Saturday 29 October 2011
Monday 17 October 2011
Saturday 8 October 2011
மரணத்தை நோக்கும் மலர்கள்!
குளிர் பிரதேசமான இங்கு(ஃபிரான்ஸில்), கோடை காலம்தான் "வசந்த காலம்" என போற்றப்படும். வசந்தமான அந்த கோடை காலத்தில் நான்கைந்து மாதங்களாக வீட்டைச்சுற்றி முகம் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த மலர்கள், குளிர்காலத்தின் வருகையால் மரணத்தை எதிர்நோக்கியுள்ளன. குளிர் காற்றிலும், பனிப் பொழிவிலும் வாடி, வதங்கி இறக்கும் முன் மாநகராட்சி ஆட்களே முன்கூட்டி வந்து அவற்றையெல்லாம் பிடுங்கிவிடுவார்கள். (கருணைக் கொலையோ, என்னவோ..?) அதனால் அவர்களை நாம் முந்திக் கொள்வோம் என்று நம் கேமராவுக்குள் அந்த மலர்களைக் குடியேற்றி, இணையத்தில் வாழவைக்க எடுத்த முயற்சி இது :)
இறைவனின் படைப்பில்தான் எத்தனை, எத்தனை கோடிகள்! அந்த கோடியில் ஒன்றான மலரில்தான் எத்தனை, எத்தனை வண்ணங்கள், வகைகள்!! அதன் நறுமணத்திலும் பலப்பல விதங்கள்!!! இவற்றில் நீங்கள் ஏற்கனவே பார்த்த வகைகளும் இருக்கலாம். நீங்கள் பார்க்காதவைகளும் இருக்கலாம். இறைவன் ஏற்படுத்தித் தந்துள்ள இவற்றின் அழகை நாம் மட்டும் ரசிக்காமல் மற்றவர்களுடனும் பகிர்ந்துக் கொண்டால், அவற்றைப் படைத்த அந்த ஏக வல்லோனை புகழ மேலும் ஒரு வாய்ப்பல்லவா? :) நீங்களும் பாருங்கள்!
இறைவனின் படைப்பில்தான் எத்தனை, எத்தனை கோடிகள்! அந்த கோடியில் ஒன்றான மலரில்தான் எத்தனை, எத்தனை வண்ணங்கள், வகைகள்!! அதன் நறுமணத்திலும் பலப்பல விதங்கள்!!! இவற்றில் நீங்கள் ஏற்கனவே பார்த்த வகைகளும் இருக்கலாம். நீங்கள் பார்க்காதவைகளும் இருக்கலாம். இறைவன் ஏற்படுத்தித் தந்துள்ள இவற்றின் அழகை நாம் மட்டும் ரசிக்காமல் மற்றவர்களுடனும் பகிர்ந்துக் கொண்டால், அவற்றைப் படைத்த அந்த ஏக வல்லோனை புகழ மேலும் ஒரு வாய்ப்பல்லவா? :) நீங்களும் பாருங்கள்!
Subscribe to:
Posts (Atom)