அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Friday, 10 October 2025

போட்டியில் பங்கு பெறுபவர்களிடம் கட்டணம் பெற்று, அந்தத் தொகையிலிருந்தே வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் கொடுக்கப்படுவது இஸ்லாத்தில் கூடுமா?

கேள்வி:

போட்டியில் பங்கு பெறுபவர்களிடம் நுழைவுக் கட்டணம்போல் ஒரு தொகையை வாங்கிக்கொண்டு, அந்தத் தொகையிலிருந்தே வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் கொடுக்கப்படுகிறது. இது இஸ்லாத்தில் கூடுமா?

'இஸ்லாமியக் கேள்வி பதில் போட்டி' என்ற பெயரில் இப்படி நடத்தப்பட்டாலும், இது ஒரு சூதாட்டம் போன்ற தோற்றம் தருகிறது. இதற்கு விளக்கம் தாருங்கள்.

பதில்:

அல்லாஹ் தனது திருமறையிலே கூறுகிறான்:

"நம்பிக்கைக் கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!" (திருக்குர்ஆன் 5:90)

மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். "அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனைவிட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது" எனக் கூறுவீராக! (திருக்குர்ஆன் 2:219)

திருக்குர்ஆனில் அல்லாஹ் சூதாட்டத்தைத் தடை செய்துள்ளான் என்பதால் சூதாட்டம் ஒரு தீயச் செயல் என்பதை அதிகமான இஸ்லாமிய மக்கள் அறிந்து வைத்துள்ளனர். முஸ்லிமல்லாத மக்களும்கூட சூதாட்டம் ஒரு பாவச்செயல் என்று புரிந்துள்ளனர். ஆனால் "சூதாட்டம்" என்றால் என்ன என்பது குறித்த சரியான விளக்கம் பெரும்பாலான மக்களிடம் இல்லை.


Sunday, 14 September 2025

அழகுக்கலை நிபுணருக்கான கல்வியைக் கற்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

கேள்வி: மணப்பெண் அலங்காரம் (Bridal Mack up), மருதாணி இடுவது (Mehandhi) போன்ற (Beautician Course) துறைச் சார்ந்த கல்வியைக் கற்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

பதில்:

இஸ்லாமிய வாழ்க்கை முறை என்பது மறுமை வெற்றிக்கானது. நம் வாழ்வில் எதையெல்லாம் செய்யக்கூடாது என்று மார்க்கம் தடுத்திருக்கிறதோ, எவையெல்லாம் மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று எச்சரித்து இருக்கிறதோ, அவை சார்ந்த எந்தக் கல்வியையும் நாம் கற்கக் கூடாது. அதேசமயம் இவ்வுலக வாழ்வில் மனிதனுக்கு தேவையான அனைத்து துறைகளிலும், அவரவர் தேர்ந்தெடுக்கும் கல்வியைக் கற்றுத் தேர்வதற்கு முழு சுதந்திரமும் அளித்திருக்கிறது!


Saturday, 6 September 2025

கணவனுடைய ஹராமான வருமானம், மனைவிக்கு ஹலாலா?

கேள்வி: கணவனுடைய வருமானம் ஹராம் என்றால், மனைவிக்கு அவர் தரும் நகை, வீடு ஹலாலா?

பதில்:

நபி (ஸல்) அவர்கள் எந்த காலத்தை எச்சரித்தார்களோ அந்த காலத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ لَا يُبَالِي الْمَرْءُ مَا أَخَذَ مِنْهُ أَمِنَ الْحَلَالِ أَمْ مِنْ الْحَرَامِ

"தாம் சம்பாதித்தது ஹலாலா, ஹராமா என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் (இனி) வரும்!"

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புஹாரி (2059)

இன்று வசதியற்றவர்கள், வசதிபடைத்தவர்கள் யாராக இருந்தாலும் தனக்கு வரக்கூடிய வருமானத்தின் வழியைப் பற்றிய அக்கறையோ, கவலையோ இல்லாமல், எப்படியோ பணம் வந்தால் சரி என்ற நோக்கத்தில் பலவிதமாக சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பலதரப்பு மக்களின் நிலையும் இவ்வாறுதான் இருக்கிறது. (அல்லாஹ் பாதுகாத்தவர்களைத் தவிர!)

Monday, 4 August 2025

மண்ணறையில் இருப்பவர்களின் தவிப்புப் பற்றி சொல்லப்படும் செய்தி சரியானதா?

கேள்வி: மண்ணறையில் இருக்கும் மரணித்தவர், “யாராவது வந்து காப்பாற்ற மாட்டார்களா?” என்ற எண்ணத்தில் நீரில் மூழ்கி தத்தளிப்பவரைப் போன்றவர் - என்று வரக்கூடிய ஹதீஸ் ஸஹீஹான செய்தியா? விளக்கம் தாருங்கள்.

பதில்: நீங்கள் குறிப்பிட்டுள்ள செய்தி ❌ "ளயீஃப்" ❌ என்ற பலவீனமான தரத்தில் அமைந்துள்ள செய்தியாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரக்கூடிய அந்த செய்தி பற்றிய விபரங்களைக் கீழே காணலாம்:

Thursday, 31 July 2025

பெற்றோர்களை நோவினை செய்வது பற்றி இஸ்லாம் எச்சரிப்பது என்ன?

கேள்வி: என் மகன் பெரியவர்கள் பிரச்சனையில் தன் பிள்ளைகளை எங்களிடம் காட்டுவதில்லை. இஸ்லாத்தின் பார்வையில் இது சரியா?

பதில்: பெற்றோரைப் பேணும் விஷயத்தில், ஒவ்வொரு பிள்ளைகளும் சொல்லாலோ, செயலாலோ தங்கள் பெற்றோரின் மனம் புண்படும்படி நடக்கக்கூடாது என்று இஸ்லாம் பல வகைகளில் எச்சரிக்கை செய்கிறது.

இஸ்லாமிய மார்க்கம் என்பது இந்த உலக மாந்தர்களுக்கு மிகப் பெரிய அருளாகும்! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் அடுத்த அந்தஸ்தை ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் இஸ்லாம் தந்திருக்கின்றது! அந்த வகையில் முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் (99% பேர்) தங்கள் பெற்றோர்களை நன்றாகவே கவனித்து வருகின்றார்கள். இஸ்லாத்தை சரியாகப் புரியாத சிலரைத் தவிர, வேறு யாரும் அவர்களை முதியோர் இல்லங்களுக்கும் அனுப்புவதில்லை, அல்ஹம்துலில்லாஹ்!


பயணிக்கும் பாதை