் சொல்லிக்கிட்டு இருக்கிறீங்க. நான் அப்படி சொல்ல மாட்டேன் சகோ.
கக்கு,
உங்கள அடிச்சு விரட்டி விட்ட பிறகு.... நான்... நான்..நான் .. இங்குதான் இருப்பேன் என்பதை மிக்கப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
@ Aashiq Ahamed...
ReplyDeleteவ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
//இஸ்லாத்திற்கு எதிரான எந்தவொரு விசயத்தையும் எங்களால் செய்ய முடியாது. நீங்கள் எங்களை புரிந்து கொள்ள முயற்சிக்காதவரை இது போன்ற தவறாக பார்வைகள் இருந்து கொண்டு தான் இருக்கும்//
இவர்கள் இன்று இல்லாவிட்டாலும் இன்ஷா அல்லாஹ் ஒருநாள் புரிந்துக் கொள்வார்கள் சகோ. ஆனால் மற்றவர்களின் கொள்கைகளையும் உரிமைகளையும் சரியான முறையில் புரிந்து, உள்ளொன்றும் புறமொன்றும் இல்லாமல் அழகான முறையில் நடந்துக் கொள்ளும் பிறமத சகோதரர்கள் எத்தனையோ பேர் இன்றும் இருக்கதான் செய்கிறார்கள்.
//சகோதரர் சுக்கு மாணிக்கம்,//
கவனக் குறைவாக எழுதிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். அந்த சகோ, 'கக்கு - மாணிக்கம்'.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.
//ஒரு வேளாண்மைத் திருவிழாவாகத்தான் ஒரு காலத்தில் கொண்டாடப்பட்டது.//
ReplyDeleteஅன்னியர் படையெடுப்பிற்குப் பின் தானே அன்னிய மதங்களும் வந்தன, அதற்கு முன்பு தமிழர்கள் மட்டுமல்ல இந்தியர்கள் என்றாலே இந்துக்கள் மட்டும் தானே,
அதனால் தமிழர்கள் எல்லோரும் சூரியனுக்கும் பசுவிற்கும் நன்றி பகர்வதை கொண்டாட்டமாக கூடி செய்வதில் பேதம் இருக்கவில்லை.
ஆனால் இன்று என்ன செய்வது எல்லாம் எம் தலைவிதி. எங்கும் எதிலும் எல்லாவற்றிலும் பேதம், பேதம், பேதம், தான்
எல்லா கொண்டாட்டங்களையும் தூக்கிப் போட்டு விட்டு உம்மென்று இருக்க வேண்டியது தான்.
யார்தான் அரசியல் வியாதிகளின் வியாதிகளைக் குணமாக்கப் போகிறார்களோ?
அண்ணே Anonymous
ReplyDelete//அன்னியர் படையெடுப்பிற்குப் பின் தானே அன்னிய மதங்களும் வந்தன,//
அண்ணே கரெக்டா சொன்னீங்க
கைபர் கணவாய் வழியாக பிராமணர்கள் மனிதர்களை ஏனிப்படி மாதிரி பிரிஞ்சு அடுக்குற மாதத்த கொண்டு வந்தாங்க சரியாக சொன்னீர்கள்
//அதற்கு முன்பு தமிழர்கள் மட்டுமல்ல இந்தியர்கள் என்றாலே இந்துக்கள் மட்டும் தானே//
திராவிடர், கிராதர், முண்டா,போன்ற இனங்களைச் சேர்ந்த பழங்குடி மக்கள்தான் இந்த மண்ணின் உண்மையான தொல்குடி மக்கள்.அவர்களிடம் இந்துமதமும் இருக்கவில்லை.
சங்கராச்சாரி அவர்களின் வக்குமூலத்தை பாருங்கள்
ஹிந்து என்பது நாம் பூர்வீக பெயரல்ல, வைதீக மதம், சனாதன தருமம் என்றெல்லாம் சொல்கிறோமே அவைதான் பெயரா என்றால் அதுவும் இல்லை. நம்முடைய ஆதார நூல்களைப் பார்க்கும் போது இந்த மதத்திற்கு எந்தப் பெயருமே குறிப்பிடப்படவில்லை என்கிறார்.
மேலும் அவர் சொல்லும் போது
சைவம், வைணவம், சாக்தம்,கெளமாரம்,காணாபத்யம் என்ற ஆறு மாதங்களாக பிரிந்து மோதிக் கொண்டிருந்த நம்மை
இந்து மதம் என்று பெயர் சூட்டி ஒன்று சேர்த்தவன் பிரிட்டிஷ்காரன் தான் என்கிறார்
ஆக,ஹிந்து(சிந்து என்பதன் பாரசீக உச்சரிப்பு)என்ற சொல்லைத் தந்தவர்கள் பாரசீகர்கள்-முஸ்லிம்கள்; அந்த’ஹிந்து’வை ஒரு மதமாக ஒன்று சேர்த்தவர்கள் பிரிட்டிஷ்க்காரர்கள்.
//ஆனால் இன்று என்ன செய்வது எல்லாம் எம் தலைவிதி. எங்கும் எதிலும் எல்லாவற்றிலும் பேதம், பேதம், பேதம், தான்//
1.சிதம்பரம் கோயில்ல உள்ளே விடாம வெளியே நிறுத்தப்பட்டவன் இந்துவா இல்லை உள்ளே இருந்து கொண்டு ஊரை சுருட்டி தின்னும் தீட்சிதன் கிழ் சாதி மக்களுக்கு சம உரிமை கொடுக்கவில்லை
2.ராமேஸ்வரம் கோயிலில் இங்கு பிராமணர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டுன்னு சமயலறைக்கு வெளியே எழுதி வைச்சிருக்கானே? அந்த பிராமண இந்துவா இல்லை கல்லறைக்கு போனா அடிச்சி வெளிய அனுப்புராய்ங்க
3.தனிக் குவளை, தனிச் சேரி என்றும், பிராமின்ஸ் ஒன்லி என்ற வீட்டு வாடகை விளம்பரங்களிலும் சிரிக்கும் தீண்டாமையை கடைபிடிப்பவர்களையும் பாத்தா
எனக்கும் மனசுக்கு வருத்தமாகத்தான் இருக்குண்ணே
அஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteவாக்குவாதங்கள் வேண்டாம் என்ற உங்களின் அறிவுறுத்தலின் பேரில் சும்மா போகிறேன்.
சகோ......கக்கு மாணிக்கத்திற்கு கைதர் அண்ணன் பதில் கொடுத்து விட்டார் பாராட்டுக்கள்.
@ Anonymous...
ReplyDelete//அன்னியர் படையெடுப்பிற்குப் பின் தானே அன்னிய மதங்களும் வந்தன, அதற்கு முன்பு தமிழர்கள் மட்டுமல்ல இந்தியர்கள் என்றாலே இந்துக்கள் மட்டும் தானே//
இதையே காலத்துக்கும் சொல்லிக் கொண்டிருந்தால் அது உண்மையாகிவிடாது. உண்மை வரலாறுகள் மக்களுக்கு தெரியாமல் இல்லை அனானிமஸ்! மேலே சகோதரர் ஹைதர் அலி அவர்களின் விளக்கங்களைப் பாருங்கள். இதுவரை உங்களுக்கு தெரியாமல் இருந்தால் தெரிந்துக் கொள்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பு இது!
//அதனால் தமிழர்கள் எல்லோரும் சூரியனுக்கும் பசுவிற்கும் நன்றி பகர்வதை கொண்டாட்டமாக கூடி செய்வதில் பேதம் இருக்கவில்லை. ஆனால் இன்று என்ன செய்வது எல்லாம் எம் தலைவிதி. எங்கும் எதிலும் எல்லாவற்றிலும் பேதம், பேதம், பேதம், தான்//
:)) நல்ல காமெடிதான் போங்க! உங்க ஆசைப்படியே முதல்ல வந்தது ஏதோ ஒரு மதமாக இருந்துட்டு போகட்டும். அதற்காக பின்னால் வந்தவர்களும் அதைதான் ஃபாலோ பண்ணனும் என்று எப்படிங்க ஆளாளுக்கு உரிமையை கையில் எடுத்துக்கிட்டு இப்படி நாட்டாமை பண்ணுறீங்க? தனிப்பட்ட மதம் சார்ந்த நாடுகளில் கூட ஒரே மதத்தை அனைவரும் ஃபாலோ பண்ணுவதுதான் பேதமில்லாதது, ஒற்றுமைக்கு வழி வகுப்பது என்று சொல்வதில்லை, சொல்லவும் முடியாது! மதச்சார்பற்ற இந்தியாவில்தான் இந்த கூத்துகளெல்லாம்.. ஹ்ம்..! ஒருவரின் மதத்தையோ, மார்க்கத்தையோ அடுத்தவர்களும் மதித்து, சாதி/மத கண்ணோட்டத்தில் எந்த இடையூறும் மற்றவர்களுக்கு கொடுக்காமல் அழகிய முறையில் சகோதரத்துவத்தை பேண தெரிந்தாலே போதும், 'பேதம்'என்ற வார்த்தையே காணாமல் போகும்!
//எல்லா கொண்டாட்டங்களையும் தூக்கிப் போட்டு விட்டு உம்மென்று இருக்க வேண்டியது தான்//
நீங்க கொண்டாடுவதோ அதைத் தூக்கிப் போடுவதோ உங்க இஷ்டம்! ஆனால், அடுத்தவர்கள் தங்கள் இறைக் கொள்கைகளைத் தூக்கிப் போட்டுவிட்டு வரவேண்டும் என்று வலியுறுத்தும் சகோதரர்களுக்காகவே இவ்வளவு விளக்கங்களும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். சரியான முறையில் புரிந்துக் கொள்ளுங்கள்.
கருத்திற்கு நன்றி.
@ ஹைதர் அலி...
ReplyDelete//..... எனக்கும் மனசுக்கு வருத்தமாகத்தான் இருக்குண்ணே//
தங்களின் வருத்தம் நியாயமானதுதான் சகோ. இறைவன் நாடினால் விரைவில் மாற்றம் காணுவார்கள். தேவையான விளக்கங்கள் தந்ததற்கு ரொம்ப நன்றி சகோ.
@ அந்நியன் 2...
ReplyDelete//அஸ்ஸலாமு அலைக்கும்.
வாக்குவாதங்கள் வேண்டாம் என்ற உங்களின் அறிவுறுத்தலின் பேரில் சும்மா போகிறேன்//
ரொம்ப நன்றி சகோ. விவாதங்கள் வீண் தர்க்கங்களாக ஆவதைவிட, ஆரோக்கியமான முறையில் கருத்துக்களைப் பரிமாறுவது நல்லதல்லவா? அதனால்தான் :)
//சகோ......கக்கு மாணிக்கத்திற்கு கைதர் அண்ணன் பதில் கொடுத்து விட்டார் பாராட்டுக்கள்//
நன்றி சகோ.
அஸ்ஸலாமு அலைகும் வரஹ்
ReplyDeleteஅன்புள்ள சகோதரி நீங்கள் கருத்துரை மட்டுருத்தல் வைப்பது நல்லது என்று எனக்கு தோன்றுகிறது.
@ ராஜவம்சம்...
ReplyDelete//அன்புள்ள சகோதரி நீங்கள் கருத்துரை மட்டுருத்தல் வைப்பது நல்லது என்று எனக்கு தோன்றுகிறது//
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
நல்லது சகோ. ஏற்கனவே வைத்துவிட்டேன். சில கருத்துக்கள் பெயரில்லாமலே (அனானிமஸாக) வந்தால்கூட, மற்றவர்களுக்கும் தெரியட்டும் என்றுதான் வெளியிடுகிறேன். ஆலோசனைக்கு நன்றி சகோ.
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..!
ReplyDeleteசகோ.அஸ்மா அவர்களுக்கு
மாஷாஅல்லாஹ் சிறப்பான தெளிவான பதிவு. & சகோ.கக்கு-மாணிக்கத்துக்கு சரியான மறுமொழி.
இனி யாராவது பொங்கல் என்று வாயைதிறந்தாலே... அவர்களுக்கு டேரக்ட் லிங்க் இந்த பதிவுதான் அவர்களுக்கு 'மசாலா பொங்கல்'.
அல்ஹம்துலில்லாஹ்.
@ முஹம்மத் ஆஷிக்...
ReplyDelete//மாஷாஅல்லாஹ் சிறப்பான தெளிவான பதிவு. & சகோ.கக்கு-மாணிக்கத்துக்கு சரியான மறுமொழி. இனி யாராவது பொங்கல் என்று வாயைதிறந்தாலே... அவர்களுக்கு டேரக்ட் லிங்க் இந்த பதிவுதான் அவர்களுக்கு 'மசாலா பொங்கல்'.
அல்ஹம்துலில்லாஹ்//
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...
இஸ்லாமியர்கள் பொங்கல் கொண்டாடவில்லை என்று கேட்பவர்களுக்கு நிச்சயம் இந்த லிங்க்கை கொடுங்க சகோ. எல்லோரும் இல்லாவிட்டாலும் சிலராவது புரிந்துக் கொள்ளட்டும், இன்ஷா அல்லாஹ்! அதென்ன மசாலா பொங்கல்..?:)) நல்லாதான் இருக்கு புதுப்பெயரா! :-) வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.
சகோதரி அஸ்மா அவர்களே! நீங்கள் சொல்லிய விதம் மிக்க அருமை....
ReplyDeleteசகோ.கக்கு-மாணிக்கம் மற்றும் மற்ற ஹிந்து சகோதரர்களுக்கு ..... கீழ்காணும் லிங்க்கை சொடுகி இன்னும் அதிகமாக தெரிந்துகொள்ளுங்கள்..
இந்து மதம் எங்கே போகிறது? (http://ungalblog.blogspot.com/2010/12/blog-post_23.html )
மேலும் கடவுள் கோட்பாடு - (டாக்டர். ஜாகிர் நாயக் Vs ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர்) and
ஹிந்து மற்றும் இஸ்லாம் மதத்திற்கிடையேயான ஒற்றுமை (http://niduronline.blogspot.com)
@ Abu Nadeem...
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா...,
ReplyDeleteஇன்று தான் பொருமையாக உட்கார்ந்து உங்களுடைய இந்த பகுதியையும் மற்றவர்களுடைய கருத்தையும் படித்தேன்.
மிகவும் அருமையான,தெளிவான விளக்கத்தோடு எழுதியுள்ளீர்கள்.(மாஷா அல்லாஹ்)
நீங்கள் சொன்னது ஒரு சில மாற்று மத சகோதரர்கள் நிச்சயம் இவற்றையெல்லாம் புரிந்து கொள்வார்கள்.சுக்கு சகோதரர் போன்றவர்களுக்கெல்லாம் என்னதான் விளக்கம் சொன்னாலும் அதை காதில் வாங்கும் நிலையில் அவர்கள் இல்லை.எனவே விட்டு விடுவோமாக....
உங்களுடைய அழகான எழுத்திற்க்கு எனது மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
அன்புடன்,
அப்சரா.
@ apsara-illam...
ReplyDelete//அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா...,
இன்று தான் பொருமையாக உட்கார்ந்து உங்களுடைய இந்த பகுதியையும் மற்றவர்களுடைய கருத்தையும் படித்தேன்//
வ லைக்குமுஸ்ஸலாம் அப்சரா! ரொம்ப நன்றிமா.
//நீங்கள் சொன்னது ஒரு சில மாற்று மத சகோதரர்கள் நிச்சயம் இவற்றையெல்லாம் புரிந்து கொள்வார்கள்.சுக்கு சகோதரர் போன்றவர்களுக்கெல்லாம் என்னதான் விளக்கம் சொன்னாலும் அதை காதில் வாங்கும் நிலையில் அவர்கள் இல்லை.எனவே விட்டு விடுவோமாக....//
எதிர்ப்பவர்கள், எதிர்க்காதவர்கள் அனைவரும் புரிந்துக் கொண்டால் சந்தோஷம்தான்!
'யார் மனதையும் புண்படுத்தாமல்' என்பது நேர்மையான பார்வைக் கொண்ட யாருக்குமே புரியும் சகோ. ஆனால் இதற்கும் வந்து விதண்டாவாதம் பண்ணுகிறார்களே... என்ன சொல்வது?///
ReplyDeleteஎன்னைப் பொறுத்தவரை இவர்களை புறக்கணிப்பதே சிறந்தது.எனது ஓர்குட் சுயவிவர முகப்பு படமாக அல்லாஹ்வின் திருபெயரை வைத்து இருந்தேன்.
அதற்க்கு ஒரு ஹிந்து சகோதரர் சொன்னார்
'' அரபிக் மொழியில் அல்லா பெயரை தங்கள் அடையாள படமாக இருக்கிறது.அதை மாற்றி அல்லா என்று தமிழில் எழுதி அதை வைத்து கொள்ளவும்.அல்லது அரபியாவுக்கு சென்று குடியேறவும்.இது தமிழ்நாடு.தமிழ் நாட்டில் தமிழ் காற்றை சுவாசித்து தமிழன் உழுது தரும் உணவை உண்டு விட்டு ,தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டு,தமிழ் பேசி பிழைத்து கொண்டு, தமிழுக்கு எதிராக இருக்கும் நீ அரபியாவில் போய் குடியேறலாம்.
முதலில் தாய் மொழியை,தாய் நாட்டை நேசி பிறகு உன் மதத்தை நேசி.அதையும் உன் தாயு மொழியில் வழிபடு ''
க்கு மாணிக்கம் அவர்களும் அந்த ரகம் போல.
@ Hasan1...
ReplyDelete//என்னைப் பொறுத்தவரை இவர்களை புறக்கணிப்பதே சிறந்தது//
ஆமாம் சகோ, புரிகிறதோ.. புரியாத மாதிரி நடிக்கிறார்களோ.. இதுபோன்றவர்களை அலட்சியப்படுத்துவதே நல்லது.
//அதை மாற்றி அல்லா என்று தமிழில் எழுதி அதை வைத்து கொள்ளவும்.அல்லது அரபியாவுக்கு சென்று குடியேறவும்//
இந்த உரிமைதான் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது என்று புரியவில்லை.
//முதலில் தாய் மொழியை,தாய் நாட்டை நேசி பிறகு உன் மதத்தை நேசி.அதையும் உன் தாயு மொழியில் வழிபடு//
நாட்டுப்பற்று, மொழிப்பற்று என்பதின் அளவுகோலை இவர்கள் புரிந்து வைத்திருப்பதின் லட்சணம் அவ்வளவுதான்! விடுங்க சகோ..
//கக்கு மாணிக்கம் அவர்களும் அந்த ரகம் போல//
இருக்கலாம்..! ஆனால் அவரும் ஒருநாள் புரிந்துக் கொள்ளலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ReplyDeleteபதிவை விட கருத்துரைகளில் விஷயம் அதிகம் இருக்கு .. ஒரு எதிர் கருத்து போட்டு நிறைய விளக்கங்கள் கிடைக்க வைத்த சகோ கக்குக்கு நன்றி .!! இதுவும் ஒரு ஆரோக்கியமான விவாதமே..!!
@ ஜெய்லானி...
ReplyDelete//அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
பதிவை விட கருத்துரைகளில் விஷயம் அதிகம் இருக்கு ..//
உண்மைதான் சகோ. நல்ல கருத்துக்களை பதிந்த சகோதர சகோதரிகள் அனைவருக்கும்தான் நன்றி சொல்லணும்.
//ஒரு எதிர் கருத்து போட்டு நிறைய விளக்கங்கள் கிடைக்க வைத்த சகோ கக்குக்கு நன்றி .!!//
:))) இந்த விளக்கங்கள் அவருக்கும் பயனுள்ளதாக அமைந்திருந்தால் சந்தோஷமே! நன்றி சகோ.
அஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteஅர்த்தமுள்ள பதிவும், பின்னூட்டங்களுக்கு ஆவேசமில்லாத ஆரோக்கியமான பதில்களும்
மீண்டும் மீண்டும் படிக்க வைத்தது.
அருமையான பதிவு! தொடருங்கள் சகோதரி!
@ மு.ஜபருல்லாஹ்...
ReplyDelete//அஸ்ஸலாமு அலைக்கும்.
அர்த்தமுள்ள பதிவும், பின்னூட்டங்களுக்கு ஆவேசமில்லாத ஆரோக்கியமான பதில்களும்
மீண்டும் மீண்டும் படிக்க வைத்தது.
அருமையான பதிவு! தொடருங்கள் சகோதரி!//
வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... தங்களின் கருத்துக்கு ரொம்ப சந்தோஷம். இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து எழுத துஆ செய்யுங்க, நன்றி சகோ.
பொங்கல் என ஏன் ஒற்றைப்பார்வைப்பார்க்கணும், அது கூட பல நிகழ்வுகள் இருக்கு. அதை எடுக்கலாம் இல்லையா? தமிழ்ப்புத்தாண்டு என்பதும் தை 1 என கொண்டு வந்தார்கள் எத்தனைப்பேர் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து சொன்னீங்க?
ReplyDeleteயாரேனும் சர்க்கரைப்பொங்கல் கொடுத்தால் கூட சாப்பிடமல் இது எங்களுக்கு ஏற்புடையதில்லை என்கிறார்கள் சிலர்.ஆனால் நாங்க எல்லாம் பிரியாணி கொடுத்தா சாப்பிடுவோம் :-)
உங்களுக்கு பிடித்த ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள்!
தமிழ் புத்தாண்டு,பொங்கல் மற்றும் உழவர் திருநாள்,திருவள்ளுவர் பிறந்த நாள் வாழ்த்துகள்.
2008 இல் எழுதிய இப்பதிவையும் ஒரு முறைப்பார்க்கவும்.
தை ஒன்று தமிழ்ப்புத்தாண்டு பின்னணி ஒரு மாற்றுப்பார்வை
சகோ வவ்வால்,
Deleteநீங்கள் சாமிக்கு படைக்காமல் எதை வேண்டுமென்றாலும் குடுங்கள். நல்லா சாப்பிடறோம். தினமும் கொடுங்கள் விரும்பி வாங்கி சாப்பிடுவோம். மற்றபடி பிற தெய்வங்களுக்கு படைத்ததை நிச்சயம் சாப்பிட மாட்டோம்.
நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் ஒரு உதாரணம், கடந்த வாரம் எங்கள் ஊரில் ஒரு இஸ்லாமியரின், சொந்தக்காரரின் திருமணம் நடந்தது. அதில் பாட்டு கச்சேரி, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் எல்லாம் நடந்தது. இஸ்லாம் திருமணத்தை எழிமையாக நடத்தச் சொல்கிறது. ஆனால் அங்கு அளவிற்கு அதிகமான ஆடம்பரம் நடந்தது. அதோடு இல்லாமல் இஸ்லாம் தடை செய்த பாட்டு கச்சேரி எல்லாம் நடந்தது. அந்த திருமணத்தில் நான் கலந்து கொள்ளவில்லை, புறக்கணித்துவிட்டேன். எனவே, நாங்கள் மாற்று மதத்தவர்களிடம் தான் அவ்வாறு நடந்து கொள்கிறோம் என்று இல்லை. யாராக இருந்தாலும் கொள்கைக்கு விரோதமாக இருந்தால் புறக்கணிப்புதான். எங்களுக்கு வேறு வழி இல்லை. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ASSALAMU ALAIKKUM WELL SAID SIRAJ BHAI
Deleteசகோ சிராஜ்,
Deleteபொங்கல் என்று மட்டும் ஏன் பார்க்கிறீர்கள் தமிழ்ப்புத்தாண்டு, திருவள்ளுவர் திருநாள், உழவர் திருநாள் என்றெல்லாம் பார்க்கலாமே என்று கேட்டதுக்கு பதிலே சொல்லவில்லை.
சாமிக்கு படைத்தா சாப்பிட மாட்டேன் என்கிறீர்கள் சரி உங்கள் கொள்கை அது. நான் குறிப்பிட்ட மற்றவையும் அப்படியேவா?
நீங்கள் ஒரு தொழிலாளி என வைத்துக்கொள்வோம் ,கொடியேற்றி, தொழிற்சங்க முன்னோடிகள் படத்துக்கு மாலைப்போட்டு தொழிலாளர் தினம் கொண்டாடினால் கூட புறக்கணிப்பீர்களா? மாலைப்போடுவதும் வழிப்பாடு போல தானே.பொங்கலும் ஒரு வகையில் தொழிலாளர் தினமே.
இன்னொரு முக்கியமான செய்தி தெரியுமா, சாமிக்கு படைத்ததை சாப்பிட மாட்டேன்னு இருந்தால் இங்கே கொலைப்பட்டினி தான் இருக்கணும். நாற்று நடும் போதே தேங்கா உடைச்சு , சூடம் கொளுத்தி அவங்க அவங்க குல தெய்வத்துக்கு படைச்சுட்டு ,பொறிக்கடலை எல்லாம் கொடுப்பாங்க. முதல் நாற்றை ஈசானிய மூலைல நடுவாங்க. மேலும் அந்த பட்டம் (ரோவ்) ல விளையும் விளைச்சல் எல்லாம் குல தெய்வ கோவிலுக்கு கொடுப்பாங்க.சிலர் நெற்கதிர்களை மாலையாக கட்டி படையல் வைப்பாங்க.
இத எதுக்கு சொல்றேன் என்றால் வயலில் விளையும் ஒவ்வொரு நெல்மணியும் படையலுக்கு உள்ளாகிடுது. இப்போ சாப்பாடு வேண்டாம் சொல்லிடுவிங்களா?
ஓவ்வொரு தானியத்திலும் அது யாருக்கு போய் சேரணும் என்று எழுதி இருக்கும்னு சொல்வாங்க,அதெல்லாம் அரேபியாவில விளைஞ்சா தான் உண்டு போல,எனவே நீங்களும் இறக்குமதி செய்தே சாப்பிடுங்க.அதான் மார்க்க ரீதியாக ஏற்புடையது. என்ன நான் சரியா தானே சொல்கிறேன் :-))
@ வவ்வால்
Delete//பொங்கல் என ஏன் ஒற்றைப்பார்வைப்பார்க்கணும், அது கூட பல நிகழ்வுகள் இருக்கு. அதை எடுக்கலாம் இல்லையா?//
ஏற்கனவே சொன்னதுபோல் வணக்க, வழிபாடுகள் நுழைக்கப்படாமல் எந்தப் பொங்கலும் இல்லை என்கிறபோது எதைக் கொண்டாட சொல்றீங்க சகோ?
//தமிழ்ப்புத்தாண்டு என்பதும் தை 1 என கொண்டு வந்தார்கள் எத்தனைப்பேர் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து சொன்னீங்க?//
தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து சொல்லிதான் ஆகணுமா? எங்களின் புத்தாண்டான 'முஹர்ரம்' அன்று "இஸ்லாமியப் புத்தாண்டு வாழ்த்து" என நாங்கள் சொல்லி நீங்கள் என்றைக்காவது பார்த்ததுண்டா? ஆக தேதி, மாதம், புதிய ஆண்டு என்பதெல்லாம் அவரவர்களின் வாழ்வின் நடைமுறை வசதிக்காக அமைத்துக் கொண்ட ஒன்று. இதற்காக வாழ்த்து சொல்லும் பழக்கத்தை விரும்பியவர்கள் நடைமுறைப்படுத்திக் கொள்ளட்டும். இஸ்லாமியப் புத்தாண்டு உட்பட நாங்கள் எந்தப் புத்தாண்டுக்கும் வாழ்த்து சொன்னதில்லை, சொல்லவும் மாட்டோம்.
//யாரேனும் சர்க்கரைப்பொங்கல் கொடுத்தால் கூட சாப்பிடமல் இது எங்களுக்கு ஏற்புடையதில்லை என்கிறார்கள் சிலர்.ஆனால் நாங்க எல்லாம் பிரியாணி கொடுத்தா சாப்பிடுவோம் :-)
உங்களுக்கு பிடித்த ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள்!
தமிழ் புத்தாண்டு,பொங்கல் மற்றும் உழவர் திருநாள்,திருவள்ளுவர் பிறந்த நாள் வாழ்த்துகள்//
இதற்கு சகோ சிராஜ் அவர்களின் பதிலே உங்களுக்கு போதும்.
வவ்வால் நேரடியா பதிவை மட்டும் படிச்சிட்டு கீழே வந்துட்டார் போல :-))
ReplyDelete@ ஜெய்லானி
Delete//வவ்வால் நேரடியா பதிவை மட்டும் படிச்சிட்டு கீழே வந்துட்டார் போல :-))//
:-))))
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.அஸ்மா அருமையான விளக்க கட்டுரை கொடுத்தமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
ReplyDeleteவேண்டாவெறுப்புடன் மறுமொழியிடும் மறுமொழியாளர்களுக்கு சகோ.ஹைதர் அலியின் பதில்களும் அருமை.
@ முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்
Deleteவஅலைக்குமுஸ்ஸலாம் சகோ.
//அருமையான விளக்க கட்டுரை கொடுத்தமைக்கு நன்றியும் வாழ்த்துக்களும்//
நன்றி சகோ :)
//வேண்டாவெறுப்புடன் மறுமொழியிடும் மறுமொழியாளர்களுக்கு சகோ.ஹைதர் அலியின் பதில்களும் அருமை//
நிச்சயமா! சகோ.ஹைதர் அலி அவர்களுக்கு இறைவன் கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்திக் கொடுப்பானாக! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.
அனானியாக வந்து ஒரு நபர் இட்ட கமெண்ட்டில் சில சகோதர பதிவர்களை அநாகரிகமான முறையில் குறிப்பிட்டிருந்ததால் அவை நீக்கப்பட்டு இங்கே பிரசுரிக்கப்படுகிறது:
ReplyDelete//who cares if you are not celebrating the pongal? ஊரோடு ஒத்து வாழ் என்பதும் தமிழ் பழமொழி தான். பொங்கல் பிடிக்கவில்லையா சரி விடுங்க. மத்தவங்க கொண்டாடுவாங்கதானே//
//அப்புறம் இஸ்லாமிய மதமே அன்னிய மதம் தானே. இஸ்லாம் திருட கூடாதுன்னு சொல்லுது./ஆனா வந்தேறி துலுங்க மன்னர்கள் இந்து கோயில்களை இடித்து கொள்ளை அடித்து மக்களை துண்புறுத்தியது எல்லாம் மறந்து போகனுமா? மத நல்லிணக்கம் என்பது ஒன்று இருக்கிறது அது என்ன வென்றால் உன் சுதந்திரம் உன் முகத்தின் மூக்கு வ்ரை தான் என்பதே//
//அனானியாக வந்து ஒரு நபர் இட்ட கமெண்ட்டில் சில சகோதர பதிவர்களை அநாகரிகமான முறையில் குறிப்பிட்டிருந்ததால் அவை நீக்கப்பட்டு இங்கே பிரசுரிக்கப்படுகிறது://
Deleteஅனானியாக வருவதே அதற்குத்தனே மொட்டைக் கடுதாசிக்கும் பதில் சொல்லி விவோம்.
//who cares if you are not celebrating the pongal? ஊரோடு ஒத்து வாழ் என்பதும் தமிழ் பழமொழி தான். பொங்கல் பிடிக்கவில்லையா சரி விடுங்க. மத்தவங்க கொண்டாடுவாங்கதானே//
பொங்கல் பிடிக்கவில்லையேன்று யாரு சொன்ன? அதற்காக செய்யப்படுகிற சடங்குகளை தான் வேண்டாம் என்று சொல்லுகிறோம்.
//சரி விடுங்க. மத்தவங்க கொண்டாடுவாங்கதானே//
பேஷா கொண்டாடுங்கே யாரு ராசா யாரு உங்கள தடுத்தது
//அப்புறம் இஸ்லாமிய மதமே அன்னிய மதம் தானே.//
சரிங்கே எந்த மதம் இந்தியாவிற்கு அந்நியமானதுதில்லை அதுவும் இந்த பொங்கள் சடங்குகள் எப்படி இந்தியாவிற்கு சொந்தமானது உங்க புஸ்த்தகத்தில் இருந்து படித்து நாலு வரி சொல்லுங்கள் அதற்கு பிறகு இஸ்லாம் அந்நிய மார்க்கமாக இருந்தாலும் திராவிட பழங்குடி மக்களுக்கு ஏற்ற மார்க்கம் என்பதையும் அவர்களின் அடிமை விலங்குகளை எப்படி உடைத்தது என்று சொல்லுகிறேன்.
தொடர்கிறேன்
//இந்த பொங்கள் சடங்குகள் எப்படி இந்தியாவிற்கு சொந்தமானது உங்க புஸ்த்தகத்தில் இருந்து படித்து நாலு வரி சொல்லுங்கள்//
Delete:-)))
ENNA ITHU NEENGALE PADIVU POTTU UNGA MUSLIM GROUP PATHIL SOLLUTHU
ReplyDeleteகரெக்ட்..! அதானே..? சரியான கேள்வி..!
Deleteஉங்களை மாதிரி ஆளைத்தான் தேடினேன்..!
இனி நீங்களே பதில் சொல்லுங்க..!
இதோ கேள்விகள்...
1-அரிசி விளைச்சல் அறுவடை மகசூலுக்கு...
சூரியன் மட்டுமா ஒரே காரணம்..?
அந்த பயிரின் இலை பச்சையம் (CHLOROPHYLL),
பகலில் கார்பண் டை ஆக்சைட்,
இரவில் ஆக்சிஜன்,
மழை அல்லது
காவிரியில் தண்ணீர் விட்ட கர்நாடகாகாரன் அல்லது
ஆற்றில் மணல் எடுக்காமல் நிலத்தடி நீரை விட்டுவைத்த அரசியல்வாதி, இயற்கையான மண்வளம்,
மண்புழு,
ரைசொபியம் பாக்டீரியா,
விவசாயியின் உழைப்பு,
யூரியா, டி.ஏ.பி, பாக்டம்பாஸ் உரம்,
என்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து,
இவற்றை உருவாக்கிய ரசாயண நிறுவனங்கள்,
இதை ஊக்கப்படுத்தும் வேளாண்மை விரிவாக்க மையங்கள்,
அதன் அரசு ஊழியர்கள்,
விளைந்ததை வாங்க காத்திருக்கும் சந்தை & பொதுமக்கள்...
இப்படியாக, அரிசி விளைச்சல் அறுவடை மகசூலுக்கு...
இவ்வளவு காரணிகள் இருக்கும் போது...
சூரியனுக்கு மட்டும் படையல் வணக்கம் நன்றி எல்லாம் எதற்காக..? இதற்கெல்லாம்-இவங்களுக்கெல்லாம் நன்றி சொல்லவில்லையே ஏன்..?
கேள்வி 2-
Deleteஎந்த ஒரு தமிழரும், வெறும் அரிசியை மட்டுமே சமைத்து பொங்கி சாப்பிட்டு வாழவில்லை. உப்பு, வெங்காயம், தக்காளி, எண்ணெய், பருப்பு வகைகள், உளுந்து வகைகள், கோதுமை, மிளகாய், இஞ்சி-பூண்டு, மசாலா அயிட்டங்கள்... இப்படி நிறைய விவாசாய பொருட்கள் மக்களின் தினப்படி வாழ்வில் அத்தியாவசியமாக இருந்துகொண்டு இருக்க...
அரிசிக்கு மட்டும் சூரியனுக்கு நன்றி சொல்வது ஏன்..? உப்பு மற்றும் மற்ற பருப்பு, தானிய, எண்ணெய்வித்து, காய்கறிகளுக்கு எல்லாம் அவை விளைந்து மகசூல் தரும்போது சூரியனுக்கு நன்றி/வணக்கம்/படையல் எல்லாம் ஏன் இல்லை..?
அவைகள் எல்லாம் சூரிய ஒளி இல்லாமல் இருட்டிலா விளைந்தன..?
கேள்வி-3,
Deleteஇப்படி அனைத்து காரணிகளுக்கும் அனைத்து விளைச்சளுக்கும் மூல காரணியாக இருக்கும் இறைவனுக்கு நன்றி சொல்லி, எந்த ஒரு உணவையும், உணவுத்துகளையும் வாய்க்குள் போட்டால், இறைவனின் கருணையை போற்றி நன்றி கூறி, "இறைவனின் பெயரால்..." என்று சொல்லி சாப்பிட ஆரம்பிக்கும் முஸ்லிம்கள்... ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும்... அருந்தும்போதும்... நித்தம் நித்தம் தினம் தினம் பொங்கல் கொண்டாடி மகிழ்கின்றனரே..!!! ஆண்டின் 366 நாளும்... ஒரு நாளில் பல முறையும் பொங்கல் பண்டிகை கொண்டாடும் முஸ்லிம்களை எதற்கு 'ஒரே ஒருநாள் மட்டும் பொங்கல் கொண்டாடினால் போதும்' என்று சிறுமைபடுத்துகிறீர்கள்..?
மற்ற அனைத்து தமிழ் மக்களும்...
முஸ்லிம்களை பின்பற்றி, ஆக அனைத்துக்கும் மூலகாரணியான இறைவனுக்கு மட்டுமே நன்றி சொல்லி...
முஸ்லிம்கள் பாணியில் ஆண்டுக்கு ஒரு முறை அல்லாமல்,
தினமும் பலமுறை பொங்கல் கொண்டாடி... மகிழலாமே...?
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ முஹம்மத் ஆஷிக் தங்களின் கேள்விகள் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள்போல் வாவ்.....வாவ்....வரே...வாவ்...நம்ம கவுண்டமணி ஸ்டைல்ல சொல்லனும்னா அட்ராசக்கை...அட்ராசக்கை....அட்ராசக்கைனான
Deleteஅவரு ஏதோ பொழுது போகாம போட்ட ஒரு வரிக்கா இப்டி அவர வாடி வதைக்கிறீங்க.... :)
Deleteஆஷிக்,
Delete//மற்ற அனைத்து தமிழ் மக்களும்...
முஸ்லிம்களை பின்பற்றி, ஆக அனைத்துக்கும் மூலகாரணியான இறைவனுக்கு மட்டுமே நன்றி சொல்லி...
முஸ்லிம்கள் பாணியில் ஆண்டுக்கு ஒரு முறை அல்லாமல்,
தினமும் பலமுறை பொங்கல் கொண்டாடி... மகிழலாமே...?///
இது என்ன போங்காட்டம் மற்ற மதத்தினர் என்ன சாப்ப்பிடும் போது அவங்க கடவுளுக்கு நன்றி சொல்லாமலா சாப்பிடுறாங்க.
இந்துக்கள், கிருத்துவர்கள் என எல்லாருமே அவர்கள் கடவுளை நினைவு கூர்கிறார்கள்.
ஏன்யா இப்படி நீங்க தான் சக்கரத்தை கண்டுப்பிடிச்சா போல சொல்லிகிட்டு ,அதெல்லாம் கண்டுப்பிடிச்சு பல காலம் ஆச்சு. இஸ்லாமே வரலாற்று ரீதியா பார்த்தா புதுசா முளைத்த மதம்.
எனவே யாருக்கும் எதுவும் கற்றுக்கொடுக்கவோ, புதிய தகவல்களோ அதில் இருக்குனு சொல்லிக்கிட்டு திரிய வேண்டாம்.எல்லாமே எல்லா மதத்திலும் இஸ்லாம் சொல்வதற்கு முன்னரே சொல்லிட்டுப்போய்டாங்க.
உங்களின் இஸ்லாம் பற்றிய வரலாற்று அறிவு.... ///இஸ்லாமே வரலாற்று ரீதியா பார்த்தா புதுசா முளைத்த மதம்.///.....மிகப்பெரிய பூச்சியம் என்று இப்படியா உலகுக்கு பறை சாற்றுவது..?
Deleteசரி, சரி, இப்போதாவது உண்மையை அறிந்து கொள்ளவும். இவ்வுலகின் முதல் மனித ஜோடிகளே முஸ்லிம்கள்தான். முதல் மனிதரான ஆதம்(அலை..) தான் முதல் நபி(இறைத்தூதர்). அவர்கள் பின்பற்றிய-எடுத்துரைத்த மார்க்கம் இஸ்லாம்..!
காலப்போக்கில் மக்கள் தம் வாழ்வியல் மார்க்கத்தை புறந்தள்ளி தம் மனோ இச்சையில் நடக்கும்போது அவ்வப்போது நிறைய இறைத்தூதர்கள் வந்தார்கள். இஸ்லாமிய மார்க்கத்தை மக்களிடம் புணரமைத்தனர்.
இறுதிக்கு முன்னர் வந்தவர்தான் ஜீசஸ் கிருஸ்து எனப்படும் ஈசா (அலை..) அவர் மக்களுக்கு சொல்லி புணரமைத்த மார்க்கமும் அதே இஸ்லாம்தான்.
இறுதியாக வந்தவர்தான் முஹம்மத்(ஸல்..) நபி. அவர் புணரமைத்த மார்க்கமும் அதே ஆஆஆஆஆதி மார்க்கமான இஸ்லாம்தான்..!
காலத்தால் முந்திய முதல் ஆதி மார்க்கம் இஸ்லாம்தான். இதன்படிதான் மற்றவை ஒழுங்க்குபடுத்தப்படல் வேண்டும் அல்லவா..?
@ அனானி
Delete//ENNA ITHU NEENGALE PADIVU POTTU UNGA MUSLIM GROUP PATHIL SOLLUTHU//
மிகச் சரியான, நேர்மையான பதில் யாரிடம் உள்ளதோ அவர்கள்தான் வந்து பதில் சொல்லமுடியும். இதையும்கூட குரூப் என்ற அடிப்படையில் பார்க்கிறீங்க. மற்றவர்களும் தங்களிடம் நியாயமான பதில் இருந்தால் சொல்லலாமே, யார் வேண்டாம் என்றது? அதுசரி... இந்த ஒற்றைவரி கமெண்ட் சொல்லக்கூட அனானியாகதான் வரணுமா??!
@ ~முஹம்மத் ஆஷிக் citizen of world~
Delete//இப்படியாக, அரிசி விளைச்சல் அறுவடை மகசூலுக்கு...
இவ்வளவு காரணிகள் இருக்கும் போது...
சூரியனுக்கு மட்டும் படையல் வணக்கம் நன்றி எல்லாம் எதற்காக..? இதற்கெல்லாம்-இவங்களுக்கெல்லாம் நன்றி சொல்லவில்லையே ஏன்..?//
//இப்படி நிறைய விவாசாய பொருட்கள் மக்களின் தினப்படி வாழ்வில் அத்தியாவசியமாக இருந்துகொண்டு இருக்க...
அரிசிக்கு மட்டும் சூரியனுக்கு நன்றி சொல்வது ஏன்..?//
//அனைத்துக்கும் மூலகாரணியான இறைவனுக்கு மட்டுமே நன்றி சொல்லி...
முஸ்லிம்கள் பாணியில் ஆண்டுக்கு ஒரு முறை அல்லாமல்,
தினமும் பலமுறை பொங்கல் கொண்டாடி... மகிழலாமே...?//
தங்களின் முத்தான மூன்று கேள்விகளுக்கும் ஒரு பெரிய சபாஷ் சகோ! & ஜஸாகல்லாஹ் ஹைரா! :)
@ முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்
Delete//தங்களின் கேள்விகள் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள்போல் வாவ்.....வாவ்....வரே...வாவ்...///
சகோ முஹம்மத் ஆஷிக், சகோ சிராஜ், சகோ ஹைதர் அலி மற்றும் அறிவுப்பூர்வமான வாதங்களையும், சிந்திக்கத்தூண்டும் கருத்துக்களையும் எடுத்து வைக்கும் அனைவருக்கும் இறைவன் கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்திக் கொடுப்பானாக! உங்கள் வருகைக்கும் நன்றி சகோ.
//இஸ்லாம் திருட கூடாதுன்னு சொல்லுது./ஆனா வந்தேறி துலுங்க மன்னர்கள் இந்து கோயில்களை இடித்து கொள்ளை அடித்து மக்களை துண்புறுத்தியது எல்லாம் மறந்து போகனுமா?//
ReplyDeleteஇஸ்லாமிய முறைப்படி திருட கூடாது சரிதான்.ஆனால் கஜினி மட்டுமல்ல பண்டைய மன்னர்களின் போர்கள் என்பவன பெரும்பாலும் கொள்ளையடிப்பதற்காக மேற்கொள்ளப் பட்டவைதான் கஜினி திருடிவிட்டு உடனே போய்விட்டான் ஆனால் பார்ப்பனர்கள் கைபர் கணவாய் வழியாக வந்து சடங்கு சம்புரதயம் என்று சொல்லி காலங்கலமாக பாமரர்களின் உழைப்பையும் சொத்துக்களையும் திருடுவதை மறந்தது ஏணோ?
அப்புறம் உங்களுக்கு ஏற்பட்ட மற்றொரு மறதியை நான் நினைவுப் படுத்துகிறேன் மறக்க வேண்டாம் அவுங்கரசீப் நமது தமிழ்நாட்டு குமரகுருபரருக்கு காசியில் நிலம் ஒதுக்கி மடம் கட்டிக் கொடுத்தது.இன்னும் நிறைய முகலாய மன்னர்கள் (கவனிக்கவும் துலுக்க மன்னர்கள் என்று நான் சொல்லவில்லை)கோயில்களுக்கும்
மடங்களுக்கும் நிறைய மானியங்கள் சொத்துக்கள் அளித்ததையும் தாங்கள் மறந்து விட வேண்டும் சரி இதையேல்லாம் நினைவில் வைத்துக் கொள்ள மாட்டேன் இடித்ததை மட்டும் தான் நினைவில் வைத்துக் கொள்வேன் என்று அடம் பிடித்தால்
படையேடுத்து வரும் மன்னர்கள் கோயிலை இடிப்பதில் பொதுப் புத்தியோடு இருந்திருக்கிறார்கள் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள் இதில் இந்து,முகலாய மன்னர்கள் என்ற பேதமில்லை எனேன்றால் இந்தியாவில் கோயில்கள் என்பன சாமி கும்பிடுகிற இடம் மட்டுமல்ல.மன்னர்களின் கோட்டைகளாகவும் நிதிக் களஞ்சியங்களாகவும் அவை இருந்தன.தஞ்சாவூர் போயி இருக்கீகளா? தஞ்சைப் பெரிய கோவிலைச் சுற்றி இவ்வளவு பெரிய அகழி ஏன்?
இன்னொன்று தெரியுமா? தஞ்சை பெரிய கோவில் உட்பட இன்றுள்ள பல கோயில்கள் சமண/புத்த கோயில்களை இடித்து கட்டப்பட்டவைதானே.இராசராசன் இலங்கையிலுள்ள அநுராதபுரம்,பொலனருவை ஆகிய இடங்களிலிருந்த புத்தக் கோயில்களை இடுத்து விட்டு அந்த ஊர்களுக்கு’ஜனநாதமங்கலம்’ என்று தன்னுடைய பெயரை சூட்டவில்லையா?
சுபதாவர்மன் (கி.பி.1193-1120)என்கிற ‘பார்மரா’ மன்னன் குஜராத்தைத் தாக்கி அங்கிருந்த சமணக் கோயில்களைக் கொள்ளையிடவில்லையா? கஷ்மீர் இந்து மன்னன் ஹர்ஷன் ஆட்சியில் கோயில்களை இடிப்பதற்கென்றே ‘தெய்வங்களை நிர்முலம் செய்கிற அதிகாரி(தேவோத்பத நாயகன்) என்று ஒரு அதிகாரியை நியமித்தார் என்ற ஆதாரபூர்வமான வரலாறு படித்ததில்லை.
மறக்க வேண்டாம் வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே
அம்பூட்டு ஏன்? திருவாரூர் கோவில் திருக்குளத்தை விரிவு செய்ய வேண்டும் என்று எனக் காரணம் சொல்லி அங்கிருந்த சமணக் குடியிருப்பு அழிக்கப்பட்டது குறித்துப் பெரியபுராணத்திலேயே சன்றுகள் உள்ளன. அப்புறம் சமணர்களை கழுமரத்தில் ஏற்றி கொன்றதை வருட வருடம் விழாவாக அதே மாதிரி சமணர்கள் மாதிரி பொம்மைகளை கழுமரத்தில் ஏற்றுகிற வக்கிரத்தை சடங்குன்னு சொல்லுறீங்களே விஷயம் தெரிந்தவன் எனப்பா ஒரு சமூகத்தை கழுமரத்தில் ஏற்றி கொன்றதை விழாவாக எடுக்கிறீர்கள் நாங்கள் கொண்டாட மட்டோம் என்று மறக்காமல் சொன்னல்
உங்களுக்கு ஏண் கோபம் வருகிறது? என்ன பண்ணி தொலைக்கிறது உங்களுக்கு மறந்தது பலருக்கு இன்னும் நினைவில் இருக்கிறதே
ஆனால் நீங்கள் எதையும் மறக்கப்பிடாது? வரலாறு முக்கியம் கஜினி முக்கியம்
//விஷயம் தெரிந்தவன் எனப்பா ஒரு சமூகத்தை கழுமரத்தில் ஏற்றி கொன்றதை விழாவாக எடுக்கிறீர்கள் நாங்கள் கொண்டாட மட்டோம் என்று மறக்காமல் சொன்னல்
Deleteஉங்களுக்கு ஏண் கோபம் வருகிறது? என்ன பண்ணி தொலைக்கிறது உங்களுக்கு மறந்தது பலருக்கு இன்னும் நினைவில் இருக்கிறதே
ஆனால் நீங்கள் எதையும் மறக்கப்பிடாது? வரலாறு முக்கியம் கஜினி முக்கியம்//
ஹைதர் அலி,
நீங்கள் மிகவும் விஷயம் தெரிந்தவர் என தெரிகிறது, பொங்கல் தமிழர் திருநாளா என்பதற்கு வேறு எங்கோ தாவுகிறீர்கள். அப்படியே கீழ் கண்டவையும் நீங்கள் அறிந்த விஷயங்களா எனப்பார்த்து சொல்லுங்கள்.
மேலும் இந்திய மன்னர்கள் , மற்ற மன்னர்களின் கோட்டை, அரண்மன்னைகளை மட்டும் தாக்குவார்கள். கோவில்களை அல்ல என்பது வரலாறு தெரிந்த அனைவருக்கும் தெரியும்.
1)முகரம் என்ற புனித மாதத்திலேயே கர்பலாவில் நடந்த படுகொலைகள், இன்றும் ஷியா பிரிவினர் மட்டம் என்ற பெயரில் கத்தியால் உடலில் அடித்து ரத்தம் சிந்தி நினைவு கூர்கிறார்கள்.
2)திமூர் இந்திய படை எடுப்பில் ஆயிரக்கணக்கில் கொன்றது.
3)அஹமது ஷா அப்தாலி படை எடுப்பில் ஆயிரக்கணக்கில் கொன்றது.
4) தலிபான்கள் இந்த நவீன உலகிலும் பாமியன் புத்த சிலைகளை இடித்தது.
இதையும் கொஞ்சம் பார்த்துட்டு அப்புரமா சமண,புத்த விகாரைகளை இடிச்சது பத்தி பேசுங்களேன்.
The Battle of Karbala :
//The Battle of Karbala took place on Muharram 10, in the year 61 of the Islamic calendar[2] (October 10, 680)[7][8] in Karbala, in present day Iraq. On one side of the highly uneven battle were a small group of supporters and relatives of Muhammad's grandson Husain ibn Ali, and on the other was a large military detachment from the forces of Yazid I, the Umayyad caliph, whom Husain had refused to recognise as caliph. Husain and all his supporters were killed, including Husain's six months old infant son, and the women and children were taken as prisoners. The dead are regarded as martyrs by Shi'ah Muslims, and the battle has a central place in Shi'ah history and tradition, and has frequently been recounted in Shi'ah Islamic literature.//
source: http://en.wikipedia.org/wiki/The_Battle_of_Karbala
ahmad sha abdali's indian invasion:
//Mass of surrendered Maratha soldiers were handcuffed and then murdered, their heads chopped off by Afghans. The Afghan cavalry and pikemen ran wild through the streets of Panipat, killing tens of thousands of Maratha soldiers and civilians.[2][3] The women and children seeking refuge in streets of Panipat were hounded back in Afghan camps as slaves. Children over 14 were beheaded before their own mothers and sisters. Afghan officers who had lost their kin in battle were permitted to carry out massacres of 'infidel' Hindus the next day also, in Panipat and the surrounding area.[23][24] They arranged victory mounds of severed heads outside their camps. According to the single best eye-witness chronicle- the bakhar by Shuja-ud-Daula's Diwan Kashi Raj, about 40,000 Maratha prisoners were slaughtered in cold blood the day after the battle.[2][3][23] According to Mr. Hamilton of Bombay Gazette about half a million Marathi people were present there in Panipat town and he gives a figure of 70,000 prisoners as executed by Afghans.[23] Many of the fleeing Maratha women jumped into the Panipat wells rather than risk rape and dishonour.[24]
Abdali's soldiers took about 22,000 Hindu women and young children and brought them to their camps. The women were raped in the camp, many committed suicide because of constant rapes perpetrated on them. All of the prisoners were exchanged or sold as sex slaves in Afghanistan, transported on bullock carts, camels and elephants in bamboo cages.[24][25]
Siyar-ut-Mutakhirin says : [24][25]“ The unhappy prisoners were paraded in long lines, given a little parched grain and a drink of water, and beheaded... and the women and children who survived were driven off as slaves - twenty-two thousand, many of them of the highest rank in the land.//
source: http://en.wikipedia.org/wiki/Battle_of_Panipat_(1761)
தொடர்கிறது...
Deleteநீங்கள் ரத்தம் தோய்ந்த்த பலிப்பீடத்தில் அமர்ந்துக்கொண்டு ஏதோ சமரச சன்மார்க்க ஞானிப்போல பேசுவதால் தான் இவற்றை பட்டியல் இட்டேன், இன்னும் கூட இருக்கு. தமிழர்ப்பண்டிகையா பொங்கல் என்பதோடு நின்றால் நலம். அப்படி இல்லை எல்லாம் பேசுவோம் என்றாலும் பேசுவோம்.
timur's indian invasion:
// When this order became known to the gházís of Islám, they drew their swords and put their prisoners to death. 100,000 infidels, impious idolaters, were on that day slain. Mauláná Násiru-d dín 'Umar, a counsellor and man of learning, who, in all his life, had never killed a sparrow, now, in execution of my order, slew with his sword fifteen idolatrous Hindus, who were his captives."//
source: http://en.wikipedia.org/wiki/Timur
------------
bamiyan buddha statue destruction:
// the most recent being the internationally condemned deliberate destruction of the two standing Buddha statues in March 2001.//
source :http://whc.unesco.org/en/list/208
அண்ணே வவ்வால் நான் தமிழன் சத்தியமாக ஆங்கிலம் தெரியாது
Deleteஉங்க தலமேலே சத்தியமாக
ஒசியாக கிடைக்குது என்பதற்காக யாருவுட்டு பிளாக்கிலாவது போயி வெட்டி எடுத்து போடுவது தான் சரிதான் ஆனால் எனக்கு புரியவில்லையே என்ன் பன்றது தமிழில் இதே மாதிரியான லிங்குகளை தேடிப்பிடித்து வெட்டிக் கொண்டு வந்து கொட்டவும் கண்டிப்பாக பதில் சொல்லுகிறேன்.
ராசா தமிழ் தமிழ்
//நீங்கள் ரத்தம் தோய்ந்த்த பலிப்பீடத்தில் அமர்ந்துக்கொண்டு ஏதோ சமரச சன்மார்க்க ஞானிப்போல பேசுவதால் தான் இவற்றை பட்டியல் இட்டேன், இன்னும் கூட இருக்கு. தமிழர்ப்பண்டிகையா பொங்கல் என்பதோடு நின்றால் நலம். அப்படி இல்லை எல்லாம் பேசுவோம் என்றாலும் பேசுவோம்.//
Deleteஇருங்கே ராசா சுத்தி ஒரு தடவை பார்த்துக் கொள்கிறேன் மர நாற்காலியில் ஒக்காந்து இருக்கிறேன் ம்ம்ம் தொடருவோம் ராசா
//2)திமூர் இந்திய படை எடுப்பில் ஆயிரக்கணக்கில் கொன்றது.
3)அஹமது ஷா அப்தாலி படை எடுப்பில் ஆயிரக்கணக்கில் கொன்றது.
4) தலிபான்கள் இந்த நவீன உலகிலும் பாமியன் புத்த சிலைகளை இடித்தது.
இதையும் கொஞ்சம் பார்த்துட்டு அப்புரமா சமண,புத்த விகாரைகளை இடிச்சது பத்தி பேசுங்களேன்.//
இவுகள ஒங்க ஆளுதான் துலுக்க மன்னர் என்று சொல்லி ஆரம்பித்து வைத்தார் கவணிக்க
நான் அந்த மன்னர்களை அப்படி விளிக்கவில்லை கவனிக்கவும்
அவுங்கரசீப் நமது தமிழ்நாட்டு குமரகுருபரருக்கு காசியில் நிலம் ஒதுக்கி மடம் கட்டிக் கொடுத்தது.இன்னும் நிறைய முகலாய மன்னர்கள் (கவனிக்கவும் துலுக்க மன்னர்கள் என்று நான் சொல்லவில்லை)கோயில்களுக்கும்
மடங்களுக்கும் நிறைய மானியங்கள் சொத்துக்கள் அளித்ததையும் தாங்கள் மறந்து விட வேண்டும்
//மேலும் இந்திய மன்னர்கள் , மற்ற மன்னர்களின் கோட்டை, அரண்மன்னைகளை மட்டும் தாக்குவார்கள். கோவில்களை அல்ல என்பது வரலாறு தெரிந்த அனைவருக்கும் தெரியும்.//
ஹா ஹா ஹா
.இராசராசன் இலங்கையிலுள்ள அநுராதபுரம்,பொலனருவை ஆகிய இடங்களிலிருந்த புத்தக் கோயில்களை இடுத்து விட்டு அந்த ஊர்களுக்கு’ஜனநாதமங்கலம்’ என்று தன்னுடைய பெயரை சூட்டவில்லையா?
//சுபதாவர்மன் (கி.பி.1193-1120)என்கிற ‘பார்மரா’ மன்னன் குஜராத்தைத் தாக்கி அங்கிருந்த சமணக் கோயில்களைக் கொள்ளையிடவில்லையா? கஷ்மீர் இந்து மன்னன் ஹர்ஷன் ஆட்சியில் கோயில்களை இடிப்பதற்கென்றே ‘தெய்வங்களை நிர்முலம் செய்கிற அதிகாரி(தேவோத்பத நாயகன்) என்று ஒரு அதிகாரியை நியமித்தார் என்ற ஆதாரபூர்வமான வரலாறு படித்ததில்லை.//
அப்ப இதுலாம் என்ன ராசா உற்சாவ திரு விழாவில் சமண பொம்மைகளை
கழுவில் ஏத்துவது விளையாட்டுக்க?
ஆமா நீங்க தசவாதரம் கமல் படம் பார்க்கவில்லையா? சிவனடியார் ஹரி கோயிலுக்குள் நுழைந்து அள்ளி கடலில் போடுவதை வரலாற்று செய்தி ஐயா அது மறக்க வேண்டாம்
ஹைதர் அலி,
Delete//1)முகரம் என்ற புனித மாதத்திலேயே கர்பலாவில் நடந்த படுகொலைகள், இன்றும் ஷியா பிரிவினர் மட்டம் என்ற பெயரில் கத்தியால் உடலில் அடித்து ரத்தம் சிந்தி நினைவு கூர்கிறார்கள்.
2)திமூர் இந்திய படை எடுப்பில் ஆயிரக்கணக்கில் கொன்றது.
3)அஹமது ஷா அப்தாலி படை எடுப்பில் ஆயிரக்கணக்கில் கொன்றது.
4) தலிபான்கள் இந்த நவீன உலகிலும் பாமியன் புத்த சிலைகளை இடித்தது.
இதையும் கொஞ்சம் பார்த்துட்டு அப்புரமா சமண,புத்த விகாரைகளை இடிச்சது பத்தி பேசுங்களேன்.//
சுருக்கமாக தமிழில் சொல்லிவிட்டு ,அதற்கான தரவாகத்தான் ஆங்கில மூலத்தினை வெட்டி ஒட்டியுள்ளேன். இதற்கு மேலும் தமிழ் வேண்டும் என்ற ஆவல் இருக்கும் எனில் அது போலியான தமிழ் ஆர்வமாகவே தோன்றுகிறது.
ஏன் எனில் தமிழர் திருநாள் என்று சொல்லப்ப்டுவதை இல்லை என்று சொல்லத்தான் இந்தப்பதிவே. நீங்களும் இல்லை என்று தான் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். இப்போ மட்டும் தமிழ்... தமிழ் என்றால் எப்படீ :-))
//இதையும் கொஞ்சம் பார்த்துட்டு அப்புரமா சமண,புத்த விகாரைகளை இடிச்சது பத்தி பேசுங்களேன்.//
இவுகள ஒங்க ஆளுதான் துலுக்க மன்னர் என்று சொல்லி ஆரம்பித்து வைத்தார் கவணிக்க//
இப்போ நீங்க என் கூட பேசுறிங்களா அவர்க்கூடவா? அப்போ நானும் அவர் என்ன சொன்னார் பாருங்க இவர் என்ன சொல்லி இருக்கார் பாருங்க என்று சொல்லி ஜல்லி அடிக்க வேண்டியது தான்.
நான் சமண, புத்த விகாரை இடிப்புகளைப்பேசலாம் ஆனால் நீங்க கஜினி முகம்மதை தவிர எல்லாம் ரொம்ப்ப நல்லவங்க என்று சொல்லிக்கொண்டு இருந்ததால் மற்றவையும் சொன்னேன்.
நீங்கள் ஏன் சம்பந்தம் இல்லாமல் புத்த.சமணத்து போகிறீர்கள் என்பதற்காகவே நான் மற்றதை பட்டியலிட்டேன்.
இரட்டை கோபுரத்தில் என்ன அமெரிக்க ஜனாபதியா குடி இருந்தார் போய் இடிக்க என்று கேட்க ரொம்ப நேரம் ஆகாது. இங்கே தமிழர் பண்டிகை குறித்தானா பேச்சு என்பதால். மற்றவை வேண்டாம் என பார்க்கிறேன்.
யாரோ ஒருவர் பதிவின் சாராம்சத்துக்கு ஏற்ப பேசாமல் பேசினால் , இதான் சாக்கு என்று நீங்கள் ஏன் பாய்கிறீர்கள். இப்போது பேசுவது வேறு என்று சொல்ல இயலாதா உங்களுக்கு.
வன்முறை என்று பட்டியல் இட்டால் இரத்தத்தில் வளர்ந்த மதம் தான் அதிகம் சேதம் ஆகும்.
//அவுங்கரசீப் நமது தமிழ்நாட்டு குமரகுருபரருக்கு காசியில் நிலம் ஒதுக்கி மடம் கட்டிக் கொடுத்தது.இன்னும் நிறைய முகலாய மன்னர்கள் (கவனிக்கவும் துலுக்க மன்னர்கள் என்று நான் சொல்லவில்லை)கோயில்களுக்கும்
மடங்களுக்கும் நிறைய மானியங்கள் சொத்துக்கள் அளித்ததையும் தாங்கள் மறந்து விட வேண்டும்//
அமெரிக்காவில் மசூதிகள் கட்ட இடமும், சிறப்பு சலுகையும் அமெரிக்க அதிபர் கொடுத்திருப்பதை நீங்கள் மறக்க வேண்டாம் என்று சொன்னால் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வீர்களா?
அவுரங்க சீப் என்ன இந்திய மன்னரா , அவரே ஆக்ரமிப்பாளார், சொந்த மண்ணின் மைந்தர்களுக்கு அவர்கள் பூமியில் இடம் கொடுத்தார் மறக்காமல் இருங்கள் என்பது என்ன ஒரு கொடுமையான சிந்தனை.
//அப்ப இதுலாம் என்ன ராசா உற்சாவ திரு விழாவில் சமண பொம்மைகளை
கழுவில் ஏத்துவது விளையாட்டுக்க?//
இதுக்கு தானே கர்பலாவில் நடந்த கொலை , மொகரம் அன்னிக்கு ஏன் கத்தியால அடிச்சு ரத்தம் சிந்துறான்ங்க இன்றும், புனித மாதம் மொகரம்லா ஏன் ராசா :-)) கேட்டேன் பதிலே இல்லை.
//ஆமா நீங்க தசவாதரம் கமல் படம் பார்க்கவில்லையா? சிவனடியார் ஹரி கோயிலுக்குள் நுழைந்து அள்ளி கடலில் போடுவதை வரலாற்று செய்தி ஐயா அது மறக்க வேண்டாம்//
ஆகக்கூடி உங்களுக்கு ஒரு நடிகர் தான் முன்னுதாரணம் :-)) அவர் காட்டுவது தான் வரலாறு.சரி உன்னைப்போல் ஒருவன் நீங்க பார்க்கலையா , சிறுப்பான்மையினர் தீவிரவாதம் செய்தால் கொல்ல சொல்கிறார். படம் பார்த்துட்டு அதுல வருவது உண்மைனு கிளம்பினா இப்படி தான் ஆகும்.
@ ஹைதர் அலி
Deleteமாஷா அல்லாஹ்.. எவ்வளவு அடுக்கடுக்கான தகவல்கள் கொடுத்திருக்கீங்க சகோ!
// தமிழில் இதே மாதிரியான லிங்குகளை தேடிப்பிடித்து வெட்டிக் கொண்டு வந்து கொட்டவும் கண்டிப்பாக பதில் சொல்லுகிறேன்//
:-)))))
//இருங்கே ராசா சுத்தி ஒரு தடவை பார்த்துக் கொள்கிறேன் மர நாற்காலியில் ஒக்காந்து இருக்கிறேன்//
ஹஹ்..ஹா..ஹா.. தொடர்ச்சியான காமெடிகள் :))))
சகோ வவ்வாலு,
ReplyDeleteநீங்க நாத்து நடுவதை பத்தி பேசிகிட்டு இருக்கீங்க. நான் அரிசியை பற்றிகூட பேசவில்லை. சமைத்த உணவை பற்றி பேசுகிறேன். நீங்கள் நாற்று நடும்பொழுது சாமி கும்பிட்டால் அந்த உணவை சாப்பிடாதீர்கள் என்று இஸ்லாம் கூறவில்லை சகோ. பிற தெய்வங்களுக்கு படைத்த உணவை சாப்பிடாதீர்கள் என்று தான் கூறுகிறது. இஸ்லாம் என்ன சொல்கிறதோ அதுதான் எங்களுக்கு முக்கியம். மற்றவர்களின் லாஜிக் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை சகோ.
மேலும், இன்று கோவி கண்ணனின் தளத்தில் நான் இட்ட பதிலின் ஒரு பகுதியை இங்கு மீழ் பதிவு செய்ய விரும்புகிறேன். நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புவதாலே இங்கே பதிவிடுகிறேன்.
"இஸ்லாமியர்கள் இறைவனை தவிர வேறு யாரையும் வணங்க மாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்தது. பொங்கல் அன்று இயற்கையை வணங்குவோம் என்று நீங்களே கூறுகிறீர்கள். அப்புறம் பொங்கல் கொண்டாட வர வில்லை என்று கோபப்படுகிறீர்கள். உங்களைப் பொறுத்தவரை உணவு இயற்கை கொடுத்தது, அதனால் அதை வணங்குகிறீர்கள். எந்த தவறும் இல்லை. தாராளமாக வணங்குங்கள். எங்களை பொறுத்தவரை உணவு மற்றும் அனைத்தும் இறைவன் கொடுத்தது, ஆகவே அவனுக்கு ஒவ்வொரு முறை சாப்பிடும் பொழுதும் நாங்கள் நன்றி செலுத்துகிறோம். உணவு கிடைத்ததற்காக தனியாக ஒரு நாளில் நன்றி சொல்லும்படி இஸ்லாம் சொல்லவில்லை, ஆகவே நாங்கள் பொங்கல் கொண்டாடவில்லை. அறியாமல் இருப்பவர்களுக்காகத் தான் இந்த விளக்கம். மற்றபடி விதாண்டவாதம் செய்பவர்களுக்கு என்னுடைய பதில், நீங்கள் கொண்டாடுவதால் நாங்கள் கொண்டாட முடியாது. யாருக்கு நன்றி செலுத்துவது என்பது எங்களைப் பொறுத்தது, அதை நீங்கள் திணிக்க முடியாது."
சகோ.சிராஜ்,
Deleteநான் முன்னரே கேட்டக்கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை,
தொழிலாளர் தினத்த்தில் ஒரு தொழிலாளியாக பங்கெடுப்பீர்களா?
தை ஒன்றை பொங்கல் என்று மட்டும் பார்க்காமல் தமிழ்ப்புத்தாண்டு என்றாவது எடுத்துக்கொள்வீர்களா?
தை -1 இல் திருவள்ளுவர் தினம், உழவர் தினம் என்றாவது ஏற்பீர்களா?
பிறகு உங்கள் கேள்விகளுக்கு போகலாம்.
@ வவ்வால்....
Deleteஉங்கள் கேள்விக்கு எல்லாம் அவர் சொல்லும் பதில் அப்புறம்...
முதலில்,
என் கேள்விக்கு பதில் சொல்லுங்க வவ்வால்....
இந்த 'வவ்வால்' என்ற பெயர் உங்க அப்பா அம்மா வெச்ச இயற்பெயரா...
இல்லே...
நீங்க ஒரு கேள்வி கேட்டா அதுக்கு ஒருத்தர் ஒரு பதில் குடுத்தா...
அதைக்கண்டுக்காம, "இதுக்கு பதில் சொல்லு... அப்புறம் கேளுன்னு வேறு கேள்விக்கு பறந்து தாவுவது.. அதுக்கு பதில் சொன்னா... வேற கேள்வி கேட்டு "முதலில் இதுக்கு பதில் சொல்லுன்னு..." புதுக்கேள்விக்கு பறந்து தாவுறது...---போன்ற பறந்து பறந்து தாவும் செயல்களினால் நீங்களே உங்கள் இயல்புக்கு ஏற்ற "மிகச்சரியான பெயரை" தேர்ந்த்டுத்து பொருத்தமாக வைத்துக்கொண்டீர்களா...?
பிளீஸ் ஆன்சர் மீ... இதுக்கு பதில் தெரியாம... தூக்கமே வர மாட்டேங்கு வவ்வால்...
சகோ வவ்வால்,
Delete/* தை -1 இல் திருவள்ளுவர் தினம், உழவர் தினம் என்றாவது ஏற்பீர்களா? */
தாராளமாக ஏற்பேன்... இதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் விசேஷமாக எதுவும் செய்ய மாட்டேன்.
இதுவரை தொழிலாளர் தினம் நான் கொண்டாடியது இல்லை. அவ்வளவு ஏன், எனக்கு இரு பிள்ளைகள். இரண்டு பிள்ளைகளுக்கும் சேர்த்து இதுவரை 7 பிறந்த நாட்கள் வந்து உள்ளன. ஒரு தடவை கூட நான் கொண்டாடியது இல்லை.
இப்பொழுது சென்னை புத்தகக் கண்காட்சிக்கு செல்கிறேன்... முடிந்தால் நாளை சந்திக்கலாம் வவ்வால்.
Delete//வவ்வால்Jan 16, 2012 03:44 AM
Deleteசகோ.சிராஜ்,//
ஆஷிக்,
நான் 3.44 க்கு சகோ.சிராஜிடம் கேள்விக்கேட்டுள்ளேன், அப்போது உங்கள் கேள்விகள் வந்திருக்க கூட இல்லை. நீங்கள் கேள்விக்கேட்ட நேரம் 4.58 ஆகும், நான் எப்பை உங்களுக்கு முன் கூட்டியெ பதில் அளிக்க முடியும். இதில் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் இருப்பதாக குற்றம் வேறு சாட்டுகிறீர்கள். என்ன நேரம் என்பதை காபி & பேஸ்ட் செய்து போட்டுள்ளேன். பதிவிலும் இருக்கு பார்த்துக்கொள்ளலாம். இது என் பதிவும் அல்ல நான் ஏமாற்ற :-))
//~முஹம்மத் ஆஷிக் citizen of world~Jan 16, 2012 04:58 AM
கரெக்ட்..! அதானே..? சரியான கேள்வி..!
உங்களை மாதிரி ஆளைத்தான் தேடினேன்..!
இனி நீங்களே பதில் சொல்லுங்க..!//
////@ வவ்வால்....
உங்கள் கேள்விக்கு எல்லாம் அவர் சொல்லும் பதில் அப்புறம்...
முதலில்,
என் கேள்விக்கு பதில் சொல்லுங்க வவ்வால்....//
எடுத்ததுமே குற்றம் சாட்ட வேண்டும் என்றே , அர்த்தமே இல்லாமல் பேசுவதற்கு பதில் வேறு வேண்டுமா? அப்புறம் இங்கே தான் ரிப்ளை வசதி இருக்கு, என் கமெண்டில் ரிப்ளை எனப்போடாமல் அனானி கமென்டில் போய் ரிப்ளை கொடுத்து வைக்குறிங்க :-))
சிராஜிடம் கேட்ட கேள்விகள் எதுவும் புதிதல்ல, முதல் பின்னூட்டத்திலேயே கேட்கப்பட்டவை அதற்கு பதில் சொல்லாமல் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் சொன்னதால் மற்றவைக்கு என்ன என்று கேட்க தானே செய்வாங்க.
------------
//இந்த 'வவ்வால்' என்ற பெயர் உங்க அப்பா அம்மா வெச்ச இயற்பெயரா...//
நீங்க இப்படித்தான் விதண்டாவாதமா பேசணும்னு ஆசைப்பட்டா அதுக்கும் நான் தயார். ஆனால் முன் என்ப்பதிவில் வாங்கிக்கட்டிக்கொண்டது போல ஆகிடும் :-))
இது நானா வச்சுக்கிட்ட பெயர். சரியா.
இப்போ சிட்டிசன் ஆப் வோர்ல்ட் னு போட்டுக்கிறிங்களே , அது நீங்க படிச்சு வாங்கின பட்டமா. இல்லை உங்க பாஸ்ப்போர்ட்ல நாடு பேரு இல்லாம இப்படித்தான் போட்டு வாங்கினிங்க இல்லை வாங்குவிங்க :-))
பேரப்பத்தி எல்லாம் விமர்சிக்கும் முன்னர் கொஞ்சம் உங்க லட்சணத்தையும் பாருங்கய்யா :-))
நீங்க கேட்டக்கேள்விக்கு எல்லாம் ஒரே பதில் ,ஒவ்வொரு பருக்கையிலும் உண்பவர் பெயர் இருக்கும் என்று ஏன் நம்புகிறார்கள், வெங்காயம், வெள்ளைப்பூண்டை எல்லாம் சேர்க்கவில்லை.
விதண்டாவாதம் தான் செய்ய விருப்பம் எனில் செய்யலாம் வாங்க. :-)
//வவ்வால்Jan 16, 2012 08:38 AM//
Deleteவவ்வால்களை பத்தி சொல்லனும்னா நிறைய இக்கிது. ஒரு லட்சம் பாலூட்டிகள் இந்த உலகில் இருந்ததாகவும் அவற்றில் பெரும் பகுதி அழிந்துவிட்டதாகவும் தற்போது 4000 பாலூட்டிகள் மாத்திரமே உள்ளதாகவும் கூறுகின்றார்கள். மேலும் இவற்றின் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருவதாகவும் இன்னும் ஒன்றிரண்டு தலைமுறைக்கு பிறகு பல உயிரினங்களை உயிரியல் கண்காட்சிகளில் மாத்திரமே காணக்கூடிய நிலை ஏற்படும் என்றும் திட்ட வட்டமாக கூறுகின்றார்கள். ஏனென்றுச் சொன்னால் பல விலங்குகளின் நிலை விரல் விட்டு எண்ணக்கூடிய நிலையில் இருப்பதே இதற்குச் சான்றாகும். இந்த எண்ணிக்கையில் உள்ள பாலூட்டிகளில் ஏறக்குறைய நான்கில் ஒருபகுதி இனங்களைக் கொண்டது. தங்கள் உடல் எடையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக் உண்ணக்கூடிய அதிசயத்திலும் அதிசயம். வவ்வால்கள் பொதுவாக ஒரு சமுதாயமாக கூடி வாழுகின்றன. ஒரு கூட்டத்தில் 2000க்கம் மேற்ப்பட்ட வவ்வால்கள் வாழுகின்றன. இவைகள் வருடம் முழுதும் தங்களுக்கு உணவுத்தட்டுபாடின்றி கிடைக்கக்கூடிய இடங்களை தேர்வு செய்து வாழுகின்றன.
உங்களுக்கெல்லம் மன்டைய கசகி சொல்லி புரிய வெக்கமுடியது
ஹா...ஹா...ஹா...
Deleteசகோ.வவ்வால்... ஒரு கேள்வி கேட்டா என்னன்னவோ சொல்றீங்க...
நான் உங்களிடம் கேட்டதுதான் முதல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் கேள்வி..!
வவ்வால் காரணப்பெயர் பற்றி. ஏனென்றால், உங்கள் பெற்றோருக்கு என் பாராட்டு சென்று விடக்கூடாது அல்லவா..?
பாராட்டு: இயல்புக்கேற்ற சரியான பெயரை தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டதற்கு வாழ்த்துகள்..! அவ்ளோதான் என் நோக்கம். ஓவர்.
அப்புறம்தான் உங்களின் இந்த தேவையற்ற காமெடி அரங்கேற்றம்....
//உங்கள் கேள்விக்கு எல்லாம் அவர் (இவர் சிராஜ்) சொல்லும் பதில் அப்புறம்...
முதலில்,
என் கேள்விக்கு பதில் சொல்லுங்க வவ்வால்....(இது அடுத்து நான் கேட்க இருந்த வவ்வால் பெயர்க்காரணம் பற்றி)//
ஆனால்...
'எங்கப்பர் குதிருக்குள் இருக்கார்' னே சொல்லிட்டது போல...
'நீங்கள்தான் அந்த Anonymous Jan 15, 2012 08:17 AM' என்று,
நீங்களாக முன் வந்து மூக்கு வேர்த்து உளறிக்கொட்டிய பின்னர் தெரிஞ்சிக்கிட்டேன்.
எனவே....
அந்த மூன்று கேள்விகளுக்கும் நீங்கள் அனானியாகவே வந்து பதில் சொல்லலாம் என்ற சலுகை உங்களுக்கு அளிக்கப்படுகிறது..!
கூடவே...///நீங்க கேட்டக்கேள்விக்கு எல்லாம் ஒரே பதில் ,ஒவ்வொரு பருக்கையிலும் உண்பவர் பெயர் இருக்கும் என்று ஏன் நம்புகிறார்கள், வெங்காயம், வெள்ளைப்பூண்டை எல்லாம் சேர்க்கவில்லை.///...இந்த மூன்று வரிகளுக்கு விளக்கவுரை தெளிவுரையுடன்.
//முன் என்ப்பதிவில் வாங்கிக்கட்டிக்கொண்டது போல ஆகிடும்//---யாரு...நீங்கதானே..? அங்கே நீங்க பதிலே சொல்லாமே தவ்வி பறந்து எஸ்கேப் ஆனமாதிரி இங்கேயும் தவ்வி பறந்து நழுவிட வேண்டாம் இம்முறை..!
என்னுடைய பெயர்க்காரணம்...
Delete"ச்சே... என்னப்பா... இதுவரை யாருமே கேட்கலயே இதைப்பத்தி"ன்னு எனக்கு பயங்கர கவலை... கடைசியா நீங்கதான் சூப்பரா கேட்டுட்டீங்க, ரொம்ப தாங்க்ஸ் சகோ.வவ்வால். அதுக்கு ஒரு தனிப்பதிவு போடும் அளவுக்கு பெரிய பதில் இருக்கு. இறைநாடினால் கூடிய விரைவில் என் வலைப்பூவில்.... உங்களுக்காக அந்த ஸ்பெஷல் பதிவு வரும்..!
@ ~முஹம்மத் ஆஷிக் citizen of world~
Delete// என்னுடைய பெயர்க்காரணம்...
...... அதுக்கு ஒரு தனிப்பதிவு போடும் அளவுக்கு பெரிய பதில் இருக்கு. இறைநாடினால் கூடிய விரைவில் என் வலைப்பூவில்.... உங்களுக்காக அந்த ஸ்பெஷல் பதிவு வரும்..! //
பெரிய பதிலா..? ஆவலா எதிர்ப்பார்க்கிறோம் சகோ :) விரைவில் இன்ஷா அல்லாஹ் பதிவிடுங்க. தங்களின் வருகைக்கும் அறிவார்ந்த கேள்விக் கணைகளுக்கும் மிக்க நன்றி. (ஜஸாகல்லாஹ் ஹைரா!)
முஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை, மாற்று மதத்தினரை வெறுப்பவர்கள் என்பது போல் நிரூபிக்க வருகிறார்கள் சிலர் . நான் இது பற்றி முடிந்தால் ஒரு பதிவிடுகிறேன், இருந்தாலும் இன்று ஒரு சவால். உலகில் உள்ள எந்த மனிதனை வேண்டுமென்றாலும் கூட்டி வாருங்கள், அவன் என்ன ஜாதி, மதம், நாடு, மொழி மற்றும் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் அவனுடன் எனது நாளை மதியவுணவை ஒரே தட்டில் சாப்பிடுகிறேன், அவர் கையால் பிசைந்து ஊட்டி விடுவதை நான் சாப்பிடுகிறேன். எதிர் குரூப் அவ்வாறு செய்யத் தயாரா??? பார்த்துவிடுவோம் யாருக்கு சகிப்பு தன்மை அதிகம் என்று.யார் மனிதனை மனிதனாய் மதிப்பவர்கள் என்று.
ReplyDelete@ சிராஜ்
Delete//முஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை, மாற்று மதத்தினரை வெறுப்பவர்கள் என்பது போல் நிரூபிக்க வருகிறார்கள் சிலர் . நான் இது பற்றி முடிந்தால் ஒரு பதிவிடுகிறேன்//
இஸ்லாமியர்கள் மீது தவறுதலான புரிதல் கொண்டவர்கள் சிலர் இருந்தாலும், வேண்டுமென்று தவறான குற்றச்சாட்டுகளைச் சொல்லி, சொல்லியே மக்களிடத்தில் வெறுப்பேற்ற முயற்சி செய்பவர்களே அதிகம். அதனால் இன்ஷா அல்லாஹ், கண்டிப்பாக பதிவிடுங்க சகோ. தங்களின் வருகைக்கும், அறிவார்ந்த கருத்துக்களுக்கும் மிக்க நன்றி. (ஜஸாகல்லாஹ் ஹைரா!)
//அப்புறம் இஸ்லாமிய மதமே அன்னிய மதம் தானே. இஸ்லாம் திருட கூடாதுன்னு சொல்லுது./ஆனா வந்தேறி துலுங்க மன்னர்கள் இந்து கோயில்களை இடித்து கொள்ளை அடித்து மக்களை துண்புறுத்தியது எல்லாம் மறந்து போகனுமா? மத நல்லிணக்கம் என்பது ஒன்று இருக்கிறது அது என்ன வென்றால் உன் சுதந்திரம் உன் முகத்தின் மூக்கு வ்ரை தான் என்பதே//
ReplyDeleteதிருவிதாங்கூர் சமஸ்தானம் கோவில்ல திப்பு சுல்தான் காலத்து தங்க நாணயம் 70 கிலோ, பிரெஞ் நாட்டு தங்க நாணயம் 50 கிலோ எப்படி வந்தது இதிலிருந்து புரியலா ஊரை கொள்ளை அடித்து உலையில் போட்ட களவாணி யாருன்னு ஆப்வே வெள்ளைகார கமுனட்டியோட குஜாவை துக்கனா அயல்நாட்டு தேசபத்திக்கள் இவனங்கெல்லாம் பிரதமர், முதலைமைச்சுர் ஆனா கூவியே வித்தேபோடுவா, இவனங்கெலே குன்டு வெப்பா, இப்போ நாட்டை சினாவுக்கு விலை பேசரனுங்கா, கம்பத்தல பாக்ஸ்த்தான் கொடி ஏத்தரனங்கா. என்னைக்குமே இந்திய கொடி மட்டும் ஏத்தமட்டதா கேடி பயா புல்லா. எப்படிதா புரியலா எப்பவுமே கொள்ளபுறத்தல வரங்க இந்தியவுக்கு வந்தாதே அப்படிதானே ஊருக்குள்ளே ரொம்பா நல்லவனுங்கே
//தமிழர்ப்பண்டிகையா பொங்கல் என்பதோடு நின்றால் நலம். அப்படி இல்லை எல்லாம் பேசுவோம் என்றாலும் பேசுவோம்.//
ReplyDeleteஎன்னது இது சின்னபுள்ளத்தனமால்ல இருக்கு ..... ஆரம்பிச்சுவச்சது நீங்க...
திரும்பவும் முதல்ல இருந்தா...???... :-))))).
இன்னும் ஒரு எதிர் கேள்வி கேட்டு நிறைய பதில் கிடைக்க வைத்த சகோ வவ்வாலுக்கு ந்ன்றி :-)
இப்படி அனைத்து காரணிகளுக்கும் அனைத்து விளைச்சளுக்கும் மூல காரணியாக இருக்கும் இறைவனுக்கு நன்றி சொல்லி, எந்த ஒரு உணவையும், உணவுத்துகளையும் வாய்க்குள் போட்டால், இறைவனின் கருணையை போற்றி நன்றி கூறி, "இறைவனின் பெயரால்..." என்று சொல்லி சாப்பிட ஆரம்பிக்கும் முஸ்லிம்கள்... ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும்... அருந்தும்போதும்... நித்தம் நித்தம் தினம் தினம் பொங்கல் கொண்டாடி மகிழ்கின்றனரே..!!! ஆண்டின் 366 நாளும்... ஒரு நாளில் பல முறையும் பொங்கல் பண்டிகை கொண்டாடும் முஸ்லிம்களை எதற்கு 'ஒரே ஒருநாள் மட்டும் பொங்கல் கொண்டாடினால் போதும்' என்று சிறுமைபடுத்துகிறீர்கள்..?
ReplyDeleteமற்ற அனைத்து தமிழ் மக்களும்...
முஸ்லிம்களை பின்பற்றி, ஆக அனைத்துக்கும் மூலகாரணியான இறைவனுக்கு மட்டுமே நன்றி சொல்லி...
முஸ்லிம்கள் பாணியில் ஆண்டுக்கு ஒரு முறை அல்லாமல்,
தினமும் பலமுறை பொங்கல் கொண்டாடி... மகிழலாமே...?///
மாஷா அல்லாஹ் நடுநிலையாலர்களுக்கு இந்த பதில் போதுமானது.
@ முஸ்லிம்
Deleteநடுநிலையாளர்கள் இதற்கு முன்பே தெளிவுபெற்றிருப்பார்கள் என நினைக்கிறேன் சகோ. விதண்டாவாதம் பண்ணுகிறவர்களுக்கு சகோதரர்களின் பதில்கள் மூலம் தெளிவு கிடைத்தால் சரிதான் :) நன்றி சகோ.
@ முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்
ReplyDelete//தங்களின் கேள்விகள் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள்போல் வாவ்.....வாவ்....வரே...வாவ்...///
சகோ முஹம்மத் ஆஷிக், சகோ சிராஜ், சகோ ஹைதர் அலி மற்றும் அறிவுப்பூர்வமான வாதங்களையும், சிந்திக்கத்தூண்டும் கருத்துக்களையும் எடுத்துவைக்கும் அனைவருக்கும் இறைவன் கல்வி ஞானத்தை மென்மேலும் அதிகப்படுத்திக் கொடுப்பானாக! சிறந்த நற்கூலிகளைக் கொடுப்பானாக! உங்கள் வருகைக்கும் நன்றி சகோ.
@ ஜெய்லானி
ReplyDelete//என்னது இது சின்னபுள்ளத்தனமால்ல இருக்கு ..... ஆரம்பிச்சுவச்சது நீங்க...
திரும்பவும் முதல்ல இருந்தா...???... :-)))))//
:)))))))) நன்றி சகோ :))))))
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDeleteநல்ல பதிவு!
இந்தாலும் வழக்கம்போல் லேட்டு...
ஹி ஹி ..
கருத்து பரிமாற வாய்ப்பிருந்தால் இன்ஷா அல்லாஹ் தொடர்கிறேன்...
@ G u l a m
Deleteவஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்
//நல்ல பதிவு!
இந்தாலும் வழக்கம்போல் லேட்டு...
ஹி ஹி ..//
பரவாயில்ல சகோ. லேட்டானாலும் வருகை தந்தமைக்கு நன்றி :)
//கருத்து பரிமாற வாய்ப்பிருந்தால் இன்ஷா அல்லாஹ் தொடர்கிறேன்...//
இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா வந்து தொடரலாம் :)
@ சிராஜ்
ReplyDeleteஸலாம் சகோ.
முஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை, மாற்று மதத்தினரை வெறுப்பவர்கள் என்பது போல் நிரூபிக்க வருகிறார்கள் சிலர் . நான் இது பற்றி முடிந்தால் ஒரு பதிவிடுகிறேன், இருந்தாலும் இன்று ஒரு சவால். உலகில் உள்ள எந்த மனிதனை வேண்டுமென்றாலும் கூட்டி வாருங்கள், அவன் என்ன ஜாதி, மதம், நாடு, மொழி மற்றும் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் அவனுடன் எனது நாளை மதியவுணவை ஒரே தட்டில் சாப்பிடுகிறேன், அவர் கையால் பிசைந்து ஊட்டி விடுவதை நான் சாப்பிடுகிறேன். எதிர் குரூப் அவ்வாறு செய்யத் தயாரா??? பார்த்துவிடுவோம் யாருக்கு சகிப்பு தன்மை அதிகம் என்று.யார் மனிதனை மனிதனாய் மதிப்பவர்கள் என்று.
சரியான நெத்தியடி!
சகோ.சிராஜ்! நீங்கள் மட்டுமல்ல, எந்த ஒரு முஸ்லிமும் ஒரே தட்டில்
-சகிப்புதன்மையோடு அல்ல- சகோதர வாஞ்சையோடு சாப்பிட தயாராக இருக்கிறார்கள் என்பதையும் அவர்களுக்கு அறிய தாருங்கள்
தமிழ் இஸ்லாமியருக்கு இருக்கும் தெளிவு கேரளத்துல இல்லைங்க. 4 நாள் லீவு போட்டுப் போய் ஓணம் கொண்டாடிட்டு வராங்கே. கொஞ்சம் எடுத்துச் சொல்லக்கூடாதா?
ReplyDeleteஅப்புறம் அரபி கத்துகிட்டு சவூதி போயிட்டா எல்லாரும் மகிழ்ச்சியா இருக்கலாம் பாருங்க.
@ Gujaal
Delete//தமிழ் இஸ்லாமியருக்கு இருக்கும் தெளிவு கேரளத்துல இல்லைங்க. 4 நாள் லீவு போட்டுப் போய் ஓணம் கொண்டாடிட்டு வராங்கே. கொஞ்சம் எடுத்துச் சொல்லக்கூடாதா?
அப்புறம் அரபி கத்துகிட்டு சவூதி போயிட்டா எல்லாரும் மகிழ்ச்சியா இருக்கலாம் பாருங்க//
தமிழ் இஸ்லாமியர்கள் தெளிவா இருக்காங்கன்னு சொல்லவாவது உங்களுக்கு மனம் வந்ததே... அதுக்கே உங்களை நிச்சயம்(?) பாராட்டணும் சகோ. ஆனாலும் கேரள இஸ்லாமியர்கள் அரபி கத்துக்கிட்டு சவூதி போறதுக்கு முன்னாடி நாங்க மலையாளம் கத்துக்கிட்டு வந்துடுறோம் இருங்க! ஏன்னா இஸ்லாமியர்கள் நாட்டைவிட்டுப் போனால் மகிழ்ச்சியா இருக்கலாம்னு பகல்கனவு காண்கிற உங்களைப் போன்றவர்களைப் பற்றி கொஞ்சம் அவங்களுக்கு எடுத்துச் சொல்லணும்ல.. அதுக்குதான்!
அய்யா குஜாலு,
Deleteபொங்கல் முடிந்து அடுத்த பொங்கலே வரப்போகுது, இப்ப வந்து இந்த கேள்விய கேட்டுகிட்டு இருக்கீங்க. பொங்கலுக்கு அடிச்சிட்டு மட்டையாகி இப்பதான் தெளிஞ்சிங்களா????
கவலையே படாதீங்க, சகோ அஸ்மா சொன்ன மாதிரி முதலில் மலையாளம் கத்துகிட்டு ஓணம் கொண்டாட்ரவங்கள திருத்த முயற்சி பண்றோம். யாரோ 4 முஸ்லிம் பண்ணா அதெல்லாம் இஸ்லாமிய சட்டம் ஆகிடாது ராசா. எத கொண்டட்ரதுன்னு எங்களுக்கு தெரியும், நீங்க போய் உங்களுக்கு உண்டானத தண்ணி அடிச்சிட்டு கொண்டாடுங்க.
குஜாலு,
Deleteஅப்படியே முல்லை பெரியாறு விசயத்தில் கேரளத்துக் காரனுக்கு இருக்கும் பொறுப்பு தமிழனுக்கு இல்லைன்னு சொன்னா அய்யா ஏத்துக்குவீன்களா ?????
@ vadai
Delete//அய்யா குஜாலு,
பொங்கல் முடிந்து அடுத்த பொங்கலே வரப்போகுது, இப்ப வந்து இந்த கேள்விய கேட்டுகிட்டு இருக்கீங்க. பொங்கலுக்கு அடிச்சிட்டு மட்டையாகி இப்பதான் தெளிஞ்சிங்களா????//
:)))))
// யாரோ 4 முஸ்லிம் பண்ணா அதெல்லாம் இஸ்லாமிய சட்டம் ஆகிடாது ராசா. எத கொண்டட்ரதுன்னு எங்களுக்கு தெரியும்//
பொட்டுல அடிச்ச மாதிரி பதில் :) எவ்வளவு சொன்னாலும் புரிந்துக் கொள்ளாத மாதிரியே ஆக்ட் பண்ணிக் கொண்டிருந்தா இப்படியும் பதில் சொல்லும்படி ஆகிவிடுகிறது. என்ன செய்ய..
//குஜாலு,
அப்படியே முல்லை பெரியாறு விசயத்தில் கேரளத்துக் காரனுக்கு இருக்கும் பொறுப்பு தமிழனுக்கு இல்லைன்னு சொன்னா அய்யா ஏத்துக்குவீன்களா ?????//
:-)) நன்றி சகோ :)
பல வரலாற்று தகவல்கள் உங்கள் பதிவிலும் பின்னூட்டங்களிலும் தெரிந்து கொண்டேன். வவ்வால் பற்றிய (அட பறவையைப் பற்றி சொன்னேன்) தகவல் அல்லாஹ்வின் மகத்துவத்தை மேலோங்கச் செய்கிறது...மாஷா அல்லாஹ்... இடையிடையே சில பல சிரிப்புவெடிகள் (எ.கா. இஸ்லாம் புதுசா முளைத்த மதம் என்ற கண்டுபிடிப்பு, ஆஷிக்கின் கவலை தீர்ந்த விதம்). மாற்று மத சகோதரர்கள் எதில் ஒற்றுமையா இருக்காங்களோ இல்லையோ நம்மள சவூதிக்கு துரத்தரதிலேயே கவனமா இருக்கறாங்கப்பா...ஹையோ ஹையோ
ReplyDeleteஆனால் எத்தனை முறை மீள்பதிவுகள் போட்டாலும் இதே கேள்விகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். இன்ஷா அல்லாஹ் பதில்களும் வந்துகொண்டேயிருக்கும்.
நல்ல பதிவு அஸ்மா...வாழ்த்துக்கள்.
@ enrenrum16...
Delete//மாற்று மத சகோதரர்கள் எதில் ஒற்றுமையா இருக்காங்களோ இல்லையோ நம்மள சவூதிக்கு துரத்தரதிலேயே கவனமா இருக்கறாங்கப்பா...ஹையோ ஹையோ//
'மாற்று மத சகோதரர்கள்' என எல்லோரையும் அப்படி சொல்லிவிட முடியாதுமா! எண்ணங்கள் சரியில்லாத சிலர்தான் இப்படி சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்.
//ஆனால் எத்தனை முறை மீள்பதிவுகள் போட்டாலும் இதே கேள்விகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். இன்ஷா அல்லாஹ் பதில்களும் வந்துகொண்டேயிருக்கும்//
:)) அவர்கள் தெளிவடையும்வரை நாமும் விளக்கம் சொல்லிக் கொண்டே இருப்போம். இன்ஷா அல்லாஹ் என்றாவது ஒருநாள் இஸ்லாத்தின் சரியான கொள்கையைப் புரிந்துக் கொள்வார்கள்.
நீண்ட நாட்களுக்குப் பின் வருகைத் தந்தமைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி பானு :)
விரும்பினால் இதையும் கவனத்தில் கொள்ளுங்கோ..
ReplyDeletehttp://www.thamilnattu.com/2012/02/blog-post_05.html
சாரி அஸ்மா நானும் அனைவரையும் நினைத்து குறிப்பிடவில்லை... உங்கள் பதிவில் வீண்விவாதம் செய்தவர்களைப் பற்றி மட்டுமே சொல்லியிருந்தேன்.
ReplyDelete//சாரி அஸ்மா நானும் அனைவரையும் நினைத்து குறிப்பிடவில்லை... உங்கள் பதிவில் வீண்விவாதம் செய்தவர்களைப் பற்றி மட்டுமே சொல்லியிருந்தேன்.//
Deleteநீங்கள் சொல்ல வந்தது எனக்கு புரிந்தது பானு :) ஆனாலும் உங்கள் கருத்தில் அப்படியொரு புரிதலும் உள்ளது என்பதால் சொன்னேன், வேறொன்றுமில்லை :)
இந்தப் பதிவில் வீண்விவாதம் செய்தவர்கள் போன்று வெளியிலும் இருக்கிறாங்கபா..! ஒருத்தவங்க சொல்றதைப் பார்த்து அது சரியா, நியாயமா, உண்மையான்னு சுயமா யோசிக்காம 'ஆமா சாமி' போடுறவங்க அவங்க. அப்படிப்பட்டவங்களுக்கு நம்மை விரட்ட அருகதை இல்லைன்னு அவங்க புரிஞ்சிக்கிட்டா சரிதான் :)
நான் ஈழத்தை (இலங்கை ) சேர்ந்த கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் தமிழன் .நாங்கள் எங்கட தொழுகை கூடத்தில (சேர்ச் ) தை பொங்கல் கொண்டாடுறோம் .பொங்கல் என்பது ஒரு நன்றி திருவிழா ,ஆதாவது இந்துக்கள் சூரியனை தங்கள் இறைவன கொண்டு கொண்டாடுகிறார்கள் .கிறிஸ்தவர்களாகிய நாங்கள் ஏக இறைவனாகிய இயேசுவுக்கு நன்றி கூறி கொண்டாடுகிறோம் .
ReplyDelete