அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Thursday, 24 July 2025

ஃபஜ்ரு தொழுகைக்கு தாமதமாக சென்றால், ஜமாஅத் தொழுகை முடிந்தப் பிறகு முன் சுன்னத்தைத் தொழலாமா?

கேள்வி: ஃபஜ்ரு தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு தாமதமாக செல்பவர்கள், ஃபர்ளு தொழுகையின் ஜமாஅத்தில் கலந்துக் கொண்டு ஃபஜ்ரை நிறைவேற்றிய பிறகு, ஃபஜ்ரின் முன் சுன்னத்தை தொழுவதற்கு ஆதாரம் உள்ளதா?

பதில்:

ஆம்; ஃபர்ளு தொழுகைக்கான சுன்னத் தொழுகைகளை அதற்குரிய நேரத்தில் தொழுவதற்கு முடியாமல் போகும் சமயத்தில், கடமையான தொழுகைக்குரிய ஜமாஅத்தில் சேர்ந்து தொழுது முடித்தப்பிறகு, விடுபட்ட அந்த சுன்னத் தொழுகையைத் தொழுதுக் கொள்ளலாம் என்பதற்கு நபிவழியில் ஆதாரங்கள் உள்ளன.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹருடைய பின் சுன்னத் இரண்டு ரக்அத்களை, அஸ்ரு தொழுகைக்குப் பின் தொழுதுள்ளார்கள்.

صحيح البخاري

1233 – حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ بُكَيْرٍ، عَنْ كُرَيْبٍ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، وَالمِسْوَرَ بْنَ مَخْرَمَةَ، وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ أَزْهَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ، أَرْسَلُوهُ إِلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَقَالُوا: اقْرَأْ عَلَيْهَا السَّلاَمَ مِنَّا جَمِيعًا، وَسَلْهَا عَنِ الرَّكْعَتَيْنِ بَعْدَ صَلاَةِ العَصْرِ، وَقُلْ لَهَا: إِنَّا أُخْبِرْنَا عَنْكِ أَنَّكِ تُصَلِّينَهُمَا، وَقَدْ بَلَغَنَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْهَا، وَقَالَ ابْنُ عَبَّاسٍ وَكُنْتُ أَضْرِبُ النَّاسَ مَعَ عُمَرَ بْنِ الخَطَّابِ عَنْهَا، فَقَالَ كُرَيْبٌ: فَدَخَلْتُ عَلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، فَبَلَّغْتُهَا مَا أَرْسَلُونِي، فَقَالَتْ: سَلْ أُمَّ سَلَمَةَ، فَخَرَجْتُ إِلَيْهِمْ، فَأَخْبَرْتُهُمْ بِقَوْلِهَا، فَرَدُّونِي إِلَى أُمِّ سَلَمَةَ بِمِثْلِ مَا أَرْسَلُونِي بِهِ إِلَى عَائِشَةَ، فَقَالَتْ أُمُّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنْهَا، ثُمَّ رَأَيْتُهُ يُصَلِّيهِمَا حِينَ صَلَّى العَصْرَ، ثُمَّ دَخَلَ عَلَيَّ وَعِنْدِي نِسْوَةٌ مِنْ بَنِي حَرَامٍ مِنَ الأَنْصَارِ، فَأَرْسَلْتُ إِلَيْهِ الجَارِيَةَ، فَقُلْتُ: قُومِي بِجَنْبِهِ فَقُولِي لَهُ: تَقُولُ لَكَ أُمُّ سَلَمَةَ: يَا رَسُولَ اللَّهِ، سَمِعْتُكَ تَنْهَى عَنْ هَاتَيْنِ، وَأَرَاكَ [ص:70] تُصَلِّيهِمَا، فَإِنْ أَشَارَ بِيَدِهِ، فَاسْتَأْخِرِي عَنْهُ، فَفَعَلَتِ الجَارِيَةُ، فَأَشَارَ بِيَدِهِ، فَاسْتَأْخَرَتْ عَنْهُ، فَلَمَّا انْصَرَفَ قَالَ: «يَا بِنْتَ أَبِي أُمَيَّةَ، سَأَلْتِ عَنِ الرَّكْعَتَيْنِ بَعْدَ العَصْرِ، وَإِنَّهُ أَتَانِي نَاسٌ مِنْ عَبْدِ القَيْسِ، فَشَغَلُونِي عَنِ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ بَعْدَ الظُّهْرِ فَهُمَا هَاتَانِ»

உம்மு ஸலமா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

'நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அஸ்ருக்குப் பின்) இரண்டு ரக்அத்கள் தொழுவதைத் தடை செய்ததை நான் கேட்டுள்ளேன். பிறகு அவர்கள் அஸ்ரு தொழுதுவிட்டு இரண்டு ரக்அத்கள் தொழுததை நான் பார்த்தேன். தொழுதுவிட்டு எனது வீட்டிற்கு வந்தார்கள். 

அப்போது என்னுடன் அன்ஸாரிகளில் பனூ ஹராம் எனும் கோத்திரத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் இருந்தனர். அவர்களில் ஒரு பெண்ணை, தொழுதுக் கொண்டிருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அனுப்பி, நீ அவர்களுக்கு அருகில் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் இந்த இரண்டு ரக்அத்கள் தொழுவதைத் தடுத்ததை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் இப்போது தாங்களே அதைத் தொழுவதை நான் பார்க்கிறேனே?" என நான் கேட்டதாக அவர்களிடம் நீ கூறு. அவர்கள் தம் கைகளினால் சைகை செய்தால் நீ பின்வாங்கி விடு!  எனக்கூறி அனுப்பினேன். அப்பெண்ணும் கூறப்பட்டது போன்றே செய்தார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் கைகளால் சைகை செய்தபோது அப்பெண்மணி திரும்பி வந்துவிட்டார். தொழுகையை முடித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அபூ உமைய்யாவின் மகளே! அஸ்ருக்குப் பின்னால் (தொழுத) இரண்டு ரக்அத்களைப் பற்றிக் கேட்டாய். அப்துல் கைஸ் கிளையைச் சேர்ந்தவர்கள் வந்ததால் லுஹருக்குப் பின்னால் உள்ள இரண்டு ரக்அத்களை நான் தொழ முடியவில்லை; அத்தொழுகையே இந்த இரண்டு ரக்அத்களாகும்'' என்றார்கள் என உம்மு ஸலமா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.'

நூல்: புஹாரி (1233) - (ஹதீஸின் ஒரு பகுதி)

அஸ்ருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும்வரை எந்த தொழுகையும் இல்லை என்றாலும், லுஹரின் பின் சுன்னத்தை அதற்குரிய நேரத்தில் தொழ முடியாமல் போய்விட்டதால், லுஹர் வக்த்தில் தொழவேண்டிய பின் சுன்னத்தைக் கூட நபி (ஸல்) அவர்கள் அஸ்ருக்குப் பிறகு தொழுதுள்ளார்கள். இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு, தவிர்க்க முடியாத காரணங்களால் தவறிப்போன சுன்னத்தான தொழுகைகளை, ஃபர்ளு ஜமாஅத்துக்குப் பிறகு தொழலாம். அது ஃபஜ்ரு தொழுகையாக இருந்தாலும் சரிதான்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை