அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Sunday, 29 June 2025

சுவர்க்கம் நுழைய மரணத்தைத் தவிர எதுவும் தடையாக இருக்காது!

கேள்வி: குப்ரா - நஸாயீ (9848) - வது ஹதீஸின் விளக்கம் என்ன?

"எவர் கடமையான தொழுகைக்குப் பின் 'ஆயத்துல் குர்ஸி' யை ஓதிவருவாரோ அவருக்கு, மரணத்தைத் தவிர சுவர்க்கம் நுழைய எதுவும் தடையாக இருக்காது!" என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி)

நூல்: ஸுனன் அல்குப்ரா - நஸாயீ (9848)

இந்த ஹதீஸில் சொல்லப்பட்டுள்ளதுபோல்,  சொர்க்கம் செல்வதற்கு மரணம் எப்படி தடையாக இருக்கும்? ஒருவர் மரணித்தால்தானே சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ செல்லமுடியும்? 

"கடமையான தொழுகைக்குப் பின் 'ஆயத்துல் குர்ஸி' யை ஓதிவருபவருக்கு மரணத்தைத் தவிர சுவர்க்கம் நுழைய அவருக்கு எதுவும் தடையாக இருக்காது" என்பதன் விளக்கம் என்ன?

பதில்: பொதுவாக இஸ்லாம் சொல்லக்கூடிய எல்லா அமல்களும் மறுமைப் பலன்களைத் தரக்கூடியவை என்றாலும், சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லக்கூடியவை என்று நபி (ஸல்) அவர்கள் பல நல்லமல்களைக் குறிப்பிட்டு கூறியுள்ளார்கள். அதில் ஒன்றுதான், ஒவ்வொரு ஃபர்ளு (கடமையான) தொழுகைக்குப் பிறகும் 'ஆயத்துல் குர்ஸியை' தொடர்ந்து ஓதிவரக்கூடிய அமலும் ஆகும்.

இப்போது உங்கள் சந்தேகத்திற்கு வருவோம். "ஆயத்துல் குர்ஸியை ஓதினால் சொர்க்கம் செல்வதற்கு மரணம் எப்படி தடையாக இருக்கும்? ஒருவர் மரணித்தால்தானே சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ செல்லமுடியும்?" என்று கேட்டுள்ளீர்கள்.

அந்த ஹதீஸில் இடம்பெற்றுள்ள வாசக அமைப்பை விளங்குவதில் உங்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதால் அதன் பொருளை நீங்கள் சரியாக விளங்கவில்லை. ஒரு வாக்கியத்தில் சொல்லக்கூடிய மையக் கருத்தை உறுதிபட சொல்வதற்காக, அரபி மட்டுமல்லாமல் எல்லா மொழிகளிலும் இவ்வாறு சில வாக்கியங்களைப் பயன்படுத்துவது சாதாரணமான ஒரு வழக்கம்.

இதை ஒரு அழகிய உதாரணத்தோடு பார்ப்போம்:

Thursday, 26 June 2025

இஸ்லாத்தைப் பின்பற்ற முடியாத பள்ளி, கல்லூரிகளில் பிள்ளைகளை சேர்ப்பது பற்றிய தீர்வு என்ன?

கேள்வி: இஸ்லாத்தைப் பின்பற்ற முடியாத கல்லூரி மற்றும் இஸ்லாத்துக்கு முரணானவற்றை சொல்லும் பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளைப் படிக்க வைக்கலாமா? ஏற்கனவே அந்தப் பள்ளியில் சேர்த்திருந்தால் என்ன செய்வது?

பதில்: கல்வியைப் பொறுத்தவரை, நம் பிள்ளைகளுக்கு இயன்றவரை தரமான கல்வியைதான் கொடுக்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேசமயம், உலகக் கல்விக்கு நாம் எந்தளவு முக்கியத்துவம் வழங்குகிறோமோ அதைவிட, மார்க்கத்தைப் பேணுவதற்குதான் மிக முக்கியத்துவமும், முதலிடமும் கொடுக்க வேண்டும். எனவே, நாம் எந்த சூழ்நிலையிலும் உலக ஆதாயங்களுக்காக இஸ்லாத்துக்கு முரணானவற்றை செய்யக்கூடியவர்களாக ஆகிவிடாமல், மார்க்கத்திற்குக் கட்டுப்பட்ட நிலையில் பிள்ளைகளைப் படிக்கவைக்கக் கூடியவர்களாக இருப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஆனால் பல காலங்களாகவே நம் சமுதாய மக்கள் இதைப்பற்றி கவனம் செலுத்தாமல், கல்வித் தரத்தை மட்டுமே பிரதானமாக நினைத்து, கிறிஸ்தவ மிஷினரி கல்விக் கூடங்களிலும், கோவில் நிர்வாகத்தின் சார்பில் நடத்தப்படக்கூடிய இந்து சமய அறநிலையத்துறை பள்ளி மற்றும் கல்லூரிகளிலும், வித்யாலயா பள்ளிக் கூடங்களிலும் பிள்ளைகளை படிக்க வைக்கின்றனர்.

Sunday, 1 June 2025

கார்ட்டூன் படங்கள் மற்றும் டி.வி. யில் தெரியும் உருவங்கள் பற்றிய இஸ்லாமிய நிலைபாடு என்ன?

கேள்வி:

உருவப்படமும், நாயும் உள்ள வீட்டிற்கு மலக்குகள் வரமாட்டார்கள் என்று ஹதீஸ் உள்ளது. அதனடிப்படையில்.. டிவி பார்க்கும்போதும், கார்ட்டூன் படங்கள் ஓடும்போது வரக்கூடிய உருவங்களும் இதில் அடங்குமா?

பதில்:

உருவப்படங்களையும், உருவச் சிலைகளையும் பயன்படுத்துவதை இஸ்லாம் தடை செய்துள்ளது என்பது நம்மில் பெரும்பாலோர் அறிந்து வைத்துள்ள ஒன்று.

ஆனால் நவீனக் கருவிகளைப் பயன்படுத்தி தயார் செய்யப்படும் உருவப் படங்கள் பற்றிய இஸ்லாத்தின் தீர்ப்பைப் பலரும் அறியாமல் உள்ளனர். இவற்றை சற்று விரிவாக நாம் ஆராய்ந்தாலே தெளிவு கிடைக்கும்.

சளி, இருமல் பிரச்சனைக்கு அற்புதமான ஒரு கஷாயம்!

இருமலோடு கூடிய சளிப் பிரச்சனைக்கு இந்த கை மருந்து மிக அருமையாக பலன் தரும். 

எவ்வளவு இருமினாலும் நெஞ்சில் கட்டிய சளி, சரிவர வெளியாகாமல் பசைப் போன்று நெஞ்சுக்குள் ஒட்டிக்கொண்டது போல ஒரு உணர்வு இருக்கும்.

இதனால் இருமும்போது மிகக் குறைந்த அளவிலேயே சளி வெளியாகும். அத்துடன் தொடர் இருமல் வந்துக் கொண்டே இருக்கும். எதிலும் கவனம் செலுத்த முடியாமல் பாடாய் படுத்தும்.

இந்த இருமலால் இரவில் தலைசாய்த்து தூங்குவது கூட சிரமமாக இருக்கும். கொஞ்ச நேரம் கண் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாலும் இந்த இருமல் வந்தவுடன் தூக்கம் களைந்துவிடும் அளவுக்கு தொல்லைக் கொடுக்கும்.


இப்படி பல நாட்களாக தொடர்ந்து இருமுவதால் தொண்டை எரிச்சல் ஏற்படுவதோடு, தலைப்பகுதி மற்றும் கழுத்துப் பகுதியில் உள்ள நரம்புகள் எல்லாம் மிகவும் வலி கொடுக்கும்.

இது எல்லாவற்றிற்கும் அற்புதமான ஒரு மருந்துதான் இந்த கஷாயம்!

Wednesday, 28 May 2025

CREDIT CARD (கடன் அட்டை) பயன்படுத்துவது கூடுமா?

தற்போது CREDIT CARD ("க்ரெடிட் கார்டு") எனும் கடன் அட்டை பயன்பாடு மக்களிடம் அதிகரித்து வருகின்றது. வங்கிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் இந்த கார்டை வைத்து நமக்குத் தேவையான பொருட்களை கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். கடைக்காரர்கள் வங்கியில் அந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். கடன் அட்டையை பயன்படுத்தியவர் 45 நாட்கள் (அல்லது குறிப்பிட்ட நாட்கள்) முடிவதற்குள் வங்கியில் பணத்தைச் செலுத்தினால் அதற்கு வட்டி இல்லாமல், நாம் கடனாகப் பெற்று செலவழித்த தொகையை மட்டும் செலுத்தலாம். குறிப்பிட்ட நாட்களுக்குள் பணம் செலுத்தாவிட்டால் அந்தத் தொகைக்கான வட்டியுடன் திரும்ப செலுத்தவேண்டும்.

 

 
 

குறிப்பிட்ட நாட்களுக்குள் கடனைச் செலுத்திவிடும்போது அதற்கு வட்டி செலுத்தும் நிலை வராது என்பதால் இது குற்றமாகாது; வட்டி வாங்கிய குற்றமும் சேராது. ஆனால், குறிப்பிட்ட நாட்களுக்குள் நாம் செலுத்தத் தவறினால் வட்டி கட்டும் குற்றத்தைச் செய்யவேண்டிய நிலை ஏற்படும். அப்போது நாம் குற்றவாளியாக ஆகும் நிலை ஏற்படலாம்.

பயணிக்கும் பாதை