கேள்வி:
போட்டியில் பங்கு பெறுபவர்களிடம் நுழைவுக் கட்டணம்போல் ஒரு தொகையை வாங்கிக்கொண்டு, அந்தத் தொகையிலிருந்தே வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் கொடுக்கப்படுகிறது. இது இஸ்லாத்தில் கூடுமா?
'இஸ்லாமியக் கேள்வி பதில் போட்டி' என்ற பெயரில் இப்படி நடத்தப்பட்டாலும், இது ஒரு சூதாட்டம் போன்ற தோற்றம் தருகிறது. இதற்கு விளக்கம் தாருங்கள்.
பதில்:
அல்லாஹ் தனது திருமறையிலே கூறுகிறான்:
"நம்பிக்கைக் கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!" (திருக்குர்ஆன் 5:90)
மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். "அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனைவிட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது" எனக் கூறுவீராக! (திருக்குர்ஆன் 2:219)
திருக்குர்ஆனில் அல்லாஹ் சூதாட்டத்தைத் தடை செய்துள்ளான் என்பதால் சூதாட்டம் ஒரு தீயச் செயல் என்பதை அதிகமான இஸ்லாமிய மக்கள் அறிந்து வைத்துள்ளனர். முஸ்லிமல்லாத மக்களும்கூட சூதாட்டம் ஒரு பாவச்செயல் என்று புரிந்துள்ளனர். ஆனால் "சூதாட்டம்" என்றால் என்ன என்பது குறித்த சரியான விளக்கம் பெரும்பாலான மக்களிடம் இல்லை.


.jpg)

