கேள்வி: கணவனுடைய வருமானம் ஹராம் என்றால், மனைவிக்கு அவர் தரும் நகை, வீடு ஹலாலா?
பதில்:
நபி (ஸல்) அவர்கள் எந்த காலத்தை எச்சரித்தார்களோ அந்த காலத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ لَا يُبَالِي الْمَرْءُ مَا أَخَذَ مِنْهُ أَمِنَ الْحَلَالِ أَمْ مِنْ الْحَرَامِ
"தாம் சம்பாதித்தது ஹலாலா, ஹராமா என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் (இனி) வரும்!"
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புஹாரி (2059)
இன்று வசதியற்றவர்கள், வசதிபடைத்தவர்கள் யாராக இருந்தாலும் தனக்கு வரக்கூடிய வருமானத்தின் வழியைப் பற்றிய அக்கறையோ, கவலையோ இல்லாமல், எப்படியோ பணம் வந்தால் சரி என்ற நோக்கத்தில் பலவிதமாக சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பலதரப்பு மக்களின் நிலையும் இவ்வாறுதான் இருக்கிறது. (அல்லாஹ் பாதுகாத்தவர்களைத் தவிர!)