கேள்வி: குப்ரா - நஸாயீ (9848) - வது ஹதீஸின் விளக்கம் என்ன?
"எவர் கடமையான தொழுகைக்குப் பின் 'ஆயத்துல் குர்ஸி' யை ஓதிவருவாரோ அவருக்கு, மரணத்தைத் தவிர சுவர்க்கம் நுழைய எதுவும் தடையாக இருக்காது!" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)
நூல்: ஸுனன் அல்குப்ரா - நஸாயீ (9848)
இந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளதுபோல், சொர்க்கம் செல்வதற்கு மரணம் எப்படி தடையாக இருக்கும்? ஒருவர் மரணித்தால்தானே சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ செல்லமுடியும்?
"கடமையான தொழுகைக்குப் பின் 'ஆயத்துல் குர்ஸி' யை ஓதிவருபவருக்கு மரணத்தைத் தவிர சுவர்க்கம் நுழைய அவருக்கு எதுவும் தடையாக இருக்காது" என்பதன் விளக்கம் என்ன?
பதில்: பொதுவாக இஸ்லாம் சொல்லக்கூடிய எல்லா அமல்களும் மறுமைப் பலன்களைத் தரக்கூடியவை என்றாலும், சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லக்கூடியவை என்று நபி (ஸல்) அவர்கள் பல நல்லமல்களைக் குறிப்பிட்டு கூறியுள்ளார்கள். அதில் ஒன்றுதான், ஒவ்வொரு ஃபர்ளு (கடமையான) தொழுகைக்குப் பிறகும் 'ஆயத்துல் குர்ஸியை' தொடர்ந்து ஓதிவரக்கூடிய அமலும் ஆகும்.
இப்போது உங்கள் சந்தேகத்திற்கு வருவோம். "ஆயத்துல் குர்ஸியை ஓதினால் சொர்க்கம் செல்வதற்கு மரணம் எப்படி தடையாக இருக்கும்? ஒருவர் மரணித்தால்தானே சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ செல்லமுடியும்?" என்று கேட்டுள்ளீர்கள்.
அந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள வாசக அமைப்பை விளங்குவதில் உங்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதால் அதன் பொருளை நீங்கள் சரியாக விளங்கவில்லை. ஒரு வாக்கியத்தில் சொல்லக்கூடிய மையக் கருத்தை உறுதிபட சொல்வதற்காக, அரபி மட்டுமல்லாமல் எல்லா மொழிகளிலும் இவ்வாறு சில வாக்கியங்களைப் பயன்படுத்துவது சாதாரணமான ஒரு வழக்கம்.
இதை ஒரு அழகிய உதாரணத்தோடு பார்ப்போம்: