கேள்வி: என் மகன் பெரியவர்கள் பிரச்சனையில் தன் பிள்ளைகளை எங்களிடம் காட்டுவதில்லை. இஸ்லாத்தின் பார்வையில் இது சரியா?
பதில்: பெற்றோரைப் பேணும் விஷயத்தில், ஒவ்வொரு பிள்ளைகளும் சொல்லாலோ, செயலாலோ தங்கள் பெற்றோரின் மனம் புண்படும்படி நடக்கக்கூடாது என்று இஸ்லாம் பல வகைகளில் எச்சரிக்கை செய்கிறது.
இஸ்லாமிய மார்க்கம் என்பது இந்த உலக மாந்தர்களுக்கு மிகப் பெரிய அருளாகும்! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் அடுத்த அந்தஸ்தை ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் இஸ்லாம் தந்திருக்கின்றது! அந்த வகையில் முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் (99% பேர்) தங்கள் பெற்றோர்களை நன்றாகவே கவனித்து வருகின்றார்கள். இஸ்லாத்தை சரியாகப் புரியாத சிலரைத் தவிர, வேறு யாரும் அவர்களை முதியோர் இல்லங்களுக்கும் அனுப்புவதில்லை, அல்ஹம்துலில்லாஹ்!
