அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!
Showing posts with label ஹதீஸ்கள். Show all posts
Showing posts with label ஹதீஸ்கள். Show all posts

Saturday, 19 July 2025

"ஒரு பெண் தனது கணவனுக்கு ஸஜ்தா செய்வதை அனுமதித்து இருப்பேன்" என்ற ஹதீஸின் விளக்கம் என்ன?

கேள்வி: 

மனிதர்கள் மற்றும் அனைத்து படைப்பினங்கள் ஸஜ்தா செய்வது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது.

அல்லாஹ்வுக்கு அடுத்து ஸஜ்தா செய்ய, ஒருவேளை அனுமதி கிடைத்து இருந்தால், அது கணவனுக்காகதான் என்று நபி (ஸல்) கூறியதாக சொல்வது உண்மையா?

தயவுசெய்து விளக்கம் தரவும்.

பதில்:

நீங்கள் குறிப்பிட்டுள்ள செய்தி நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, சில ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளது.

அவற்றில் இப்னு ஹிப்பான் (4171), பைஹகீ - குப்ரா (14711), இப்னுமாஜா (1853), முஸ்னது அஹ்மத் (21986) போன்ற பல அறிவிப்புகள் பலவீனமானவை என்றாலும், இதே கருத்தில் ஏற்கத் தகுந்த சில ஹதீஸ்களும் உள்ளன.

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ لَأَمَرْتُ المَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا»

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"ஒருவர் இன்னொருவருக்கு ஸஜ்தா செய்வதை நான் அனுமதிப்பதாக இருந்தால், ஒரு பெண் தனது கணவனுக்கு ஸஜ்தா செய்வதை அனுமதித்திருப்பேன். (ஆனால் அதையும்கூட நான் அனுமதிக்கவில்லை)"

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ (1159)

முஹம்மத் பின் அம்ர் —> அபூ ஸலமா —> அபூ ஹுரைரா (ரலி) என்ற இந்த அறிவிப்பாளர் தொடரில், அபூ ஹுரைரா (ரலி) வழியாக வந்துள்ள மேற்கண்ட இந்த ஹதீஸ், "ஹஸன் ஃகரீப்" என்ற நடுத்தரமான தரத்திலுள்ள செய்தியாகும். (இதுபோன்ற தரத்தில் இன்னும் சில அறிவிப்புகளும் உள்ளன.)

அடுத்து இந்த ஹதீஸின் விளக்கத்தைக் கேட்டுள்ளீர்கள்.


Sunday, 29 June 2025

சுவர்க்கம் நுழைய மரணத்தைத் தவிர எதுவும் தடையாக இருக்காது!

கேள்வி: குப்ரா - நஸாயீ (9848) - வது ஹதீஸின் விளக்கம் என்ன?

"எவர் கடமையான தொழுகைக்குப் பின் 'ஆயத்துல் குர்ஸி' யை ஓதிவருவாரோ அவருக்கு, மரணத்தைத் தவிர சுவர்க்கம் நுழைய எதுவும் தடையாக இருக்காது!" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)

நூல்: ஸுனன் அல்குப்ரா - நஸாயீ (9848)

இந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளதுபோல்,  சொர்க்கம் செல்வதற்கு மரணம் எப்படி தடையாக இருக்கும்? ஒருவர் மரணித்தால்தானே சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ செல்லமுடியும்? 

"கடமையான தொழுகைக்குப் பின் 'ஆயத்துல் குர்ஸி' யை ஓதிவருபவருக்கு மரணத்தைத் தவிர சுவர்க்கம் நுழைய அவருக்கு எதுவும் தடையாக இருக்காது" என்பதன் விளக்கம் என்ன?

பதில்: பொதுவாக இஸ்லாம் சொல்லக்கூடிய எல்லா அமல்களும் மறுமைப் பலன்களைத் தரக்கூடியவை என்றாலும், சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லக்கூடியவை என்று நபி (ஸல்) அவர்கள் பல நல்லமல்களைக் குறிப்பிட்டு கூறியுள்ளார்கள். அதில் ஒன்றுதான், ஒவ்வொரு ஃபர்ளு (கடமையான) தொழுகைக்குப் பிறகும் 'ஆயத்துல் குர்ஸியை' தொடர்ந்து ஓதிவரக்கூடிய அமலும் ஆகும்.

இப்போது உங்கள் சந்தேகத்திற்கு வருவோம். "ஆயத்துல் குர்ஸியை ஓதினால் சொர்க்கம் செல்வதற்கு மரணம் எப்படி தடையாக இருக்கும்? ஒருவர் மரணித்தால்தானே சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ செல்லமுடியும்?" என்று கேட்டுள்ளீர்கள்.

அந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள வாசக அமைப்பை விளங்குவதில் உங்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதால் அதன் பொருளை நீங்கள் சரியாக விளங்கவில்லை. ஒரு வாக்கியத்தில் சொல்லக்கூடிய மையக் கருத்தை உறுதிபட சொல்வதற்காக, அரபி மட்டுமல்லாமல் எல்லா மொழிகளிலும் இவ்வாறு சில வாக்கியங்களைப் பயன்படுத்துவது சாதாரணமான ஒரு வழக்கம்.

இதை ஒரு அழகிய உதாரணத்தோடு பார்ப்போம்:

பயணிக்கும் பாதை